Pages

Monday, July 20, 2015

கலைஞரின் வார்த்தை ஜால நாடகம்: திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு இல்லை!

'பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து முழு மதுவிலக்குதான்' என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு கிடைத்துள்ள ஆதரவைக் கண்டு, கண்துடைப்பு நாடகத்தை தொடங்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.

திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கை அமலாக்கப்போவதாக ஒரு செய்தியை ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ஆனால், இதில் முழு உண்மை இல்லை.

உண்மை என்ன?

"தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று மட்டுமே கலைஞர் கூறியுள்ளார்.

"உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்" என்பது வேறு - இது எடுத்த எடுப்பில் மதுபானங்களை தடை செய்வதாகும். இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி கூறுகிறது. ஆனால், "மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்பது வேறு. இதைத்தான் கலைஞர் கூறுகிறார்.

கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "முழு மதுவிலக்கு" என்கிற வார்த்தையும் இல்லை. "மதுவிலக்கை எப்போது அமலாக்குவோம்" என்பதும் இல்லை. "மதுவிலக்கை எவ்வாறு அமலாக்குவோம்" என்கிற விளக்கமும் இல்லை.

கலைஞரின் ஏமாற்று நாடகம்

"மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள்" என்றால் என்ன? இது ஒரு ஏமாற்று நாடகம். 

சாராயக்கடைகளை திறந்த கலைஞரின் காலத்தில், திமுகவினரே சாராய ஆலைகளை நடத்தும் நிலையில் - திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு என்பது காணல் நீர் தான்!

ஓட்டுக்காக திமுக வீசும் வலை இது. முழு மதுவிலக்கு பாமகவால் மட்டுமே சாத்தியம். பாமக மட்டுமே ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டும்.

2 comments:

bandhu said...

இந்த விஷயத்தில் பா மா காவை முழுமையாக ஆதரிக்கிறேன்.. மிகத் துணிச்சலுடன் முதலிலிருந்தே மதுவிலக்கை ஆதரிக்கிறார் ராமதாஸ்!

Unknown said...

Pmk only can make alcohol free tn