Pages

திங்கள், நவம்பர் 26, 2012

ஜெனீவா பயணம்ஐநா மனித உரிமைக் குழு: சில நெகிழவைக்கும் அனுபவங்கள்!

ஐநா மனித உரிமை குழுவில் நடைபெற்ற இலங்கை மீதான காலமுறை விசாரணையை நேரில் காண நான் ஜெனீவா நகருக்கு சென்றிருந்தேன் (நவம்பர் 2012). அதில் சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஐநாவில் தமிழர் குரலும் பசுமைத் தாயகமும்

இலங்கையில் போர் உச்சத்தை எட்டிய 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பலரும் அதற்கு எதிரான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்தனர் (அதில் படுதோல்வி அடைந்தனர் என்பது வேறு விடயம்). அப்போது, இது தொடர்பாக ஐநா மனித உரிமைக் குழுவில் முறையிட வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கூறினார்கள். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. எம்.ஜி.தேவசகாயம், பியுசிஎல் அமைப்பின் திரு. சுரேஷ் ஆகியோருடன் இணைந்து இதற்காக முயற்சித்தோம். பிப்ரவரி மாதத்தில் ஐநா மனித உரிமைக் குழுவின் பத்தாவதுக் கூட்டத்தில் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்தோம். (இங்கே காண்க: A Crying Need To Protect The Rights Of Civilians In Northern Sri Lanka)  இலங்கை மீதான ஐநா மனித உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம், பாதுகாக்கும் பொறுப்புடைமை விதியை செயலாக்குதல், இலங்கையில் ஐநா மனித உரிமைக் கண்காணிப்பு, இனப்படுகொலைத் தடுப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த அறிக்கை ஐநா மனித உரிமைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக விநியோகிக்கப்பட்டது.

அதுதான் ஐநா மனித உரிமைக் குழுவில் தமிழர்கள் சார்பில் எடுக்கப்பட்ட முதல் முயற்சியாக இருந்தது. அடுத்து வந்த மே மாதத்தில் இலங்கை மீதான சிறப்புக்கூட்டம் ஐநா மனித உரிமைக் குழுவில் கூட்டப்பட்டது (அதிலும் தமிழர்களுக்கு தோல்விதான்). அப்போதும் பசுமைத் தாயகம் சார்பில் அறிக்கை சமர்ப்பித்தோம். எனினும், பொருட்செலவின் காரணமாக நேரில் பங்கேற்க இயலவில்லை.

எனினும், மனித உரிமைகள் தொடர்பில் ஆர்வமுள்ள கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் இக்கூட்டங்களில் பங்கேற்க நாங்கள் வழி செய்தோம். ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க அனுமதி பெற்றுத் தந்தோம்.
ஐநா மனித உரிமைகள் குழு அரங்கில் திரு. கோ.க.மணி அவர்களுடன் நான்
தற்போது ஜெனீவா சென்றபோது அவர்கள் ஒரு முக்கிய விடத்தை பகிர்ந்து கொண்டனர். 'பசுமைத் தாயகம் அளித்த வாய்ப்பின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐநா மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கிய பின்னர்தான், பன்னாட்டு மனித உரிமைத் தொடர்பான ராஜதந்திர வட்டாரங்களுடன் நேரில் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் தொடர்பும் ஏற்பட்டது. படிப்படியான அந்த நல்லுறவின் காரணமாகவும், அமெரிக்காவில் இருந்த தொடர்புகள் மூலமும், அமெரிக்க வெளியுறவுத் துறையினை அனுகி, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 2012 மார்ச்சில் சாத்தியமாக்கினோம்' என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் பசுமைத் தாயகம் அமைப்புதான் இலங்கைத் தமிழர்களுக்கு ஜெனீவாவில் முதன்மையான வழியாக இருந்தது. ஆனால், ஜெனீவா கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றதன் விளைவாக, அவர்கள் அங்கு சகஜமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை இப்போது காண முடிந்தது. அரசு சார்பற்ற மனித உரிமை அமைப்புகள், ஐநா அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்களுடன் அவர்கள் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். 2012 மார்ச் தீர்மானத்தில் வெற்றியும் அடைந்தனர்.

உலகின் புகழ்பெற்ற சட்டப்பல்கலைக் கழகங்களில் பன்னாட்டுச் சட்டத்தை முதன்மைப் பாடமாக படித்துக் கொண்டிருக்கும் இளம் தமிழ் மாணவர்கள் இந்தப் பணியில் பகுதி நேரமாக ஈடுபட்டுள்ளனர். உலகின் பல மனித உரிமை அமைப்புகளுடன் அவர்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இனி பசுமைத் தாயகத்தின் மூலமாக ஐநா அவைக்குள் செல்ல வேண்டும் என்கிற தேவையும் இப்போது அவர்களுக்கு இல்லை. ஒரு நீண்ட மனித உரிமைப் பயணம் பசுமைத் தாயகத்தால் தொடங்கியது என்பது நெகிழ்ச்சியான விடயம்தானே.

திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

சென்னையிலிருந்து ஜெனீவா செல்ல துபாய் வழியே பயணித்த போது, துபாய் வானூர்தி நிலையத்தில் திமுக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அவரது துணைவியாருடன் நின்றிருந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருது துபாய் சென்ற வானூர்தி தாமதமானதால், அவர் லண்டன் செல்ல வேண்டிய வானூர்தியைப் பிடிக்க முடியவில்லை. அடுத்த விமானத்திற்காக காத்திருப்பதாகக் கூறினார்.
லண்டன் நாடாளுமன்ற அரங்கில் திரு. மு.க. ஸ்டாலின், திரு. கோ.க. மணி ஆகியோருடன் நான்.
அவர் லண்டனில் கலந்துகொள்ள உள்ள நிகழ்வில் நானும் கலந்துகொள்வேன் என்று கூறினேன். அவர் எனது பயணம் குறித்தும், திரு கோ.க.மணி அவர்களின் பயணம் குறித்தும் விசாரித்தார். பின்னர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் அங்கு வந்த போது "இலங்கை மீதான காலமுறை விசாரணையில் பங்கேற்க செல்கின்றனர்" என்று என்னை அவரே அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன் பின்னர் ஒரு வார காலம் கழித்து, லண்டன் நாடாளுமன்ற அரங்கில் திரு. கோ.க.மணி அவர்களை நேரில் சந்தித்த போது, 'துபாய் விமான நிலையத்தில் அருளைப் பார்த்தேன், நீங்கள் இங்கே வருவீர்கள் என்று கூறினார்' என்று திரு. கோ.க.மணி அவர்களிடம் திரு. ஸ்டாலின் கூறினார். ஒருமுறை வழியில் சந்தித்ததை இன்னொரு இடத்தில் ஞாபகமாகக் கூறுவது எல்லோராலும் முடியாது.

ஜெனீவாவில் ஒரு நெகிழ்ச்சி

ஜெனீவா நகருக்கு நான் சென்றடைந்த உடன், அங்கு சென்று சேர்ந்துவிட்ட தகவலை தமிழ்நாட்டில் உள்ள நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, செல்பேசி இணைப்பை வாங்குவதற்கு ஒரு கடைக்குச் சென்றேன்.

அங்கு 10 பிராங்க் (ரூ. 580) மதிப்பில் ஒரு செல்பேசிக்கான சிம் கார்டினை வாங்கினேன். அந்தக் கடையில் தமிழ் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. "இந்த 'சிம்' வேலைசெய்ய எவ்வளவு நேரம் ஆகும்?" என்று கேட்டதற்கு, அந்தக் கடைகாரர் "சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம்" என்று இலங்கைத் தமிழில் கூறினார்.

பின்னர், "பத்து பிரங்க் கட்டணத்தைக் கொண்டு எத்தனை நாட்கள் பேசலாம்?, இது போதுமா?" என்று நான் கேட்டேன். "நீங்கள் எத்தனை நாள் ஜெனீவாவில் இருப்பீர்கள்?" என்று கடைகாரர் கேட்டார். அதற்கு "இலங்கை மீதான் காலமுறை விசாரணைக்காக வந்துள்ளேன். நான்கு நாட்கள்தான் ஜெனீவாவில் இருப்பேன்" என்று கூறினேன்.
ஜெனீவா ஐநா அலுவலகம் முன்பு நான்
உடனே, என்னிடம் கொடுத்திருந்த சிம் கார்டினை அந்தக் கடைகாரர் திரும்ப வாங்கிக்கொண்டு, வேறொரு சிம் கார்டை எடுத்து அதனை கணினியில் செலுத்தி ஏதோ செய்தார். பின்னர் எனது கைப்பேசியை வாங்கி அதில் சிம் கார்டினை போட்டு - உடனடியாக நான் தமிழ்நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள வழிசெய்து தந்தார்.

அதுமட்டுமல்லாமல், நான் அந்த சிம் கார்டை வாங்க கொடுத்திருந்த பணம் 10 பிராங்கை (ரூ. 580) திருப்பிக் கொடுத்துவிட்டார். நான் "எதற்காக பணத்தை திருப்பிக் கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "நீங்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் பணம் வாங்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.

இந்தியாவின் இரட்டை நாக்கு

மிகமுக்கிய நிகழவான இலங்கை மீதான காலமுறை விசாரணை 1.11.2012 அன்று மனித உரிமை அவையில் நடந்தது. இதில் இலங்கை அரசின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க 'இலங்கை மனித உரிமையை மதிக்கும் நாடு' என மிகவும் நிட்டி முழக்கி பொய்யுரைத்தார். இதனை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை என்று உடனடியாக அறிய முடிந்தது.

இலங்கை மீதான விவாதத்தில் 98 நாடுகள் பேசினர். இதில் மிகச்சில நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளுமே இலங்கையைக் கண்டிக்கும் விதமாகவே பேசினர். இந்த நிகழ்வின் போது நேர்ந்த எதிர்பாராத மாற்றம் என்பது இந்தியாவின் நிலைபாடுதான்.  இலங்கைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 13 ஆவது சட்டத்திருத்தம், வடக்கில் தேர்தல், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை என பலவற்றைக் குறித்தும் சரமாரியாக இந்தியா கேள்வி எழுப்பியது. (இது குறித்த எனது பதிவு:ஜெனீவா ஐநா மனிதஉரிமை விசாரணையில் ஓர் அதிசயம்: இந்தியாவின் நம்பிக்கையளிக்கும் மாற்றம்!)

ஆனால், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை! அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்திய மீண்டும் பல்டியடித்துவிட்டது. நவம்பர் 1 அன்று பிரதானக் கூட்டத்தில் பேசிய விடங்களை இந்தியாவின் சார்பில் இறுதி அறிக்கையில் சேர்க்காமல் விட்டுவிட்டது இந்தியா. இதனால், நவம்பர் 5 அன்று இலங்கை மீதான அறிக்கையை ஏற்கும் கூட்டத்தில் 'இந்தியா முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதை' பல நாடுகள் மறைமுகமாக சுட்டிக்காட்டி கண்டித்தன.


இனி என்ன?

இனிவரும் நாட்களில், ஐநா மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிரான விவாதங்கள் சூடுபிடிக்கும். குறிப்பாக 2013 பிப்ரவரி, மார்ச்சில் நடைபெரும் மனித உரிமைக் குழுவின் 22 ஆம் கூட்டத்தில் மிகக் கடுமையான நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும். அந்த நேரத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்த வேண்டும்.

அதற்கு தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதுதான் உடனடித் தேவை.

ஞாயிறு, நவம்பர் 25, 2012


தருமபுரி கலவரம்: இந்தியா டுடேவின் பச்சைப் பொய்கள்!

தருமபுரி கலவரம் தொடர்பாக "சாதி வெறியாட்டம்" என்கிற ஒரு கட்டுரையை இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது (பக்கம் 36 - 39:இந்தியா டுடே, டிசம்பர் 5, 2012 இதழ்)பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை நெறிகள் அதில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன

'துல்லியமற்ற, அடிப்படை ஆதாரமில்லாத, சீர்கெட்ட, தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய, உருக்குலைந்த செய்திகளை பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது' என்று இந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் வழிகாட்டல் நெறிகள் கூறுகின்றன (NORMS OF JOURNALISTIC CONDUCT).
ஆனால், இந்த உன்னதமான வழிகாட்டல் நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்டு அப்பட்டமான பொய்களையே கட்டுரையாக வெளியிட்டுள்ளது இந்தியா டுடே!

இந்தியா டுடேவின் பச்சைப் பொய்கள்

1. "தர்மபுரி செல்லன் கோட்டையைச் சேர்ந்த 21 வயது திவ்யாவும் நத்தம்காலனியைச் சேர்ந்த 23 வயது இளவரசனும் ரகசிய திருமணம் செய்துகோண்டு சேலம் டிஐஜியிடம் பாதுகாப்புக் கேட்டு தஞ்சம் அடைந்தனர்" என்கிறது இந்தியா டுடே

இளவரசனுக்கு 23 வயது என்பது அப்பட்டமான பொய். இளவரனின் வயது 19 மட்டுமே. இதுகுறித்து காவல்துறையினரே நீதிமன்றத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று தி இந்து நாளேடு கூறியுள்ளது.

"Police sources said that Ilavarasan was only 19 years old, below the marriageable age of 21."

நடந்திருப்பது சட்டப்படியான திருமணமே அல்ல. (இதுகுறித்து விரிவாக இங்கே காண்க: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!). ஆனாலும், இளவரசனின் வயது 23 என்று எதற்காக பொய்யாகக் கட்டமைக்கிறது இந்தியா டுடே?

2. "திவ்யாவின் தந்தை நாகராஜனை அவரது உறவினர்களே 'தலித் சம்மந்தி' என்று குத்திக்காட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நாகராஜன் நவம்பர் 7ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்" என்கிறது இந்தியா டுடே

ஆனால், "பெண்ணின் தந்தை நாகராஜ் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையின் போது, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் (இன்னொரு தரப்பு சாதியைச் சேர்ந்தவர்), பெண்ணின் தந்தையை இழிவுபடுத்தினார், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்" என்பது தான் உண்மையாகும். இதற்காக அந்த காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, "வன்முறைக்கு காரணமாகக் கூறப்படும் உதவி ஆய்வாளர் பெருமாளை விசாரணை செய்ய வேண்டும் என உயிரிழந்த நாகராஜின் மனைவி தேன்மொழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணை நடத்த காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது." என்பதுதான் உண்மை ஆகும். (காண்க: தருமபுரி வன்முறைச் சம்பவம்: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ. இடைநீக்கம்)

ஆனாலும், நாகராஜன் அவரது உறவினர்கள் குத்திக்காட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் என்று எதற்காக பொய்யாகக் கட்டமைக்கிறது இந்தியா டுடே?

3. "சுமார் 300 வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன" என்கிறது இந்தியா டுடே

தருமபுரி கலவரத்தை பார்வையிட்ட ஆதி திராவிடர் தேசிய ஆணைக்குழுவின் தலைவர் புனியா தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கையில் முழுதாக சேதமடைந்த வீடுகள் 40, பகுதி சேதமடைந்த வீடுகள் 175 என்று கூறப்பட்டுள்ளது. 

எரிக்கப்பட்ட வீடுகளின் உண்மை எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். ஆனாலும், 300 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்று எதற்காக பொய்யாகக் கட்டமைக்கிறது இந்தியா டுடே?

4. "இந்தப் பிரச்சனை தற்போது வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் என்பதைத் தாண்டி வன்னியர்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டதாகவும் கூறுகிறார் ராமதாஸ்" என்கிறது இந்தியா டுடே.

அப்படி ஒரு கருத்தை மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை. ஆனாலும், இந்தியா டுடே இதழ் தனது அரிப்பைத் தீர்த்துக்கொள்வதற்காக தனது மன விருப்பத்தை, மன விகாரத்தை எழுதியுள்ளது.
'தமிழ்நாட்டின் வன்னியரல்லாத எல்லா சாதியினரும் வன்னியருக்கு எதிராகத் திரும்பவேண்டும்' என்கிற உள்ளார்ந்த வெறி ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் மனதில் புதைந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் "வன்னியர்களுக்கும் மற்ற சாதிக்காரர்களுக்கும் பிரச்சனை" என்று இந்தியா டுடேவில் வெளிவந்துள்ளது.
தொடர்புடைய சுட்டிகள்: 


திங்கள், நவம்பர் 19, 2012

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!

தருமபுரியில் நடந்த கலவரம், தீவைப்பு என்பவை எந்த ஒரு நாகரீக சமுதாயமும் ஏற்க முடியாத வன்முறை நிகழ்வாகும். அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை மனித பண்முள்ள எந்த ஒரு மனிதனும் நியாயப்படுத்த முடியாது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். இக்கலவரத்தோடு தொடர்புடைய தற்கொலை நிகழ்வால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். தற்கொலைக்குத் தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மிக முதன்மையாக, இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் - தருமபுரி கலவரம் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு மாறான உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறே, இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியையும் அடையாம் காண வேண்டியுள்ளது.

தருமபுரி கலவரமும் ஆதிக்கச் சாதி வெறியும்!

தருமபுரி கலவரம் ஆதிக்க சாதிக் கூட்டத்தினருக்கு ஒரு கொண்டாட்டமான பிரச்சார வாய்ப்பாக மாறியிருப்பதை இதுதொடர்பான ஊடகச் செய்திகளும் சமூக ஊடகச் செய்திகளும் உறுதி செய்கின்றன.

தமிழ்நாட்டில் சுரண்டுகிறவர்கள் சுரண்டப்படுகிறவர்கள் என்று தனிமனிதர்கள் யாரும் இல்லை. சுரண்டும் சாதிகள், சுரண்டப்படுகிற சாதிகள் என்கிற பிரிவினைதான் இருக்கிறது. தனிமனிதர்களின் மேம்பாட்ட நிலைக்கும் பின்தங்கிய நிலைக்கும் சாதிதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதில் வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சுரண்டப்படுகிற சாதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள். சுரண்டும் சாதிகளாக இல்லை.

தருமபுரி கலவரம் தொடர்பான செய்திகளில் பலர் "வன்னிய ஆதிக்க சாதி" என்கிற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். ஆதிக்கம் என்றால் "பிறரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை; அதிகாரம் மேலோங்கிய நிலை" என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.

அதிகாரம் மேலோங்கிய நிலை என்பது - அரசியல் அதிகாரம், நீதித்துறை, அரசுத்துறை, காவல்துறை போன்ற வல்லமை மிக்க பதவிகளில் இடம்பெறுதல், பொருளாதார நிலையில் மேம்பட்டிருத்தல், உயர்தரமான கல்வியைப் பெற்றிருத்தல், ஊடகத் துறையில் ஆதிக்கம் என பலவற்றையும் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆதிகாரம் மேலோங்கிய நிலை என்பதல்ல, ஒரு சாதி "அதிகாரச் சமநிலை" என்பதை அடைய வேண்டுமானால் கூட மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடங்களை எல்லா நிலைகளிலும் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலையை வன்னியர்களும் அடையவில்லை. தாழ்த்தப்பட்டோரும் அடையவில்லை. இந்நிலையில் வன்னியர்களை ஆதிக்க சாதியினர் என்று குறிப்பிடும் "ஆதிக்க சாதிவெறி" கூட்டத்தினரை என்னவென்று சொல்வது?

தருமபுரிக் கலவரம் தொடர்பான வன்னியர்கள் மீதானக் குற்றச்சாட்டுகளில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று தாழ்த்தப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுவது. இதற்கு ஒரு தார்மீக வலிமை இருக்கிறது. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது.

ஆனால், உண்மையான ஆதிக்க கூட்டத்தினர் - அதாவது அரசியல் அதிகாரம், நீதித்துறை, பத்திரிகை, அரசு நிருவாகம், பொருளாதார வலிமை என எல்லாவற்றிலும் தமது மக்கள்தொகை விழுக்காட்டை விட மிகக் கூடுதலாக அபகரித்துள்ள சிறுபான்மை சாதிக் கூட்டத்தினர் - தருமபுரி கலவரத்தைக் காரணம காட்டி வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கசப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் செய்கின்றனர்.

வன்னியர்களும் தாழ்த்தப்பட்டோரும் தமக்குள் மோதிக்கொண்டால் - உண்மையான ஆதிக்க சிறுபான்மை சாதிக் கூட்டத்தினருக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் என்கிற சதி இப்பிரச்சாரத்தின் பின்னால் உள்ளது. தத்தமது உரிமைக்காக வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோரும் போராடாதவரை  உண்மையான ஆதிக்க கூட்டத்தினருக்கு கோண்டாட்டம்தானே!

நாளைக்கே "தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும்" என்று ஒரு போராட்டத்தை வன்னியர்களும் தாழ்த்தப்பட்டோரும் தொடங்கினால் இந்த ஆதிக்கக் கூட்டத்தினர் அதற்கு எதிராக நிற்பார்கள்.

சாதிக் கலவரங்களால் வன்னியர்களுக்கும் கேடு

வன்னியர்கள் தொடர்புடைய சாதிக் கலவரம் எதுவாக இருந்தாலும், அவற்றால் வன்னியர்களுக்கு பெரும் கேடுதான் நேருகிறது.கலவரத்தில் தொடர்பில்லாத வன்னியர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பலகாலம் நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் இல்லை என அனுப்பப்படுகின்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் பெரும் பொருட்செலவு, அவமானம், குடும்பம் சீரழிதல் எனப் பலக்கேடுகளை அடைந்துவிடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் அருகருகே வாழும் வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

ஒட்டு மொத்தத்தில், ஏற்கனவே மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர்களை சாதி மோதல்கள் மேலும் மேலும் கீழே தள்ளுவனவாகவே அமைகின்றன. எனவே, சாதி மோதல்கள் தாழ்த்தப்பட்டாவர்களுக்கு எதிரானவை மட்டுமல்ல. அவை வன்னியர் சமூகத்தினருக்கும் எதிரானவைதான்.

தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்.

தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. 1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், - இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லப்பட வேண்டும்.

கட்டுக்கதை: 1. வன்னியர்களே கலவரம் செய்தனர். வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்.

உண்மை: தருமபுரி கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயடுக்கள் (13 பேர்), செட்டியார்கள் (7 பேர்), . மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இசைவேளாளர் (5 பேர்), பழங்குடியினத்தைச் சேர்ந்த குறும்பர்கள் (3 பேர்)ஆகியோரும் உள்ளனர்.

பல்வேறு சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், கைதுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதனை "வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்" என்று வருணிப்பது வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை.

கட்டுக்கதை: 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர்.

உண்மை: பாமகவினர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டனர் என்பது அயோக்கியத் தனமான் குற்றச்சாட்டு. தற்கொலைச் செய்துகொண்ட நாகராஜன், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியைச் சேர்ந்தவர். இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எனப் பல கட்சியினரும் உள்ளனர்.

