Pages

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

இஸ்லாம் கட்டற்ற காதலை அனுமதிக்கிறதா? - மமக ஜவாஹிருல்லா பதில் சொல்ல வேண்டும்!

மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும்தான் சாதி ஒழிப்பு நாடகக் காதலை எதிர்ப்பது போலவும் - அதேநேரத்தில், இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் ஏதோ மதம் கடந்த காதலை விழுந்து விழுந்து ஆதரிப்பது போலவும் ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்த, மமகவின் ஜவாஹிருல்லாவும், விசிகவின் ஆளூர் ஷாநவாசும் நாடகம் ஆடுகின்றனர்.

எனவே, கட்டற்ற காதல் என்கிற பெயரில் - முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களை திருமணம் செய்வதை இஸ்லாம் ஏற்கிறதா? என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மமக ஜவாஹிருல்லாவின் காதல் ஆதரவு

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைப் படிக்க விடாமல், காமக்கொடூரர்கள் காதல் நாடகம் ஆடி, வாழ்க்கையையும் குடும்பங்களையும் சீரழிக்கும் ஆபத்து அதிகரித்துவரும் நிலையில் - 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல' நாடகக் காதல் கும்பலுக்கு ஆதரவாக, தி இந்து பத்திரிகையில் கருத்து கூறியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.

"ஆணும் பெண்ணும் சாதி கடந்து, மதம் கடந்து காதலிப்பது இயற்கை, பொதுவாக நடப்பதுதான். இது எல்லா சமூகங்களிலும் நடக்கிறது" என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். (“It is common for young men and women to fall in love beyond caste and religion. The fact is that it is happening in all sections of society. - MMK leader M.H. Jawahirullah, The Hindu 16.8.2016)

நாட்டில் நடக்கிறது என்பதற்காகவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் நடக்கின்றன என்பதாலேயே, அவையெல்லாம் நியாயம்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?

மற்றவர்கள் கருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முஸ்லிம் பெண்களோ, ஆண்களோ - முஸ்லிம் அல்லாத பிரிவினரை மதம் கடந்து திருமணம் செய்வதை ஜவாஹிருல்லா ஆதரிக்கிறாரா? ஜவாஹிருல்லா சார்ந்துள்ள மனித நேய மக்கள் கட்சியும் முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் - மதம் கடந்த திருமணங்களை ஆதரிக்கின்றனவா?

தலித் சமூகத்தவரையோ, தலித் அல்லாத பிற சாதி இந்துக்களையோ - இஸ்லாமிய பெண்கள் அல்லது ஆண்கள் காதலித்து திருமணம் செய்வதை, முன்நிபந்தனை ஏதுமின்றி, ஜவாஹிருல்லா ஆதரிக்கிறாரா?

(நாட்டில் இதெல்லாம் நடக்கிறது என்று சொல்லி மழுப்பாமல் - இதனை அவர் ஏற்கிறாரா? இல்லையா? என்பதைக் கூற வேண்டும்)

மதம் கடந்த திருமணத்தை இஸ்லாம் ஏற்கவில்லை

இஸ்லாமியர்கள் திருக்குர்ஆனை பின்பற்றுகிறர்கள். உலகில் எந்த இடத்திலும் இஸ்லாமிய சட்டங்கள் 'மதம் கடந்த' திருமணத்தை அனுமதிப்பது இல்லை. 

இஸ்லாமிய விதிகளின் படி, முஸ்லிம் ஆண்கள், முஸ்லிம் பெண்களையும், கிறிஸ்தவ, யூத பெண்களையும் திருமணம் செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் ஆண்களை மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன்

"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.'' (திருக்குர்ஆன், அத்தியாயம் 2 - அல்பகறா, 221)

- இஸ்லாமிய விதிகளின் படி, முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்துகொள்ள முடியாது. இஸ்லாம் காட்டும் வழி இதுதான். 

இதனை ஜவாஹிருல்லா ஏற்கிறாரா? இல்லையா? இதனை மனிதநேய மக்கள் கட்சி ஏற்கிறதா? இல்லையா? இதனை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்கிறதா? இல்லையா?

பதில் சொல்லிவிட்டு, பாமகவை குற்றம் சாட்டுங்கள்.

கருத்துகள் இல்லை: