Pages

திங்கள், ஆகஸ்ட் 29, 2016

மோனோ ரயில்: தமிழக அரசின் 'முட்டாள்' திட்டம்!

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரிலிருந்து வடபழனி வரை 20.68 கி.மீ. தூரத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 267 கோடி திட்ட மதிப்பில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.  

வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கீ.மீ. தூரத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 135 கோடியே 63 லட்சம் திட்ட மதிப்பில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - என தமிழக அரசு இன்று (29.8.2916) அறிவித்துள்ளது.

இது தமிழக அரசின் முட்டாள் திட்டம் என்றால் அது மிகையல்ல. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய - மும்பை மோனோ ரயிலை ஒப்பிட்டு பாருங்கள்!

மும்பை மோனோ ரயில்

தற்போது மும்பை நகரில் 10 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும் திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதில் தினமும் 16000 பேர் பயணம் செய்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கும் இத்திட்டத்திலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட இலாபம் கிடைக்கவில்லை.

மாறாக, ஒவ்வொருநாளும் 9 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகிக்கொண்டிருக்கிறது. இதுவரை 18 கோடி ரூபாய் பணத்தை அரசாங்கம் மோனோ ரயிலை இயக்குவதற்காக மட்டும் செலவு செய்துள்ளது.
 மும்பை மோனோ ரயில்

அதாவது, பல ஆயிரம் கோடி செலவிட்டு கட்டப்பட்ட மோனோரயில் திட்டத்தை இயக்குவதற்காகவும் அரசாங்கம் பெருந்தொகை செலவிடுகிறது. இத்தனைக்கும் இந்த மோனோ ரயிலில் ஒவ்வொருநாளும் 16 ஆயிரம் பயணங்கள் மட்டுமே நடக்கின்றன. (சென்னை MTC பேருந்துகளில் ஒவ்வொருநாளும் 50 லட்சம் பயணங்கள் நடக்கின்றன).

நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களை எவ்வளவு மோசமாக திட்டமிடுவது என்பதற்கான மோசமான உதாரணமாக மும்பை மோனோ ரயில் இருப்பதாக வல்லுநர்கள் இப்போது குறிப்பிடுகின்றனர். ("Over two years after India's first monorail was launched in the city - Mumbai, it is increasingly being viewed as a symbol of bad planning and wasteful expenditure. Some urban transport experts even describe it as a vehicle for joyrides" - Times fo India 26.4.2016)

மோனோ ரயிலை விட பேருந்துகளே மிகச்சிறந்தவை

சென்னை மோனோ ரயிலுக்கான பணத்தை MTC பேருந்துக்கு செலவிட்டால் சென்னை சொர்க்கம் ஆகும்.

உலகத்தரமான 800 பேருந்துகளுக்கு சுமார் 500 கோடி செலவாகும். இதற்கான உலகத்தரமான பேருந்து நிலையம், இயக்க வசதிகளை செய்ய சுமார் 200 கோடி செலவாகும். ஆக உலகத்தரமான 800 குளிர்சாதன பேருந்துகளுக்கும் அதன் இயக்க வசதிகளுக்கும் சேர்த்து 700 கோடி தேவை.
இதுவே சென்னைக்கு தேவையான 8000 உலகத்தர பேருந்துகளின் இயக்கத்துக்கு 7000 கோடி தேவைப்படலாம். அதாவது -  தமிழக அரசின் 45 கி.மீ. தூர மோனோ ரயிலுக்கு தேவைப்படும் அதே அளவு செலவுதான்.

ஆனால், மோனோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை விட ஆயிரம் மடங்கு அதிகமான பயணிகள், பலமடங்கு குறைவான செலவில் பேருந்துகளில் செல்ல முடியும். மோனோ ரயிலை விட விரைவாகவும், வசதியாகவும் செல்ல முடியும். மேலும், மோனோ ரயில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவது போல - பேருந்துகள் பெருநஷ்டத்தை ஏற்படுத்தாது.

ஆனாலும், மக்களுக்கு என்ன பயன் என்பதை விட, ஆட்சியாளர்களுக்கு என்ன பயன் என்பதுதானே - மெகா திட்டங்களை முடிவு செய்கிறது!

ஜெயலலிதா பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்

சென்னை மோனோ ரயில் திட்டத்தை 2006 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது முதல் இந்த மோசமான திட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்க்கிறார்கள்.  ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என சாதிக்க நினைக்கிறார் முதலமைச்சர்.

இந்த முட்டாள் திட்டம் குறித்த எனது பழைய எச்சரிக்கை கட்டுரை இதோ:

"சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து (3.6.2011 இல் எழுதியது)

சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை. 

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.


மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்! (3.6.2011 இல் எழுதியது)  

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

புதுதில்லியில் நடந்தது என்ன? OBC பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான சதியை முறியடித்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP!

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பினர், மண்டல் குழு அறிக்கை செயலாக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை இன்று கொண்டாடினர்.

இவ்விழாவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவர்களான சரத் யாதவ் MP, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP, மண்டல் குழு அறிக்கையை செயல்படுத்தி உத்தரவிட்ட அரசு செயலர் பி.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கும்பல் ஒன்று இவ்விழாவை குலைக்க முயன்றது. ஆனால், OBC பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கோழைகளின் கூச்சலை முறியடித்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP!

நடந்தது என்ன?

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கூட்ட அரங்கிற்கு மதியம் 3.00 மணியளவில் வந்தபோது, அவர் உள்ளே செல்லக் கூடாது என, தமிழகத்தின் சாதி மோதல்களை சுட்டிக்காட்டி சிலர் எதிப்பு தெரிவித்தனர்.

உடனே மாற்றுவழியில் செல்லலாம் என OBC பிரிவு மாணவர்கள் கூறினர். ஆனால், அதனை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் ஏற்காமல், அதே வழியில் கூட்டத்திற்கு சென்றார்.
சரத் யாதவ் MP
கூட்டத்தில் சரத் யாதவ் MP அவர்கள் 40 நிமிடம் பேசினார். தொடர்ந்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், OBC இடஒதுக்கீட்டின் அவசியம் மற்றும் சமூகநீதி குறித்து 40 நிமிடம் பேசினார்.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசும்போது சிலர் எதிர்ப்பு அட்டைகளை காட்ட முயன்ற போது, அதற்கு OBC மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

முன்னாள் அரசு செயலர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பேசினார்.

இவ்வாறாக, திட்டமிட்டபடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மண்டல் குழு அறிக்கை செயலாக்கத்தின் வெள்ளிவிழா சிறப்பாக நடந்தது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் விமானத்தை பிடிக்க வேண்டிய தேவை இருந்ததால், 5.30 மணியளவில் அங்கிருந்து கிளம்பினார்.

பின்னணி என்ன?

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த முறை OBC பிரிவு மாணவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, சமூகநீதிக்கு எதிரான கும்பல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கும்பல், மண்டல் குழு வெள்ளிவிழாவை தடுக்க முயன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், எதிரிகளின் சதியை முறியடித்து வெள்ளிவிழாவை வெற்றிகரமாக நடத்தினர் OBC மாணவர்கள்.

சதி முறியடிப்பு - சமூகநீதி வெல்லும்

எதிர்ப்பு தெரிவித்தால், திரும்பிவிடுவார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் என்று நினைத்தனர். வெள்ளிவிழா தோல்வியடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வழியைக் கூட மாற்றவில்லை. 40 நிமிடம் பேசினார்.

சமூகநீதியின் எதிரிகள், கீழிருந்து வந்தாலும், மேலிருந்து வந்தாலும், எங்கிருந்து வந்தாலும் - அதனை OBC பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெற்றிகரமாக முறியடிப்பார்கள்.

சமூகநீதி வெல்லும்
வி.பி.சிங் 

குறிப்பு:  மண்டல் குழு 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 1980 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியில் இடஒதுக்கீடு 1993 ஆம் ஆண்டு முதல் செயலாக்கப்படுகிறது. இதற்கு உத்தரவிட்டவர் இந்திய பிரதமர் வி.பி.சிங் அவர்கள். உத்தரவில் கையெழுத்திட்டவர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்கள்.

புதன், ஆகஸ்ட் 24, 2016

சாதி அங்கீகாரத்துக்காக தமிழக கோடீஸ்வரர்கள் சண்டை: முற்போக்கு கும்பலின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள், பல ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்களான, ஏ.சி. முத்தையா செட்டியார் மற்றும் ராஜா அண்ணாமலை செட்டியார் குடும்பத்தின் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா உள்ளிட்டோர், இப்போது வெறும் 25 ரூபாய் தொடர்புடைய சாதிப்பெருமிதத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்

செட்டிநாட்டு நகரத்தார் சமூகம்

சோழர்கள் ஆட்சியின் கீழ், கிழக்காசியா முழுவதும் வணிகம் செய்தவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்களும், முஸ்லிம்களும் ஆகும்.

வெளிநாடுகளில் கிடைக்கும் கல்வெட்டுகளில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் "ஆயிரத்தைநூற்றுவர்" என்றும், முஸ்லிம்கள் "அஞ்சுவண்ணம்" என்றும் குறிப்பிடப்படுகின்றனர். சோழ மன்னர்கள் பெரும்படை கொண்டு கிழக்காசிய நாடுகளுக்கு சென்றது இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத்தான்.

நகரத்தார் சமூகத்தினர் காஞ்சிபுரத்திலிருந்து பூம்புகாருக்கு வந்தனர் என்பதும், பூம்புகாரிலிருந்து செட்டிநாட்டுக்கு சென்றனர் என்பதும் இவர்களின் இடப்பெயர்வு வரலாறு ஆகும். உலகின் வங்கித்தொழிலுக்கு வழிகாட்டி, செட்டிநாடு சமூகம்தான்.

நகரத்தார் மக்கள் தொகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சுற்றியுள்ள 96 கிராமங்கள் செட்டி நாடு என்று அழைக்கப்பட்டாலும், இப்போது சுமார் 75 கிராமங்களில் வசிக்கின்றனர்.

