Pages

Thursday, October 13, 2016

ரெமோவும் ஆனந்த விகடனும்: தறுதலைக் காதலை எதிர்க்கும் தறுதலை!

தறுதலைக் காதலை போற்றி வளர்க்கும் 'ரெமோ' படத்தின் மீது பாய்ந்து விழுந்து குதறியிருக்கிறது ஆனந்த விகடன். அந்த திரைப்படம் குறித்த விமர்சனத்தில் "இது மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கே கேடு!" என்று பொங்கியிருக்கிறது விகடன் விமர்சனக் குழு!

இந்த விமர்சனத்தில்:

ஒரு பெண்ணைக் காதலிக்கவைக்க, என்னவும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பின்னாலேயே திரிந்து டார்ச்சர் கொடுக்கலாம். அந்தப் பெண்ணே `எனக்கு இந்த லவ்ல விருப்பம் இல்லை, பின்னால் வராதே!' என விரட்டினாலும் விடவே கூடாது. அவரை ஐ லவ் யூ சொல்லவைக்க, எந்த லெவலுக்கும் இறங்கலாம். இதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி. 

படம் நெடுக நிச்சயதார்த்தம் ஆன பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ்… தூத்துக்குடி பிரான்சினாவை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். 

`பெண் என்பவள், இலக்குவைத்து அடையக்கூடிய பொருள்’ என்பதே இயக்குநர் முன்வைக்கும் அழுத்தமான மெசேஜ். 

- என்கிறது ஆனந்த விகடன்.

இடிப்பது பெருமாள் கோவில்: படிப்பது ராமாயணமாயனமா?

தமிழ்நாட்டின் தறுதலைக் காதல் நாடகங்கள் அனைத்துக்கும் வக்காலத்து வாங்கிவந்தது இதே விகடன் கும்பல் தான்.

"தருமபுரி"

தருமபுரி சம்பவத்தின் போது - திருமண வயதை அடையாத 19 வயது நபரின் தறுதலை திருமணம் தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை விகடன். மாறாக, 19 வயது சிறுவனின் காதல்தான் புரட்சிகரமான, புனிதமான, வரலாற்று சிறப்பு மிக்க காதல் என்று கொண்டாடியது விகடன். இதுபோன்ற குழந்தைகளின் சாதி ஒழிப்பு காதலை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது விகடன் கும்பல்.

"நுங்கம்பாக்கம்"

இன்னுமொரு தறுதலை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை முகத்திலேயே வெட்டிக்கொன்றான். அந்தக் கொடியவன் பின்னர் சந்தேகமான முறையில் மரணமடைந்தான். சிலர் அது சிறையில் நடந்த கொலை என்றனர். பிரேத பரிசோதனை செய்த 'எய்ம்ஸ்' மருத்துவர் - அவன் கொலைசெய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

அந்த தறுதலைக் காதல் கொலைக்காரனை தியாகியாக்கி, கவிதை வாசித்தது விகடன்.
கொலைகாரன் ராம்குமாரை புகழ்ந்து  ஜூனியர் விகடனில் வெளியான பழனிபாரதி கவிதை

இப்படி, சாதி ஒழிப்பு போர்வையில் தறுதலைக் காதலுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் விகடன் கும்பல்தான் - இப்போது தறுதலைக் காதல் திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்துள்ளது.

"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா?" என்பார்கள், ஆனால், "பெருமாள் கோவிலை இடிப்பதையே" முழுநேரத் தொழிலாகக் கொண்ட விகடன் கும்பல் - இப்போது "ராமயணம் படிப்பது" கொடுமையாக இருக்கிறது! 
-----------------------------------------------
விகடன் கும்பலின் விநோத கூத்து!

ஆனந்த விகடன் இதழில் ரெமோ திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்திருக்கும் அதே விகடன் கும்பல் - அதன்  விகடன்.காம் இணைய பக்கத்தில் அதே ரெமோ படத்தை போற்றிப் புகழ்ந்திருக்கிறது! 

"லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்! - ரெமோ விமர்சனம் #REMO" - எனும்  விகடன்.காம் இணைய தளவிமர்சனத்தை இங்கே காண்க (இங்கே சொடுக்கவும்) 
-----------------------------------------------
இணைப்பு: ஒருதலை காதலா? தறுதலை காதலா? - மருத்துவர் ச. இராமதாசு, தினமணி கட்டுரை (இங்கே சொடுக்கவும்)

No comments: