Pages

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

புதுதில்லியில் நடந்தது என்ன? OBC பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான சதியை முறியடித்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP!

புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஒருங்கிணைந்த OBC கூட்டமைப்பினர், மண்டல் குழு அறிக்கை செயலாக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழாவை இன்று கொண்டாடினர்.

இவ்விழாவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு தலைவர்களான சரத் யாதவ் MP, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP, மண்டல் குழு அறிக்கையை செயல்படுத்தி உத்தரவிட்ட அரசு செயலர் பி.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கும்பல் ஒன்று இவ்விழாவை குலைக்க முயன்றது. ஆனால், OBC பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கோழைகளின் கூச்சலை முறியடித்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP!

நடந்தது என்ன?

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கூட்ட அரங்கிற்கு மதியம் 3.00 மணியளவில் வந்தபோது, அவர் உள்ளே செல்லக் கூடாது என, தமிழகத்தின் சாதி மோதல்களை சுட்டிக்காட்டி சிலர் எதிப்பு தெரிவித்தனர்.

உடனே மாற்றுவழியில் செல்லலாம் என OBC பிரிவு மாணவர்கள் கூறினர். ஆனால், அதனை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் ஏற்காமல், அதே வழியில் கூட்டத்திற்கு சென்றார்.
சரத் யாதவ் MP
கூட்டத்தில் சரத் யாதவ் MP அவர்கள் 40 நிமிடம் பேசினார். தொடர்ந்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், OBC இடஒதுக்கீட்டின் அவசியம் மற்றும் சமூகநீதி குறித்து 40 நிமிடம் பேசினார்.

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசும்போது சிலர் எதிர்ப்பு அட்டைகளை காட்ட முயன்ற போது, அதற்கு OBC மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

முன்னாள் அரசு செயலர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பேசினார்.

இவ்வாறாக, திட்டமிட்டபடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மண்டல் குழு அறிக்கை செயலாக்கத்தின் வெள்ளிவிழா சிறப்பாக நடந்தது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் விமானத்தை பிடிக்க வேண்டிய தேவை இருந்ததால், 5.30 மணியளவில் அங்கிருந்து கிளம்பினார்.

பின்னணி என்ன?

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த முறை OBC பிரிவு மாணவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத, சமூகநீதிக்கு எதிரான கும்பல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கும்பல், மண்டல் குழு வெள்ளிவிழாவை தடுக்க முயன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், எதிரிகளின் சதியை முறியடித்து வெள்ளிவிழாவை வெற்றிகரமாக நடத்தினர் OBC மாணவர்கள்.

சதி முறியடிப்பு - சமூகநீதி வெல்லும்

எதிர்ப்பு தெரிவித்தால், திரும்பிவிடுவார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் என்று நினைத்தனர். வெள்ளிவிழா தோல்வியடையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வழியைக் கூட மாற்றவில்லை. 40 நிமிடம் பேசினார்.

சமூகநீதியின் எதிரிகள், கீழிருந்து வந்தாலும், மேலிருந்து வந்தாலும், எங்கிருந்து வந்தாலும் - அதனை OBC பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெற்றிகரமாக முறியடிப்பார்கள்.

சமூகநீதி வெல்லும்
வி.பி.சிங் 

குறிப்பு:  மண்டல் குழு 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 1980 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியில் இடஒதுக்கீடு 1993 ஆம் ஆண்டு முதல் செயலாக்கப்படுகிறது. இதற்கு உத்தரவிட்டவர் இந்திய பிரதமர் வி.பி.சிங் அவர்கள். உத்தரவில் கையெழுத்திட்டவர் பி.எஸ். கிருஷ்ணன் அவர்கள்.

கருத்துகள் இல்லை: