Pages

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

போர்க்குற்றம் - பன்னாட்டு விசாரணைக்கு வழிவகுக்கும் ஐ.நா அறிக்கை

"அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராசபட்சே பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் போர் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் நாள் வரும்" என்பதற்கான உறுதியான அடுத்தக்கட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது ஐ.நா நிபுணர்குழு அறிக்கை. இந்த நேரத்தில் அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற பிரச்சாரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி. 

214 பக்க ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை இங்கே காண்க:


http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf


இதுகுறித்த எனது முந்தைய பதிவு இங்கே:




திங்கள், ஏப்ரல் 25, 2011

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

கடவுள் நம்பிக்கை என்று வரும்போது மனிதர்களை 1. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், 2. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று இரண்டு பகுப்பாக பிரிக்க முடியும். உலகில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்தான் அதிகம்.

கடவுளை நம்புகிறவர்களோ, நம்பாதவர்களோ - எவராக இருப்பினும் அடுத்தவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது அவசியம். அதாவது, அடுத்தவர் நம்பிக்கையில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அத்தகைய ஒரு நம்பிக்கையை அவர் கொண்டிருப்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மத நம்பிக்கை குறித்த ஐ.நா பிரகடனத்தை காண இங்கே சொடுக்கவும். (மேலு விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.)
ஆனால், இந்த அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்காத போக்கினை பதிவுகில் பார்க்க முடிகிறது. ஒருவகையில் பார்த்தால் - பத்திரிகைகள், அரசியல்வாதிகளிடம் காணப்படும் பண்பாட்டு முதிர்ச்சியை பதிவுலகில் காண முடியாதது அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, சாய் பாபாவின் மறைவு குறித்து சி.என்.என் - ஐ.பி.என் செய்தியில் "சாய் பாபா குறித்த விமர்சனங்கள் பல இருப்பினும் அதையெல்லாம் அலசும் நேரம் இதுவல்ல" என்று கூறினார்கள். தமிழ்நாட்டின் எதிர்எதிர் அரசியல் துருவங்களான கலைஞரும் செயலலிதாவும் இரங்கல் தெரிவித்தனர். சென்னைக் குடிநீர் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் அளித்தற்கு நன்றிக்கடனாக துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.

ஆனால், பதிவுலகில் பலரும் மனம் போன பொக்கில் சாய் பாபா மரணத்தை கேலிக்கூத்தாக்க முயற்சிக்கிறார்கள். இது மன விகாரத்தின் வெளிப்பாடன்றி வேறல்ல!  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமின்றி - தமக்கென்று ஒரு மத அல்லது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் சாய் பாபாவை இந்த தருணத்தில் தூற்றுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

சாய் பாபா கடவுள் அல்ல, அவர் ஒரு மனிதர்தான் என்பது சிலரது தூற்றுதலின் பின்னணியாக இருக்கிறது. ஆனால், அவர்களில் பலர் இராமன், கிருட்டிணன், இயேசு எல்லோரும் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சாய் பாபா ஏதோ சித்து வேலைகளை செய்தார் என்று அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் - ஆனால், அவர்களில் பலர் சித்து வேலைகளின் களஞ்சியமாக இருக்கும் இராமாயணம், மகாபாரதம், பைபிளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். (ஒரு ஒப்பீட்டுக்குத்தான் சொல்கிறேன், இவ்வாறு கூறுவதன் மூலம் நான் எவரது நம்பிக்கையையும் கேலி செய்வதற்கு முயற்சிக்கவில்லை.)

சாய் பாபா'வை நம்புகிறவர்களின் மனநிலையை அல்லது அவர்களது நம்பிக்கையை கொஞ்சமும் அறியாமல் வீசப்படும் அநாகரீக பதிவுகளாகவே நான் இவற்றை பார்க்கிறேன்.

சாய் பாபா - எனது அனுபவம்

நான் சாய் பாபா'வை 1994 ஆம் ஆண்டு புட்டபர்த்தியிலும் 2005 ஆம் ஆண்டில் கொடைக்கானலிலும் நேரில் பார்த்தது உண்டு. அங்கெல்லாம் - சாதி மதத்தை கடந்து அன்பு ஒன்றே நிலவும் சூழலைத்தான் நான் கண்டிருக்கிறேன். பதிவுலகில் பேசப்படுவது போல எவரும் ஏமாற்றப்பட்டு நான் பார்க்கவில்லை.

இப்போதும், சாய் பாபா மறைவால் அவரது பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் மறைந்த 24.04.2011 அன்று,சென்னயில் உள்ள சாய் பாபா ஆலயமான சுந்தரத்திற்கு நான் சென்று பார்த்தேன். அங்கு வந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவரும் அழுது புலம்பவில்லை. ஒரு சிலர் கண்ணீர் விடுவதாக, கதறுவதாக செய்திகள் வந்தாலும், அது சாய் பாபாவை மீண்டும் பார்க்க முடியாது என்கிற - அல்லது தமது குடும்பத்தில் ஒருவர் மறைந்தால் எழும் சோகம் போன்றதுதான். (85 வயதில் ஒருவர் இறந்து போவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை)

உலகிலுள்ள எல்லா சாய் பாபா வழிபாட்டு இடங்களிலும், வழிபாட்டின் போது ஒரு அமர்வு நாற்காலியை போட்டு வைத்திருப்பார்கள். அந்த நாற்காலியில் சாய் பாபா கண்களுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதாக நம்புவார்கள். இது காலம் காலமாக நடக்கும் நிகழ்வு. இப்போது புட்டபர்த்தியிலும் ஒரு நாற்காலியை போட்டு அதில் அவர் அமர்ந்திருப்பதாக நம்பப் போகிறார்கள் (இது பகுத்தறிவுக்கு உகந்ததா என்பதெல்லாம் தேவையற்ற கேள்வி). எனவே, சாய் பாபா பக்தர்கள் ஏமாந்துபோனதாக பேச எதுவுமே இல்லை.

""உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்."" என்கிறது தினமணி தலையங்கம். அதுதான் உண்மை நிலைமை.

மேலும் "மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும்" என்கிறது அந்த தலையங்கம். மொத்தத்தில் சாய் பாபா'வின் பக்தர்கள் அவர் எப்போதும் தம்முடன் வாழ்வதாக நம்புகிறார்கள், நம்புவார்கள்.

என்னைக் கவர்ந்த பாபா'வின் கருத்துகள்.

1. நல்ல நேரம் - கெட்ட நேரம் என்கிற கருத்துக்களை பாபா நம்பவில்லை. மனதில் நல்ல நோக்கத்தோடு நல்ல செயலில் ஈடுபடும் எல்லா நேரமும் நல்ல நேரமே. அதுபோல கெட்ட நோக்கில் கீழான காரியங்களில் ஈடுபடும் எல்லா நேரமும் கெட்ட நேரமே. எனவே, இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்ப்பது வீண் வேலை.

2. பூசை, யாகம் செய்வது, விரதம் இருப்பது, கோவிலுக்கு போவது, உண்டியலில் பணம் போடுவது போன்ற எல்லாமும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவே செய்யப்படுகின்றன. இதனாலெல்லாம் கடவுளை வசப்படுத்தவோ, காரியங்களை சாதிக்கவோ முடியாது. ஒரு மனிதன் சிறிதாக வழிபடுகிறானா, பெரிதாக வழிபாடுகளை நடத்துகிறானா? என்றெல்லாம் இறைவன் எதிர்பார்ப்பது இல்லை. மனிதனால் இறைவனுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்க முடியாது. அன்பும் சகமனிதர்களை நேசிப்பதுமே இறவனை வழிபடும் ஒரே வழியாகும்.

3. கோவில் கட்டுவதற்காக ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்காதீர்.

4. இராமனுக்கு கோவில் கட்டுவதாகக் கூறி, இன்னொரு வழிபாட்டு தளத்தை இடிப்பது மூடச்செயல். அது உண்மை பக்தி அல்ல. இராமனுக்கு கோவில் கட்ட வேண்டுமானால், அவரவர் மனதில் கட்டுங்கள்.

5. பல ஆறுகள் ஒரே கடலில் கலப்பது போல - எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் போதிக்கின்றன.

சாய் பாபாவின் சாதனை

பார்ப்பனர் அல்லாத வகுப்பில் பிறந்து - இந்திய ஆன்மீகத்திலும் சேவையிலும் மிக உயர்ந்த நிலையை எட்டியவர் சாய் பாபா. சாதியை மட்டுமின்றி மதத்தையும் கடந்தவர். அன்பும் சேவையுமே லட்சியம் என வாழ்ந்தவர்.

பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை. மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.

இந்தியாவின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும், பல மாநில முதல்வர்களும் அவரை நாடி வந்ததே வரலாறாக இருக்கையில் - சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாத்திகரான கலைஞரை தேடிவந்தார் சாய் பாபா. அத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அளித்தார் அவர்.
சாய் பாபா ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி, பலருக்கு அவர் தம்மை வழிநடத்தும் கடவுள். ஆனால், அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல. 

சனி, ஏப்ரல் 23, 2011

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

2011 தமிழக தேர்தலில் வரலாறு காணாதவகையில் 78 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்ததாகவும், வழக்கத்தில் இல்லாத வகையில் மக்கள் வாக்களித்தது ஆளும் கட்சிக்கு பாதகமாகவே அமையும் என்றும் பிரச்சாரம் நடக்கிறது.

"அதிக வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு பாதகமா?" என்ற கருத்து சரியா என்பது ஒருபக்கம் இருந்தாலும் - வரலாறு காணாதவகையில் வாக்குப்பதிவு நடந்தாகக் கூறப்படுவதே ஒரு கட்டுக்கதை.

கடந்த 1981 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளுக்கிடையே தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 72 லட்சம் பேர் புதிதாக சேர்ந்ததாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்கள் அனைவரும் இன்று 20 வயதைக் கடந்த வாக்காளர்களாக இருப்பார்கள்.

ஆனால், 2001 - 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையே தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஒரே ஒருவர் கூட கூடுதலாக அதிகமாகவில்லை. அப்படியானால் அந்த 72 லட்சம் பேர் எங்கே போனார்கள்?

இதுதான் வாக்குப்பதிவு அதிகமாகத் தெரிவதன் பின்னுள்ள மருமம் ஆகும்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், வாக்காளர் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் - ஒவ்வொரு முறையும் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப, வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்ததைக் காணலாம்.

எடுத்துக்காட்டாக 1971 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சம் பேர். அதுவே 1981 ஆம் ஆண்டில் 4 கோடியே 84 லட்சம் பேர். இதற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் அதிகமான மக்கள் தொகை 72 லட்சம் பேர்.

அதே போன்று 1971 ஆம் ஆண்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சம் பேர். இதுவே 1981 ஆம் ஆண்டில் 2 கோடியே 92 லட்சம் பேர். இடைப்பட்ட பத்தாண்டுகளில் அதிகமான வாக்காளர் எண்ணிக்கை 62 லட்சம் பேர்.

ஆக 1971 - 1981 ஆம் ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகையில் 71 லட்சம் பேரும் வக்காளர் பட்டியலில் 62 லட்சம் பேரும் அதிகமாகியுள்ளனர்.

இவ்வாறு 1961 தொடங்கி 2011 ஆம் ஆண்டுவரையிலான ஐம்பதாண்டு விவரம் இதோ:

1961 - 1971: அதிகரித்த மக்கள்தொகை - 75 லட்சம், அதிகரித்த வாக்காளர் - 43 லட்சம்.

1971 - 1981: அதிகரித்த மக்கள்தொகை - 72 லட்சம், அதிகரித்த வாக்காளர் - 62 லட்சம்.