நகரத்தார் சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும், அதாவது திருமணம் ஆன ஒவ்வொரு தம்பதியும் அவர்களின் குழந்தைகளும் ஒரு 'புள்ளி' ஆகும். இதன்படி, உலகம் முழுவதுமாக சுமார் 35,000 புள்ளிகள் உள்ளனர். நகரத்தார் சமூக மொத்த மக்கள் தொகை சுமார் ஒன்றரை லட்சம் பேர்.

நகரத்தார் திருமணம்

நகரத்தார் சமூகத்தில் புள்ளி என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். திருமணம் ஆன குடும்பத்தின் ஆண் தலைவர் புள்ளியாகக் கருதப்படுவார். பொதுக்காரியங்களுக்கும் கோவிலுக்கும் அவர் வரிக்கட்ட வேண்டும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அவருக்கே அழைப்பிதழ் வரும். கணவர் இல்லாத குடும்பத்தில், பெண் அரைப்புள்ளியாகக் கருதப்படுவார். அவர் அரை வரிக்கட்ட வேண்டும்.

நகரத்தார் சமூகத்தின் புள்ளியாக உள்ளவர்கள் மட்டுமே, நகரத்தார் சமூகத்தில் திருமணம் செய்ய முடியும்.

ஒவ்வொரு புள்ளியும் அவர்களின் ஒன்பது கோவில்களில் ஏதேனும் ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் சம்பந்தப்பட்ட கோயில்களில் இருந்து கோயில் மாலை அனுப்பப்பட்டால்தான் அந்த திருமணம் முறைப்படி அங்கீகரிக்கப் பட்டு அவர்கள் புள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சாதி மாறி திருமணம் செய்வோரை நகரத்தார் புள்ளியில் சேர்க்கக் கூடாது என்பது இவர்கள் சமூகத்தின் விதியாகும்.

தமிழக கோடீஸ்வரர்களின் சண்டை

செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம். ராமசாமி அவர்கள் தத்துப்பிள்ளையான எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை தனது மகன் அல்ல என விலக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, எம்.ஏ.எம்.ராமசாமியின் கோரிக்கையை ஏற்று, 2015 ஜனவரி மாதம், கானாடுகாத்தான் நகரத்தார்கள் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை நகரத்தார் புள்ளியில் இருந்து (சமுதாய தலைக்கட்டு) விலக்கி வைப்பதாக அறிவித்தார்கள். எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவின் திருமணத்தின் போது, கோவில் மாலைக்காக கொடுக்கப்பட்ட 25 ரூபாய் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் அறிவித்தார்கள்.  (செய்தி: தி இந்து தமிழ் 11.01.2015)
இந்நிலையில், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அவரை மீண்டும் புள்ளியில் சேர்த்துக்கொள்வதாக, கானாடுகாத்தான் நகரத்தார்கள் இப்போது 2016 ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள்

“புள்ளியில் சேர்ப்பது என்பது நகரத்தார் சமூகத்தில் மிக முக்கியமான அங்கீகாரம். முத்தையா புள்ளியில் சேராமல் இருந்தால் அவரது பிள்ளைகளுக்கு நகரத்தார் சமூகத்தில் திருமணம் முடிக்க முடியாது. அதை கருத்தில்கொண்டுதான் அவரை மீண்டும் கானாடுகாத்தான் நகரத்தார்கள் புள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்" - என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை நகரத்தார் புள்ளியில் சேர்த்தது தவறு என்றும், அவரை நீக்க வேண்டும் என்றும் ஏ.சி. முத்தையா முயற்சிப்பதாக செய்திகள் கூறுகின்றன. (செய்தி: தி இந்து தமிழ் 24.8.2016)

திராவிட, கம்யூனிச, போலித் தமிழ்த்தேசிய கும்பலின் கருத்து என்ன?

சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், திராவிட அரசியலுக்காகவும் பெரும் உதவிகளை செய்த செட்டிநாட்டு குடும்பத்தினர், இப்போது சாதி அங்கீகாரத்துக்காக சண்டைப் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாட்டின் திராவிட, கம்யூனிச, போலித் தமிழ்த்தேசிய கும்பலின் கருத்து என்ன?

பணபலத்தில் பலவீனமான சமூகத்தினரின் சாதி விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் இந்த கும்பல் - பணபலத்தில் வலிமையாக உள்ள சமூகத்தினரின் சாதி பிரச்சினைகளில் கருத்து கூற முன்வருவார்களா?

(குறிப்பு: நகரத்தார் சமூகத்தின் பண்பாட்டுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அதில் நாம் தலையிடவில்லை. இந்தப்பதிவு முற்போக்கு கும்பலின் நிலைப்பாடு குறித்து மட்டுமே)

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

இன்று சென்னை தினம்: மறைக்கப்படும் மாநகரின் வரலாறு!

377 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கிழக்கிந்திய கம்பெனியினர் சென்னையில் காலூன்றி, ஒரு மாபெரும் சாம்ராஜயத்தைக் கட்டமைத்தனர்.

"வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த தெலுங்கு வெலமா சாதியைச் சேர்ந்தவரிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" என்பது ஆந்திராவுடன் சென்னையை சேர்க்கக் கோரியவர்களின் வாதம் ஆகும். ஆனால், அது உண்மை அல்ல.

