Pages

புதன், செப்டம்பர் 18, 2013

மகளின் காதலை எதிர்ப்பது மனித இயற்கை: முற்போக்கு முகமூடியைக் கிழிக்கும் ஆய்வறிக்கை!

மருத்துவர் இராமதாசு அவர்களால்தான் தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது என்கிற கட்டுக்கதையை நொறுக்கும் விதமாக - "மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது என்பது மனித இயற்கை" எனும் ஆய்வு முடிவினை இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ளன.

முற்போக்கு வேடதாரிக் கூட்டத்தின் பித்தலாட்டம்.

தமிழ்நாட்டில் 'பெண்களின் காதலுக்கு' எதிர்ப்புதெரிவிக்கும் கலாச்சாரத்தை வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்கள்தான் மாமல்லபுரத்தில் தொடங்கி வைத்தார். தர்மபுரி நிகழ்வுக்கு பின்னர் அதனை மருத்துவர் இராமதாசு அவர்கள்தான் ஊர் ஊராக கூட்டம் நடத்தி 'காதலுக்கு எதிர்ப்பை' உருவாக்கினார் - என்று முற்போக்கு வேடாதாரிக் கூட்டம் தமிழ்நாட்டில் பினாத்திக்கொண்டு திரிகின்றனர்.
தொலைக்காட்சி, பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் இந்த முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மாறிமாறி ஒப்பாரிவைத்து கத்திக் கதறினர். மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன், பெரியாரிய இயக்கம், இடதுசாரிகள், தமிழ்தேசியர்கள் எனப் பலரும் 'சாதிக்காக காதலை எதிர்க்கிறார்களே' என்கிற போர்வையில் 'வன்னியர்களைத் தாறுமாறாக' பேசினர்.

அதிலும் ஒருபடி மேலே போய், 'உலகில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்குமே மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது இல்லை. குறிப்பாக மேலை நாடுகளில் காதலுக்கு எதிர்ப்பே இல்லை' என கட்டுக்கதைகளைக் கட்டினர் முற்போக்கு வேடதாரிகள். ஆனால், மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது என்பது மனிதனின் பரிணாமத்தில் உள்ள இயல்பான செயல்தான் என்றும், இது உலக நடைமுறை என்றும், இதுதான் பெற்றோரின் இயற்கை என்று அறிவியல் ஆய்வுகள் இப்போது நிரூபித்துள்ளன.

"மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது மனித இயற்கை"

இளம்பெண்கள் 'தான் தேர்வு செய்யும் காதலர் தனக்கு பொருத்தமானவர்தான்' என் நம்புகின்றனர். ஆனால், பெற்றோர்கள் அதனை நம்புவது இல்லை. இந்த முரண்பாடு மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஆழமாக பதிந்துள்ள ஒரு தன்னிச்சையான இயற்கை செயல் எனக் கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் மற்றும் நெதர்லாந்தின் Groningen பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

(The belief stems from a deep evolutionary instinct to see her settle with someone who will look after her and provide for her every need. The research, conducted by British and Dutch scientists, suggests that parents are pre-programmed to make sure their children end up with love, support and money.)

இளம்பெண்கள் காதலனை தேர்வு செய்யும்போது உடல் அழகு, மணம், நகைச்சுவை உணர்வு போன்றவற்றையே முக்கியமாகக் கருதுகின்றனர். 


ஆனால், பெற்றோரோ, காதலனாக வருகிறவரின் சமுதாய வகுப்பு, குடும்பப் பின்னணி, இனம், கல்வித்தகுதி ஆகியவற்றை முதன்மையாக நினைக்கின்றனர். அதாவது மகள் விரும்புகிறவனை விட இன்னும் தகுதியான, பொறுப்பான கணவன் அவளுக்கு வரவேண்டும் என்பதே பெற்றோரின் இயல்பான இயற்கை மனநிலை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

(Parents also show a stronger preference than their offspring for attributes such as social class, family background, ethnic background and educational level. Daughters meanwhile show a fondness for qualities such as physical attractiveness, smell, sense of humour and creativity.)
பெற்றோர் அல்லது சாதியின் குற்றமல்ல - இது இயற்கை

பெற்றோர் தனது மகளுக்கு 'அவளை நன்றாக வைத்துக்கொள்ளும் பொறுப்புள்ள கணவன்' வேண்டும் என்று நினைப்பதும், 'கணவன் அழகாகவும் பிடித்தவனாகவும் இருந்தாலும் போதும் - அவனுக்கு இருக்கும் குறைகளை தனது பெற்றோரின் ஆதரவை வைத்து சரி செய்துகொள்ளலாம்' என மகள்கள் நினைப்பதும் - பெற்றோரின் சொத்தின், வளத்தின் மீதுள்ள போட்டியின் காரணத்தால் பரிணாம ரீதியாக அமைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆக, பெற்றோர் தனது மகளின் காதலை தன்னிச்சையாகவே மறுப்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியிலேயே இருக்கிறது. மனித இனம் அப்படித்தான் உருவாகியுள்ளது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். 

எனவே, இதில் அரசியல்வாதிகளின் குற்றம், சாதியின் குற்றம் என்றேல்லாம் கூறுவதும் போலிப்பிரச்சாரம் செய்வதும் முற்போக்கு வேடதாரிகளின் தனிப்பட்ட சாதிவெறியே தவற வேறெதுவும் இல்லை.

இதுகுறித்த பத்திரிகை செய்திகள் இதோ:

Daily Mail: Why parents will never approve of your partner: They instinctively want someone who will tend to their daughter's every need

The Telegraph: Sorry daughters, your parents will never approve of your partner

1 கருத்து:

Maasianna சொன்னது…

whatever you said some fools are not accepet that