Pages

திங்கள், அக்டோபர் 03, 2016

தமிழ் நாட்டுக்கு தண்ணீரும் இல்லை; காவிரி மேலாண்மை வாரியமும் இல்லை - மத்திய மோடி அரசின் இனவெறி முடிவு சரிதானா?

2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெறும் காகிதமாகவே இருக்கும் என்று எச்சரித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் அளித்தது.

For this purpose, we recommend that Cauvery Management Board on the lines of Bhakra Beas Management Board may be constituted by the Central Government. In our opinion, the necessity of setting up a suitable mechanism is of utmost importance; besides whatever machinery is set up should be adequately empowered to implement the Tribunal’s decision, as otherwise, we are afraid our decision would only be on a piece of paper. (CWDT decision - Volume 5 - 8:14)

மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பும் உச்சநீதிமன்ற உத்தரவும் சமமானது என்பதால், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை - என்றும் தெளிவுபடுத்தியது.

ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மௌனம் சாதித்து வந்துள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை எப்போது அமைப்போம், என்பதை மட்டும்தான் மோடி அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்க வேண்டும். 

மாறாக, இந்திய அரசியல் சாசனத்தில் 262 ஆவது பிரிவின் கீழ் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று ஒருபக்கம் கூறிவிட்டு, மறுபக்கத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் மத்திய அரசின் விருப்பம் என்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு கூறியிருப்பது தமிழகத்துக்கு எதிரான இனவெறி போக்கே ஆகும்!

காவிரி நடுவர் மன்றதின் இறுதி தீர்ப்பில் - காவிரி மேலாண்மை வாரியத்தின் முக்கியத்துவம் குறித்த பகுதிகளை கீழே காண்க (9 பக்கங்கள்- CWDT decision - Volume 5 - Chapter 8):








காவிரி நடுவர்மன்ற இறுதி  திர்ப்பு - பகுதி 5 PDF வடிவில் (இங்கே சொடுக்கவும்): Apportionment of The Waters of The Inter-State River Cauvery 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

As a Tamilan, I can not accept your argument as it contains proper documents and statistics. We enjoy empty " chavadaal and udhaar" only. WE are waiting for Remo , not for caveri .