1981 - 1991: அதிகரித்த மக்கள்தொகை - 75 லட்சம், அதிகரித்த வாக்காளர் - ஒரு கோடியே 7 லட்சம்.

1991 - 2001: அதிகரித்த மக்கள்தொகை - 65 லட்சம், அதிகரித்த வாக்காளர் - 75 லட்சம்.

2001 - 2011: அதிகரித்த மக்கள்தொகை - 97 லட்சம், வாக்காளர் அதிகரிக்கவில்லை - (4 லட்சம்பேர் குறைவு)

மேற்கண்ட பட்டியலின் படி "வரலாற்றில் முதன் முறையாக" 2001 - 2011 பத்தாண்டு காலத்தில் வாக்காளர்கள் அதிகரிக்காமல் 4 லட்சம் பேர் குறைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இல்லாத பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பட்டியல் கச்சிதமாக்கப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.

வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டு வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் 2011 தேர்தலில் 78% வாக்குப்பதிவு காட்டப்படுகிறது. ஒருவேளை வாக்காளர் பட்டியல் பழைய தன்மையிலேயே அமைந்திருந்தால் இப்போதைய வாக்குப்பதிவு வெறும் 67% ஆக மட்டுமே இருந்திருக்கும்:

இதுகுறித்து விளக்கமாக கீழே காணலாம்:
TN Election “turnout myth”- R. ARUL 1

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

ACT NOWஐ.நா அறிக்கையை உடனே வெளியிடுங்கள் பான் கி மூன் அவர்களே - இயக்கம்

"மே 1 ஆம் நாள் அன்று பலத்தைக் காட்டுவோம்" என்று போர்க்குற்ற விசாரணைக்கு ஆளாகப்போகும் திருவாளர் ராசபட்சே இப்போது ஐ.நா அவையை மிரட்டி வருகிறார். "இலங்கையில் உள்ள ஐநா பணியாளர்களுக்கு பாதிப்பு நேர்ந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என பதிலுக்கு மிரட்டியுள்ளது ஐ.நா.

இந்த நேரத்தில் - ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடக்கோரும் கடித இயக்கத்தை "இலங்கை பிரச்சாரம்" எனும் அமைப்பு தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்று பான் கீ மூனை வலியுறுத்துங்கள்:


http://www.srilankacampaign.org/takeaction.htm

வரலாறு மாறுகிறது.

ஐ.நா.பாதுகாப்பு சபையின் மாற்றம்.
2009 இல் ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது "இலங்கையின் நிலைமை பாதுகாப்பு அவையின் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" என்ற கோரிக்கை - அப்போதைய ஐ.நா பாதுகப்பு சபை உறுப்பினர்களான மெக்சிகோ மற்றும் கோஸ்டா ரிக்காவால் முன்வைக்கப்பட்டது. ஆனால், உடனடியாக சீனா மற்றும் ரசியாவால் தடுக்கப்பட்டது.

இப்போது 18 ஏப்ரல் 2011 அன்று ஐ.நா பாதுகாப்பு சபையால் இலங்கை மீதான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இரசியா.

இந்திய சதி முறியடிப்பு
ஐ.நா மனித உரிமைக் குழு கூட்டத்தின் போது இந்தியாவின் கடின முயற்சியால் - கியூபாவின் உதவியுடன் இலங்கை காப்பாற்றப் பட்டது. ஐ.நா மனித உரிமைகள் குழு இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது (இங்கே காண்க).

இப்போது, ஐ.நா. நிபுணர் குழு அறிக்இந்த முறையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது இரசியா.யின் மூலம் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் குழு மனித உரிமைகள் குழு கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டு, இலங்கைக்கு ஆதரவான தீர்மாம் மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சிக்குகிறார் விஜய் நம்பியார்
ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியார். அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். (இங்கே காண்க)  

கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார். இக்குற்றத்திற்காக தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கபட்டுள்ள வழக்கில் விஜய நம்பியாரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு உள்ளிட்ட - கடைசி கட்டத்தில் தமிழ் மக்களை காப்பாற்றத்தவறிய ஐ.நா'வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்று ஐ.நா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - தினமணி கட்டுரை
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - தினமணி கட்டுரை 1


ஐ.நா நிபுணர் குழு அறிக்கை - தினமணி கட்டுரை 2

இந்நிலையில்:


ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடக்கோரும் கடித இயக்கத்தை "இலங்கை பிரச்சாரம்" எனும் அமைப்பு தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்று பான் கீ மூனை வலியுறுத்துங்கள்.

http://www.srilankacampaign.org/takeaction.htm

திங்கள், ஏப்ரல் 18, 2011

இலங்கையின் போர்க்குற்றம் - ஓர் எச்சரிக்கை

கேள்வி: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்து மே 1 ஆம் நாள் சிங்களர்களை அணி திரள சொல்கிறார் ராசபட்சே. அதே நாளில் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்???

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையால் இலங்கையில் கடைசி கட்ட போரில் நடந்த அப்பட்டமான மனிதப்படுகொலைகள் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலம் வந்துகொண்டிருக்கிறது. 


இதன் மூலம் இலங்கை அரசு உலக அரங்கில் குற்றவாளியாக்க படவும், மனிதப்பேரவலத்தை நடத்திய கொடுங்கோலர்கள் தண்டிக்கப்படவும் உகந்த காலம் விரைவில் வரும். அதனை பின்வரும் பேட்டிகள் உறுதிசெய்கின்றன.

தன்னிச்சையான பன்னாட்டு விசாரணை ஓர் உடனடி தேவை எனும் அம்னெஸ்டி அமைப்பின் பேட்டி(Video)(இங்கே சொடுக்கவும்):
போஸ்னிய கொடூரத்தின் போது ஸ்றேபிறெனிகாவில் 8000 போஸ்னிக் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். இது ஐ.நாவின் தோல்வி. இந்தத் தோல்வி சிறிலங்காவிலும் நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில்,  இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் ஐ.நா செய்தித்தொடர்பாளராக இருந்த கார்டன் வெய்ஸ் பேட்டி(Video)(இங்கே சொடுக்கவும்):
ஐ.நா. மூலமான பன்னாட்டு விசாரணையை தடுக்க இப்போது இலங்கை அரசு சீனா, இரசியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடி தூது ஆட்களை அனுப்பி வருகிறது. இந்த நேரத்தில் உலகத் தமிழர்கள் ஒன்று திரண்டு ஐ.நா அறிக்கையை வெளியிடவும், அதன் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தவும் குரல்கொடுக்க வேண்டும்.

ஓர் எச்சரிக்கை

ஐ.நா. குழு அறிக்கை இலங்கை அரசை மட்டும் குற்றம் சாட்டவில்லை. கூடவே, விடுதலைப் புலிகளையும் குற்றம் சாட்டுகிறது. இந்த நேரத்தில் - விடுதலைப் புலிகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுப்பதும், அதன் மூலமாக - ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதும் தமிழர்களுக்கு பாதகமாகவே அமையும்.


எனவே, புலிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைவிட - இலங்கை அரசின்மீதான குற்றச்சாட்டுகளை வெளிச்சம்போட்டு காட்டுவதே அவசரம் ஆகும். 




சனி, ஏப்ரல் 16, 2011

உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.


(இது TIME வாக்கெடுப்பு அல்ல)


"அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்" எனும் எனது முந்தைய பதிவில் விடுக்கப்பட்ட வேண்டுகோள்.

"ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்பதுதான் இப்போது தேவைப்படும் அவசர நடவடிக்கை ஆகும். அதற்காக பின்வரும் இணைப்பை சொடுக்கி ஐ.நா. பொதுச்செயலாளருக்கு உடனே மின்னஞல் அனுப்புங்கள்:

http://www.amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka


ஆறு மணி நேரத்தில் 200 பேருக்கு மேல் இதில் பங்கேற்றுள்ளனர். (இதில் பாதியளவினராவது பதுவுலக நண்பர்களாக இருக்கலாம்)

புதிய செய்திகள் 


போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட செய்தி இப்போது வந்துள்ளது. 2011 ஏப்ரல் 15 அன்று தி ஹேக் விசாரணை ஆணையம் அளித்த தீர்ப்பில் குரோசியாவின் போர்குற்றவாளிகள் ஜெனரல் கோட்டிவானாவுக்கு 24 ஆண்டுகளும் ஜெனரல் மார்க்கக்கிற்கு 18 ஆண்டுகளும் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் செய்த குற்றம் - அப்பாவி செர்பிய மக்கள் மற்றும் சரணடைந்தோர் 300 பேரைக் கொன்றதுதான்.

300 பேரைக் கொன்றவர்களுக்கே இந்த தண்டனை என்றால் ராசப்ட்சேவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எவ்வளவு தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

 செர்பியர்களைக் கொன்ற குரோசிய போர்குற்றவாளிகள்
ஜெனரல் கோட்டிவானா 24 ஆண்டு சிறை 
ஜெனரல் மார்க்கக் 18 ஆண்டு சிறை 
தமிழர்களைக் கொன்ற சிங்கள போர்குற்றவாளி
ராசபட்சே - எத்தனை ஆண்டு சிறை?

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை - காலம் தாழ்த்தும் சதி

ஏப்ரல் 12 ஆம் நாள் இலங்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை 196 பக்கங்களில் அமைந்துள்ளது. அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகளை மட்டுமே கசியவிட்டு ஐ.நா'வுக்கு எதிராக சிங்களர்களை தயார்படுத்த தொடங்கியுள்ளது இலங்கை அரசு.

ஒருபுறம் அடுத்த வாரத்தில் நிபுணர் குழு அறிக்கை வெளிய்டப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டாலும், இலங்கை அரசிடமிருந்து பதில் கிடைத்த பின்னரே, பகிரங்கமாக்கலாம் என்று ஐ.நா. காத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கேற்ப, இந்த அறிக்கையை விரிவாக ஆராய்ந்து பொறுமையாகத்தான் (மிக மிக பொறுமையாக என்றும் கருதலாம்) பதிலளிக்க முடியும் என்று இலங்கை அரசு கூறுகிறது.

எனவே, காலம் தாழ்த்தும் சதி இதன் பின்னணியாக இருக்கலாம். (இதே போன்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பேனசிர் பூட்டோ கொலை குறித்த ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டதுடன், நிபுணர் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமும் தந்தனர் என்பதை இங்கே நினைவு கூறலாம். இலங்கை விடயத்தில் அந்த நடைமுறை இல்லை.)
ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் ஐ.நா. நிபுணர் குழுவினர்

உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.

"ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்பதுதான் இப்போது தேவைப்படும் அவசர நடவடிக்கை ஆகும். அதற்காக பின்வரும் இணைப்பை சொடுக்கி ஐ.நா. பொதுச்செயலாளருக்கு உடனே மின்னஞல் அனுப்புங்கள்:


http://www.amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

அண்மை விவரங்களை இங்கே காண்க: உங்களால் முடியும் - போர்க்குற்றவாளி ராஜபட்சேவை தண்டிக்க.


(இது TIME வாக்கெடுப்பு அல்ல)

ஐ.நா அவையால் அமைக்கப்பட்ட நிபுணர்குழு அளித்த அறிக்கை ராசபட்சேவை போர்க்குற்றவாளியாக்க போதுமானதாக இருப்பதாக ஊடகச் செய்திகள் அறிவிக்கின்றன. எனினும் 2011 ஏப்ரல் 12 அன்று ஐ.நா. பொதுச்செயலாளரிடம் கையளிக்கப்பட்ட அந்த அறிக்கை இதுவரை பகிரங்கமாக்கப் படவில்லை.

தற்சமயம் இலங்கை ஊடகம் ஒன்றில் கசியவிடப்பட்டுள்ள நிபுணர்குழு  அறிக்கையின் பகுதிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன (அவை உண்மையாக இருக்குமானால்). 1. அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமான குண்டுவீச்சுகள் மூலம் கொன்றொழித்தது. 2. மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது, 3. மனிதாபிமான சேவைகளை மறுத்தது, 4. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் சரணடைந்த போராளிகளை சித்திரவதை மற்றும் கொலை செய்தது, 5. போர்நடந்த பகுதிக்கு வெளியேயும், பத்திரிகையாளர் உள்ளிட்டோர் மீதான மனித உரிமை மீறல்கள் - ஆகிய குற்றங்களை ஐ.நா. நிபுணர் குழுவினர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

இக்குற்றங்கள் அனைத்தும் பன்னாட்டு சட்டங்களின் கீழ், போர் குற்றங்களாகவும் (war crimes), மனித குலத்திற்கு எதிரான கொடும் குற்றங்களாகவும் (crimes against humanity) கருதப்படக்கூடியவை. இவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) விசாரித்து தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.

இக்குழுவின் பரிந்துரைகளில் "ஐ.நா.அவை இலங்கையில் ஒரு பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என்பது முக்கியமானதாகும்.

கசியவிடப்பட்ட நிபுணர்குழு அறிக்கை பகுதியை இங்கே காணலாம்.

"போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்" எனும் எனது முந்தைய பதிவில் 2009 ஆம் ஆண்டில் நடந்த இலங்கை குறித்த ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தேன். அதில்: ""ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் மொத்தமுள்ள 46 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. 17 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 7 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. மொத்தத்தில், இலங்கை அரசு தற்காலிகமாக தப்பித்தாலும், சர்வதேச அரங்கில் அவமானப்பட்டது. அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே, இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஆராய பன்னாட்டு நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது" என்று குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது நிபுணர் குழுவின் பரிந்துரையில் "ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு மீண்டும் கூட்டப்பட்டு இலங்கைக்கு ஆதரவான நிலை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் இந்தியாவின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

"ஐ.நா. பொதுச்செயலாளர் நிபுணர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்பதுதான் இப்போது தேவைப்படும் அவசர நடவடிக்கை ஆகும்.

அதற்காக உடனே செயல்படுங்கள்:

பின்வரும் இணைப்பை சொடுக்கி ஐ.நா. பொதுச்செயலாளருக்கு உடனே மின்னஞல் அனுப்புங்கள்


(நீங்கள் நடவடிக்கை எடுப்பின் அதனை எனக்கு தெரிவியுங்கள். நன்றி)
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை அனுப்புங்கள். சமூக வலைதளங்களின் பரப்புங்கள்

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.




அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராசபட்சே பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் போர் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் நாள் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  அதற்கான சின்னஞ்சிறு முன்முயற்சியை நானும் செய்தது குறித்த எனது அனுபவம் இதோ:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளருடன் நான் (இடம் டென்மார்க், 2009): 
ஜான் ஹால்ம்ஸ்- ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர். இறுதி கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் இலங்கைக்கு வந்து ஐ.நா'வின் சார்பில் அரசோடும் புலிகளோடும் பேசியவர். மனிதப்பேரழிவை தடுக்க தவறியவர். இலங்கை அரசால் - புலிகளிடம் காசு வாங்கும் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.

ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு (UN’s HUMAN RIGHTS COUNCIL) சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று உலகின் 90 அரசு சாரா அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர். அந்த பட்டியலில் 67 ஆவது நபராக நான் கையொப்ப மிட்டிருந்தேன். (அரசுசாரா அமைப்புகளின் கோரிக்கையை இங்கே காணலாம்)

கூடவே, ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 10ஆவது கூட்டம் கூடியபோது, இலங்கை மீது தனி விவாதத்தை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று நான் ஐ.நா. அவையில் அதிகாரப்பூர்வமாக மனு செய்திருந்தேன். ஐ.நா அவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் -Consultative Status With the UN- அளிக்கும் மனுவே அதிகாரப்பூர்வமானதாகும். அவை, ஐ.நா. அவையின் ஆவணங்களாக சுற்றுக்கு விடப்படும். (அந்த மனுவை இங்கு காணலாம்.)

ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 

ஐ.நா.அவையின் மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26, 27 தேதிகளில் கூடியது. அக்கூட்டத்தில் நான் "போர்குற்ற விசாரணை வேண்டும்" என மனு அளித்தேன். அக்கூட்டத்தில் மொத்தமாக நான்கு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மட்டுமே இலங்கை அரசு மீது புகார் தெரிவித்தன. அவற்றில் நான் சார்ந்த அமைப்பும் ஒன்று. அந்தவகையில், அதிகாரப்பூர்வமாக புகார் செய்த ஒரே தமிழன் நான் மட்டும்தான். (எனது புகாரை கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 1 இல் காண்க)

என்னை கண்டித்து இலங்கை இதழ் எழுதியது. (அதனை இங்கு காணலாம்)

ஐ.நா. கூட்டங்களில் அரசுசாரா பிரதிநிதியாக பங்கேற்கவும் கருத்து கூறவும் எனக்கு அனுமதி உண்டு. மேலும், மற்றவர்களையும் கூடுதலாக இட்டுச்செல்லவும் அனுமதி உண்டு. அந்தவகையில், இலங்கை மீதான விவாதத்தின் போது அதனை நேரில் காண எனக்கு அனுமதி இருந்தது. ஆனால், எனது பொருளாதார நிலை அனுமதிக்காததால் - கனடா நாட்டின் தமிழர்கள் இருவரை நான் பரிந்துரைத்தேன். அவர்களும் நேரில் சென்று பங்கேற்று பேசினர்.

ஐ.நா. மனித உரிமை ஆவையில் இலங்கை மீது சிறப்பு விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாக கடும் போராட்டம் நடத்தினார் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் கோபிநாதன். கடைசியில் இந்தியாவின் சதியே வெற்றி பெற்றது.