ஆங்கிலேயர்கள் எவ்வாறு சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு இந்த இடத்தை அளித்தவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன - என்கிற வரலாற்றை, சென்னை தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வந்தது எப்படி?

மசூலிப்பட்டனத்தில், தொழிற்சாலை என்கிற பெயரில், ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனி குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே ஆறுமுக நாயகன் பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.
1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார்.

ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்றது யாரிடம்?

ஆங்கிலேயர்கள் மதராசக்குப்பத்தில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயகர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே, அவரது தம்பி தாமல் அய்யப்ப நாயகர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயகர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). 

இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.

பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை அய்யப்ப நாயகர் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது.

தாமல் நாயகர்களின் வரலாறு என்ன?

தாமல் நாயகர்கள் என்போர் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

காஞ்சிபுரத்தை எதிரிகளின் படையெடுப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக, காஞ்சிபுரத்துக்கு மேற்கே பல்லவ மன்னர்களால் நிறுத்தப்பட்ட போர்மரபினர் தான் தாமல் நாயகர்கள் ஆகும்.

இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....

தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ஆளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல்.

வன்னியர் ஆட்சியின் கீழ் சென்னை

தாமல் வெங்கடப்ப நாயகரும், தாமல் அய்யப்ப நாயகரும் தங்களது தந்தை சென்னப்ப நாயகரின் பெயரை இந்த நகரத்துக்கு சூட்ட வேண்டும் என்று கோரியதன் விளைவாகவே, இன்று சென்னைப்ப நாயகன் பட்டினம் என்பது - சென்னை என்று அழைக்கப்படுகிறது.

இப்போதும் காஞ்சிபுரம் தாமல் ஊரில் பெருமளவில் வன்னிய நாயகர்கள்தான் வசிக்கின்றனர். அதே போன்று, சென்னை அய்யப்பன் தாங்கலில் அதிக அளவில் இருப்பதும் வன்னிய நாயகர்கள்தான். (இந்த இரண்டு ஊர்களிலும் ஊராட்சிமன்றத் தலைவர்கள் வன்னியர்கள்தான். இருவருமே பாமகவினர்தான்.).
ஆனாலும், வெங்கடப்ப நாயகரும், அய்யப்ப நாயகரும், சென்னப்ப நாயகரும் தமிழர்கள் அல்ல. அவர்கள் தெலுங்கு சாதியினர் என்கிற பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பபடுகிறது. இத்தகைய வரலாற்று கட்டு்க்கதைகளை தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.

(சென்னை வரலாற்று ரீதியில் வன்னியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது என்பதுதான், சென்னை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கான நியாயங்களில் ஒன்றாக இருக்கும். ஆனாலும், இதனை தமிழ் வன்னியர் ஆட்சிப்பகுதி என்பதை விட, வரலாற்று ரீதியில் தெலுங்கு வெலமா ஆட்சிப்பகுதி என்று சொல்வதையே திராவிட, கம்யூனிச, போலித் தமிழ்த்தேசியர்கள் விரும்புவார்கள்)

(குறிப்பு: சென்னையை உருவாக்கியவர்கள் தெலுங்கு மரபினரா? என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்:  சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!)

சனி, ஆகஸ்ட் 20, 2016

சாதியும் பிவி சிந்துவும்: ஒலிம்பிக்கால் இந்தியர்களின் போலி வேடம் ஒழிந்தது!

ஒலிம்பிக் போட்டியில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற அதே காலக்கட்டத்தில், கூகுள் தேடுதளத்தில் - சிந்துவின் சாதி என்ன? - என்று லட்சக்கணக்கான மக்கள் தேடியுள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரத்தில் இருந்து மிக அதிகமானோரும், அகில இந்தியாவில் இருந்து பெருமளவினரும், வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து கணிசமானவர்களும் - சிந்துவின் சாதி என்ன? (PV Sindhu caste) - என்று கூகுளில் தேடியுள்ளனர்.

அதாவது, பிவி சிந்துவின் சாதனை, அவரது வரலாறு என்பதை விட - அவர் என்ன சாதி என்பதில்தான் மிக அதிக இந்தியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
படம்: சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.
படம்: ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தியா முழுவதும் சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

சாதியை தேடியதில் தவறேதும் இல்லை

பெருமளவு இந்தியர்கள் சிந்துவின் சாதியைத் தேடியதில் தவறேதும் இல்லை. ஆனால், இந்த உண்மையை மறைத்து, தமக்கு சாதி உணர்வே இல்லை என்று இவர்கள் போலிவேடம் பூணுவதுதான் தவறாகும்.

தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தினர் - சிந்து தங்களது மாநிலத்தின் குழந்தை என கொண்டாடி வருகின்றனர். பிறப்பால் ஆந்திர மாநிலத்தவராகவும் வளர்ப்பால் தெலுங்கானா மாநிலத்தவராகவும் உள்ள பிவி சிந்துவை இந்த மாநிலங்கள் கொண்டாடுகின்றன. இதனால் - மற்ற மாநிலங்கள் அவரைக் கொண்டாடவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

அதே போல - சிந்து ஒரு குறிப்பிட்ட சாதி என்பதற்காக, அந்த சாதியினர் கொண்டாடினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? அதற்காக மற்ற சாதியினர் அந்தச் சாதனையை மறுக்க வேண்டுமா?

