Pages

செவ்வாய், மார்ச் 15, 2016

ஊடகம், அரசியலில் சாதி வெறியர்கள்: தமிழ்நாட்டின் சாபக்கேடு!

சாதிக் கலவரங்கள், சாதி வன்முறைகள் தமிழ்நாட்டில் எந்த மூலையில், எதற்காக நடந்தாலும் - அது குறித்த அவதூறுகள் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மீது மட்டுமே வீசப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மீதும், மருத்துவர் அய்யா அவர்கள் மீதும் பழி சுமத்துவோர் அத்தனை பேரின் மனதிலும் இருப்பது - அவர்களின் சாதிவெறி மட்டுமே! இதில் மருத்துவர் அய்யா அவர்களைப் பின்பற்றும் நண்பர்கள் யாருக்கும் ஒரு துளிக்கூட சந்தேகம் வேண்டாம்.
பத்திரிகையாளர்களாக, ஊடகவியலாளர்களாக, நடுநிலை வேடதாரிகளாக, முற்போக்கு கும்பலாக நாடகம் போடும் அத்தனைப் பேரின் மனதிலும் சாதிவெறி மட்டுமே கோலோச்சுகிறது. அதனால்தான் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்கள் மீது, வெறிகொண்ட நாய் போல பாய்ந்து விழுகின்றனர்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் சமூகநீதிச் சாதனை மகத்தானது. அந்த சமூகநீதிச் சாதனை மீதுள்ள கோபத்தால்தான் இவர்கள் புழுதிவாரித் தூற்றுகிறார்கள்!

தமிழ்நாட்டின் சாதி அரசியல் பின்னணி

ஆங்கிலேய ஆட்சியிலும் அதற்கு பின்னால் வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் மிகச்சில உயர் சாதியினரே அதிகாரத்தின் எல்லா இடத்திலும் கோலோச்சினர். ஆட்சி அதிகாரம், பணம், நிருவாகம் என அனைத்திலும் இந்த மிகச்சில சாதிகளே நாட்டின் வளங்களை கைப்பற்றினர். இன்றுவரை இவர்களின் கைதான் எல்லாவற்றிலும் மேலோங்கி இருக்கிறது.

இன்னொரு பக்கம் அண்ணல் அம்பேத்கரின் முயற்சியால், இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) அவர்களுக்கான விகிதாச்சார பங்கினைப் பெற்றனர். கடந்த 69 ஆண்டுகளில் இவர்கள் கணிசமாக எல்லா இடங்களிலும் இடம்பிடித்துள்ளனர் (அது நியாயமானதும் கூட). இவ்வாறு, அதிகார மட்டத்திலும் ஊடகங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உரிய இடத்தை அடைந்துள்ளனர்.

ஆனால், இப்படி விகிதாச்சார அளவில் உரிய இடத்தை அடையாதவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC). அதிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC). அதிகார மட்டத்திலும் ஊடகங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களின் பங்களிப்பு மிகக் குறைவு. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுத்தமாக இல்லை.

இவ்வாறு, அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முற்போக்கு மற்றும் நடுநிலை வேடம் போடுகிறவர்கள் யார் என்று பார்த்தால் - அதில் முன்னேறிய சாதியினரே மிக அதிகமாக உள்ளனர். தாழ்த்தப்பட்டோரும் கணிசமாக இடம் பிடித்துள்ளனர். 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக முன்னேறிய சாதியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் தமிழ்நாட்டின் உண்மையாக அரசியல் சூழல் ஆகும்.

பொதுக் கருத்தை வடிவமைக்கும் ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் இல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சுத்தமாக இல்லை. இந்தப் பின்னணியில்தான் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை பார்க்க வேண்டும்.

மருத்துவர் அய்யாவின் சாதனை: ஆதிக்க கும்பலின் வயிற்றெரிச்சல்!

தமிழ்நாட்டில் உண்மையாக இடஒதுக்கீடு தேவைப்படும் பிரிவாக இருப்பவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் (MBC). தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 1927 ஆம் ஆண்டில் வந்தது. பின்னர் 1947 ஆம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இரண்டிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குதான் உண்மையாக இடஒதுக்கீடு தேவை என 1970 ஆம் ஆண்டில் சட்டநாதன் குழுவும், 1985 ஆம் ஆண்டில் அம்பாசங்கர் குழுவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனை கருணாநிதியும் எம்ஜிஆரும் ஏற்கவில்லை.

இந்நிலையில், மருத்துவர் அய்யா அவர்கள்தான் மாபெரும் தியாகம் செய்து 1989 ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார்.
அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 1993 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், கல்வி இடங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. இதனை கோரிக்கையாக வைத்து அரசாங்கத்தின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் (CMP) புகுத்தியது. பின்னர் தொடர் போராட்டங்களை நடத்தி, 2008 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு OBC இடஒதுக்கீட்டை சாதித்தார் மருத்துவர் அய்யா. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்கு போனபோது, அங்கும் வாதாடி வெற்றி பெற்றது பா.ம.க.

இவ்வாறாக தமிழ்நாட்டில் MBC இடஒதுக்கீடு. இந்தியாவில் OBC இடஒதுக்கீடு என்பது மருத்துவர் அய்யா அவர்கள் செய்த மாபெரும் சாதனை ஆகும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக முன்னேறிய சாதியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் இருப்பதால், அவர்களால் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி சாதனையை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் மேற்கொள்ளும் நச்சுப் பிரச்சாரத்துக்கான உண்மைக் காரணம் இதுதான்.

ஊடகங்களின் சாதிவெறிப் பின்னணி

இந்தியாவின் ஊடகங்களில் 71% உயர் சாதியினரே ஆக்கிரமித்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய மக்கள் தொகையில் பாதியளவுக்கு மேலாக இருக்கும் OBC பிரிவினரின் பங்கு ஊடகங்களில் வெறும் 4% மட்டுமே. (Upper castes dominate media: Survey)

தமிழ்நாட்டின் நிலை இதை விட மேலானது அல்ல. இங்கும் ஊடகங்களின் உயர் பதவிகள் அனைத்திலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கணிசமான அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஊடகங்களில் இடம்பிடித்துள்ளனர்.  MBC பிரிவினர் தமிழக ஊடகங்களில் சுத்தமாக இல்லை.
பல பிரிவினராக மக்கள் வசிக்கும் மேலை நாடுகளில், ஒவ்வொரு பிரிவினரும் ஊடகங்களில் எத்தனை சதவீதம் இடம்பெற்றுள்ளனர் என்பதை அவ்வப்போது அறிவிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரே ஒரு முறைக்கூட - ஊடகங்களில் BC, MBC, SC, ST பிரிவினரின் விகிதாச்சார பங்களிப்பு எவ்வளவு என்று ஊடகங்கள் தகவலை வெளியிட்டதே இல்லை. (அப்படி வெளியிட்டால், இவர்களின் செய்தியின் பின்னணி அம்பலமாகிப்போகும்)

கட்சிகளின் சாதிவெறிப் பின்னணி

இந்தியக் கட்சிகள் அனைத்தும் மேல்சாதி ஆதிக்கத்தில் உள்ள கட்சிகள்தான். பாஜகவில் 100% , காங்கிரசுக் கட்சியில் 68%, சிபிஎம் கட்சியில் 81%, சிபிஐ கட்சியில் 78% - உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். (இருப்பதிலேயே மிக மோசமான சாதிவெறிக்கட்சி சி.பி.எம். அதன் உயர்மட்ட நிருவாகக் குழுவான பொலிட்பீரோவில் ஒரே ஒரு தலித்தோ, பிற்படுத்தப்பட்டவரோ 52 ஆண்டுகளாக இல்லை) (Diversity deficit across apex bodies of parties)
தமிழ்நாட்டிலும் இதுதான் நிலை. கட்சிகளின் உயர்பதவிகள் அனைத்திலும் ஒருசில சாதியினரே ஆகிக்கம் செலுத்தும் நிலையே தமிழக கட்சிகளில் உள்ளது. இங்கும் கூட உயர்சாதியினரே பெரும்பாலான கட்சிகளை ஆக்கிரமித்துள்ளனர். நடுநிலை வேடதாரிகளாக, முற்போக்கு கும்பலாக நாடகம் போடுவோர் பெரும்பாலானோர் உயர் சாதியினரே!

சாதி வெறியர்களின் அவதூறுகளுக்கு காரணம் இதுதான்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக முன்னேறிய சாதியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் இருப்பதால், மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி சாதனையை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. 

அரசியல் அரங்கிலும், ஊடகங்களிலும் முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கணிசமாக அவற்றில் இடம் பிடித்துள்ளதாலும் - மருத்துவர் அய்யா அவர்கள் மீது இருதரப்பும் சேர்ந்து அவதூறு பரப்புகிறார்கள். ஊடகங்களிலும் அரசியல் அதிகாரத்திலும் BC, MBC பிரிவினர் மக்கள் தொகை விகிதாச்சார அளவில் பங்கெடுக்காத வரை, இதுபோன்ற அபாண்ட அவதூறு பிரச்சாரங்கள் கிளம்புவது இயல்புதான்.

எனவே, மருத்துவர் அய்யா அவர்களின் தொண்டர்கள் யாரும் - சாதி வெறியர்களின் அவதூறுகளைக் கண்டு கலக்கம் அடைய வேண்டாம். நாம் நீதியின் பக்கம் நிற்கிறோம். நம்மிடமே நியாயம் இருக்கிறது. ஆனால், நீதியை நிலை நாட்ட அதிகாரம் வேண்டும். அதற்காக பாடுபடுவோம்.

குறிப்பு: சராசரி உயர்சாதி மக்களோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களோ, சக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான மன நிலையில் இல்லை. மாறாக, ஊடகம் மற்றும் அரசியல் அரங்கில் உள்ள கும்பல் மட்டுமே சாதிவெறியுடன் அலைகிறது!

கருத்துகள் இல்லை: