Pages

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

மாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி!

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் "மாநில சுயாட்சி" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கோரிக்கையை முன்வைப்பது என்பது வியப்பளிக்கிறது! 1957 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் கோரிக்கை "மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்பதாகும்.

நம் நாடு பத்திரிகை செய்தி 1957


எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்கிற திருத்தம் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் முதல் கோரிக்கை ஆகும்.

இந்திய யூனியனில் எல்லா மாநிலங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை ஆகும். அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப அல்லாமல் - எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் இரண்டாவது கோரிக்கை.

மத்திய ஆட்சி அதிகாரங்களுக்கு வரம்பு வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை. அதாவது, மாநில உரிமைகளுக்கு மத்திய அரசு வரம்பு விதிப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்து வரம்பு வைக்க வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் மூன்றாவது கோரிக்கை.
திமுக தேர்தல் அறிக்கை 1957

1962, 1967, 1971 என பின்வந்த தேர்தல்களிலும் மாநில சுயாட்சி கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வைத்தது திமுக.

60 ஆண்டுகளாக திமுக கிழித்தது என்ன?

1957 ஆம் ஆண்டில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிட்ட திமுக, இப்போது 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைக்கிறது. மாநிலங்களுக்கு சம அதிகாரம், மத்திய அரசின் அதிகாரங்கள் குறைப்பு என இப்போதும் தீர்மானம் நிறைவேற்றுகிறது திமுக.

கடந்த 60 ஆண்டுகளில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அதன் செயல்தலைவர் முக ஸ்டாலின் - மாநில சுயாட்சிக்காகவும் 1957, 1962, 1967, 1971-ல் முன்வைத்த தேர்தல் அறிக்கைகளுக்காகவும் இத்தனை நாட்களாக கிழித்தது என்ன?

அதிகாரத்தில் இருந்தபோது, காங்கிரசு கட்சியிடம் தமிழ்நாட்டின் நலன்களை அடகுவைத்த திமுக - இப்போது அதே காங்கிரசுடன் சேர்ந்து மாநில சுயாட்சிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது எதற்காக?

முக ஸ்டாலினுக்கு ஏனிந்த வெட்கம் கெட்ட வேலை? 

வியாழன், ஜூலை 06, 2017

மறைக்கப்பட்ட உலகின் முதல் சத்தியாகிரத் தியாகம்: இன்று 108 ஆம் ஆண்டு நினைவு நாள்

எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், அவர் பெயரில் விருதுகள் என அவரது நினைவு என்றென்றும் போற்றப்படும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும். இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர்.

'இறந்தாலும் என்றென்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்வார்' என மகாத்மா காந்தியால் புகழப்பட்ட அந்த தியாகி இந்திய வரலாற்றில் இடம் பெறவில்லை. ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்?

மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்.

1906 ஆம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இந்தியர்கள் தமது பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.
1906ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் நகரில் சுமார் மூன்றாயிரம் இந்தியர்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் தனது அறவழிப்போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் வடிவமைப்பில் உருவான உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். 1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். மகாத்மா காந்தி "சத்தியாகிரகம்" என்கிற போராட்டமுறையை வடிவமைத்ததும் இப்போராட்டத்தில்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார்.
கான்சிடியூசன் மலை சிறை

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார்.

1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

அந்த சமயத்தில் டிரான்சுவால் இந்தியர்களின் போராட்டம் குறித்து பிரச்சாரம் செய்வதற்காகான பிரதிநிதியாக லண்டன் சென்றிருந்தார் காந்தி. சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்ட சூன் 21 ஆம் நாள் அன்றுதான் காந்தி ஜொகனஸ்பர்க் நகரிலிருந்து லண்டனுக்கு கிளம்பினார். அவர் சூலை 10 அன்று லண்டன் சென்று சேர்வதற்குள் சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்துவிட்டார். காந்தியிடம் சூலை 12 ஆம் நாள் தந்தி மூலமாக அவரது தியாக மரணம் தெரிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இந்தியர்களும் ஜொகனஸ்பர்க் நகரின் வெள்ளையின கிறித்தவ தலைவர்களும் சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது குறித்து பொதுவிசாரணை நடத்தக் கோரினர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விடயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி. (அதனுடன் வள்ளியம்மா முனுசாமி முதலியார் நினைவிடத்தையும் அன்று திறந்தார் காந்தி). அதுதான் மகாத்மா காந்தியின் கடைசி தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சி.

தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது.
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.

காந்தியின் நிறைவேறாத கனவுகள்!

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும். தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் எழுத்தும் பேச்சும் இந்தியன் ஒப்பீனியனில் தொடர்ந்து வெளியானது.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது - நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது - நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி.

சென்னை, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டிணம் என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம் நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போனது எப்படி?

குறிப்பு: சாமி நாகப்பன் படையாட்சி தமிழ்நாட்டில் மயிலாடுதுறை பகுதிய சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் திருநாகேஸ்வரம் ஆக இருக்கலாம்.

செவ்வாய், ஜூன் 20, 2017

வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்று தொடர்பு!

மராட்டிய மாநிலத்தை பூர்வீக பூமியாகக் கொண்ட நடிகர் ரஜினி காந்த், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் பிரதானமாக வைத்துள்ளார். இதனை அவரது மராட்டிய இனப்பற்றுக்கான குறியீடாகவும் கொள்ளலாம். ஆனால், இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல. வீர சிவாஜியின் மகனை, நல்லடக்கம் செய்தவர்கள் 'கெய்க்வாட்' சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே வகுப்பை சேர்ந்தவர் ரஜினிகாந்த் என்பது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.

வீர சிவாஜியின் பரம்பரையும் கெய்க்வாட் சமூகமும்

கெய்க்வாட் எனும் பெயரில் ஏராளமான தலித் மக்கள் இருக்கின்றனர். மகர் சமூகத்தவர்கள் - ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

பேரரசர் வீர சிவாஜியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆட்சிக்கு வந்தார். இவர் 1689-ல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார்.  கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டார். கண்களை தோண்டி, நகங்களை பிடுங்கி, தோலை உரித்து பல நாட்கள் சித்தரவதை செய்து - பின்னர் உடலைக் கிழித்து, தலையை வெட்டி கொலைசெய்தார் ஔரங்கசீப். சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை துண்டுகளாக்கி புனே அருகில் உள்ள துலாப்பூர் எனும் இடத்தில் பீமா ஆற்றில் வீசினர்.
சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னம்

சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை அடக்கம் செய்யக் கூட அனைவரும் பயந்தனர். துலாப்பூர் அருகில் உள்ள வாது எனும் கிராமத்தின் கெய்க்வாட் பிரிவினர்தான், முகலாயர்களுக்கு பயப்படாமல் துணிச்சலாக இறுதி சடங்குகளை செய்தனர். அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் தலித் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.

மறைக்கப்பட்ட வரலாறும் தலித் எதிர்ப்பும்

வாது கிராமத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், "இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்" என்பது முதலில் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய தலித் அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர்.  சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில் மீண்டும் கோவிந்த் கோபால் கெய்க்வாட் பெயர் இடம்பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

வீர சிவாஜிக்கும், 'சிவாஜிராவ் கெய்க்வாட்' எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது. 

திங்கள், ஜூன் 19, 2017

ஜனாதிபதி ஆகிறார் சாதிச் சங்கத் தலைவர்

"சாதியே இல்லை" என்றும், "சாதியே பேசாதீர்" என்றும் தொடர்ச்சியாக பலரும் வகுப்பெடுக்கின்றனர். ஆனால், இப்போது ஒரு சாதி சங்கத் தலைவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்த விவாதங்களில் கூட - அவரது சாதிதான் அவரது முதன்மை தகுதியாக பேசப்படுகிறது.

ஆளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித்துகளில் ஒரு தனி சாதியாக அடையாளம் காணப்படும் 'கோலி' சாதிச் சங்கத்தின் தலைவரும் கூட. அவர் அகில இந்திய கோலி சமாஜம் (All-India Koli Samaj) எனும் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இப்போது இந்தியா முழுவதும் இடம்பெறும் தலைப்பு செய்தியே: தலித் ஒருவர் ஜனாதிபதி ஆகிறார் என்பதுதான். சாதியே இல்லை என்று இரட்டை வேடம் போடும் இந்திய மக்கள், இப்போது சாதிக்காகவே ஒருவர் ஜனாதிபதி ஆவதை கொண்டாடுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும்.

ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி

வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம்

இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர்

(பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ரஜினி: தலித் தலைவர்  

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
காலா திரைப்படத்தில் MH BR 1956

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

செவ்வாய், ஜூன் 13, 2017

ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.


ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.
"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள்

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

திங்கள், ஜூன் 12, 2017

மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்!

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதியுள்ளார்.
ஐநா மனித உரிமைப் பேரவையின் 35 ஆம் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்: "இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது 'அண்டப்புளுகு' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்!

உண்மையில் நடப்பது என்ன?

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு. இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும். இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஸ்டாலின் அழைக்கப்பட்ட Tamil Uzagam NGO துணை நிகழ்ச்சி விவரம்.

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி "இலங்கையில் மனித உரிமை" எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்

கடந்த மார்ச் மாதம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார். இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.
NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் - ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் பொன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

2. மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

வியாழன், ஜூன் 01, 2017

தலித் தலைவர் வேடமெடுக்கும் ரஜினிகாந்த் - காமராஜருடன் ஒப்பிடும் தினத்தந்தி 

அண்ணல் அம்பேத்கரின் சமூகமான மராட்டிய தலித் மகர் சமூகத்தை சேர்ந்தவரான நடிகர் ரஜினி காந்தை - கர்மவீரர் காமராஜருடன் ஒப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தனக்கென எந்த சொத்துமே இல்லாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் அவர்களை, தமிழக மக்களை சுரண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருக்கும் ரஜினி காந்துடன் ஒப்பிடும் துணிச்சல் தினத்தந்திக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை!

யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. உண்மையில் எல்லா மக்களும் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும், அரசியல் அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவதும் தான் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.

அதே நேரத்தில், அரசியலில் தலைமை பொறுப்புகளுக்கு வர நினைப்பவர்கள், அதற்கான தகுதிகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசியலில் தலைமையேற்க விரும்புகிறவர்கள், அந்த மாநிலத்தின் பிரச்சினைகளில் - சிலவற்றிலாவது தமக்கென நிலைப்பாட்டினையும், தீர்வுகள் குறித்த கருத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும். நடிகர் ரஜினி காந்திற்கு அப்படி ஏதாவது கருத்தோ, தீர்வோ இருக்கிறதா?

தமிழர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக மாநிலத்தின் அடாவடி குறித்து ரஜினியின் கருத்து என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் தமிழினத் துரோகம் குறித்து ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினிக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமா அல்லது கர்நாடகத்தில் உள்ள அவரது கோடிக்கணக்கான முதலீடுகள் முக்கியமா - என தினத்தந்தி கேட்குமா?

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டாரா ரஜினி காந்த்? தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பினாரா? தெருவுக்கு வந்து போராடினாரா? இதுகுறித்தெல்லாம் அவரிடம் கேள்வி கேட்டதா தினத்தந்தி?
மீனவர் படுகொலை, கச்சத்தீவு மீட்பு, முல்லைப்பெரியாறு அணை உயர்த்துதல், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்து, நீட் தேர்வு திணிப்பு, இந்திய அரசின் இந்தி திணிப்பு - இவற்றுக்கெல்லாம் ரஜினி காந்த் என்ன சொல்கிறார் என்பதை தினத்தந்தி ஒருமுறையாவது கேட்டிருக்குமா?

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது, வெள்ள நிவாரணத்துக்காக நடிகை ஹன்சிகா 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். நடிகை சமந்தா 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பலகோடி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் தான் கொடுத்தார். தமிழர்கள் மீதான அக்கறையில் 'ஹன்சிகா - சமந்தா' வை விட கீழானவராகவே ரஜினிகாந்த் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். இந்த உண்மையை இப்போது பேசுமா தினத்தந்தி?

தலித் தலைவர் ரஜினி - உணவு உரிமைக்காக குரல்கொடுக்காதது ஏன்?

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அனைத்து சமூகங்களை போன்று, தலித்துகள் அரசியலில் ஈடுபடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், தனது தலித் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஜினி காந்த் - மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?

அண்ணல் அம்பேத்கரையும், அவரது "Maharashtra BR Ambedkar 1956" புரட்சியையும், தனது தலித் அடையாளத்தையும் மட்டும் ரஜினி காந்த் முன்னிறுத்தினால் போதாது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மட்டிறைச்சிக்கு எதிரான கருத்துகளை எதிர்த்தது போன்று ரஜினி காந்தும் எதிர்க்க வேண்டாமா? இது குறித்து எதுவும் கேட்காமல் தினத்தந்தி மவுனம் சாதிப்பது ஏன்?

காமராஜருக்கு இணையாக ரஜினியை முன்னிறுத்தியதற்காக தினத்தந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

திங்கள், மே 01, 2017

ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

ஐநா கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று, திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இன்று (01.05.2017) சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதில் "ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் ஈழத்தமிழருக்காக மு.க.ஸ்டாலின் பேசுவார்" என்றும், "2012 ஆம் ஆண்டிலேயே அவர் ஜெனீவாவில் ஐநா கூட்டத்தில் பங்கேற்றார்" என்றும், "ஐநா ஆண்டறிக்கையில் திமுகவின் டெசோ அறிக்கை வெளியாகியுள்ளது" என்றும் அப்பட்டமான கட்டுக்கதைகளை கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் = வைகோ 2.0

அண்மையில், 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்றுக்கு வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டது. (இங்கே காண்க: மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?). அதற்கு போட்டியாக இப்போது திமுகவின் கட்டுக்கதை முன்வைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அறிக்கை

மு.க. ஸ்டாலின்: கட்டுக்கதையும் உண்மையும்

கட்டுக்கதை 1: "ஐநாவின் ஜெனீவா கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறாரா?"

திமுக அறிக்கை: "ஜெனீவாவில் நடைபெற உள்ள மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, 35வது மனித உரிமைகள் ஆய்வுக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற போகிறார். இதற்காக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்." 
 ஐநாவில் ஸ்டாலின் எனும் தினகரன் பத்திரிகை செய்தி

உண்மை: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது போன்று ஜூன் 12 முதல் 20 வரை ஜெனீவாவில் 35 ஆவது ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவில்லை. மாறாக, ஜூன் 6 முதல் 23 வரை இக்கூட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறவில்லை. இனி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவாதிக்கப்படும்.

கட்டுக்கதை 2: "மு.க.ஸ்டாலின் 2012 ஐநா கூட்டத்தில் பங்கேற்றாரா?"

திமுக அறிக்கை: "மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் 03.11.2012 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்."

உண்மை: இது பொய்யான தகவல். 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த காலமுறை ஆய்வு நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் அங்கு வரவில்லை. உண்மையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் பாமக தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஆகும்.

கட்டுக்கதை 3: "ஐநா அறிக்கையில் டெசோ தீர்மானமா?"

திமுக அறிக்கை: "மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த 'டெசோ' மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தாண்டுக்கான ஐநா ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 2017 - 18 ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் டெசோ அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு இருக்கிறது"

உண்மை: ஐநா ஆண்டறிக்கை 2017 - 18 என்பதாக எந்த ஒரு அறிக்கையையும் ஐநா மன்றம் வெளியிடவில்லை. வெளியிடாத அறிக்கையில் டெசோ மாநாட்டு தீர்மானம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை மு.க. ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.

ஐநாவில் செயலாற்றியது யார்?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் அறிக்கை போன்றே, திமுகவின் கட்டுக்கதையையும் எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் தமிழகத்தின் சார்பில் 2009 முதல் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் நிறுவிய பசுமைத் தாயகம் அமைப்பு செயலாற்றி வருகிறது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில், ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் நேரடியாக உரை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2017 ஐநா மனித உரிமைகள் பேரவையில் கனடா நாட்டின் தமிழ் MP கேரி அனந்தசங்கரியுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP.

மருத்துவர் அன்புமணி அவர்களின் பங்களிப்பை யாரும் கொண்டாட்டமாக கொண்டாடியது இல்லை. அதனை அவர் விரும்பவும் இல்லை. ஆனால், ஐநாவில் பங்கேற்காத மு.க. ஸ்டாலினுக்கு 2012 ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்பதை திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது: 

"இந்தியாவுக்குத்திரும்பிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, தலைவர் கலைஞர் அவர்களும், இனமான பேராசிரியர் அவர்களும் விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, தாரை தப்பட்டைகள் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றதுடன், அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது." - என்கிறது திமுக அறிக்கை!

திமுக, மதிமுக போன்ற கட்டுக்கதை கட்சிகளை நம்பும் அப்பாவி ஈழத்தமிழர்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய சுட்டி:

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மதிமுக பொய்ப்பிரச்சாரம்

"தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - என்கிற வைகோ வேண்டுகோளை ஐநா மன்றம் சுற்று அறிக்கையாக முன் வைத்துள்ளது" - என்று மதிமுக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கபட்டதாகவும், அதன் படி வைகோ அவர்களின் கோரிக்கை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆய்வுக்காக சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மதிமுகவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உண்மை என்ன?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் இந்த அறிக்கையை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா அவையின் விதிகளின் படி, மதிமுக தலைவர் வைகோவின் கடிதத்தை சுற்றுக்கு விடவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இடம் ஏதும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள், உறுப்பினர் அல்லாத நாடுகள், ஐநா அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பங்கேற்பின் வழியாக மூன்று வழிகளில் கருத்துக்களை முன்வைக்கலாம். 1. எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிப்பது (NGO Written Statement). 2. மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசுவது (NGO Oral Statement). 3. துணைக்கூட்டங்கள் (NGO Side-Event) நடத்துவது - ஆகியனவே பங்கேற்கும் வழிகள் ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பாக 2005 ஆம் ஆண்டுமுதல் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் நீதிக்கான குரலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பி வருகிறது.

மதிமுக குறிப்பிட்டுள்ள அதே 34 ஆம் கூட்டத்தில் - பசுமைத் தாயகம் சார்பில் இரண்டு எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆறு முறை மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசப்பட்டது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரும் பேசினர்.  இரண்டு துணைக்கூட்டங்கள் பசுமைத் தாயகம் சார்பில் நடத்தப்பட்டன.

வைகோவின் கோரிக்கை விவகாரம் என்ன?

மதிமுக ஐநாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, அவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பும் வாய்ப்பு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் எழுத்துபூர்வமான அறிக்கைகளை வைக்கலாம் என்கிற வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 2 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஐநா மனித உரிமைகள் பேரவை சுற்றுக்கு விட்டது. இதுபோன்று, 34 ஆம் கூட்டத்தொடரில் மொத்தம் 259 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன.
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 10 தலைப்புகளாக பிரிக்கப்படும். அதில் எந்த ஒரு தலைப்பின் கீழும் அறிக்கைகள் சமர்ப்பிக்கலாம். பசுமைத் தாயகம் அமைப்பின் அறிக்கைகள் முறையே நிகழ்ச்சி நிரல் 2 மற்றும் 4 ஆவது தலைப்பின் கீழ் சுற்றுக்கு விடப்பட்டன. (எண்: HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam) மற்றும் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam)

இதே போன்று - வைகோ அவர்களின் கடிதமும், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (எண்: HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance,). பசுமைத் தாயகம் அறிக்கை சுற்றுக்கு விடபட்டது போலவே, இந்த அறிக்கையும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
வைகோ கடிதம் - ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் பெயரில்  HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance

அதாவது, வைகோ அவர்களின் கடித்ததை ஐநா மன்றம் சுற்றுக்கு விடவில்லை. மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அரசுசாரா அமைப்புகளின் அறிக்கைதான் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த அறிக்கைக்குள் வைகோ அவர்களின் கடிதம்  அறிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 34 ஆம் கூட்டத்தொடரின் 259 அறிக்கைகளில் இதுவும் ஒன்று.

அதுமட்டுமல்லாமல் - //ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக'//  வைக்கப்படவில்லை. 259 அறிக்கைகளை தலைப்பு வாரியாக பிரிக்கும் வகையில், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் அறிக்கை 2 ஆவது தலைப்பின் கீழ் உள்ளது.

பசுமைத் தாயகத்தின் பணி

2009 ஆம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் அறிக்கை, நேரடி பேச்சு, துணைக்கூட்டம் என எல்லா வழிகளிலும் பசுமைத் தாயகம் பங்கேற்று வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 50-க்கும் மேற்பட்ட நேரடியாக உரைகள், 10 துணைக் கூட்டங்களை நேரடியாக நடத்தியுள்ளது பசுமைத் தாயகம்.

ஆனால், ஒரு முறை வேறு அமைப்புகள் மூலம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, அதனை ஐநா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தது போல மதிமுக அறிக்கை விடுவது வியப்பளிக்கிறது!.

அதிலும் 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது என்றும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கப்பட்டது என்றும் கூறுவது அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் தவிர வேறு எதுவும் இல்லை.

(குறிப்பு: வைகோவின் கோரிக்கையை ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக சமர்ப்பித்ததை வரவேற்கிறோம். ஆனால், அது குறித்த மிகையான கட்டுக்கதைகள் நியாயமற்றவை).

சனி, ஏப்ரல் 15, 2017

தமிழகத்தில் மதக்கலவரம் நடத்த சதி: வன்னியர்களின் வீரம் துலுக்கனிடம் செல்லுமா?

தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், இங்கும் பெரிய மதக்கலவரம் நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த மதக்கலவரத்தில் பிராமணர்களோ, முன்னேறிய சாதியினரோ பலியாகக் கூடாது. அதற்கு பதிலாக 'எளிதில் உணர்ச்சிவசப்படும்' வன்னியர்களை பலி கொடுக்க திட்டமிட்டு முனைந்துள்ளார்கள். இதற்கான கூட்டம் ஒன்று 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பெயரில் திருக்கழுகுன்றத்தில் 9.4.2017 அன்று நடந்துள்ளது.

இக்கூட்டத்தில் பிராமணரான வகுப்பை சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ஆர்.பி.வி.எஸ் மணியன் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் படுமோசமாகப் பேசியுள்ளார். "முஸ்லிம்களுடன் வன்னியர்கள் சண்டை போட வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை புறக்கணிக்க வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை" என்று அவர் பேசியுள்ளார்.

ஆர்.பி.வி.எஸ் மணியனின் மதவெறி பேச்சு:

மணியனின் மதவெறி பேச்சு: “சிவத்துரோகம் செய்கிறவன் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துவோம். இதுதான் வன்னியனுடைய பாரம்பரியம். ஆனால், இன்றைய வன்னியர்கள் சிலர் மதம் மாறிப்போயிருக்கிறார்கள். மதம் மாறிப்போய், மானம் கெட்டுப்போன அந்தக் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொள்கிறோம் வன்னியன் என்பதாகச் சொல்லி. அவன் உண்மையாகவே ஹிந்துவாக இருந்தால் தானே வன்னியன். அன்னியனாகப் போனதற்கு பின்னாலே வன்னியன் என்னடா உறவு, வன்னியன். கிறித்தவ வன்னியர்களிடம் எக்காரணம் கொண்டும் நாம் உறவு கொண்டாடக் கூடாது. வன்னியர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களாக இருந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். ஜாதி பகிஷ்காரம் செய்ய  வேண்டும். 
அதுமட்டுமல்ல .... போராடுகிறோம், பெரிய வீர பாரம்பரியம் என்பதாகச் சொல்கிறோம். வன்னியனுக்கு இருக்கக் கூடிய வீரம் தெரியுமா? அவனுடைய வாளின் வலிமை தெரியுமா? அவனுடைய துணிச்சல் தெரியுமா? இதெல்லாம் நானும் பார்த்து விட்டேன். நம்ம ஊர்ல இருக்கிற ஒரு சில ஜாதிக்காரன் கிட்டதான் இந்த வன்னியனுடைய திமிர், இந்த வன்னியனுடைய அகம்பாவம் எல்லாம் செல்லும். யார்கிட்ட செல்வதில்லை தெரியுமா?  துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. துலுக்கன் கிட்ட செல்லுவதே இல்லை. இஸ்லாமியனை பகைத்துக்கொண்டு வன்னியனுக்காக வாதாடுவதற்கு, போராடுவதற்கு, குரல் கொடுப்பதற்கு அமைப்புகள் இல்லை. அப்படிப்பட்ட நிலையில வெறும் அரசியல் ரீதியாக நாம பிளந்து கிடந்தால் நிச்சயமாக வன்னியச் சமுதாயத்துக்கு வலிமை கிடையாது. ஆன்மீக ரீதியாக கலாச்சார ரீதியாக சமுதாய ரீதியாக ஹிந்து என்கின்ற கண்ணோட்டத்தில் தான் நாம் அத்தனை வன்னியர்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும். அப்படி ஊரிய இரத்தம் என் உடம்பில் ஓடுகிறது.

ஆனால், இன்றைக்கு Most Backward (MBC) என்பதாகச் சொல்லி, நான் நான்கு பேர் கிட்ட கையேந்தினேனா? சத்திரியன் எப்படிடா கையேந்தறது? சத்திரியர்கள் எவர் கிட்டயாவது போய் ரிசர்வேஷன் கேட்பானா? சத்திரியன் தானே மற்றவர்களுக்கே வேலை கொடுக்க வேண்டியவன்? அப்படி வேலை கொடுக்க வேண்டிய சத்திரியன் இன்றைய தினம் கை நீட்டுகிறான். எனக்கு 20 சதவீதம் கொடு என்று.

நான் வேலூரில் பேசுகிற போது சொன்னேன். வன்னியர்கள் மத்தியிலும் சொன்னேன். உண்மையிலேயே நீ கேட்க வேண்டியது அரசாங்கத்திடம் 20 சதவீதம் அல்ல. மெடிக்கல் காலேஜில் 20 சதவீதம் அல்ல.

மாறாக, நீ கேட்க வேண்டியது எங்கே தெரியுமா? வேலூரில் பஜாரில் துலுக்கன் கடை வச்சிருக்கான் டா. நம்மைச் சுற்றியிலும் துலுக்கன் வியாபாரத்தில் பெருகிக் கொண்டே போகிறான். ஆனால், வன்னியரில் எத்தனை பேர்கள் வியாபாரிகள்? எத்தனை பேரிடத்தில் பணம் இருக்கிறது? ஆகவே நீங்கள் அத்தனை பேரும் வேலூர் பஜாரில் வன்னியர் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளை ஒதுக்கு. எனக்கு கடைகளைக் கட்டிக் கொடு. வியாபாரத்திற்கு பணம் கொடு. அப்படி தான் டா கேட்கனும்"

- இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியுள்ளார். Youtube காணொலியாக இந்த இணைப்பில் காண்க: https://youtu.be/W70LfxkUXak


வன்னியர் உரிமைக்கு குரல் கொடுக்குமா ஆர்.எஸ்.எஸ்?

முஸ்லிம்கள் சொத்தில் வன்னியர்கள் பங்கு கேட்கவேண்டும் என்று சொல்லும் இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான், வன்னியர்களின் உரிமையை அபகரித்து வைத்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோவில் வன்னியர்களான பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு சொந்தமானதாகும். தினமும் இரவு பூஜை முடிந்த பிறகு பூஜை செய்யும் தீட்சிதர்கள், கோவிலை பூட்டி அதன் சாவியை பல்லக்கில் வைத்து மன்னர் குடும்பத்தின் அரண்மனையில் ஒப்படைப்பார்கள். காலையில் மீண்டும் அவ்வாறே வாங்கி வந்து கோவிலை திறப்பார்கள்.
காலப்போக்கில் மன்னர் குடும்பம் நலிவடைந்ததால், சாவியை பிராமணர்களான தீட்சிதர்களே வைத்துக்கொண்டனர். பின்னர், உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மூலம் வழக்குத் தொடுத்து - இந்தக் கோவில் பிராமணர்களுக்கே சொந்தம் என்கிற மோசடி தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.

இப்போது, பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் சார்பில், சிதம்பரம் கோவில் உரிமையை மீண்டும் பிச்சாவரம் மன்னர் குடும்பத்திடமே அளிக்க வேண்டும் என்று கோர முடியுமா?

அப்படி சிதம்பரம் கோவிலில் வன்னியர்களின் உரிமைப் பற்றி பேச வக்கற்றுப் போன இந்த கும்பல் தான் -  வன்னியர் உரிமையை அபகரித்த பிராமணர்களை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாத முஸ்லிம்களிடம் சண்டை போடுங்கள் என்று மூளைச்சலவை செய்கிறது.
திருக்கழுகுன்றத்தில் நடந்த கூட்டத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியன், மற்றும் கல்யாணராமன் (நடுவில்)

பாஜகவின் துணை அமைப்பான சத்திரியர் சாம்ராஜ்யத்தின் தலைவராக, பாஜக சார்பில் 2016 தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு 2605 ஓட்டுகள் வாங்கிய வ.கோ. ரங்கசாமி உள்ளார். 'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு தமிழ் இனத்துரோகி,  போதைப்பொருள் கடத்தல்காரன்' என்று அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாணராமன் தான் இந்த அமைப்பின் ஆலோசகர் ஆகும் (நாயுடு வகுப்பை சேர்ந்த இவர் தன்னை வன்னியர் என்று கூறிக்கொள்வதாக சொல்கிறார்கள்).

மதவெறியை தடுக்க தமிழகம் ஒன்றிணைய வேண்டும்

வன்னியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை மூட்டும் இந்த படுபயங்கர மதக்கலவர சதியை தடுக்காமல் விட்டால், ஆயிரக்கணக்கான வன்னியர்களும், முஸ்லிம்களும் பலியாகும் ஆபத்து விரைவில் வரக்கூடும். இதனை வருமுன் தடுப்பதே, தமிழகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலமானதாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி:

திங்கள், ஏப்ரல் 10, 2017

எச்சரிக்கை: வன்னியர்களை பலிகொடுக்கத் துடிக்கும் மதவெறி கும்பல்!

'கிறிஸ்தவர்களுடனும் இஸ்லாமியர்களுடனும் வன்னியர்கள் போரிட வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்கிற இடஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்' என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பாரதீய ஜனதா கட்சி 'சத்திரியர் சாம்ராஜ்யம்' என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது. 

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசியிருக்கின்றனர். (வீடியோ ஆதாரம் உள்ளது)

இது வன்னியர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் தந்திரம். பாஜக மற்றும் முன்னேறிய சாதியினரின் சுயநலத்துக்காக, தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, வன்னியர்களை இஸ்லாமியர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும் கலவரத்தில் இறக்கிவிட செய்யப்படும் சதி இதுவாகும். இந்தச் சதிக்கு வன்னியர்கள் எவரும் பலியாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை

வன்னியர் என்கிற அடையாளத்துக்கு மதம் தடையாக இருந்தது இல்லை. வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் ஒற்றை மத அடையாளத்துடன் மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.
வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம். வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை.

சமண மதமும் வன்னியர்களும்

இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே வன்னியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).

வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பௌத்த மதமும் வன்னியர்களும்

பல்லவ பாரம்பரியத்தில் வந்தவர்கள் இன்றைக்கும் வன்னியர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' அதே பல்லவ வம்சம்தான். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.

இஸ்லாமும் வன்னியர்களும்

'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்று கருதப்படுகிறது.  நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார்.
கேரளாவில் சேரமான் மசூதி
அவரது பெயரால் அமைந்த சேரமான் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள். சேலம் கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மா அவர்கள் 'சேரமான் பெருமாள் நாயனார்' பெயரில்தான் இந்திய விடுதலைக்கான தீவிரவாதிகள் அமைப்பை உருவாக்கினார்.

சேரமான் பெருமான் அரேபிய மண்ணிலேயே மறைந்தார் என்று கருதப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஓமன் நாட்டின் சலாலா நகரில் தர்காவாக உள்ளது.  (Dargah Name: Hazrat Syedina Tajuddin (Razi Allahu Thaalahu Anhu), Also famous as Cheraman Perumal ( Indian King) in Salalah, Sultanate of Oman)

திரௌபதி அம்மன் வழிபாட்டில் போத்துராஜா போர்மன்னன் மற்றும் முத்தால ராவுத்தன் ஆகியோர் திரௌபதியின் பாதுகாவலனாகக் கூறி வழிபடப்படுகின்றனர். இதில் போத்துராஜா என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும். முத்தால ராவுத்தன் என்பது ஒரு முஸ்லீம் வீரனைக் குறிக்கிறது. இந்த வழிபாட்டு முறை வன்னியர்களின் தனிப்பட்ட பண்பாடாகும்.
இஸ்லாமிய தர்காவில் திரௌபதி கரகம், பெங்களூரு
திரௌபதி அம்மன் வழிபாடு மிகப்பெரிய அளவில் நடப்பது பெங்களூரில் தான். அங்கு பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் திரௌபதி கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.

கிறித்தவ மதமும் வன்னியர்களும்

காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசாபரூர் கச்சிராயர்கள், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள். இன்றைக்கும் இந்தக் கிறித்தவ கோவில் விழாக்களில் இந்து கச்சிராயர்களே மதிக்கப்படுகின்றனர்.
கச்சிராயர் கட்டிய கோணான் குப்பம் புனித பெரியநாயகி தேவாலயம்
இந்த தேவாலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படையாட்சி கட்டிய கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம்
இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் எனும் கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் மறைந்த கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.

மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.

எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. 

மருத்துவர் அய்யாவும் - கிறித்தவ வன்னியர்களும் 

திண்டுக்கல்லில் உள்ள மிகப்பெரிய தேவாலயமான புனித வளனார் ஆலயத்தில் 'கிறித்தவ வன்னியர்களுக்கும் - கிறித்தவ ஆதிதிராவிடர்களுக்கும்' இடையே சர்ச்சை உருவானது. இதனால், வன்னியர்கள் வழிபட்டுவந்த புனித வளனார் தேவாலயம் மூடப்பட்டது.

2000 ஆவது ஆண்டுவாக்கில், மூடப்பட்ட புனித வளனார் தேவாலயத்தை திறக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது மருத்துவர் அய்யா அவர்கள் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார்கள்:

"1. மூடப்பட்ட தேவாலயத்தை உடனடியாக திறக்காவிட்டால், மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் புனித வளனார் தேவாலயம் திறக்கப்படும்.

2. தமிழ்நாட்டு கிறித்தவர்களில் வன்னியர்கள் ஒரு முதன்மையான சமுதாயமாக இருப்பதால் - பிஷப் எனப்படும் மறைமாவட்ட ஆயர்களாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும்" - என்கிற கோரிக்கைகளுக்காக மருத்துவர் அய்யா போராடினார்கள்.
மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தை தொடர்ந்து புனித வளனார் தேவாலயம் திறக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாயத்தில் ஒரு பிஷப் கூட இல்லை என்கிற கோரிக்கையையும் போப்பாண்டவரின் வாட்டிகன் அலுவலகம் கவனத்தில் கொண்டது. இது குறித்து அப்போதைய வாட்டிகன் பிரதிநிதி கார்டினல் சைமன் லூர்துசாமி அவர்கள் திண்டுக்கல் வந்து ஆய்வு செய்தார் (அவரும் ஒரு வன்னியர்).
கர்தினால் லூர்துசாமி
இதைத் தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, வன்னியர் ஒருவர் பிஷப் ஆக நியமிக்கப்பட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தில் தமிழகத்தில் 20 மறை மாவட்டங்கள் உள்ளன. இவை மூன்று உயர் மறைமாவட்டங்களாக (ஆர்ச் பிஷப்) பிரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவர் அய்யா அவர்கள் போராடிய போது, வன்னியர் சமூகத்தில் ஒரே ஒரு பிஷப் கூட இல்லை. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் 4 பிஷப்கள் வன்னியர்கள். (20 மறை மாவட்டங்களும் 3 உயர்மறை மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன. பிஷப்களுக்கும் மேலான இந்த 3 ஆர்ச் பிஷப் பதவிகளில்  2 இல் வன்னியர்கள் உள்ளனர்.)

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த 20 மறைமாவட்டங்களுக்கும் தலைவராகவும் - பிஷப் கவுன்சில் தலைவர் எனும் உயர் பொறுப்பில் வன்னியரான அந்தோணி பாப்புசாமி உள்ளார்.

மருத்துவர் அய்யா அவர்களின் அரசியல் போராட்டங்களின் விளைவாகவே கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் வன்னியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கிறித்தவ வன்னியர்கள் கருதுகின்றனர்.

"திண்டுக்கல் - கரியாம்பட்டி" 

2013 ஆம் ஆண்டில் திண்டுக்கல் அருகே கரியாம்பட்டியில் வன்னிய பெண்ணை கேலி செய்தது தொடர்பாக "வன்னியர் - அருந்ததியினர்" இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய வன்னியர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். அருந்ததியினரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் என்பதால் திண்டுக்கல் பகுதியில் உள்ள வன்னிய கிராமங்களின் ஊர்த்தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடினர்.

திண்டுக்கல் பகுதியில் சுமார் மூன்று லட்சம் வன்னியர்கள் உள்ளனர். அவர்களில் 75% கிறித்தவர்கள். திண்டுக்கல் பகுதி வன்னியர்களில் மிகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்களாக இருந்தாலும், அனைத்து கிறித்தவ வன்னிய கிராம ஊர்த்தலைவர்களும், இந்து வன்னியர்களுக்கு ஆதரவாக திரண்டனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் நாங்கள் வன்னியர்கள் என்கிற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபட்டதனால் அப்பகுதியில் வன்னியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

"கற்றுக்கொண்ட பாடம்"

# கரியாம்பட்டி போராட்டத்தில் "இந்துக்களுக்குள்" வன்னியர் - அருந்ததியினர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என கிறித்தவ வன்னியர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

# திண்டுக்கல் போராட்டத்தில் "கிறித்தவர்களுக்குள்" வன்னியர் - ஆதிதிராவிடர் இடையே சண்டை, நமக்கேன் வம்பு என இந்துவான மருத்துவர் அய்யா அவர்கள் ஒதுங்கிப் போகவில்லை.

மதத்தைத் தாண்டி, வன்னியர்கள் எல்லோரும் உறவினர்களாக ஒன்றுபட்டு நின்றார்கள். ஒற்றுமையே வலிமை என்பதை நிரூபித்தார்கள்.

மதவெறி கலவரத்தில் வன்னியர்களா?

'கிருஸ்துவ வன்னியர்களை வன்னியர் சமூகத்திலிருந்து விலக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வன்னியர்கள் தாக்குதல் நடத்தி கலவரம் செய்ய வேண்டும்' என்று சத்திரியர் சாம்ராஜயம் எனும் பாஜக துணை அமைப்பின் கூட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை (9.4.2017) அன்று பகிரங்கமாக பேசப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

வன்னியர்கள் எல்லா மாற்றுக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். அரசியல் ரீதியில் எதிர்எதிர் இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குள் உறவினர் என்கிற அடிப்படையில் மோதல் இல்லை. மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டபோது, பல மாற்றுக்கட்சி வன்னியர்கள் துடிதுடித்தார்கள்.

ஆனால், பாஜக ஆதரவு வன்னியர்கள் மட்டும்தான் 'இந்துக்கள் என்றும் கிறித்தவர்கள் என்றும்' வன்னியர்களுக்குள் பிளவினை ஏற்படுத்த துடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களை அடியாட்களாக மாற்றத் துடிக்கின்றனர். 
முப்பதாண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா போன்று இடதுசாரி நக்சலைட் தீவிரவாதிகளாக வன்னியர்கள் மாறாமல் தடுத்து அவர்களை நல்வழிக்கு திருப்பியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அது போல இப்போது மதவெறி அரசியலுக்காக வன்னியர்களை பலிகொடுக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

‘மதவெறி அரசியலின் மூலமாக பாஜக வளர வேண்டும் என்பதற்காக வன்னியச் சாதியை பலி கொடுக்கத் துடிக்கும்' இந்த மாபெரும் சதியை மருத்துவர் அய்யா அவர்கள் முறியடிப்பார்கள்.