Pages

ஞாயிறு, ஜனவரி 25, 2015

பெருமாள் முருகனை எதிர்த்தால் சாதிவெறி: மற்றதெல்லாம் என்ன வெறி?

தமிழ்நாட்டில் பெரும்பான்மை சாதிகளுக்கு எதிரான வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வன்னியர்கள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்களுக்கு எதிரான வன்மக் கருத்துகளை அப்பட்டமாக பேசி வருகின்றனர். 

இவ்வாறு பெரும்பான்மை சாதிகளுக்கு எதிராக பேசுவதுதான் முற்போக்கு என்றும், இதற்கு மாறாக பேசுவது சாதிவெறி என்றும் இட்டுக்கட்டிப் பேசுகிறது 'மீடியா + புரட்சியாளர்' கும்பல்.

பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் கட்டற்ற உரிமை என்று நாம் கருதவில்லை.  ஆனால், 'கருத்துரிமைக்கு கட்டுப்பாடு இல்லை' என்று பேசுவோர், இரட்டை வேடம் போடுகின்றனர். 

தமக்குத் தோதான நேரங்களில் கருத்துரிமைக்கு குரல் கொடுக்கும் இந்த 'மீடியா + புரட்சியாளர்' கும்பல் - மற்ற நேரங்களில் கண்டும் காணாமல் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்துபோகின்றனர். அதற்கான சில எடுத்துக்காட்டுகளை இங்கே காண்க:

1. புரட்சியும் கருத்துரிமையும்

லீனா மணிமேகலை என்பவர் ஒரு கருத்தாழமிக்க கருத்துரிமைக் கவிதையை எழுதினார்

""ஒரு புண@$லின் உச்சியில் விலகி
அந்தரத்தில் வி@$தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே த@$யை இழுத்தேன்
உபரி என யோ@$ மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
மு@$களைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
கு@$யை சப்ப குடுத்தாய்""

- என்று போகும் விரிவான ரசம் சொட்டும் கவிதை அது (குறிப்பு: லீனா மணிமேகலையின் கவிதையில் உள்ள சில வார்த்தைகளை மறைப்பதற்காக “@$” என்கிற குறியீடுகளை அளித்துள்ளேன்)
இப்படி ஒரு கருத்துரிமைக் கவிதை எழுதியதற்காக "கருத்துரிமைப் போராளிகளே" லீனா மணிமேகலையை விரட்டி விரட்டி அடித்தார்கள். அவரது கூட்டத்தில் பங்கேற்று, பாலியல் கவிதைக்கு செயல்முறை விளக்கம் கேட்டார்கள். கோஷம் போட்டார்கள். அடிதடி அளவுக்கு போராட்டம் நடந்தது. அதாவது, பெருமாள் முருகனுக்கு என்னவெல்லாம் நடந்தது என்று கூறுகிறார்களோ, அதைவிட அதிகமாகவே லீனா மணிமேகலைக்கு நடந்தது.

2. சாதியும் கருத்துரிமையும் - தலித் 

கடந்த ஆண்டில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் இளங்கலை தமிழ் பாடத்திட்டத்தில் புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பில் இருந்து இரண்டு கதைகளை சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக நீக்கியது. பொன்னகரம் மற்றும் துண்பக்கேணி ஆகிய கதைகள் தலித் மக்களை மோசமாகச் சித்தரிப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவல் குழுவினர் கூறி அவற்றை நீக்கினர்.

