Pages

புதன், ஏப்ரல் 18, 2012


மே 17 இயக்கத்தின் சாதிவெறி: வன்னியர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமாம்!

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு இயக்கமாக அறியப்பட்ட மே 17 இயக்கத்தில் இப்போது சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. காரணம்: சாதிவாரிக் கணக்கெடுப்பு.

ஏபரல் 20 முதல் நடக்க இருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் வன்னியர்கள் பட்டப்பெயர்களைக் கூறாமல் "வன்னியகுல சத்திரியர்" என்று கூற வேண்டும் என்கிற வன்னியர்களின் வேண்டுகோளுக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி.

"நீ வன்னியகுல சத்திரியனாக இரு. தமிழன்  ன்றுமட்டும் சொல்லிக்கொள்ளாதே எனக்கு அவமானமாக இருக்கிறது...தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்று'வேன்" என்று தனது முக நூலில் எழுதியுள்ளார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி. இதைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறது.
முகநூலில் திருவாளர் திருமுருகன்: காந்தி தமிழகத்திற்கு என்றாவது விடியல் 
கிடைக்கும் போது வன்னியர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்று'வேன்

சாதிவாரிக் கணக்கெடுப்பு பிரச்சாரம் எதற்காக?

அரசாங்கம் நடத்தும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் நேரக்கூடாது. அதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பின் நோக்கமான 'எந்த சாதி எத்தனை பேர்' என்கிற புள்ளிவிவரத்தில் பிழை நேரக்கூடாது என்கிற நியாயமான எண்ணத்திலும் தான் வன்னியர்கள் ஒற்றைப் பெயரைக் கூறவேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதைப் பார்த்து மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி எதற்காக அவமானப்பட வேண்டும்?


சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்கிற கருத்தினை பொதுவாக தமிழ்நாட்டின் எந்த ஒரு அரசியல் கட்சியோ, அல்லது மக்கள் இயக்கமோ எதிர்க்கவில்லை. மே 17 இயக்கத்துடன் தோளோடு தோள் உரசும் தலைவர்கள் எல்லோரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டபூர்வமாக, அரசாங்கத்தின் செலவில் நடக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு தனிப்பட்ட அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பை நடத்துவதற்கு மாவட்டந்தோரும் மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இப்படிப்பட்ட ஒரு கணக்கெடுப்புக்கு உதவ வேண்டும் என்று சொல்வது தவறா?

வன்னியர்களின் சிக்கல் என்ன?

தமிழ்நாட்டின் பெரும்பாலான சாதியினருக்கு இல்லாத ஒரு சிக்கல் வன்னியர்களுக்கு இருக்கிறது. வன்னிய சமூகத்தினர் பலவிதமான பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில பெயர்கள் மற்ற சாதியனராலும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வன்னியர்கள் பயன்படுத்தும் "ரெட்டியார்" பெயரை தெலுங்கு ரெட்டியார் சமூகத்தினரும், "நாயக்கர்" பெயரை தெலுங்கு நாயுடு சமூகத்தினரும், "கவுண்டர்" பெயரை கொங்கு கவுண்டர் சமூகத்தினரும், "பிள்ளை" பெயரை வெள்ளாளர் சமூகத்தினரும், "வாண்டையார்" பெயரை முக்குலத்தோர் சமூகத்தினரும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று இன்னும் பல பட்டப் பெயர்கள் உள்ளன.

ஒரே பெயரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பயன்படுத்தும் நிலையில், அரசாங்கத்தின் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருவர் ஒரு சாதிப் பெயரை மட்டுமே கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரே சாதிப்பெயரை இரண்டு சமூகத்தினர் கூறினால் அதனால் குழப்பம் நேராதா? அதனால் அரசின் கணக்கெடுப்பு நோக்கம் பாதிக்காதா?

இந்த குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் சமூகமாக வன்னியர்களே உள்ளனர். எனவே, வன்னியர்கள் மத்தியில் "ஒரே சாதிப்பெயரைக் கூறுங்கள்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டால் அதில் என்ன தவறு?

இதற்காக, மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி எதற்காக கோபம்கொண்டு கொதிக்கின்றார்? (முன்னேறிவிட்ட பிள்ளைமார் சமூகத்தினருக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை இல்லைதானே)


வன்னியர்களை தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டுமாம்!

மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தியின் மற்றொரு கருத்து "வன்னியர்களை தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும்" என்பதாகும். இது ஏன் என்று தெரியவில்லை?

மண்ணின் மைந்தர்களை அவர்களது சொந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்லும் இவர்தான் ஈழத்தமிழர்களுக்காக போராடுகிறாராம்! வெட்கக்கேடு!

கூடவே, சத்திரியன் என்று சொல்லாதே என்கிறார்.

வன்னியர்களின் பெயர் அரசின் பட்டியலில் "வன்னியகுல சத்திரியர்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலில் 26 ஆவது சாதியாக"வன்னியகுல சத்திரியர்" (Vanniyakula Kshatriya) என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்: List of Most Backward Classes

நடுவண் அரசின் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் பட்டியலிலும் 157 ஆவது சாதியாக"வன்னியகுல சத்திரியர்" (Vanniyakula Kshatriya) என்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்: Central List of OBCs for the State of Tamilnadu

இவ்வாறாக சாதிச் சான்றிதழிலும், அரசு ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள "வன்னியகுல சத்திரியர்" எனும் அதிகாரப்பூர்வப் பெயரை பயன்படுத்தாதே என்று சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை!

சாதி ஒழிப்பா? லூசுத்தனமா?

இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக போராடியவர்கள், போராடுபவர்கள் எல்லோரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றனர்

தந்தை பெரியாரைப் பின்பற்றும் இயக்கங்கள் எல்லாமும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. அதுகுறித்து "சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா?" எனும் பதிவில் விரிவாக குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியாவின் முதன்மையான சாதி ஒழிப்புப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரித்தார். அவரது "பல லட்சங்களிலிருந்து பின்னங்களுக்கு" எனும் கட்டுரையில் இந்தியாவில் தீண்டத்தகாதோரும் பிற்படுத்தப்பட்டவர்களும் எண்ணப்பட்டு எண்ணிக்கை தெளிவாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அந்தக்கட்டுரையை இங்கே காணலாம்: From Millions to Fractions

இந்திய அரசியல் அமைப்பின் 340 ஆம் பிரிவில் கூறப்பட்டபடி அமைக்கப்பட்ட காகா கலெல்கர் குழு, மண்டல் குழு ஆகியன உடனடியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தின. எனினும், விடுதலைப் பெற்று 65 ஆண்டுகளுக்கு பின்னரே சாதிவாரிக் கணக்கெடுப்பு எனும் கனவு நனவாகியுள்ளது.

இப்போது வந்து, சாதிவாரிக் கணக்கெடுப்பில் வன்னியர்கள் தங்களது 'சட்டப்படியான' பெயரைக் கூறக்கூடாது என்றும், அவ்வாறு கூறுமாறு கேட்பதால் மண்ணின் மைந்தர்களான வன்னியர்கள் அவர்களது சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறுகிறார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது வன்னியர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்றுவேன் என்பதாகவும் பேசுகிறார் மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்தி.
திருவாளர் திருமுருகன் காந்தி
மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருவாளர் திருமுருகன் காந்திக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என்று தெரியவில்லை. அவரோடு மெரீனா கடற்கரையில் தோளோடு தோள் நின்று காட்சியளிக்கும் தமிழினப் போராளிகளும் சமூகநீதிப் போராளிகளும்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
1. சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?
2. சாதிவாரிக் கணக்கெடுப்பு-வன்னியர்களின் கடமை: முதல் பத்திரிகை விளம்பரம்
3. சாதிவாரிக் கணக்கெடுப்பு: பிற்போக்கா? முற்போக்கா?

பின்குறிப்பு:

மே 17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அவர்கள் வன்னியர்கள் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக அவரது முகநூலில்  https://www.facebook.com/profile.php?id=1339044043 நீட்டி முழக்கி விவாதம் நடக்கிறது. நான் அதுபோல நீண்ட விளக்கம் எல்லாம் கேட்கவில்லை.

"தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்றி" --என்கிற கருத்தினை திரு. திருமுருகன் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை அவரே ஒப்புக்கொள்கிறார். அந்தக் கருத்து தவறானது என்று ஒருபோதும் அவர் மறுக்கவில்லை. அதனை புரிந்துகொண்டவர்கள்தான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டும் என்கிற அவரது கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இந்த இடத்தில் வன்னியர்கள் என்று இல்லை, வேறு யார் பெயரை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள். அவ்வாறு குறிப்பிடப்படும் கூட்டத்தினரின் கருத்து எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.

என்னுடைய கேள்வி மிக எளிதானது: ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக அல்லது பிறப்பின் அடிப்படையில், சிலரையோ அல்லது பலரையோ இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதா?

திரு. திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்திற்கும் இடலர் யூதர்களை வெளியேற்றியதற்கும் என்ன வேறுபாடு?

திரு. திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்திற்கும் சிங்கள வெறியர்கள் தமிழர்களை வெளியேற்றியதற்கும் என்ன வேறுபாடு?

வன்னியர்களை அவர் வெளியேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பல நூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவ்வாறே, தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மக்களும் பல நூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள். தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூற முடியுமா? அந்தக் கருத்தினை மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க முடியுமா?

சாதி, மதம், மொழி, இனம், நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் ஒரு இடத்தில் நீண்டகாலமாக வாழும் மக்களை வெளியேற்றக் கூறுவது மயிரிழை அளவும் ஏற்புடையது அல்ல.

ஆனாலும், பெரும்பாலும் வன்னியர்களைத் தவிர வேறு எவரும் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு கூறாமல் மௌனமாக இருப்பது வியப்பளிக்கிறது.

21 கருத்துகள்:

naren சொன்னது…

தலைவர் அருள்.

கணக்கு எடுக்கும் முன்பே இப்படி ஒரு பிர்ச்சனையா???
/////
வன்னிய சமூகத்தினர் பலவிதமான பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில பெயர்கள் மற்ற சாதியனராலும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, வன்னியர்கள் பயன்படுத்தும் "ரெட்டியார்" பெயரை தெலுங்கு ரெட்டியார் சமூகத்தினரும், "நாயக்கர்" பெயரை தெலுங்கு நாயுடு சமூகத்தினரும், "கவுண்டர்" பெயரை கொங்கு கவுண்டர் சமூகத்தினரும், "பிள்ளை" பெயரை வெள்ளாளர் சமூகத்தினரும், "வாண்டையார்" பெயரை முக்குலத்தோர் சமூகத்தினரும் பயன்படுத்துகின்றனர்.
//////

நீங்கள் சொன்ன சாதி பட்டப் பெயர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற வகையில் உள்ள சாதி பெருமைக்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

இந்த பட்டப் பெயர்களை உடைய மற்ற சாதியினர், எங்கள் பட்டப் பெயரை வன்னியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று உங்கள் கூற்றுக்கு எதிராக அவர்கள் சொல்லலாம் அல்லவா?

இந்தப் பட்டப் பெயர்கள் Sanskritisation ஆல் வந்தது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

சாதி ஆதிக்கம் கொடுமை என்பது நமது சமுதாயத்தில் நிதர்சனமாக இருக்கும்போது, அதை களைந்து சமூக நீதி ஏற்பட பல காரணிகளில் ஒன்று சாதியும் இருக்க வேண்டும். சாதிதான் இருக்க வேண்டும் என்பது எனக்கு ஏற்புடையது அல்ல.

முதல் படியாக சாதி பெருமை என்னும் மனக்கோட்டை கட்டுவதை கலையலாமே?

R.Puratchimani சொன்னது…

வணக்கம் ஐயா அருள் அவர்களே, :)
அந்த பொருளாலரின் கருத்து கண்டனத்திற்கு உரியது. கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக சாடுவது சரியானது அல்ல.

ஆனால் அதே தவறை தான் நீங்களும் செய்துள்ளீர்கள். அவர் செய்த தவறுக்காக அந்த அமைப்பை குறை கூறுவது நீங்கள் செய்த தவறு.

நீங்கள் கொடுத்த ஜாதி பட்டியல் இணைப்பை பார்த்தவுடன் தான் உங்கள் செயலின் உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது .

நீங்கள் சொல்லவருவது என்னவெனில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஜாதியை பயன்படுத்தாமல் அடைப்புக்கு வெளியே இருக்கும் பெயரை வன்னியர்களை பயன்படுத்த சொல்கிறீர்கள் . இது சரியானதே. உண்மையில் அரசாங்கம் என்னசெய்யவேண்டும் எனில் அடைப்புக்குள் இருக்கும் பெயரை சொன்னாலே அடைப்புக்கு வெளியே இருக்கும் பெயரை எழுத வேண்டும் என்று கணக்காளார்களுக்கு சொல்லவேண்டும். தனித்தனியே எழுதினால் தமிழ்நாட்டில் ஜாதிகளின் எண்ணிக்கை மேலும் உயரும்.

நீங்கள் இதை வன்னியர்களுக்கு மட்டும் சொல்லாமல் அனைத்து ஜாதியினருக்கும் பயன்படும்படி சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனைவரும் பயனடைவர்.

ஏதோ உங்களை, ஏதோ ஒரு முறையில் சார்ந்தவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள் அதற்காக உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இதனுடன் தொடர்புடைய எனது பதிவு ஒன்று உங்கள் கவனத்திற்கு...கண்டிப்பா படிங்க :)

எங்கே போனது மனிதம்?
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/06/blog-post_399.html

சத்ரியன் சொன்னது…

அருள்,

திருவாளர் திருமுருகன் காந்தியே சொல்லியிருக்கிறார்.

“தமிழகத்திற்கு என்றாவது விடியல் வந்தால்” என்று.

திருவாளர் போன்ற இயக்கத் தலைவர்கள் இருக்கும் வரை “விடியல் வராது” என்பதைத் தான் அவரே சூசகமாகச் சொல்லிச் செல்கிறார்.

கிராமத்தான் சொன்னது…

மே-17 திருமுருகன் மெரினாவில் நடத்திய கூட்டங்களில் வன்னிய இனத்தை சார்ந்த சகோதரா்களுடன் நானும் கலந்து கொண்டேன்..அதனை நினைவு கூறும் போது நம் இனத்தை அழிக்க நினைப்பவனுடன் கலந்து கொண்டதை நினைத்து வெட்கபடுகிறேன்...

Unknown சொன்னது…

நண்பர்களுக்கு, மிகத்தவறாக கருத்துப் புரிதலுக்கு உள்ளானது என்பது மட்டுமல்ல.. இந்த விவாதம் வேண்டப்பட்ட திசையை நோக்கி நகர்வதை செய்ய வேண்டுகிறேன்...


’சத்திரியன்’ என்கிற சாதியப் பட்டத்தை எதிர்த்தே எனது பதிவு செய்யப்பட்டது..’சத்திரியன் ‘ என்கிற பதம் மறுபடியும் ஒரு வருணாசிரம படி நிலையை (ஏற்றத்தாழ்வை) நமக்குள் கட்டமைக்கிறது......
இது ’பார்ப்பனன்’ உயர்ந்தவன் ,அவனுக்கு அடுத்த படி நிலையில் தாழ்ந்தவனாக ‘சத்திரியன்’, பின் ’வைசியன்’, அடுத்து ’சூத்திரன்’ கடைசியில் ‘பஞ்சமன்’ என்றாகிறது..

எந்த நிலையிலும் தமிழன் என்கிற அடையாளம் நம்மை இந்த படி நிலையில் நிறுத்துவதில்லை… மாறாக ‘சத்திரியன்’ என்பது தமிழனை அடிமையாக மாற்றுவது என்பது மட்டுமல்லாமல் ஏனையோரை தாழ்ந்த படி நிலைக்கு தள்ளும் வேற்றுமையை உருவாக்குகிறது..தமிழ்ச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. தமிழனாய் மட்டும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் போது ஏற்றத்தாழ்வுகள் வருவதில்லை…… வருணாசிரமத்தில் மட்டுமே அது உருவாக்கப்படுகிறது. ‘சத்திரியன்’, என்கிற அங்கீகாரத்தை பார்ப்பனன் மட்டுமே வழங்குகிறான்.. ( அவனது அங்கீகாரத்திற்கா போராடுகிறோம்??). அதன் மூலமாக அவனை உயர் நிலையில் தன்னை வைத்துக்கொள்கிறான்........ இந்த பிராமணமயம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வைதான் உண்டாக்கும்.. இதை நான் கடுமையாக எதிர்த்தேன்
… சத்திரியன் என்பவன் வருணாசிரமத்தில் ஆள்பவன் மட்டுமல்ல தனக்குக் கீழே “இழிவான” சாதியப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்பவன் மேலும் அவன் பார்ப்பனனுக்கு கீழ் நிற்பவனே…… இந்த படி நிலை தான் தமிழனை வீழ்த்தி இருந்தது. பண்டைய தமிழ்ச் சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கிடையாது; அவை வைதீக மதத்தால், வருணாசிரமத்தால் தமிழரிடையிலே திணிக்கப்பட்டது .. தமிழ்ச் சமூகம் சாதியை கடந்தே இருந்திருக்கிறது…. இந்த பார்வையில் எனது கருத்துப் பதிவு இருந்தது.. நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது…. அது உண்மையல்ல… ஒடுக்கப்பட்டச் சமூகத்தின் உரிமையே இட ஒதுக்கீடு.இடஒதுக்கீட்டின் ஒரு தொடர்ச்சியான தேவை இந்த 'சாதி வாரி கணக்கெடுப்பு ' எனது பதிவை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வதை வரவேற்கிறேன்… திருமுருகன்...

Unknown சொன்னது…

தன்னை சத்திரியன் என்று சொல்பவன் தன்னை பார்ப்பனனுக்கு அடிமையானவனாக மாற்றுகிறான்.... தமிழன் யாருக்கும் அடிமை இல்லை.... தன்னை அடிமையாக , அதைப் பெருமையாக பார்க்கிறவன் , தமிழனாகவோ, தமிழக விடுதலையிலோ எப்படி பங்கேற்க முடியும்...... நான் சொன்ன வார்த்தைகள் - “ உன்னை யார் சத்திரியன் என்று அங்கீகரிக்கிறானோ, அவனிடமே செல்” . ..பார்ப்பான் மட்டுமே ஒருவனை சத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ அங்கீகரித்து பட்டமளிப்பான் .. பார்ப்பானுக்கு நாம் அடிமையாக வேண்டும்.. இதுவே இந்தியாவிற்கும் வேண்டும்... இந்தியாவே அடிமைகளின் நாடு..... தமிழன் அடிமையில்லை..... நாம் பார்ப்பனர்களிடம் இருந்து அடிமைத்தளத்தில் இருந்து விடுபட வேண்டும்.... எத்தனையோ மாற்றத்திற்காக போராடி இருக்கிற நாம், தமிழ் மயப்படுத்த போராடிய நாம், எப்படி சமஸ்கிருத -பார்ப்பனிய பட்டத்தை ஏற்க முடியும் என்பது எனது கேள்வி.. இதை தாங்கள் சிந்தித்து மாற்றுவதைப் பற்றி பேசவேண்டும்... சத்திரியன் பார்ப்பனனின் அடிமை.. அதை மாற்றுவோம்.... தமிழ் நாட்டில் தமிழனே பெரும்பான்மை...... அவனே இந்த நாட்டின் மைந்தன்....
தமிழரசன் போன்ற போராளிகளை சாதிய அடையாளத்தில் அடைத்து விடவேண்டாம்.... தமிழரசனையும், புலவர் கலிய பெருமாளும் தமிழன் என்கிற அடையாளத்தில் நின்றார்கள்.... அவர்களைத்தான் நாங்களும் தலைவர்களாக, எங்களின் முன்னோடிகளாக பார்க்கிறோம்... இவர்கள் தமிழருக்கான தலைவர்கள்.. இவர்களை சாதிய ரீதியில் அடையாளப்படுத்தினால், ஏனைய சாதியினர் இவர்கள் போராடிய காரணத்தை புறக்கனிப்பதுடன் நமக்குள் பிளவை ஏற்படுத்தும்..... முதலில் நாம் ‘பார்ப்பன அடையாளமான ’சத்திரியன்’ என்கிற பட்டத்தை மாற்றி தமிழ் அடையாளமாக மாற்றுவோம்.. இதை தாங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.... யாரையும் சாதிய அடையாளத்துடன் பார்க்க வேண்டாம்... இதுவே நம்மை பிரிக்கிறது...... சாதிய தலைவர்களிடத்தில் சேரும் கூட்டம் அண்ணன் கொளத்தூர் மணிக்கோ, அய்யா கலியபெருமாளுக்கோ, ஏன் தமிழரசனுக்கோ நிற்கவில்லை..... இது தான் உண்மை நிலை..... தமிழர்கள் திரண்டிருந்தால் இன்றய தினம் இவர்கள் தமிழர்களின் விடுதலையை வென்றெடுத்திருப்பார்கள்...... தங்களின் தோழமைக்கு நன்றி... மேலும் பேசுவோம்...

அருள் சொன்னது…

naren சொன்னது…

// //நீங்கள் சொன்ன சாதி பட்டப் பெயர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற வகையில் உள்ள சாதி பெருமைக்கு ஏதாவது ஆதாரம் உண்டா?// //

சாதியோ, சாதீய பட்டப்பெயர்களோ உயர்வானவை என்று நான் கருதவில்லை. அந்தவகையில் வன்னியர்கள் பயன்படுத்தும் பட்டப்பெயர்கள் வன்னியர்களுக்கு உரித்தானவை என்றும் நான் வாதிடவில்லை.

அதனால்தான் "ஒரே பெயரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பயன்படுத்தும் நிலையில், அரசாங்கத்தின் சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருவர் ஒரு சாதிப் பெயரை மட்டுமே கூறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளேன்.

ஒரே பெயரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை. அதில் எந்தப்பெயர் யாருக்கு சொந்தம்? என்பது இப்போது தேவையில்லாதது. இதுபோன்ற மோதல்கள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டிலேயே நடந்து முடிந்துவிட்டன.

puduvaisiva சொன்னது…

அனைத்து சாதியின் சமூக நிலையை உணரவே அரசு நடத்தும் இந்த கணக்கேடுப்பு.

இது கூட தெரியாத இந்த 1/2 வேக்காட்டை விட்டு தள்ளுங்க

அருள் சொன்னது…

R.Puratchimani சொன்னது…

// //ஒட்டுமொத்தமாக ஒரு சமுதாயத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக சாடுவது சரியானது அல்ல.

ஆனால் அதே தவறை தான் நீங்களும் செய்துள்ளீர்கள். அவர் செய்த தவறுக்காக அந்த அமைப்பை குறை கூறுவது நீங்கள் செய்த தவறு.// //

கலைஞர் என்றால் திமுக, அம்மா என்றால் அதிமுக என்பதுபோல திரு. திருமுருகன் காந்திதான் மே 17 இயக்கத்தின் அச்சாணி என்று சொல்கிறார்கள். எனவே, அவரது கருத்து அவரது இயக்கத்தையும் சாரும்.

அருள் சொன்னது…

thiruja சொன்னது…

// //’சத்திரியன்’ என்கிற சாதியப் பட்டத்தை எதிர்த்தே எனது பதிவு செய்யப்பட்டது..’சத்திரியன் ‘ என்கிற பதம் மறுபடியும் ஒரு வருணாசிரம படி நிலையை (ஏற்றத்தாழ்வை) நமக்குள் கட்டமைக்கிறது......
இது ’பார்ப்பனன்’ உயர்ந்தவன் ,அவனுக்கு அடுத்த படி நிலையில் தாழ்ந்தவனாக ‘சத்திரியன்’, பின் ’வைசியன்’, அடுத்து ’சூத்திரன்’ கடைசியில் ‘பஞ்சமன்’ என்றாகிறது..// //

இதுபோல விரிவான வாதங்களை திரு. திருமுருகன் காந்தி அவர்கள் மேலே (thiruja என்ற பெயரில்) பின்னூட்டத்தில் வைத்துள்ளார். அதே கருத்தை அவரது முகநூலிலும் முன்வைத்துள்ளார். இதன் நீட்சியாக தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்று நான் குறிப்பிடாதவர்களையெல்லாம் அவர்கள் வன்னியர்கள் என்று இவரே மேலே சொல்கிறார்.

இந்த இடத்தில் மூன்று விளக்கங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.

1. தான் எழுதிய கருத்து சரிதான் என்று வாதிடும் திரு. திருமுருகன் காந்தி அவர்கள், விவாதத்துக்குரிய அவரது அந்த கருத்தினை (தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்று) அவரது முகநூலில் இருந்தே தூக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

அவரது கருத்து சரிதான் என்றால், அதனை எதற்காக முகநூலில் இருந்து நீக்க வேண்டும்?

2. சத்திரிய பட்டம் வருணாசிரம தருமத்தின் வடிவமாக இப்போதும் அடையாளம் காணப்படுகிறதா? என்பது விவாதத்துக்கு உரியது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சத்திரிய பட்டம் மிகப்பெரிய விவாதமாக, போராட்டமாக, வழக்குகளாக இருந்தது. மறுபுரம் 'வன்னியர்கள் இழிவுபடுத்தப்படுவதில் இருந்து மீள்வதற்கான கருவியாகவும்' இருந்தது. ஒரு மிகப்பெரிய போராட்டத்தின் நினைவாக மட்டுமே அந்த பெயர் இப்போது எஞ்சியிருக்கிறது. (இதைப் பற்றி விவரிக்க வேண்டுமெனில் தனி பதிவுதான் எழுத வேண்டும்).

3. தமிழ் சமூகம் வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் ஆபத்துகளை எதிர்கொள்கிறது. இதில் தமிழ்தேசியம் என்று பேசினாலும், ஈழத்தமிழர்களுக்காக பேசினாலும் அது பெரும்பாலும் வெளியிலிருந்து வரும் ஆபத்துக்கு எதிரான போராட்டமாகவே அமைகிறது.

மாறாக, "சாதி சிக்கல் என்பது உள்ளிருந்து வரும் ஆபத்து" - இதனை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழ்தேசியத்துக்கோ, மே 17 இயக்கத்துக்கோ இல்லை என்றே நான் கருதுகிறேன். எனவே, தமிழ்தேசிய போராளிகள் "வெளியிலிருந்து வரும் ஆபத்துகளுக்கு" எதிராக மட்டுமே பேசிக்கொண்டு போவது நல்லது என்று கருதுகிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!தூரத்தில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் போது உங்கள் சாதியம் குறித்த கருத்துக்களும்,பதிவுகளும்,பின்னூட்டங்களும் உங்கள் மீதான பரிதாபத்தையும் அதே நேரத்தில் ஈழம் குறித்த உங்கள் அக்கறை வியப்பையும் உருவாக்குகின்றது.

மேலும் நீங்கள் திரிபு படுத்துவதற்கும் திருமுருகன் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது.

நீங்கள் சார்ந்த கட்சியோ,ராமதாஸ் ஈழம் குறித்த அக்கறைகளோ மறுப்பதற்கில்லை.ஆனால் அவற்றையும் மீறிய அன்புமணியின் பதவி நோக்கும் சார்ந்த ஒன்றாகவே ஈழப்போரின் கால கட்டம் இருந்தது என்பதும் உண்மை.

வலிமையான கருணாநிதியே திசைமாறிப்போன போது ராமதாஸை குறை சொல்வதில் அர்த்தமில்லையென்பதும் உண்மை.

அருள் சொன்னது…

கருத்துகளுக்கு நன்றி

@naren
@R.Puratchimani
@சத்ரியன்
@கிராமத்தான்
@thiruja
@puduvai siva
@ராஜ நடராஜன்

அருள் சொன்னது…

@ராஜ நடராஜன்

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதை நான் முற்றிலுமாக மறந்துபோக விரும்புகிறேன். எல்லோரும் குற்றவாளிகள் என்கிற கருத்தை மறுப்பதற்கு இல்லை. நானும் குற்றவாளிதான். ஆனால் முதல் குற்றவாளி இல்லை என்று மட்டும் திருப்தி பட்டுக்கொள்ளலாம்.

அருள் சொன்னது…

மே 17 இயக்கத்தின் திரு. திருமுருகன் காந்தி அவர்கள் வன்னியர்கள் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக அவரது முகநூலில் நீட்டி முழக்கி விவாதம் நடக்கிறது. நான் அதுபோல நீண்ட விளக்கம் எல்லாம் கேட்கவில்லை.

"தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை தமிழகத்தினை விட்டு வெளியேற்றி"

--என்கிற கருத்தினை திரு. திருமுருகன் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். அதனை அவரே ஒப்புக்கொள்கிறார். அந்தக் கருத்து தவறானது என்று ஒருபோதும் அவர் மறுக்கவில்லை. அதனை புரிந்துகொண்டவர்கள்தான் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டும் என்கிற அவரது கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இந்த இடத்தில் வன்னியர்கள் என்று இல்லை, வேறு யார் பெயரை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள். அவ்வாறு குறிப்பிடப்படும் கூட்டத்தினரின் கருத்து எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.

என்னுடைய கேள்வி மிக எளிதானது: ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக அல்லது பிறப்பின் அடிப்படையில், சிலரையோ அல்லது பலரையோ இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதா?

திரு. திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்திற்கும் இடலர் யூதர்களை வெளியேற்றியதற்கும் என்ன வேறுபாடு?

திரு. திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்திற்கும் சிங்கள வெறியர்கள் தமிழர்களை வெளியேற்றியதற்கும் என்ன வேறுபாடு?

வன்னியர்களை அவர் வெளியேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பல நூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவ்வாறே, தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத மக்களும் பல நூறு ஆண்டுகளாக வாழ்கிறார்கள். தமிழகத்திற்கு என்றாவது விடியல் கிடைக்கும் போது இவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூற முடியுமா? அந்தக் கருத்தினை மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க முடியுமா?

சாதி, மதம், மொழி, இனம், நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் ஒரு இடத்தில் நீண்டகாலமாக வாழும் மக்களை வெளியேற்றக் கூறுவது மயிரிழை அளவும் ஏற்புடையது அல்ல.

ஆனாலும், வன்னியர்களைத் தவிர வேறு எவரும் திரு. திருமுருகன் காந்தி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு கூறாமல் மௌனமாக இருப்பது வியப்பளிக்கிறது.

jayakrishnan சொன்னது…

தமிழ் சாதியினர் நம் சாதிகளுக்குள் ஒற்றுமை கொண்டு வர முயற்சிப்போம் . உணர்ச்சி வசப்படாமல் அறிவு வசப்பட்டு செயல் படுவோம் . மருத்துவர். தமிழின போராளி .ராமதாசு . எழுச்சி தமிழர் . தொல். திருமாவளவன் . திரு. சீமான் போன்ற தமிழ் சாதி தலைவர்களை அவர்களின் சிறுசிறு குறைகளை பொருட்படுத்தாமல் ஆதரிப்போம் . அப்போதுதான் தமிழர்களில் தலைவர்கள் வளர்வார்கள் .

- க. ஜெயகிருஷ்ணன்

சண்முக பூபாலன் சொன்னது…

திருமுருகன் , நீங்கள் வரைமுறைக்கு மீறி தகவல்களை பரப்புகிறீர்கள் எங்கள் வரலாறு நாங்கள் சூடி கொள்கிறோம் , அதில் என்ன தவறு இந்த மண்ணை வளம் செய்த எம் பாட்டனும் பூட்டனும், இரத்தம் சிந்தினான் , வந்தேறிகள் ஆங்கிலேயனுக்கு ஜால்ல்ற போட்ட வான் எல்லாம் இன்று கபட நாடகம் போட்டு கொண்டு தமிழ் எங்கள் தாய் தமிழர் எங்கள் தொப்புள் கொடி என்கிறான் , யார் சொன்னது தமிழர் படுகொலை நடக்கும் போது அங்கு மாண்ட...வர்கள் எம் உறவுகள் பாயும் புலி பண்டார நாயக்காவின் வழிதோன்றல்கள் , எம் இனம் அழிந்த போது எங்கள் கிராமங்களில் போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் என பல நடந்தன உங்களை போன்ற விளம்பர வாசிகள் செய்திதாள்களில் காசு கொடுத்து போட்டு கொள்கிறீர்கள் , எம் மக்கள் போராட்டம் உமக்கு எப்படி தெரியும் , எங்கள் வீரம் மண்ணோடு தோன்றியது அதை எந்த கோணத்தில் எவன் விமர்சனம் செய்தலும் என் தாய் தடுத்தாலும் விடேன், எங்கள் இரத்தம் வியர்வை இந்த மண்ணை பொன்னாக்கியது , வந்தேறிகள்எங்கள் வளங்களை சுரண்டினர் , எம் பட்டங்களை துறந்தோம் திராவிடம் யன்று யமாற்றினார்கள் இன்று வந்தவன் போனவன் எல்லாம் எங்களை ஆயுதமாக பயன்படுத்தி கொண்டு 17 '௧௮, ௧௯ ௧௮ என்கிறான் , எங்கள் தோற்றம் வீரத்தின் பிறப்பிடம் உங்கள் வேலைகளைபாருங்கள் இதுதான் வந்தாரை வாழவைக்கும் நாடு மண்ணின் மைந்தர்களின் வீரம் எழுந்தால் தாங்காது நாங்கள் கடாரம் கொண்டான் வழிவந்தவர்கள் வேண்டாம் எங்களிடம் கபட நாடகங்கள் .

Anand சொன்னது…

//நீங்கள் சொன்ன சாதி பட்டப் பெயர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற வகையில் உள்ள சாதி பெருமைக்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

இந்த பட்டப் பெயர்களை உடைய மற்ற சாதியினர், எங்கள் பட்டப் பெயரை வன்னியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று உங்கள் கூற்றுக்கு எதிராக அவர்கள் சொல்லலாம் அல்லவா?


அதற்காகத்தான், குழப்பம் வராமல் இருக்க வன்னியகுலசத்ரியர் என்று பதிவு செய்யுமாறு அறிவுருத்தபடுகிறது.

KANTHANAAR சொன்னது…

உங்கள் சுய சாதி அபிமானத்திற்கான justification நான் ஏற்கிறேனோ இல்லையோ அங்கீகரிக்கிறேன்.. சிலர் அந்த justification ஏற்க மாட்டார்கள்... அது விசயமல்ல... ஆனால் இதே justification நீங்கள் அடிக்கடி பின்னூட்டமிடும் டோண்டு ராகவன் அவர்களுக்கு அளிக்கக் கோருகிறேன்....

Unknown சொன்னது…

நீங்கள் சத்ரியன் சரி அப்ப நாங்கள் எல்லாம் சூத்திரர்கள், அதாவது தேவடியா மகன் என்று சொல்கிறீர்களா. அருள்...

நீங்கள் சத்ரியன் என்று சொல்லும் பொழுது தமிழர் என்ற பதத்தை இழக்கிறீர்கள். இதே தமிழர்களாக பிறந்தவர்களை சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லி ஒதுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் மீது மலத்தை அள்ளி பூசுகிறீர்கள். சத்ரியன் என்ற மலம் உங்களுக்கு உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் சூத்திரன் என்பவர்களுக்கு அது அசிங்கமே..

ஒருவன் சத்ரியன் எனச் சொல்லும் பொழுது என்னை தேவடியா மகன் என்று கூப்பிடுவதாகவே எடுத்துக்கொள்வேன்.. எனக்கு முன்னால் வந்து சத்ரியன் என்று கூறுபவனை பிஞ்ச செறுப்பை மலத்தில் முக்கி அடிப்பேன்..

அருள் சொன்னது…

Unknown சொன்னது…

""எனக்கு முன்னால் வந்து சத்ரியன் என்று கூறுபவனை ""

Unknown என்று பெயரில்லாமல், முகமோ, முகவரியோ இல்லாமல் இருக்கும் உங்களுக்கு முன்னால் ஒருவர் எப்படி வரமுடியும்?

தலைமறைவாக இருப்பவர்கள் தமக்குத்தாமே வீரவசனம் பேசுவதைக் கண்டு வியப்பதற்கு எதுவுமில்லை.

அருள் சொன்னது…

Unknown கூறியது...

// //நீங்கள் சத்ரியன் என்று சொல்லும் பொழுது தமிழர் என்ற பதத்தை இழக்கிறீர்கள்// //

தமிழன் என்ற பதத்தைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. பின்னர் பேசலாம்.