தலித் ஒருவர் எதற்காக பாதிக்கப்பட்டாலும் - அது தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் என்று கொந்தளிப்பதும், அதுவே குற்றம் செய்தவர் தலித்தாக இருந்தால், அவர் குற்றவாளியே இல்லை, தலித் குற்றமே செய்யவே மாட்டார் என்று பொங்கி வழிவதும் - வாடிக்கையாக உள்ள நாடுதான் இது.

எனவே, சாதனை படைக்கும் நபரின் சாதியை தேடுவதில் குற்றம் எதுவும் இல்லை.

படம்: சிந்துவின் சாதியை அதிகமானோர் தேடியுள்ளனர்.

சாதி இல்லை என்போர் சாதி வெறியர்கள்

ஏக இந்தியாவும், இந்தியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களும் சாதி உணர்வில்தான் ஊறியுள்ளனர் என்பதை "சிந்துவின் சாதி என்ன?" - என்கிற கூகுள் தேடல் மெய்ப்பித்துள்ளது.

சாதி இருக்கிறது என்பதையும், எதிர்காலத்திலும் சாதி இருக்கும் என்பதையும் நேர்மையாக ஒப்புக்கொண்டு - சாதியால் ஏற்படும் கேடுகளை ஒழிக்கவும், சாதிகளுக்கு இடையே சமத்துவத்துக்காகவும் போராடுகிறவர்கள் தான் நேர்மையானவர்கள்.

சாதி இல்லை என்றும், சாதியை எதிர்க்கிறேன் என்றும் பேசுகிற எல்லோருமே போலி வேடம் போடும் சாதி வெறியர்கள் தான். குறிப்பாக, திராவிடம், கம்யூனிசம், போலித் தமிழ்த்தேசிய கும்பல்கள் அனைத்தும் தமக்குள் சாதி வெறியுடன் தான் அலைந்து கொண்டிருக்கிறனர்.

எனவே, "அய்யோ, அதிகமான இந்தியர்கள் சிந்துவின் சாதியை தேடுகிறார்களே! இது வெட்கக் கேடு இல்லையா?" - என்று ஊடகங்கள் போலி வேடம் போடுவது தேவையில்லாதது!

படம்: வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சிந்துவின் சாதியை கணிசமானோர் தேடியுள்ளனர்.

வேறுபாடு இயற்கையானது

மனிதரில் பன்முகத்தன்மை என்பது இயல்பானது. மதம் இருக்கிறது. இனம் இருக்கிறது. தேசியம் இருக்கிறது. அதுபோல சாதியும் இருக்கவே செய்யும். எப்படி மதம், இனம், தேசியத்தை எல்லாம் ஒழிக்க முடியாதோ, அதே போன்று சாதியையும் ஒழிக்க முடியாது.

மதம், இனம், தேசியம், சாதியைக் கடந்து - சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமைகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். கிடைக்க வேண்டும். அதற்காக பாடுபடுவோம்.

புதன், ஆகஸ்ட் 17, 2016

முஸ்லிம் நாட்டில் ஜல்லிக்கட்டு - எதிர்க்கும் இந்தியா: நீங்கள் அறியாத தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் 'ஜல்லிக்கட்டு' கோலாகலமாக நடத்தப்படுகிறது. ஆனால், இந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் அதே 'ஜல்லிக்கட்டு' தடை செய்யப்பட்டுள்ளது. உங்களால் நம்ப முடியாமல் போனாலும் இது முற்றிலும் உண்மை
கரப்பான் சாப்பி போட்டி
ஜல்லிக்கட்டு: தமிழ்நாட்டிலும் இந்தோனேசியாவிலும்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், அதன் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு நிகழ்வும் - வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை போற்றும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக்கு இணையாக இந்தோனேசியாவில் 'கரப்பான் சாப்பி' எனும் திருவிழா நடத்தப்படுகிறது. (கரப்பான் சாப்பி - Karapan Sapi - எனும் இந்தோனேசிய வார்த்தையின் பொருள் "மாடு விரட்டுதல்" என்பதாகும்).

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள தீவு "மதுரா". நெல் விளைவிப்பது முதன்மை விவசாயமாக உள்ள இத்தீவில், நெற்பயிர் அறுவடை முடியும் போது, அதனை கொண்டாடும் வகையில் கரப்பான் சாப்பி போட்டி நடத்தப்படுகிறது.
கரப்பான் சாப்பி போட்டி
கரப்பான் சாப்பி போட்டியின் போது, மாடுகள் இரண்டு இரண்டாக - மரக்கம்பினால் ஆன ஒரு இணைப்பில் பிணைக்கப்படுகின்றன. அதனை இயக்கும் போட்டியாளர் ஒருவர் அந்த கம்பின் மீது நின்றுகொண்டு மாடுகளை விரட்டுகிறார். சுமார் நூறு மீட்டர் தூரத்தை விரைவாக இந்த மாடுகள் ஓடி கடக்க வேண்டும் என்பதுதான் போட்டியாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படும் போட்டிகளில் முன்னணியில் வரும் மாடுகள், அடுத்தக்கட்ட போட்டிக்கு செல்கின்றன. இறுதிப்போட்டியில் சுமார் நூறு அணி மாடுகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெரும் மாட்டுக்கு, ஜனாதிபதி கோப்பை எனும் விருதும், பெரும் பணமும் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