இந்தக் கதைகளை நீக்கக் கோரி போராடியவர்கள் "சாதிய அடிப்படையில் வன்மத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் கதை பாத்திரங்களையும், சொல்லாடல்களையும் கொண்டுள்ளவை. தலித் மக்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஒழுக்கமற்றவர்களாக கதை பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சாதி அடிப்படையிலான பிரிவினையையும் வெறுப்பையும் வளர்க்கும் எழுத்துக்கள், இலக்கியங்கள் என்ற போர்வையில் மாணவர்களின் பாடத்திட்டத்திற்குள்ளேயே இணைக்கப்படுமானால், அது எதிர்கால சமூகத்தை பிளவுப்படுத்து வதிலும், மாணவர்கள் மனதில் சாதிய நஞ்சை ஆழ விதைப்பதிலுமே முடிவுறும்." என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

3. சாதியும் கருத்துரிமையும் - நாடார்

சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்தில், "காலனி ஆதிக்கத்தில் இந்தியாவின் பரிமாண மாற்றங்கள்' என்ற பகுதியின் கீழ், ‘நாடார் சமுதாய மக்கள் ஒருகாலத்தில் தாழ்ந்த சாதியினராக இருந்ததாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியேறியவர்கள்' என்றும் கூறப்பட்டிருந்தது. 
இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக முதலமைச்சரே தலையிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

4. சாதியும் கருத்துரிமையும் - அம்பேத்கர் கார்டூன்

என்.சி.இ.ஆர்.டியின் 11ம் வகுப்பு பாடபுத்தகத்தில், இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டதைச் சொல்லும் கட்டுரையில், 'அரசியல் சட்டம் எழுதும் பணி கால தாமதம் ஆவது குறித்து நேரு உள்ளிட்ட பலரும் கவலை கொண்டதாக' குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இடத்தில் நேரு 'நத்தை மேல் அமர்ந்திருக்கும் அம்பேத்கார் மீது சாட்டையை சுழற்றுவது போல' 1949-ஆண்டில் வெளியான ஒரு கார்டூன் இடம்பெற்றது.
இந்த கார்டூன் அம்பேத்காரை இழிவுபடுத்துவதாக தொல். திருமாவளவனால் பாராளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு, பின் அந்த படம் நீக்கப்படுவதாக அறிவித்தனர். பாடத்திட்டக்குழுவில் இருந்த யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர் ராஜினாமா செய்தனர். அதில் சுகாஸ் பல்சிகரின் அலுவலகம் சிலரால் தாக்கப்பட்டது.

5. தமிழரும் கருத்துரிமையும்  - டேம் 999

டேம் 999 என்பது 2011 இல் வெளிவந்த ஒரு ஆங்கிலத் திரைப்படம். ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
கற்பனைக் கதை எனக்கூறப்பட்ட இந்த படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வெளியானது. தமிழ்நாட்டில் படம் தடை செய்யப்பட்டது.

6. தமிழரும் கருத்துரிமையும் - கத்தி

விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு வேண்டிய நிறுவனம் என்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் 65 அமைப்புகள் ஒன்று கூடியதாகக் கூறப்பட்டது.
(இதுபோன்று பல படங்களுக்கு ஈழத்தமிழர் ஆதரவு நிலைபாட்டில் இருப்போரின் எதிர்ப்பும்; ஈழத்தமிழர் ஆதரவு படங்களுக்கு தணிக்கைத் துறையின் தடையும் வழக்கமாக இருந்து வருகிறது)

7. தமிழரும் கருத்துரிமையும் - கற்பு

“பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் பேகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்”  எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொன்னார்.
இந்தக் கருத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது “திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண் பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று குஷ்பு கேட்டது இன்னும் பெரிய போராட்டத்தை தூண்டியது.

8. தமிழரும் கருத்துரிமையும் - இந்தி எதிர்ப்பு 

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டிருந்தது.
அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது என்று, இங்குள்ள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

9. மதமும் கருத்துரிமையும் - விஸ்வரூபம்

கமல் ஹாசன் எழுதி-இயக்கி நடித்த படம் விசுவரூபம். முசுலிம் அமைப்புகள் சில இப்படத்தில் முசுலிம்கள் தீவிரவாதியாக காட்டப்பட்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர், இது சமூக அமைதியை குலைக்கும் என அவர்கள் கூறினர்.
பின்னர் இசுலாமிய சமூகத்தின் மனம் இப்படத்தால் புண்படும் என்றும் எனவே இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கோரினர். சட்டம் ஒழுங்கு இப்படத்தால் பாதிக்கப்படும் என கூறி தமிழக அரசு 15 நாட்களுக்கு இப்படத்திற்கு தடை விதித்தது

