Pages

புதன், அக்டோபர் 16, 2013

இறை நம்பிக்கையை இழிவுபடுத்தலாமா? மனுஷ்யபுத்திரனின் மதவெறிக் கொடூரம்!

மனுஷ்யபுத்திரன் என்கிற சாதிவெறியர் நடத்தும் பத்திரிகை உயிர்மை. அந்த பத்திரிகையின் 'உயிரோசை' இணைய பக்கத்தில் மிக மோசமான மதவெறிபிடித்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

"ஆணுறுப்பின் நூதன அமைப்பு - உயிர்மை புரட்சி!"

உயிர்மை - 'உயிரோசை' இணைய தளத்தில் "நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு மற்றும் கற்பின் வரலாறு" (இங்கே காண்க) என்கிற ஒரு ஆபாசக் கட்டுரை வெளியாகியுள்ளது. 'கள்ளக்காதலால் துணைவியின் பெண்குறிக்குள் சென்ற அந்நிய ஆணின் விந்துவை வெளியேற்றும் வகையில் மனித ஆணுறுப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது' என்கிற மிகப்பெரிய கண்டுபிடிப்பு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்தோல் நீக்கிய உறுப்பு, அதாவது சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பு 'நீண்ட நேரம் அதிக விசையூக்கத்துடன்' உடலுறவில் ஈடுபட ஏற்றதாகவும், 'திறனுறுதி மிக்கது' என்றும் கூறப்பட்டுள்ளது.

- இப்படியாக சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பு மேலானது என்று பேசப்படும் தகவலில் எந்த குற்றமும் காண முடியாது. அதற்கு ஆதாரங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அல்லது அப்படி ஒரு நம்பிக்கையை யாரேனும் கொண்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை.

(உண்மையில் அறிவியல் ரீதியில் பார்த்தோமானால், சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பானது ஓரளவுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினைத் தடுக்கும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு சுன்னத் செய்வதும் ஒரு தீர்வாக ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு முன்வைக்கிறது: Male circumcision programmes as part of HIV prevention)

எனவே, ஆணுறுப்பின் வடிவமைப்பு கள்ளக்காதலை சமாளிப்பதற்கா? அல்லது முன்தோல் நீக்கிய ஆணுறுப்பு மேலானதா? - என்றெல்லாம் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுப்பும் அதி முக்கியமான விவாதத்தில் நாம் குறை காணவில்லை.

மனுஷ்ய புத்திரனின் மதவெறி

இந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் மிக விஷமமான கருத்தை உயிர்மை கூறியுள்ளது.

"சுன்னத்தைக் கொண்டாடுகிறேன் என்று ராமசேனையினர் விசனிக்க வேண்டாம். முன்தோலை விடுங்கள், உங்களுக்குத்தான் வால் உள்ளதே!" என்கிறது உயிர்மை!

ராமசேனை என்பது ராமனின் படை என்பதாகும். ராமாயணத்தில் உள்ள இந்த படையில் அனுமனின் படை எனப்படும் குரங்கு படையினர் மிகுதியாக இருந்ததால் அது வானர சேனை என்றும் கூறப்பட்டது. (ராமசேனை என்கிற பெயரில் கர்நாடக மாநிலத்தில் சிலர் காதலர் தின எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்).

மனுஷ்யபுத்திரனின் உயிர்மைக் கட்டுரையானது, ஆண்குறி, சுன்னத் என்றெல்லாம் எழுதிவிட்டு - ராமசேனையினரை 'உங்களுக்குத்தான் வால் உள்ளதே' என்று கூறுவதன் மூலம் - ராமசேனையினர் ஆண்குறிக்கு பதிலாக வாலைப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரைக் கூறுகிறது.
தாய்லாந்து பாங்காக் அரண்மனையில் உள்ள இராமசேனை ஓவியம்
இந்துக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ள அனுமன், அதாவது ராமாயணத்தில் வரும் ராமசேனையின் தலைவன், ஒரு குரங்குதான். இப்படி இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள அனுமனையும் இந்துக்கள் வழிபடும் குரங்கையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்தி மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுதுவது நியாயம்தானா?

இந்துக்களின் இறைநம்பிக்கையுடன் தொடர்புடைய ஒரு இதிகாச சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'உங்களுக்கு ஆணுறுப்புக்கு பதில் வால் இருக்கிறது' என்று கூறுவது மதநம்பிக்கையை இழிவுபடுத்துவது ஆகாதா? 

சில சாதியினர் மீது, சில மதத்தினர் மீது மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை கும்பலுக்கும் அடக்கமுடியாத காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். ஆனால், அதனை இப்படி கேவலமான முறையில் வெளிப்படுத்தக் கூடாது.

மனுஷ்யபுத்திரனின் மதவெறியைக் கண்டிக்கிறேன்!
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள இராமசேனை சிலை
(குறிப்பு: மனுஷ்யபுத்திரன் சாதிவெறியர் என்று நாம் குறிப்பிடக் காரணம் இவரது மதப்பற்றாலோ சாதிப்பற்றாலோ அல்ல. மாறாக பிற்படுத்தப்பட்ட சாதிகளை வெறிபிடித்து எதிர்க்கும் சாதிவெறியர் இவர் என்பதால்! மனுஷ்யபுத்திரனை எந்த மதமும் தன்னுடன் சேர்க்கவே இல்லை. இந்துக்களை வெறிபிடித்து எதிர்க்கும் மதவெறியர் இவர் என்பதால் இவரை மதவெறியர் என்கிறோம்!)

மேலே உள்ள மனுஷ்யபுத்திரன் ஓவியம் அவரது முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

2 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

[[இந்துக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ள அனுமன், அதாவது ராமாயணத்தில் வரும் ராமசேனையின் தலைவன், ஒரு குரங்குதான். இப்படி இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள அனுமனையும் இந்துக்கள் வழிபடும் குரங்கையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்தி மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுதுவது நியாயம்தானா?]]

கட்டுரையில் உள்ள பெரிய தவறு: எல்லா இந்துக்களின் கடவுள் ராமனும் அல்ல! அனுமனும் அல்ல: சைவர்களுக்கு அல்லவே அல்ல!

சைவர்களுக்கு எப்படி இந்த இரண்டும் கடவுள்கள் ஆகும்! வைணவத்தில் நம்பிக்கை உள்ள இந்துக்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

எங்கள் குடும்பத்தில் ராமனும் கிடையாது; அனுமனும் கிடையாது! ஒரு படம் கூட சாமி அறையில் கிடையது!

ஏன் பாலாஜியும் கிடையாது; சனிக்கிழமை புரட்டாசி விரதம்-இதெல்லாம் கிடையவே கிடையாது!
365 நாளும் முட்டை உணவில் உண்டு!

பா.ஜ.க செய்த வேலை ராமரை ஒட்டு மத்த இந்துகடவுளாக ஆக்கியது ஒட்டு வேட்டையாடியது! அதே மாதிரி ஐயப்பனும் கிடையது!

புராணமே கேள்விக் குரியது; அப்படியிருக்க அதிலும் இந்த இடைச்செருகல்கள்! தேவைதானா?

நம்பி சொன்னது…

அந்த ஆள் ஒரு எழுத்து வியாபாரி...இப்போது paid writers (இது சரியாக வருமா? என்று தெரியவில்லை) அதிகமாக இணையத்தில் வர ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த ஜாதி சண்டையை தூண்டி விடுவதற்காக எழுது இந்த மதச் சண்டையை தூண்டி விடுவதற்காக எழுது என்று அந்தந்த அரசியல், ஜாதி , மத பிரமுகர்களிடம் காசு வாங்கி கொண்டு எழுத ஆரம்பிக்கின்றனர்.

எப்படி? பகுத்தறிவு பேசுபவர்களில் சிலர் ராசிக்கல் மோதிரம், வாஸ்து சாஸ்திரம் என்ற விளம்பரத்திற்கு எல்லாம் வயிறு வளர்க்க வேண்டிய நிர்பந்தித்தினால் கொள்கையை விட்டு தொலைக்காட்சி விளம்பரத்திற்கு வந்து பல் இளிக்கிறார்களோ? ரியல் எஸ்டேட் பிசினசில் வந்து பல் இளிக்கிறார்களோ? போலி மருத்துவத்துக்கு வந்து மக்களை ஏமாற்ற டீவியில் வந்து பல் இளிக்கிறார்களோ அது மாதிரி...

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரும் இப்படித்தானே குமுதத்தில் நித்தியனந்தா பையனைப் பற்றி ஒவராக புகழ்ந்து எழுதி தள்ளினார்.

அதே மாதிரி பெரியார் தாசன், வலம்புரி ஜான் என்ற பத்திரிகையாளர்கள் எல்லாம் எழுத்துக்களை வியாபரம் செய்ய மூடநம்பிக்கையை விதைக்க ஆரம்பித்தனர்.

Paid news என்றுபத்திரிகை துறையே பிராடுத் தனங்கள் பண்ணுவது வெட்ட வெளிச்சமாகிவிட்ட போது இதெல்லாம் எம்மாத்திரம்?

எல்லா நிருபர்களும் இணையத்தில் தானே சம்மணம் போட்டு இந்த தூண்டுதல்களில் இறங்கி காசு பார்க்கிறார்கள். பத்திரிகையில் வேலை பார்ப்பது என்பது ஊழியம் அந்த பத்திரிகை அந்த பத்திரிகை முதலாளிக்கு சொந்தம் அதை எப்படி? சொந்த விஷயத்துக்கு இவர்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்தலாம்.

பிடிக்காதவர்கள் எதிர்த்தால் அதை தூக்கி தன்னுடைய பத்திரிகையில் போட்டு அவமானப்படுத்துவது. பிடித்தவர்கள் என்றால் அது முரண்பாடாக புரியாமல் இருந்தாலும் காசு வாங்கியோ ஆதாயம் எதிர்பார்த்தோ பத்திரிகையில் போடுவது.. எல்லாம் வியாபார மயம் தானே..பத்திரிகை தர்மத்திற்கு எதிரானது தானே. இந்த தனிநபர்களின் சுயவிருப்பு வெறுப்புக்காகவா பத்திரிகையை மக்கள் காசு கொடுத்து வாங்கிப் படிப்பார்கள்.

''நீங்க நல்லா எழுதறீங்க அதே விஷயத்தை காசு தரோம் எழுதறீங்களா? என்றால் கசக்கவா செய்யும்?

அதன் வெளிப்பாடு தான் ''எதை படிக்க வேண்டும் என்ற ஞானம் இல்லை'' எதை எழுத வேண்டும் என்ற தெளிவு இல்லை'' இப்படி ஒட்டு மொத்த சமுதாயத்தையே தான் மட்டும் மேலிருந்து வந்த மேதாவி மாதிரி தெரிவிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறது.

எங்கேயாவது அந்தாளுக்கு சபை நாகரீகம் தெரிகிறதா அடுத்தவர் கருத்துக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிகிறதா?

இந்தாளு பேசறதை மட்டுமே கேட்கணும்! என்று அடுத்தவர் பொறுமையாக இருந்து அவர்கள் தரப்பு கருத்தை நியாயத்தை சொல்லும் போது கூட இடைமறிக்கின்ற ஆளாக, மூர்க்க ஆளாக, தன் கருத்தில் உள்ள மாபெரும் தவறை மறைக்க கூடிய ஆளாக இருந்து கொண்டு வருகிறார் என்பது ஊரறிந்த உண்மையாகிவிட்டது.

இப்போது இந்த நபர் வந்தாலே வீட்டில் உள்ளவர்கள், பெண்கள் டீவி சேனலை மாற்றுகிறார்கள். அவ்வளவு வெறுப்பு வருகிறது பேசும் போது.

பின்னே எல்லோரையும் முட்டாள் என்று சொல்பவரை யார்? விரும்புவார்கள்?

ஊனம் உடலில் தான் வரும் என்பதில்லை மனதிலும் வரும் அது இந்த நபருக்கு அதிகம் உண்டு.