Pages

Saturday, November 26, 2016

சென்னை - வடபழனி மேம்பாலம் யாருக்காக காத்திருக்கிறது?

மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில், மக்கள் பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்காமல் "யாருக்காகவோ" காத்திருக்கிறார்கள்!

சென்னை வடபழனியில் ஜவகர்லால் சாலை மற்றும் ஆற்காடு சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டும் திட்டத்தை, 2006 ஆம் ஆண்டில் உருவாக்கி, 2011-ல் ஒப்புதல் அளித்து, 2014-ல் கட்டத்தொடங்கினார்கள்.

ஒருவழியாக கட்டிமுடித்து, இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப் போவதாக கூறினார்கள்.

ஆனால், போக்குவரத்துக்கு தயாராக உள்ள இந்த மேம்பாலத்தை கடந்த ஒருமாத காலமாக திறக்காமல் வைத்துள்ளனர்.
தமிழகத்தின் பிறபகுதிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் இணைக்கும், 100 அடி சாலை எனப்படும் ஜவகர்லால் நேரு சாலையில் தினமும் 1 லட்சத்து 85 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. சென்னை நகரின் குறுக்காக செல்லும் ஆற்காடு சாலையில் தினமும் 40 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இதனால், பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திண்டாடுகிறது வடபழனி.

ஆனாலும், மக்கள் பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்காமல் "யாருக்காகவோ" காத்திருக்கிறார்கள்!

இதனைக் கண்டித்தும், வடபழனி மேம்பாலத்தை உடனடியாக திறக்கக் கோரியும் தென் சென்னை மேற்கு மாவட்டம் தி.நகர் மேற்கு பகுதி 130 வது வார்டு பா.ம.க சார்பில் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

செய்தி:

Vadapalani flyover ready, govt. to decide inauguration date

Commuters seek early opening of Vadapalani flyover

No comments: