Pages

Saturday, March 26, 2016

விஜயகாந்த் அணியின் பல கோடி பண பேரம்: முழு உண்மையும் வெளிவருமா?

விஜயகாந்த் கட்சியை திமுகவிடம் சேர்க்க 80 இடங்கள், 500 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாக வைகோ கூறினார். ஆனால், விஜயகாந்த் கட்சி திமுகவுடன் சேராமல் தடுக்க அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள் என்று இப்போது தகவல் பரவுகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் வைகோ 'அவரது அலுவலகத்திலேயே வெளிநடப்பு' செய்துள்ளார்.

தமிழக அரசியலில் என்ன தான் நடக்கிறது? விஜயகாந்த் அணியின் பணபேரம் குறித்து அறிய பின்வரும் காணொலிகளைக் காண்க:

அதிமுகவிடம் 1500 கோடி

விஜயகாந்த் கட்சி திமுகவுடன் சேராமல் தடுக்க அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள் 
பாலிமர் தொலைக்காட்சி:

YOUTUBE: https://youtu.be/E3S0QPJYctw

திமுகவிடம் 500 கோடி 

விஜயகாந்த் கட்சியை திமுகவிடம் சேர்க்க 80 இடங்கள், 500 கோடி பணம் பேரம் பேசப்பட்டது. இதனை கலைஞர் கருணாநிதியே துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார்.
புதிய தலைமுறை செய்தி:

தந்தி தொலைக்காட்சி செய்தி - பிரேமலதா மறுப்பு:
விஜயகாந்த் - வைகோ - திமுக - அதிமுக: பண பேர உண்மைகள் உலகிற்கு தெரிய வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

கூட்டணி பேரம்: தேர்தல் ஆணையத்திடம் பாமக புகார்

'பணத்தைப் பெற்றுக்கொண்டு கூட்டணி பேரம் நடந்தது' என்கிற செய்தி குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் காணொலி:

No comments: