Pages

வெள்ளி, ஜூலை 25, 2014

மருத்துவர் அய்யா 75: வாழ்விக்க வந்த மகான்

ஐநூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வன்னியப் பேரினத்தை - வாழ்விக்க வந்த மகான் மருத்துவர் அய்யா. அவரது 75 ஆம் பிறந்தநாள் இன்று. 

வன்னியர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டின் ஒவ்வொரு வகுப்பினரும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என உழைப்பவர் அவர்.

  • இந்தியத் தலைவர்களில், ஒருநாளும் ஒரு பதவியையும் ஏற்க மாட்டேன் என பதவி பற்றற்று வாழும் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே.
  • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடைப் பெற்றுத்தருவேன் எனப் போராடி, தனது வாழ்நாளிலேயே அந்த சாதனையைப் படைத்தவர் அவர் மட்டுமே. வன்னியர் உள்ளிட்ட 108 சாதியினருக்கான MBC இட ஒதுக்கீட்டால், இன்று பலன் பெறுவோர் பல ஆயிரம் பேர்.
  • வன்னியர்களை விட தாழ்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்ததால் - பா.ம.க'வுக்கு அதிகாரம் கிடைத்தால், அதை தாழ்த்தப்பட்டவருக்கு அளிப்போம் என அறிவித்து, பா.ம.க'வின் "முதல்" மத்திய அமைச்சராக தாழ்த்தப்பட்டவரையே அமரச் செய்தார் மருத்துவர் அய்யா.
  • 1980 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை தொடங்கியது முதல், இன்றுவரை, ஒவ்வொரு நாளும் ஓயாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார் மருத்துவர் அய்யா.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கான ஒரு மாபெரும் பேறு, அதுவே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தக் காலத்தில் வன்னியர்கள் ஒரு பேரினமாக, அதிகாரம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தனர். ஆனால், அதன் பின்னார் தொடர்ச்சியாக வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வந்தனர்.
  • வலங்கை - இடங்கை சாதி மோதல்களில் நியாயம் பேசியதால், எல்லா சாதிகளாலும் வன்னியர்கள் பகைக்கப்பட்டனர். 
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வன்னியர்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. 
  • ஆங்கிலேயர் ஆட்சியின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் - சத்திரிய சாதியினரான வன்னியர்களை, தாழ்த்தப்பட்ட சாதி என ஒடுக்கும் முயற்சிகள் நடந்தன.
  • இந்திய சுதந்திரப் போராட்டமும், திராவிட இயக்க அரசியலும் - வன்னியர்களின் உழைப்பையும், தியாகத்தையும் பயன்படுத்திக்கொண்டன. மற்றவர்கள் புகழுக்கும் அதிகாரத்துக்கும் வன்னியர்கள் உரமாகினர்.
இன்றைய வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் வளமாக இல்லை. இங்கு வாழும் இதர சமூகத்தவரின் வசதிக்கும் வளத்துக்கும் உழைத்த சமூகமாகவே வன்னியர்கள் இருக்கின்றனர். ஆயிரம் வன்னியர் குடும்பங்கள் வசிக்கும் ஊரில், ஐந்து குடும்பம் மட்டுமே உள்ள மாற்று சாதியினர் வசதி படைத்தவர்களாக வாழ்வதின் ரகசியம் - வன்னியர்களின் உழைப்புதான்.

சுதந்திரப் போராட்டத்தில் வன்னியர்கள் தலைமை தாங்கவில்லை. திராவிட இயக்கத்தில் வன்னியர்கள் தலைமை இல்லை. தனித்தமிழ் இயக்கத்திலோ, தமிழ்த்தேசியப் போராட்டத்திலோ வன்னியத் தலைமை இல்லை. 

தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் தலைமை இடத்தில் வன்னியர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை. அதிகாரப் பதிவிகள், பொருளாதார வளம் எதிலும் வன்னியர்கள் உரிய இடத்தில் இல்லை.

வன்னியர்கள் அதிகாரமிழந்த நிலையில் வாழ்வதற்கு வன்னியர்கள் காரணம் இல்லை. மாறாக, வன்னியர்களுக்கு எதிராக இங்கு நிலைவும் இனவெறி மனநோய் - வன்னியஃபோபியா - தான் காரணம். (காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA)

வீழ்ச்சிநிலையில் இருந்து வன்னிய சமூகத்தை மீட்கும் முயற்சிகள் 1880 களிலும், 1950 களிலும் நடந்தாலும் - அவையெல்லாம் ஒரு அளவுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை.

- இந்த ஐநூறு ஆண்டுகால வன்னியர் வீழ்ச்சிக்குப் பின்னர், வன்னியர்களின் முதல் எழுச்சியை உருவாக்கிக் காட்டியவர் மருத்துவர் அய்யா அவர்கள். 

அவரது வழியில் - முழு வெற்றியை அடைய, அய்யாவின் 75 ஆம் ஆண்டில் உறுதி ஏற்போம்.
பசுமைத் தாயகம் நாள் 2001 - மரம் வளர்க்கும் விழா (நீலச் சட்டையில் இருப்பது (!) நான் தான்!)
குறிப்பு: வன்னியர்களே தமிழ் நாட்டின் மிகப்பெரிய சமூகம். வன்னியர் சமூகம் வளர்ச்சி அடையாதவரை, தமிழ் நாடு வளர வாய்ப்பே இல்லை. எனவே, தமிழ்நாடு முன்னேற வேண்டும் - என விரும்புகிறவர் எவராக இருந்தாலும், அவர்கள் வன்னியர்களின் வளர்ச்சியை, அதாவது வன்னியர்களின் வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

அதே போன்று, ஒவ்வொரு சமூகமும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான விகிதாச்சார பங்கினை எல்லா நிலைகளிலும் அடைவதே தமிழ் நாட்டின் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

வியாழன், ஜூலை 24, 2014

இந்திய அரசின் அயோக்கியத்தனம்: நரேந்திர மோடிக்கு தமிழர்கள் தீண்டத்தகாதவர்களா?

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுதான் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை போலும்! 

ஐநா மனித உரிமைப் பேரவையில் - ஈழத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்து பன்னாட்டு விசாரணைக் கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த அதே இந்திய அரசு, இப்போது காசாவில் கொலை செய்யப்பட்ட 700 பேருக்காக பன்னாட்டு விசாரணைக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு (India voted YES)

இலங்கை - இஸ்ரேல்: ஆளுக்கொரு நியாமா?

அன்று ஈழப்போரின் போது, ராஜபக்சே என்னவெல்லாம் சப்பைக் கட்டுகளைக் கட்டி, ஈழத்தமிழர்களைக் கொலை செய்தாரோ, இன்று அதே சாக்குப்போக்குகளைக் கூறி, காசாவைத் தாக்குகிறார் - பெஞ்சமின் நேதன்யாகு.
இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் ராஜபக்சே
ஈழத்தில் நடந்த கொடூரப் போர்க்குற்றங்கள் தொடர்பில், பன்னாட்டு விசாரணை தீர்மானம் வந்தபோது - 'நாடுகளின் விவகாரங்களில் அன்னிய தலையீடு கூடாது' என்று வியாக்கியானம் பேசியது இந்திய அரசு.

In an explanation of vote by the Permanent Representative of India to the UN Offices in Geneva, Dilip Sinha, said this resolution at the UN Human Rights Council imposes an “intrusive approach” of international investigative mechanism which was counterproductive apart from being “inconsistent and impractical”

இலங்கை நாட்டில் அன்னியத் தலையீடு கூடாது என்கிற இந்தியாவின் நியாயம், இஸ்ரேல் நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா?

அன்று, ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலை மீதான பன்னாட்டு விசாரணையை எதிர்த்து வாக்களித்த இந்திய அரசு, இன்று, 700 பாலஸ்தீனியர்கள் படுகொலைக்காக மட்டும் பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது ஏன்?

தமிழர்கள் தீண்டத்தகாதவர்களா?

மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களே, பாலஸ்தீனருக்காக துடிக்கும் உங்கள் இதயம், தமிழர்களுக்காக துடிக்க மறுப்பது ஏன்?

தமிழர்கள் நாங்கள், இந்தியப் பேரரசுக்கு அந்த அளவுக்கா தீண்டத்தகாதவர்கள் ஆகிவிட்டோம்?
---------------------------------------------------------------------------
பாலஸ்தீனத்தின் நட்சத்திரம் எனும் விருதை - பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் பெறும் ராஜபக்சே.
இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு விசாரணைத் தீர்மானம் (23.07.2014)

Human Rights Council - Twenty-first special session - 23 July 2014: Resolution – 

“Decides to urgently dispatch an independent, international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate all violations of international humanitarian law and international human rights law in the Occupied Palestinian Territory, including East Jerusalem, particularly in the occupied Gaza Strip”

NEWS: Human Rights Council establishes Independent, International Commission of Inquiry for the Occupied Palestinian Territory

(குறிப்பு: இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐநா மனித உரிமைப் பேரவை விசாரணையை நாம் ஆதரிக்கிறோம். இதே போன்று இலங்கை மீதானக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை) 

ஞாயிறு, ஜூலை 06, 2014

திராவிட இயக்கத்தின் வன்னியர் எதிர்ப்பு இனவெறி: ஒரு VANNIYAPHOBIA ஆதாரம்!

திராவிட இயக்கம் என்பது பெரும்பான்மைச் சாதிகளை ஒழிக்கும் இயக்கமாகவே இருந்துள்ளது. வன்னியர்களை ஒழிப்பதிலும், வன்னியர்களின் வரலாற்றை மறைப்பதிலும் திராவிட இயக்கத்தினர் எப்போதும் முனைப்பாக இருந்துள்ளனர். 

அந்த வகையில், திராவிட இயக்கத்தினரின் வன்னியர் எதிர்ப்பு இனவெறி (VANNIYAPHOBIA) வன்னியஃபோபியாவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு. 

மகாத்மா காந்தியின் சத்தியாகிரகப் போரில் முதல் ஆளாக உயிர்த்தியாகம் செய்த அவரது 105 ஆம் நினைவு நாளில் (6.7.2014), நாம் திராவிட இயக்கத்தினரின் துரோகத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் அடக்குமுறைச் சட்டத்தை கொண்டுவந்தது.

இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.
காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி.

சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் சிறையில் ஏற்பட்ட பாதிப்புகளால் மரணத்தை தழுவினார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. தமிழ்நாட்டில் அவரது சொந்த ஊர், நாகை மாவட்டம் பூம்புகார் - மேலையூர் அருகில் இருக்கும் கீழப்பெரும்பள்ளம் ஆகும்.

திராவிட இயக்கத்தின் துரோகம்

தென் ஆப்பிரிக்காவில் தமிழர்களின் போராட்டத்தையும், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தையும் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். குறிப்பாக, கலைஞர் கருணாநிதி இதனை அறிந்திருந்தார். 

1970 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" என்கிற விளம்பரத்துடன் தமிழக அரசின் சார்பில் ஒரு தேர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. 

அந்தத் தேரில் "1. நாகப்பன், 2. நாராயணசாமி. 3. வள்ளியம்மை" என வரிசையாக எழுதப்பட்டுள்ளது. கூடவே, மகாத்மா காந்திக்கு அருகில் நாகப்பன், நாராயணசாமி ஆகியோர் நிற்பது போலவும், சிறைக் கம்பிகளுக்கு பின்னால் வள்ளியம்மா நிற்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
1970 தி.மு.க ஆட்சியில் "தென் ஆப்பிரிக்க அறப்போரில் தமிழர்களின் தியாகம்" தேர் ஊர்வலம் 
அதாவது, 1970 ஆம் ஆண்டில், சாமி நாகப்பன் தான் என்பதை முதல் தியாகி என்பதை நன்கு அறிந்து, அதனைக் குறிப்பிட்டு ஊர்வலமும் நடத்தியுள்ளனர். ஆனால்,  அதற்கு அடுத்த ஆண்டே அந்த வரலாற்றை மூடி மறைத்துவிட்டனர்.

1971 இல் - தில்லையாடி கிராமத்தில் 'வள்ளியம்மை நகர், வள்ளியம்மை மண்டபம், வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி' ஆகிய நினைவு கட்டிடங்களை 13.8.1971 அன்று அப்போதைய அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். தில்லையாடி வள்ளியம்மை சிலை அமைக்கப்பட்டது.
தில்லையாடி வள்ளியம்மை சிலை
தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை
1982 இல் சென்னையில் கோ-ஆப் டெக்சின் கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என பெயரிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஆனால், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்துக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டது.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் எதற்காக மறக்கப்பட்டது?

1971 ஆம் ஆண்டில் தில்லையாடி வள்ளியம்மை நினைவிடங்கள் அனைத்தையும் அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்துள்ளார். ஆனால், வள்ளியம்மா முனுசாமி முதலியாருக்கு இணையாக சாமி நாகப்பன் படையாட்சிக்கு நினைவிடங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.
வள்ளியம்மா முனுசாமி முதலியார்
முதலியார் சமூகத்தை சேர்ந்தவரான நாவலர் நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தை சேர்ந்த வள்ளியம்மைக்கு மட்டுமே நினைவிடங்கள் அமைத்தார் - வன்னியரான முதல் தியாகியின் தியாகத்தை மறைத்தார்.

1997 இல் மீண்டும் திராவிடத் துரோகம்

1915 ஆம் ஆண்டில் ஜொகனஸ்பர்கில் மகாத்மா காந்தி திறந்து வைத்த சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடங்கள் தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சிதைக்கப்பட்டன. அவை 20.4.1997 அன்று மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன.

அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு திறந்து வைத்தார். சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி முதலியார்" என இரண்டு பேருக்காகவும்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. (சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடத்தில் பின்னர் 1997 ஆம் ஆண்டில், அப்போதைய இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜரால் அஞ்சலி செலுத்தினார்)
 ஜொகனஸ்பர்க் - சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம்
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற வகையில் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கலைஞர்.  அந்த வாழ்த்துச் செய்தியில் வள்ளியம்மையின் வீரத்தை புகழ்ந்து எழுதியுள்ளார். ஆனால், சாமி நாகப்பன் படையாட்சி குறித்து அவர் ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை. 

வரலாறு மறைக்கப்பட வன்னியர் என்பதே காரணம்

நினைவிடங்களில் மறைக்கப்பட்டு, வரலாற்று பாடநூல்களில் மறைக்கப்பட்டு, இப்போது எல்லா இடங்களிலும் சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் ஒரேயடியாக மறக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒரு வன்னியர் என்பதே காரணம்
வரலாறு மறைக்கப்பட வன்னியர் என்பதே காரணம்
இப்போதும் தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வரலாற்றில சாமி நாகப்பன் படையாட்சியும் வள்ளியம்மா முனுசாமி முதலியாரும் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் 'தில்லையாடி வள்ளியம்மை' மட்டும்தான் தமிழ்நாட்டில் அறியப்படுகிறார். சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தியால் புகழப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி இந்திய தேசிய போராட்ட தியாகிகளில் ஒருவராக போற்றப்படாமல் போனது எப்படி? 
  • உலகப்புகழ் பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த்தியாகியை நாடு மதிக்க மறந்தது ஏன்?
  • காந்தியை பின்பற்றிய வட இந்திய தியாகிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிலைகளும் நினைவிடங்களும் இருக்கும் நிலையில் ஒரு தமிழனின் மாபெரும் தியாகம் மறக்கப்பட்டது எப்படி?
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே பதில்தான். அதுதான் வன்னியஃபோபியா.

வன்னியஃபோபியாவும் திராவிட இயக்கமும்

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமும், உண்மை மறைப்பும் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அதுவே ஒரு மனநோயும் கூட. 

யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம்.

VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars.

இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர். வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் உண்மை மறைப்புக்கும் இந்த 'வன்னியஃபோபியா' மனநோய் தான் காரணம் ஆகும். 

அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ள 'திராவிட இயக்கத்தினர்தான்' சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாற்றை மறைத்துள்ளனர்.
குறிப்பு: "பாடபுத்தகத்தில் நாடார்களின் வரலாறு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது, அதனை மாற்ற வேண்டும்" என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் முன்பு அறிக்கை வெளியிட்டார்கள். உடனே, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் பின் தொடர்ந்து அறிக்கைவிட்டார்கள். வார இதழ்கள் கட்டுரைத் தீட்டின. 

இப்போது, "9 ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் விடுதலைப்போரின் முதல் களப்பலி தில்லையாடி வள்ளியம்மை என தவறாக உள்ளது. அதனை சாமி நாகப்பன் படையாட்சி என்று திருத்த வேண்டும்" என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். 

இப்போது, எந்த அரசியல் கட்சித் தலைவரும் பின் தொடர்ந்து அறிக்கை விடவில்லை. வார இதழ்கள் கட்டுரைத் தீட்டவில்லை. நாடார்களின் வரலாறு தவறாக இருப்பதற்காக குரல் கொடுத்தவர்கள், வன்னியர் வரலாறு தவறாக இருப்பதற்காக குரல் கொடுக்கவில்லை. அதுதான் வன்னியஃபோபியா. 

தொடர்புடைய சுட்டிகள்:




வெள்ளி, ஜூலை 04, 2014

ஜூனியர் விகடனில் வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்!

ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அதுவே ஒரு மனநோயும் கூட. 

யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம். (VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars)

(VANNIYAPHOBIA குறித்து விரிவாக இங்கே காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்)

இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு மனநிலையை' பரப்பி வைத்துள்ளனர்.

வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும். அப்படிப்பட்ட வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ளவர்களில் முதன்மையான இடத்தில் இருப்பது "ஜூனியர் விகடன்" பத்திரிகை ஆகும். 
ஜூனியர் விகடன் குழுவினருக்கு பீடித்துள்ள வன்னியர் எதிர்ப்பு இனவெறி மனநோயின் காரணமாக, தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் வெற்றியைக் கொச்சைப்படுத்தி எழுதிவருகின்றனர்.

தருமபுரி வெற்றி ஒரு வரலாற்று சாதனை. ஆனால், அந்த மாபெரும் வெற்றியை 'பணத்தால் வந்த வெற்றி' என ஜூனியர் விகடன் இதழில் கொச்சைப்படுத்தியுள்ளனர்

தருமபுரி: ஒரு வரலாற்று சாதனை
  • 47 ஏழு ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், திமுக, அதிமுக கட்சிகளின் துணை இல்லாமல் வெற்றிபெற்ற வேட்பாளர் என்கிற சாதனையை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்றுள்ளார்கள்.
  • தமிழக அரசியல் வரலாற்றில், திமுக, அதிமுக என்கிற இரண்டுகட்சிகளுடனும் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக மோதி வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் என்கிற சாதனையை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் படைத்துள்ளார்கள்.
தருமபுரி மக்களைக் கொச்சைப்படுத்தும் ஜூனியர் விகடன்

தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சியினர் தொகுதிக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட்டதாகவும், தருமபுரியில் மட்டும் 85 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் உறுதிபடுத்த இயலாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தருமபுரியில் பா.ம.க சார்பில் போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு வாக்களிக்கக் கோரி, ஒரே ஒரு வாக்காளருக்குக்கூட, ஒரே ஒரு ரூபாய் பணமும் அளிக்கப்படவே இல்லை. 

அதாவது, தமிழ் நாட்டிலேயே மிக அதிகப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட தருமபுரி தொகுதியில்தான், ஒரே ஒரு ரூபாய் கூட பணமே கொடுக்காத மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள். இதன் மூலம் தமிழ் நாட்டிலேயே இந்திய ஜனநாயகத்தின் மாண்பை காப்பற்றிய தொகுதி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது தருமபுரி.

இந்த மாபெரும் வெற்றியை, "பணத்துக்கு கிடைத்த வெற்றி" எனக்கூறி கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன் இதழ்.

ஜூனியர் விகடன் 6.7.2014 இதழின் 'கழுகார் பதில்கள்' பகுதியில் - 

"தர்மபுரியில் பா.ம.க எவ்வளவு செலவு செய்தது என்பது அன்புமணிக்குத் தெரியும். காடுவெட்டி குருவுக்குக்கூடத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தர்மபுரியில்கூட இவ்வளவு செலவு செய்தால்தான் ஜெயிக்க முடியும் என்ற நிலைமையில் கட்சி இருப்பதை இவர்கள் உணர வேண்டும்"

- எனக் கருத்து கூறியுள்ளது ஜூனியர் விகடன் இதழ்.
அதாவது, ஓட்டுக்காக ஒரே ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பெற்ற வெற்றியை, பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றார்கள் என இழிவுபடுத்துகிறது ஜூனியர் விகடன்.

நாடெங்கும் பணத்தை வெள்ளமாக ஓடவிட்டு - ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, அதிமுக பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஜூனியர் விகடன்; பா.ம.கவின் நியாயமான வெற்றியைக் கேவலப்படுத்துவது ஏற்புடையது அல்ல.
  • ஓட்டுக்கு பணம் அளித்த ஆளுங்கட்சியினரின் ஜனநாயகப் படுகொலை எதிர்த்துப் போராட முதுகெலும்பு இல்லாத ஜூனியர் விகடன், பா.ம.கவின் நேர்மையான வெற்றியைக் கொச்சைப்படுத்துவது ஏன்?
  • 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக, தர்மபுரியிலும் வெற்றி பெற்றிருக்கலாமே என்கிற சாதிப்பாசமா? 
  • அல்லது, வன்னியர்கள் ஒழித்துவிட்டோம் என நம்பிய நிலையில், சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைப் போல, தருமபுரியில் வன்னியர்கள் எழுந்துவிட்டார்களே என்கிற சாதிவெறி வயிற்றெரிச்சலா?
தருமபுரியில் பா.ம.க ஓட்டுக்கு காசு கொடுத்ததாக நிரூபித்தால், அரசியலையே கைவிட பா.ம.க தயாராக இருக்கிறது. தருமபுரியில் பா.ம.க ஓட்டுக்கு காசு கொடுத்ததாக நிரூபிக்காவிட்டால் ஜூனியர் விகடன் இதழை இழுத்து மூடத் தயாரா?

வரைபடம்: தமிழ்வாணன் கோவிந்தன் கவுண்டர்
தருமபுரி மக்களைக் கொச்சைப்படுத்தும் செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் தருமபுரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்: