Pages

சனி, அக்டோபர் 02, 2010

அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
நீதியரசர் D.V.சர்மா தீர்ப்பு மட்டுமே அது இராமர் பிறந்த இடம் என்கிறது. நீதியரசர் D.V.சர்மாவின் தீர்ப்பு பெரும்பான்மை தீர்ப்பல்ல. மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பே பெரும்பான்மையானது. அதில் “இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது”. அந்த தீர்ப்புகள் இதோ:
GIST OF THE FINDINGS by Justices Sudhir Agarwal:
“The area covered under the central dome of the disputed structure is the birthplace of Lord Rama as per faith and belief of Hindus.”
GIST OF THE FINDINGS by Justices S.U.Khan:
“5. That for a very long time till the construction of the mosque it was treated/believed by Hindus that some where in a very large area of which premises in dispute is a very small part birth place of Lord Ram was situated, however, the belief did not relate to any specified small areawithin that bigger area specifically the premises in dispute.
6. That after some time of construction of the mosque Hindus started identifying the premises in dispute as exact birth place of Lord Ram or a place wherein exact birth place was situated.”
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
அயோத்தி தீர்ப்புக்கு பின் நீதிமன்ற வாசலில் பேட்டியளித்த பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் “இராமர் பிறந்த இடம் இதுதான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது” என்று திரித்துப்பேசினார். அது தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பப்பட்டது. பல பத்திரிகைகளும் அதே கருத்தை வெளியிட்டு வருகின்றன.
ஏன் இந்த பித்தலாட்டம்?
இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

10 கருத்துகள்:

do this சொன்னது…

ராமர் 'பிறந்த இடத்தில்'தான் கோவில் கட்ட வேண்டும் என்றால், அதற்கு கோசலையின் உடம்பு அல்லவா வேண்டும்? அங்கேதானே ராமர் பிறந்த இடம் இருக்கிறது!

ஆனால், கோசலையின் பிரேதம் எங்கே? தேடிக்கண்டு பிடித்து எடுத்து வரட்டும், அந்த பிரேதத்தில் ராமர் 'பிறந்த இடத்தை' தேடி அடையாளம் கண்டு 'அங்கே' ராமருக்கு கோவில் கட்டட்டும். யார் எதிர்ப்பது?

அஸ்மா சொன்னது…

நியாயமான பார்வை! வாழ்த்துக்கள்.

kaja nazimudeen சொன்னது…

ஏன் இந்த பித்தலாட்டம்?
இராமர் பிறந்த இடம் இதுதானா என்பது வழக்கே அல்ல. அப்புறம் எதற்கு பச்சைப்பொய் புளுகவேண்டும்?

பித்தலாட்டங்களும், பச்சை பொய் புளுகல்களும் தானே "வந்தேறி" ஆரிய காவி கும்பல்களின் தாரக மந்திரம்!

ராஜ நடராஜன் சொன்னது…

//இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.//

அருள்!உங்கள் கருத்து சரியே!ஆனால் இந்துத்வா திரிப்புக்கள் ராமன் பிறந்த் இடம் என்றே மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்கிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

do this .. if some one asks you waht is your birth place what will you put!

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அண்டப்புளுகு என்பதற்கு இந்திய அகராதியில் அர்த்தம் தேடினால் ஆர் எஸ் எஸ் என்றுதான் வருமோ ?

அன்புடன் மலிக்கா சொன்னது…

உண்மைகள் நிச்சயம் உறங்காது
ஆனால்
உலகறிந்த உண்மைகள் மட்டும் ஊமையானது.

நடுநிலைவாதிகள் நிச்சயம் உண்மையை அறிவார்கள் என்பதற்க்குச் சான்றாக ஆங்காங்கே இதுபோன்ற நியாயமான இடுகைகள்.

பெயரில்லா சொன்னது…

கைபரிலிருந்து ஆதாம் பாலம் வரை, மனுவிலிருந்து இல.கணேசன் வரை புளுகுவதற்கோ மோசடி செய்வதற்கோ எவ்வித கூச்சமும் கிடையாது.
அடுத்தவன் மீதேறியே பொழப்பு நடத்தியவர்கள் கூச்சப்படுவார்களா என்ன!

இம்ரான் சொன்னது…

தங்கள் வேண்டுகோளுக்கு இணங்க எனது கட்டுரையை நீக்கி விட்டேன்

Abu Nadeem சொன்னது…

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்