கரப்பான் சாப்பி: ஒரு மாபெரும் கொண்டாட்டம்

மாடுகள் ஓடுவது மட்டுமல்ல திருவிழா. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகள் இதனுடன் இணைந்துள்ளன. ஓட்டப்போட்டிக்கு முன்பாக, பெண்களின் நடனத்துடன் அலங்கரிக்கப்பட்ட மாடுகளின் அணி வகுப்பு நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெரும் மாடும் அதனை ஓட்டியவரும் உள்ளூரில் கதாநாயகர்களாக கொண்டாடப்படுகின்றனர்.
கொண்டாட்டம்
"மாடு விரட்டுதல்" விழாவுக்கு என பிரத்தியோகமாக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தனி உணவு முறைகளும் பராமரிப்பு முறைகளும் உள்ளன. தினமும் எண்பது முட்டைகளைக் கொண்டு சத்துணவுகள் தயாரித்து அளிக்கின்றனர். போட்டியில் ஓடும் முன்பு உள்ளூர் மதுபான வகைகளை மாடுகளுக்கு கொடுக்கின்றனர்.

இந்தோனேசிய ஜல்லிக்கட்டின் வரலாறு

இந்தோனேசியாவில் கரப்பான் சாப்பி எனும் ஜல்லிக்கட்டு சுமார் 800 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. கடந்தூர் இளவரசன் என்பவன் மதுரா தீவில் நெற்பயிர் விவசாயத்தை உருவாக்க முயன்றதாகவும், அதற்காக - காடாக கிடந்த நிலைத்தை உழுது வயலாக்கும் நோக்கில் - கரப்பான் சாப்பி திருவிழாவை உருவாக்கியதாகவும் உள்ளூர் கதையில் கூறுகிறார்கள்.

இந்தோனேசியா - தமிழகத் தொடர்பு

ஜல்லிக்கட்டிற்கும், கரப்பான் சாப்பி போட்டிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இயலாது. ஆனால், தமிழ்நாட்டில் தனித்தனி மாடுகள் ஓடுகின்றன. இந்தோனேசியாவில் ஜோடி ஜோடியாக ஓடுகின்றன. தமிழ்நாட்டில் மாட்டை பிடிப்பது போட்டி. இந்தோனேசியாவில் மாட்டை வேகமாக ஓட்டுவது போட்டி. இதைத்தவிர - ஜல்லிக்கட்டிற்கும், கரப்பான் சாப்பிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
சுரபயா விமான நிலையத்தில் உள்ள கரப்பான் சாப்பி விளம்பரத்துடன் நான்
அறுவடைத் திருவிழா, மாடுகள் அலங்கரிப்பு, போட்டியின் தொலைவு, மக்களின் மைதான அலங்கரிப்பு, மக்களின் கொண்டாட்டம், வெற்றிபெற்றவர்களின் பெருமிதம் - என எல்லாமும், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டைப் போன்றே, இந்தோனேசியாவின் மதுராவிலும் நடக்கிறது.

இந்தோனேசியாவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தமிழர்கள். ஒரு முஸ்லிம் நாடாக இந்தோனேசியா இருப்பதற்கும் தமிழக முஸ்லிம்களே காரணம். சோழ மண்டல கடற்கரையில் இருந்து, சோழ மன்னர்களின் ஆதரவுடன் கிழக்காசியாவில் வர்த்தகம் செய்த மரைக்காயர்களே - இந்தோனேசியாவை முஸ்லிம் நாடாக மாற்றினர் என்பது வரலாறு.

ஏராளமான தமிழ் ஊர்ப்பெயர்களும், தமிழ்க் கல்வெட்டுகளும் நிறைந்திருக்கும் இந்தோனேசியாவுக்கு - ஜல்லிக்கட்டும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம்.

அரசாங்கம் செய்வது என்ன?

இந்தோனேசிய அரசங்கம் 'கரப்பான் சாப்பி மாடு விரட்டுதல்' திருவிழாவைக் கொண்டாடுகிறது. வெற்றி பெரும் அணிக்கு, அரசின் சார்பில் ஜனாதிபதி கோப்பையை வழங்குகிறார்கள்.
சுரபயா நகர பிரதான சாலையில் உள்ள சிலை
இந்தோனேசிய நகரங்களில் கரப்பான் சாப்பிக்கு சிலைகளை வைத்துள்ளனர். இந்தோனேசிய சுற்றுலா விளம்பரங்களில், கரப்பான் சாப்பியை முக்கிய திருவிழாவாக கோண்டாடுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு ஜல்லிக்கட்டை கொண்டாடும் போது - இந்தியாவை ஆளும் இந்துக்கள் கட்சி ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

இஸ்லாம் கட்டற்ற காதலை அனுமதிக்கிறதா? - மமக ஜவாஹிருல்லா பதில் சொல்ல வேண்டும்!

மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும்தான் சாதி ஒழிப்பு நாடகக் காதலை எதிர்ப்பது போலவும் - அதேநேரத்தில், இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் ஏதோ மதம் கடந்த காதலை விழுந்து விழுந்து ஆதரிப்பது போலவும் ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்த, மமகவின் ஜவாஹிருல்லாவும், விசிகவின் ஆளூர் ஷாநவாசும் நாடகம் ஆடுகின்றனர்.

எனவே, கட்டற்ற காதல் என்கிற பெயரில் - முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை திருமணம் செய்வதை இஸ்லாம் ஏற்கிறதா? என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மமக ஜவாஹிருல்லாவின் காதல் ஆதரவு

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைப் படிக்க விடாமல், காமக்கொடூரர்கள் காதல் நாடகம் ஆடி, வாழ்க்கையையும் குடும்பங்களையும் சீரழிக்கும் ஆபத்து அதிகரித்துவரும் நிலையில் - 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல' நாடகக் காதல் கும்பலுக்கு ஆதரவாக, தி இந்து பத்திரிகையில் கருத்து கூறியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.

"ஆணும் பெண்ணும் சாதி கடந்து, மதம் கடந்து காதலிப்பது இயற்கை, பொதுவாக நடப்பதுதான். இது எல்லா சமூகங்களிலும் நடக்கிறது" என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். (“It is common for young men and women to fall in love beyond caste and religion. The fact is that it is happening in all sections of society. - MMK leader M.H. Jawahirullah, The Hindu 16.8.2016)

நாட்டில் நடக்கிறது என்பதற்காகவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் நடக்கின்றன என்பதாலேயே, அவையெல்லாம் நியாயம்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முஸ்லிம் பெண்களோ, ஆண்களோ - முஸ்லிம் அல்லாத பிரிவினரை மதம் கடந்து திருமணம் செய்வதை ஜவாஹிருல்லா ஆதரிக்கிறாரா? ஜவாஹிருல்லா சார்ந்துள்ள மனித நேய மக்கள் கட்சியும் முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் - மதம் கடந்த திருமணங்களை ஆதரிக்கின்றனவா?

தலித் சமூகத்தவரையோ, தலித் அல்லாத பிற சாதி இந்துக்களையோ - இஸ்லாமிய பெண்கள் அல்லது ஆண்கள் காதலித்து திருமணம் செய்வதை, முன்நிபந்தனை ஏதுமின்றி, ஜவாஹிருல்லா ஆதரிக்கிறாரா?

(நாட்டில் இதெல்லாம் நடக்கிறது என்று சொல்லி மழுப்பாமல் - இதனை அவர் ஏற்கிறாரா? இல்லையா? என்பதைக் கூற வேண்டும்)

மதம் கடந்த திருமணத்தை இஸ்லாம் ஏற்கவில்லை

இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனை பின்பற்றுகிறர்கள். உலகில் எந்த இடத்திலும் இஸ்லாமிய சட்டங்கள் 'மதம் கடந்த' திருமணத்தை அனுமதிப்பது இல்லை. 

இஸ்லாமிய விதிகளின் படி, முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் பெண்களையும், கிறிஸ்தவ, யூத பெண்களையும் திருமணம் செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் ஆண்களை மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன்

"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.'' (திருக்குர்ஆன், அத்தியாயம் 2 - அல்பகறா, 221)

- இஸ்லாமிய விதிகளின் படி, முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது. இஸ்லாம் காட்டும் வழி இதுதான். 

இதனை ஜவாஹிருல்லா ஏற்கிறாரா? இல்லையா? இதனை மனிதநேய மக்கள் கட்சி ஏற்கிறதா? இல்லையா? இதனை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்கிறதா? இல்லையா?

பதில் சொல்லிவிட்டு, பாமகவை குற்றம் சாட்டுங்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே?

இந்தவார ஜூனியர் விகடன் இதழில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்து மிக மோசமான ஆபாசக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் அரசியல் நிலைப்பாடு, அவர் சார்ந்திருந்த கட்சியுடனான மோதல், அவரது சாதி ஆதரவு கோரிக்கை குறித்தெல்லாம் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கலாம். அதுகுறித்தெல்லாம் நாம் இங்கே பேசவில்லை.

ஆனால், ஒரு பெண் என்பதற்காகவே சசிகலா புஷ்பா கொச்சைப் படுத்தப்படுவதை ஏற்க முடியாது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த அநீதி எதிர்க்கப்பட வேண்டும்.

ஜூனியர் விகடனின் ஆபாசம்

ஒரு பெண்ணை, அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, ஜூனியர் விகடன் இதழ் எவ்வளவு ஆபாசமாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது என்பதைக் கீழே பாருங்கள் (மிஸ்டர் கழுகு, ஜூனியர் விகடன், ஆகஸ்ட் 17 இதழ்:

//"சாதாரண பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சசிகலா புஷ்பா. அவரது கணவர் ஒரு எலெக்ட்ரீஷியன். அங்கிருந்து சென்னைக்குப் பயணம். இங்கும் பல பிரமுகர்கள் அவருக்கு உருகிஉருகி உதவி செய்துள்ளார்கள்.



# கார்டனுக்குள் நெடுநாட்களாக இருக்கும் ‘சாந்த சொரூபி’க்கும் இவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. திருவான்மியூரில் இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள்

# உளவுத்துறை அதிகாரிக்கு நெருக்கம் ஆனார்.


# அடுத்து, முதல்வரின் செயலாளர்களில் ஒருவரையும் தன் வசம் ஆக்கிவிட்டாராம்.

# மாவட்டம்தோறும் சென்றபோது டெல்டா மாவட்ட அமைச்சரிடம் பழக்கம்.

# சரித்திரப் புகழ் பெற்ற கோட்டை உள்ள ஊர்க்காரர் அவர். பகையில் தொடங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் படிப்படியாக நெருக்கத்தை உருவாக்கிவிட்டதாம்.”

# சசிகலா புஷ்பாவுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்குமான நெருக்கம் முன்பே வெளிச்சத்துக்கு வந்தது.



# வட சென்னை வட்டாரத்தில் மகளிர் விடுதி அமைக்க இடம் ஏற்பாடுசெய்த ஓர் அமைச்சரும், ‘நடிப்பு’க்குப் பெயர்போன இரண்டெழுத்து இன்ஷியல்கார அமைச்சர் ஒருவரும் புஷ்பா புயலில் சிக்கியவர்களாம்."//

- இவ்வாறு "நெருக்கம், தன் வசம், சிக்கியவர்கள், சந்திப்பு" - என்கிற வார்த்தைகள் மூலம், ஒரு சிறு செய்தியில் எட்டு ஆண்களுடன் சசிகலா புஷ்பாவை தொடர்புபடுத்தி, அவரை பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன்.

(இச்செய்தி உண்மையா இல்லையா என்பது முக்கியமல்ல. இச்செய்திக்கான தேவையே இல்லை என்பதுதான் முக்கியமாகும்)

பெண்களுக்கு எதிரான வன்முறை

ஜூனியர் விகடனின் ஆபாச செய்தி - அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women in politics - VAWIP) எனும் மனித உரிமை மீறலில் ஒரு அங்கம் ஆகும்.

இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆய்வு செய்துள்ள ஐநா பெண்கள் அமைப்பு, இங்கு நிலவும் அசிங்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. (UN Women - Violence against Women in Politics - A study conducted in India, Nepal and Pakistan).
இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களிடம் - பாலியல் இசைவுக்கு வற்புறுத்துதல் (sexual favours), நடத்தையை கொலைசெய்தல் (Character assassination) - ஆகிய வன்முறைகள் மிக அதிக அளவில் ஏவப்படுவதாக தெரிவிக்கிறது.
  • "The most widespread forms of VAWIP ...related to expectation of sexual favours"
  • "Character assassination also persisted in relation to the expectations of sexual favours, but was also identified as a tool to seriously damage the reputation and achievements of a woman in politics with the desire to reduce her public support."
பரந்துபட்ட அளவில் பார்த்தால், அரசியல் என்பதே ஆண்களுக்கானது, அதில் பெண்கள் ஈடுபடக் கூடாது என்கிற ஆணாதிக்க மனப்போக்கு இதன் காரணமாக உள்ளது.

அதையும் மீறி அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே - அரசியலில் ஈடுபடும் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுகின்றனர். ஜீனியர் விகடனின் செய்தி அத்தகைய வக்கிர உள்நோக்கம் கொண்டதுதான்.
பெண்கள் அரசியலுக்கு வருவது அரிதான ஒரு நிகழ்வு. ஒருசில பெண்கள் அரசியலில் உயர்ந்த பதவிகளை அடைந்தாலும் கூட, அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அனைத்து நிலை அரசியல் பதவிகளில் ஆண்களின் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைவாகவே பெண்கள் உள்ளனர்.

ஊடகங்கள் ஆபாசமாகவும் நடத்தையை கொலைசெய்யும் வகையிலும் செய்தி வெளியிடுவதால் - பெண்கள் புதிதாக அரசியலுக்கு வருவதில் தடை ஏற்படுகிறது. அரசியலில் இறங்கும் எல்லா பெண்களும் இப்படித்தான் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுபோன்ற செய்திகளின் நோக்கம் ஆகும்.

பெண்கள் அமைப்புகள் தூக்கம் கலைக்குமா?

தமிழ்நாட்டின் பெண்கள் அமைப்புகளுக்கு 'சாதி பிரச்சினைத் தவிர' வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. ஏனெனில், அவை அனைத்தும் கம்யூனிச சிவப்பு கண்ணாடி அணிந்துள்ளன. பெண்கள் அமைப்புகளை நம்பி பயனில்லை. பெண்கள் மட்டுமே இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பின்வருமாறு கூறுகிறது ஐநா பெண்கள் அமைப்பு:

Violence against women in politics (VAWIP) is violence that occurs within the political sphere but that specifically targets women. VAWIP is used to reinforce traditional social and political structures by targeting women leaders who challenge patriarchy and the prevailing social expectations and norms. It restricts women's mobility and capacity to participate within the political sphere.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக மனித உரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை உள்ள எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவான பதிவாக இதனைக் கருத வேண்டாம். பெண்கள் மீதான ஊடக வன்முறைக்கான எடுத்துக்காட்டாக கொள்ளவும்.