'மீடியா + புரட்சியாளர்' கும்பலின் போலிவேடம்

பெருமாள் முருகனை சாக்காக வைத்து இப்போது கருத்துரிமைக்காக பேசும் 'மீடியா + புரட்சியாளர்' கும்பல் - மேற்கண்ட சம்பவங்களுக்காக இப்படி ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவில்லை. இவர்களில் பலரும் இந்த சம்பவங்களில் பலவற்றில் 'கட்டற்றக் கருத்துரிமைக்கு எதிராக' இருந்தனர். சிலவற்றில் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து பேசினர்.
இப்போது மட்டும் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் கருத்துரிமை பூச்சாண்டி வேடம் போடுவதற்கு ஒரே காரணம் -  தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக இவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதுதான். 

வன்னியர்கள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக பேசுவதுதான் தமிழ்நாட்டில் முற்போக்கு என இவர்கள் கற்பனையாக கட்டமைத்துள்ளனர். (இவர்களிடம் இருந்து தப்பித்த ஒரே பெரும்பான்மை சமூகம் நாடார்கள் மட்டும்தான். ஏனெனில், நாடார்கள் ஊடகத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள்)

சாதி வெறிபிடித்த 'மீடியா + புரட்சியாளர் கும்பல்' சாதி உரிமைக்காகப் பேசுவோர் மீது எப்போதும் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டே இருக்கும் என்பதற்கு - பெருமாள் முருகன் இன்னுமொரு எடுத்துக்காட்டு.
(குறிப்பு: மேற்கண்ட கருத்துரிமை எதிர்ப்பு போராட்டங்களின் நியாம், அநியாயம் குறித்து இங்கே எதுவும் குறிப்பிடவில்லை. மற்ற பிரச்சினைகளில் ஒன்றுபடாத 'மீடியா + புரட்சியாளர் கும்பல்' இப்போது மட்டும் ஒன்று கூடி ஒரேயடியாக கூச்சல் போடுவதையே குறிப்பிட்டுள்ளோம்.)

தொடர்புடைய சுட்டி:

வெள்ளி, ஜனவரி 23, 2015

பெருமாள் முருகனும் பேச்சுரிமையும்: உண்மையின் இன்னொரு பக்கம்!

'பெருமாள் முருகன்' எழுதிய மாதொரு பாகன் எனும் நாவலை வைத்து 'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' சர்ச்சைகள் கொடிகட்டிப் பறக்கின்றன.

ஆனால், கருத்துரிமை என்பது அதை வெளியிடுபவரின் உரிமையை மட்டும் தனியாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, அந்தச் செய்தியை பெறுபவரின் உரிமையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அந்த வகையில் உண்மையை பெறுவதற்கான மக்களின் உரிமை தான் மெய்யான கருத்துரிமை ஆகும்.

(Global and regional human rights standards secure not only the right freely to impart information but also the right freely to seek and receive it as part of freedom of expression. The right to access information is one of the central components of the right to freedom of opinion and expression, as established by the Universal Declaration of Human Rights (art. 19), the International Covenant on Civil and Political Rights (art. 19 (2)) and regional human rights treaties - UNHRC Report 68/362)
பேச்சுரிமை என்கிற போர்வையில் பொய்யும், சமூகங்கள் மீதான வெறுப்பும், குறிப்பிட்டப் பிரிவினரை குறிவைக்கும் கட்டுக்கதைகளும் அங்கீகரிக்கப்படக் கூடாது. இத்தகைய கட்டுக்கதைகள் மக்களின் உண்மை அறியும் உரிமைக்கு எதிரானவை ஆகும்.

எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் சர்வதேச அளவில் இட்டுக்கட்டப்படுவதை கருத்துரிமை என்று ஏற்க முடியாதோ - அதே போல, தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துரிமையின் பெயரால் திணிக்கப்படுவதை ஏற்க முடியாது

உண்மையை குழிதோண்டிப் புதைக்கவா கருத்துரிமை?

பன்முக எண்ணங்கள், மாறுபட்ட கருத்துகள் சமூகத்தில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை ஆகும். கற்பனையான கருத்துகள், கதைகள், கொள்கை நிலைப்பாடுகளில் வேறுபாடுகளும் பன்முகத்தன்மையும் இருக்கலாம். அதற்காக உண்மையில் இருவகை உண்மைகள் இருக்க முடியாது.

உண்மைத் தகவலை பெறும் மக்களின் அடிப்படை உரிமை இந்த சமூகத்தில் மதிக்கப்படுகிறாதா?
'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பது போல, யாரிடம் ஊடகமும், அதிகாரமும் இருக்கிறதோ - அவர்களின் கட்டுக்கதைகள் மட்டுமே கருத்துரிமையின் பேரால் திணிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, தருமபுரியில் நடந்த மோதல் குறித்தும், மரக்காணத்தில் வன்னிய இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்தும் கட்டுக்கதைகளே பரப்பப்பட்டன.

தருமபுரியில் நடந்தது ஒரு சட்டவிரோத குழந்தைத் திருமணம் என்பதும், அது சட்டப்பூர்வ வயதை அடையாதவர்களின் திருமணம் என்பதும் வெளிவரவே இல்லை. மரக்காணத்தில் பாதிக்கப்பட்டதும் உயிரிழந்ததும் வன்னியர்கள் என்கிற தகவல் வெளியிடப்படாமல் - அதற்கு மாறான செய்திகளே பரப்பப்பட்டன.

மாதொரு பாகன் சர்ச்சை

மாதொரு பாகன் புத்தகத்தில் “திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழா, வைகாசி 14-ம் நாள் நான்குரத வீதிகளிலும், சந்துகளிலும், ஊரைச் சுற்றியிருக்கும் நிலங்களிலும், மலை மண்டபங்களிலும், பாறை வெளிகளிலும் உடல்கள் சாதாரணமாக பிணைந்து கிடக்கும்." என்றும்

"எந்த ஆணும், எந்த பெண்ணும் உறவு கொள்ளலாம். திருமணமாகாதப் பெண்ணை யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆண்களில் இளைஞர் கூட்டம் அதிகமாக இருக்கும். எத்தனைப் பெண்களோடு முடியுமோ அத்தனைப் பெண்களோடு உறவு கொள்வார்கள். எல்லாப் பெண்களும் இன்று தேவுடியா தான்” - என்றும் எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன்.
கூடவே, அதனை 'உண்மைச்சம்பவம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து ஒரு குறிப்பிட்ட ஊரையும், அங்கு வாழும் மக்களையும் 'உண்மைக்கு புறப்பான வகையில்' கொச்சைப்படுத்தியிருக்கிறது - இதனை பேச்சுரிமை என்று புகழ்ந்து பேச இயலாது.

'தமிழ்ப் பெண்களின் கற்பு மற்றும் கட்டற்ற பாலுறவு' குறித்து முன்பு நடிகை குஷ்பு பேசியதற்கும் நாவலின் இந்த செய்திக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

பெருமாள் முருகனின் எழுத்தை கருத்துரிமை என்று பேசுகிறவர்கள் - அவருக்கு எதிரான போராட்டங்களையும் 'கூட்டம் கூடும் உரிமை, போராட்டம் நடத்தும் உரிமை' (The right of peaceful assembly, without arms)  என்று அங்கீகரிக்க வேண்டும்.

பொய்யை விற்பது ஒரு மனித உரிமை என்றால், அந்தப் பொய்யை எதிர்த்துப் போராடுவது மட்டும் மனித உரிமை இல்லையா?