திடீர் திருப்பங்கள்:

1. பொதுவாக முற்போக்கு சக்திகளுக்கு எதிரான நாடுகளாக கருதப்படும் மேற்குலக நாடுகள்தான் ஈழத்தமிழர்களை ஆதரித்தன. அவை: சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, லக்சம்பர்க, எஸ்தோனியா, ஜெர்மனி, போலந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, சைப்ரஸ், கிரேக்கம், நெதர்லாந்து, அயர்லாந்து, பல்கேரியா, இங்கிலாந்து, டென்மார்க், சுவீடன், பிரான்சு, ருமேனியா, லாட்வியா, சிலி, மொரீசியஸ், மெக்சிகோ, கனடா. இக்கூட்டணியை அமெரிக்காவும் ஆதரித்தது. அப்போது அமெரிக்கா மனித உரிமைகள் குழுவில் உறுப்பு நாடாக இல்லை. (கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 2ஐ காண்க)

2. முற்போக்கு நாடுகளும் சர்வாதிகார நாடுகளும் இலங்கை அரசை ஆதரித்தன. அவை:  இந்தியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, சவுதி அரேபியா, மலேசியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், எகிப்து, நிகரகுவா. பொலிவியா (கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 3ஐ காண்க)

3. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று - உலகின் முற்போக்கு நாடான கியூபா - இலங்கையை மிகத்தீவிரமாக ஆதரித்தது. இதற்காக அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் சார்பாக ஐ.நா'வில் கடிதம் கொடுத்தது கியூபா.
(கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் 4ஐ காண்க)

கடைசியில் வாக்கெடுப்பின் போது ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் மொத்தமுள்ள 46 உறுப்பு நாடுகளில் 29 நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

மொத்தத்தில், இலங்கை அரசு தற்காலிகமாக தப்பித்தாலும், சர்வதேச அரங்கில் அவமானப்பட்டது. அந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே, இலங்கையின் போர்குற்றங்கள் குறித்து ஆராய பன்னாட்டு நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை 2011 ஏப்ரல் 12 அன்று ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது. (அதுகுறித்து இங்கே காண்க)

ராசபட்சே போர் குற்றவாளியாக விசாரிக்கப்படும் ஒரு நாள் விரைவில் வரப்போகிறது:

இனி என்ன?

உலகத் தமிழர்களிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைக்கும் நேரம் இது.

இன்னும் ஓரிரு மாதங்களில் - இலங்கையின் போர்குற்றங்கள் உலக அரங்கில் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. இந்நேரத்தில் தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு - போர்க்குற்றங்கள் பன்னாட்டு அமைப்புகளால் முறையாக விசாரிக்கப்படவும், ராசபட்சே உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் பன்னாட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும்.
குறிப்பு: மேலே உள்ளது நான் ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் ஜான் ஹால்ம்ஸ் அவர்களை 2009 டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் சந்தித்தபோது எடுத்த படம். (ஜான் ஹால்ம்ஸ் - ஐ.நா'வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பாளரான இவர்தான் இறுதி கட்ட ஈழப்போரின் இறுதிநாட்களில் இலங்கைக்கு வந்து ஐ.நா'வின் சார்பில் அரசோடும் புலிகளோடும் பேசியவர். மனிதப்பேரழிவை தடுக்க தவறியவர். இலங்கை அரசால் - புலிகளிடம் காசு வாங்கும் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.)

அவர் என்னிடம் கூறிய செய்தி இதுதான்: நான் தமிழர்களைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். எல்லாம் வீணாகப் போனது. கடைசிகட்ட போரின் போது இந்தியாவில் வாழ்ந்த தமிழர்கள் இந்திய அரசுக்கு "இன்னும் கூடுதலாக" அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.


ஆவணங்கள்

ஆவணம் 1: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை - பசுமைத் தாயகம் புகார் மனு


ஆவணம் 2: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை - இலங்கை அரசுக்கு எதிர்ப்பு


ஆவணம் 3: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை - இலங்கை அரசுக்கு ஆதரவு


ஆவணம் 4: ஐ.நா.மனித உரிமைகள் குழு சிறப்பு கூட்டம் 2009 - இலங்கை -இலங்கை அரசுக்கு ஆதரவாக கியூபா, இந்தியா

India to Save Sri Lankan Government at the UN

அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்! 


அமெரிக்கா, சீனா, இரசியா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய உலகின் பலம் வாய்ந்த நாடுகள் மட்டுமே ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கேரளாவுக்கு எப்படி அதில் இடம் கிடைக்கும் என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதற்கு சீனாவும் இரசியாவும் உடன்பட்டுவிட்டதாக சீனாவில் நடந்த BRICS மாநாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளும் இந்தியாவின் நீண்டகால ஆசைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரு இந்தியக் குடிமகன் என்ற வகையில் இதற்காக என்னால் பெருமைக்கொள்ள முடியவில்லை. எனக்கென்னமோ, இதன்மூலம் "கேரளாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்" கிடைக்கப்போவதாகவே தெரிகிறது.

ஈழத்தில் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்றொழிக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது இந்திய வெளியுறவுத் துறையிலும் ஐ.நா. அவையிலும் முக்கியமான பதவிகளில் இருந்த மலையாளிகள் தமிழ்மக்களை கொன்றொழிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டினார்கள்.
 எம்.கே. நாராயணன்
சிவசங்கர மேனன்

இந்திய வெளியுறவுத்துறையில் கோலோச்சிய சிவசங்கர மேனன், எம்.கே. நாராயணன் ஆகிய மலையாளிகள் தமிழகத்தின் கதறலை காதில் வாங்காமல் ராசபட்சேவின் சேவகர்களாக செயல்பட்டனர்.
கோபிநாதன் 

ஐ.நா. மனித உரிமை ஆவையில் இலங்கை மீது சிறப்பு விவாதம் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாக கடும் போராட்டம் நடத்தினார் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் கோபிநாதன் எனும் மலையாளி.
 விஜய் நம்பியார் - அண்ணன் ஐ.நா.தூதர் 
சதீஷ் நம்பியார் - தம்பி இலங்கை இராணுவ ஆலோசகர்

ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியாரும் ஒரு மலையாளியாக இருந்தார். அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து தமிழர்களைக் காட்டிக்கொடுத்தனர்.

கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார். இக்குற்றத்திற்காக தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கபட்டுள்ள வழக்கில் விஜய நம்பியாரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்படி எல்லா இடத்திலும் - இந்தியாவின் வெளியுறவுத்துறையாக, இந்தியாவின் ஐ.நா. முகமாக மலையாளிகளே நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் என்பது கேரளாவுக்கு தானே!

இதற்காக தமிழர்கள் பெருமைக் கொள்ள முடியாது.

(மலையாளிகளை அவர்கள் மலையாளிகள் என்பதற்காக நாம் குற்றம் சாட்டவில்லை. வெளியுறவுத்துறை சார்ந்த மலையாளிகள் தமிழின எதிரிகளாக இருப்பதையே கண்டிக்கிறோம்)

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு


திரு.கே.ஆர்.பி செந்தில் என்பவர் "பயோடேட்டா - பா.ம.க" எனும் ஒரு பதிவை போட்டுள்ளார். சனநாயக நாட்டில் யாரும் யாரைக்குறித்தும் தமது எண்ணத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. அந்தவகையில் அவர் பயோடேட்டா வெளியிடுவதை குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு அந்த உரிமை உண்டு.

அதேநேரம் - கருத்து என்று வரும்போது போதுமான ஆதாரமுள்ள உண்மைகளைச் சொல்லலாம், அல்லது, தனது சொந்தக்கருத்தை சொல்லலாம். அதைவிடுத்து கட்டுக்கதைகளை அள்ளி விடக்கூடாது. கே.ஆர்.பி செந்திலின் "பயோடேட்டா - பா.ம.க" என்பது உண்மையானதாகவும் இல்லை, அவரது சொந்தக்கருத்து போலவும் இல்லை. மாறாக பார்ப்பன - ஆதிக்க சாதிவெறியர்களின் கோயபல்சு பிரச்சாரத்தின் நீட்சியாக காட்சியளிக்கிறது. அவற்றைப் பார்ப்போம்:

கட்டுக்கதை 1. இயற்பெயர்: பாசக்கார மகன் கட்சி 
கட்டுக்கதை 2. தொழில்: முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது 
கட்டுக்கதை 3. பலவீனம் : கூட்டணி மாறுவது 
கட்டுக்கதை 4. டிஸ்கி: பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?

கட்டுக்கதை 1. இயற்பெயர்: பாசக்கார மகன் கட்சி 

பா.ம.க மீது பாய்ந்து பிடுங்கும் சாதிவெறியர்கள் "அந்த ஒரு கட்சி மட்டுமா அப்படி?" என்கிற கேள்வியை கவனமாக தவிர்த்துவிடுகிறார்கள். தி.மு.க - பாசக்கார மகன்கள் + மகள் கட்சி இல்லையா? காங்கிரசு பாசக்கார பேரன், மருமகள், கொள்ளுபேரப்பிள்ளைகள் கட்சி இல்லையா? அ.தி.மு.க ஒன்றுவிட்ட (சசிகலா) குடுப்பத்தின் கட்சி இல்லையா? விசயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்போதே அதை குடும்ப நிறுவனமாக தொடங்கவில்லையா?

குடும்ப ஆரசியல் என்று கத்துவதால் ஒருபயனும் இல்லை. ஏனெனில், மக்கள் அதை ஏற்கிறார்கள், வரவேற்கிறார்கள். அதற்கு ஒரு எளிய உதாரணம் செல்வி. செயலலிதா அம்மையார். அவர் மட்டும் திருமணம் ஆனவராக இருந்திருந்தால், வேறு யாருக்காவது மனைவியாக இருந்திருந்தால் அவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகியிருக்க முடியுமா? அதிகமான திரைப்படங்களில் எம்.சி.ஆரின் மனைவியாக நடித்ததே, அவர் முதல்வராக போதுமானதாக இருந்தது என்பதை மறந்துவிட முடியாது.

பா.ம.க'வில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பா.ம.க'வில் திடீரென புகவில்லை. 1998 முதல் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக போராடியவர் அவர். அதனால் 2002 ஆம் ஆண்டில் ஐ.நா.அவையின் அழைப்பின்பேரில் தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர்க்கில் நடந்த புவி உச்சி மாநாட்டில் பங்கேற்றவர். 2004 ஆம் ஆண்டில் கட்சி நிருவாகிகளின் வற்புறுத்தலின் பேரில்தான் அவர் அமைச்சராக ஆக்கப்பட்டார்.

இன்றைக்கும் பா.ம.க உறுப்பினர்கள், தொண்டர்கள், நிருவாகிகள் அனைவரும் ஒருமனதாக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்தான் கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

'பாசக்கார மகன் கட்சி' என்கிற கேலி, கிண்டல் எல்லாம் வன்னியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கும் ஒருசில ஆதிக்க சாதிவெறியர்களால் கிளப்பிவிடப்படும் விசமப் பேச்சுகளாகும்.

ஒரு கட்சி முதன்மையாக அதற்கு வாக்களிக்கும் மக்களுக்கு அல்லது தொண்டர்களுக்கு கட்டுப்பட்டது என்று நான் கருதுகிறேன். மற்றதெல்லாம் வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் - அவ்வளவுதான். ஒரு பொருளை விற்கும் நிறுவனம் அதன் நுகர்வோருக்குதான் பயப்பட வேண்டுமே தவிர, நுகர்வோர் அல்லாதோருக்கு - அல்லது எதிர்காலத்தில் நுகர்வோர் ஆக வாய்ப்பே இல்லாதோருக்கு பயப்பட வேண்டிய தேவை இல்லை. இது அரசியல் கட்சிக்கும் பொருந்தும். அந்த வகையில் சாதிவெறியர்களின் வயிற்றெரிச்சலுக்கு பா.ம.க'வினர் வருந்தத்தேவை இல்லை.

கட்டுக்கதை 2. தொழில்: முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது 

பா.ம.க மரம்வெட்டும் கட்சி என்று பேசுவது ஒட்டுமொத்த வன்னியப் பேரினத்தையும் இழிவுபடுத்தும் செயல் மட்டுமின்றி சமூக நீதிப்போராட்டத்தையே கேவலப்படுத்தும் செயலுமாகும்.

"அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு, மண்டல் குழு அறிக்கை அமலாக்கம், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து" 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் அதிகாலை ஒருவாரகால சாலைமறியல் போராட்டம் தொடங்கியது. அன்றைய பொழுது விடிவதற்குள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பலர் கொடூரமான சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்தக்கொடூரங்கள் தொடராமல் தடுக்க ஆங்காங்கே சாலையில் மரங்கள் தன்னிச்சையாக வெட்டிப்போடப்பட்டன.

அந்த ஒருவார காலத்தில் காவல்துறை அராசகத்தால் 21 பேரின் உயிர் பலிவாங்கப்பட்டது. அதேசமயம், வன்னியப் போராளிகளால் ஒருவரது உயிருக்கும் பாதிப்பு இல்லை.உயிரழப்பை தவிர்க்க சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டன.

தற்காப்புக்காக கொலையே செய்யலாம் என்பது சட்டமாக இருக்கும் நாட்டில் தற்காப்புக்காக மரம் வெட்டுவது குற்றமா?

(மற்றபடி, வன்னியர் சங்க போராட்டத்தில் 100 மரம் வெட்டப்பட்டதற்கும் - பசுமைத் தாயகம் சார்பிம் பல லட்சம் மரம் வளர்க்கப்படுவதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.)

கட்டுக்கதை 3. பலவீனம் : கூட்டணி மாறுவது 

இது ஒரு அப்பட்டமான கட்டுக்கதை. இதுகுறித்து இங்கே காண்க: விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்! 

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

கட்டுக்கதை 4. டிஸ்கி: பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?

சாதிவெறியர்களின் அப்பட்டமான கோயபல்சு பிரச்சாரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

பசுமைத்தாயகம் அமைப்பை குறித்து கட்டுக்கதை கூறப்பட்டவுடன், அதற்கு நான் (அருள்), திரு. கே.ஆர்.பி. செந்திலின் அதே பதிவில் பின்னூட்டமாக : "பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான். அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்" என்று கூறினேன்.

உடனே "விந்தைமனிதன்" என்பவர்

"பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?" என்றார்.

அதற்கு நான் (அருள்):

"தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.


மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.


அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.


நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.


அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.


தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்" என்று கூறினேன்.

அதற்கு "விந்தைமனிதன்" என்பவர்:

"முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த.." என்றார்.

அதற்கு நான் (அருள்): 

"உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.


1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.


அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.


நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.


நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.


இதில் நிங்கள் குறிப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?


"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?


பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை." என்று கூறினேன்.

இப்படி விளக்கமாக எடுத்துக்கூறிய பின்னரும் திரு.கே.ஆர்.பி செந்தில் எந்த மறுப்பையும் கூறவில்லை. 


என்ன செய்வது வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறி கண்களை மறைக்கும், உண்மையை குழிதோண்டி புதைக்கும்தானே?!!

வியாழன், ஏப்ரல் 07, 2011

மலர்களின் மணம் வீசும் அணைக்கட்டு தொகுதி

புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி அணைக்கட்டு தொகுதியில் வருகிறது. மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் இங்கு அதிகம். இது விவசாயம் நிறைந்த தொகுதி. விவசாய நிலங்களில் அதிகம் உற்பத்தியாகும் மல்லிகை, ரோஜா மலர்கள் சென்னை, பெங்களூருக்கு ஏற்றுமதியாகிறது. தொகுதியில் மலர்களின் மணம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அபூர்வ மூலிகைகளும் அணைக்கட்டு மலைகளில் காணப்படுகின்றன.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.
அணைக்கட்டு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் எம். கலையரசு. அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

வினவின் வேடிக்கை: எங்கே செல்லும் இந்த பாதை???


கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் ! என்கிற ஒரு கட்டுரை வினவில் வந்துள்ளது. தேர்தலுக்கு மாற்று என்ன என்பதற்கு அவர்கள் புரிந்துகொள்ளவே கடினமான ஒரு வழியையும் காட்டியுள்ளனர்! 

அதில் ""தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்னதான் செய்வது? ஒரு ஆட்சியும் அரசமைப்பும் இல்லாமல் நிர்வாகம் எப்படித்தான் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். வெறுமனே விரக்தியில் தேர்தலைப் புறக்கணிப்பது அல்ல; தற்போதைய ஆட்சி, அரசியலமைப்பு, நிர்வாக முறை அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும்.

இது ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாத்தியமாகும். இத்தகைய மக்கள் சர்வாதிகார அரசமைப்பை நாளையே நிறுவிவிட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்ற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான் “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!”, “ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!” என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது.""

வினவு காட்டியுள்ள வழி பாமரனான எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிந்தால் கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!!!

திங்கள், ஏப்ரல் 04, 2011

பா.ம.க'வின் புரட்சிகரமான தேர்தல் அறிக்கை


பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்ற எல்லா கட்சிகளிடமிருந்தும் வேறுபட்டதாகவும், உண்மையிலேயே புரட்சிகரமானதாகவும் விளங்குகிறது.

குறிப்பாக, வேளாண்மை, வறுமை ஒழிப்பு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட முக்கியமான சிக்கல்களுக்கு சாத்தியமாகக் கூடிய மிகச்சிறப்பான திட்டங்களை முன்வைக்கிறது பா.ம.க.

பா.ம.க வேட்பாளர்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

பாமகவின் தேர்தல் அறிக்கை:
PMK Election Manifesto 2011 Pattali Makkal Katchi