கைதானவர்களில் அதிக அளவில் 17 பேர் அதிமுகவினர். கைதானவர்களில் அதிமுக மட்டுமில்லாமல் தி.மு.க (16 பேர்), ம.தி.மு.க (5 பேர்), தமிழக விவசாயிகள் சங்கம் (12 பேர்), பா.ம.க (10 பேர்), தே.மு.தி.க (7 பேர்), கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். எனவே இதனை பா.ம.க நடத்திய தாக்குதல் எனக் கூறுவது சிலருடைய குறுகிய அரசியல் நோக்கமே.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாமகவினர். அப்படியிருக்கும் போது - ஏதோ பாமகதான் வன்முறைக்கு காரணம் என்று கூறுபது ஏன்? பாமக மட்டுமே வன்னியர்களுக்காகப் பேசுகிறது. அந்த ஒருகுரலையும் நசுக்கிவிட வேண்டும் என்கிற சதிதான் இதன் பின்னணி என்பதைத் தவிர இதில் வேறேதும் இல்லை.

கட்டுக்கதை: 3. நடந்த காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான்

உண்மை: இது ஒரு அப்பட்டமான பொய். நடந்திருப்பது சட்டவிரோதமான ஒரு குழந்தைத் திருமணம். ஏனெனில், திருமணம் செய்துகொண்ட இளவரசன் இன்னமும் சட்டபூர்வமான திருமண வயதான 21 ஐ எட்டவில்லை. அவருக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது.

இளவரசனின் பிறந்த தேதி 3.3.1993. அப்படியிருக்கும் போது, அவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக சிலரும், பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக உண்மை அறியும் குழுக்களும் கூறுகின்றன. ஒருவேளை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அது சட்டத்தை ஏமாற்றிய நிகழ்வாகும்.

இளவரசன் இன்னமும் 21 வயதை எட்டவில்லை. 
அவரது வயது 19 மட்டுமே என்பதற்கான ஆதாரம்  இதோ:

இளவரசனின் மாற்றுச் சான்றிதழ் - பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19)
இப்படி சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒருவருக்கு திருமணம் செய்வதை காவல்துறையினர் எப்படி அனுமதித்தனர்? இதற்கான பஞ்சாயத்துகளை அவர்கள் எப்படி முன்னின்று நடத்தினர்? என்பது வியப்பளிக்கிறது. (இது குறித்த எனது பதிவை இங்கே காண்க:தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?)

இளவரசனின் திருமணம் சட்ட விரோதமானது என்பதால், கலவரம் நியாயமானது என்று ஆகிவிடாது. சட்டவிரோதமான இந்தத் திருமணம் தடுக்கப்பட்டிருந்தால் இந்த கலவரம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லையே என்பதுதான் நமது கருத்து.

கட்டுக்கதை: 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

உண்மை: இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமானக் குற்றச்சாட்டு. தேமுதிகவில் உறுப்பினராக இருந்த நாகராஜன் ஒரு கவுரவமான குடிமகனாகவே இருந்திருக்கிறார். அவர் காவல் நிலையைத்தில் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளரால் தாறுமாறாக அவமானப் படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை அவரது மனைவியும் உறுதி செய்கிறார். இது தொடர்பான வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

கலவரத்திற்கு உண்மைக் காரணம் என்ன?

தருமபுரி கலவரம் என்பது இரு சாதிகளுக்கு இடையேயான கலவரமோ, இரு கட்சிகளுக்கு இடையேயான கலவரமோ அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத மக்களுக்கும் இடையே பகை உணர்ச்சி அங்கு வளர்ந்து வந்துள்ளது. அதற்கு பலக்காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக "கட்டாயக் காதல் - கலப்பு - நாடகத் திருமணங்கள்" நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் - அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும் (இது குறித்து பின்னர் விரிவாக பார்ப்போம்).

இனி என்ன?

ஆடுகளுக்கிடையே மோதல் என்பதற்காக ஓநாய்களிடம் பஞ்சாயத்திற்கு போக முடியாது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆதிக்க சக்திகள் குளிர்காய அனுமதிக்கக் கூடாது.

""மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது. தலித் மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த தலித் அல்லாதவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை விடுதலைச் சிறுத்தைகளும் ஊடகவியலார்களின் சந்திப்பில் சுட்டிகாட்டியிருக்கிறது."" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை காவல்துறை முன்பே அறிந்திருந்ததாகக் கூறுகிறார்கள். அப்படியானால், இதனை முன்கூட்டியே தடுக்கத் தவறியது ஏன்? என்பதற்கு விடைகாண வேண்டும்.

தருமபுரி நிகழ்வில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காவண்ணம் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்து பேசி தீர்வுகாண முன்வர வேண்டும்.

சமுதாய மோதல்களுக்கு சட்டத்தால் மட்டுமே தீர்வுகாண முடியாது. சமுதாயத் தலைவர்கள் முன்னின்று நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகவும் பாடுபட வேண்டியதே இப்போதைய தேவை.

சனி, நவம்பர் 17, 2012

தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

தருமபுரி கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. அதே போன்று, அந்தக் கலவரத்திற்கு காரணமாகக் கூறப்படும் "காதல் திருமணமும்" கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கு எதிரானது. ஏனெனில், நடந்திருப்பது ஒரு சட்ட விரோத குழந்தைத் திருமணம்.

"பறையர் வகுப்பைச் சேர்ந்த 23 வயது இளவரசனுக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த 20 வயது திவ்யாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணம்தான் இந்த சாதி வன்முறைக்கான உடனடிக் காரணம்" என்று கூறுகிறது "தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல்" எனும் ஆனந்த் டெல்டும்ப்டே கட்டுரை. இதனை தமிழில் எஸ்.வி.ராஜதுரை மொழிபெயர்த்துள்ளார்.

இக்கட்டுரையில் மணமகன் "23 வயது இளவரசன்" என்று கூறப்பட்டுள்ளது தவறானத் தகவலாகும். இளவரசனின் உண்மை வயது 19 தான். இது சட்டப்படி திருமணம் செய்ய முடியாத வயதாகும்.

இந்த சம்பவம் குறித்த பல கட்டுரைகள் வன்னியர்களைத் தாருமாறாகத் தாக்குகின்றன. "தருமபுரி: தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதிவெறி!" என்கிறது வினவு. "தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்" என்கிறார் வே.மதிமாறன் "பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்" என்கிறார் வன்னி அரசு.  "தருமபுரி சாதியக் கலவரம்: தமிழர்கள் தலைகுனிய வேண்டும்" என்கிறார் இக்பால் செல்வன். "காதல் என்ற மாயை சாதி கலவரமாக மாறியது ஏன்?" என்கிறார் சுவனப் பிரியன். 

இப்படியாக இணையத்தில் வரும் பல பதிவுகள் வன்னியர்களை மிக மோசமாகத் தாக்குகின்றன. இந்த நிகழ்வைக் கண்டித்து சுப. வீரபாண்டியன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மே 17 இயக்கம் வன்னியர்களைத் தாக்கி சுவரொட்டி வெளியிட்டுள்ளது. (வன்னியர்கள் மீதான நியாயமான மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!).

இப்போதைக்கு தருமபுரி குழந்தைத் திருமணத்திற்கு எல்லா மேதாவிகளும் வக்காலத்து வாங்குவது குறித்து பார்ப்போம்.

குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது

குழந்தை வயதினரின் மூளையும் மனதும் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அவர்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமைக் கிடையாது.குழந்தைகள் திருமணத்தைத் தடுத்து திருமண வயதைத் தள்ளிப்போடுவதால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியிலான உண்மை. குறிப்பாக உடல் நலம், மனித வள மேம்பாடு, குழந்தை வளர்ப்பு, வறுமை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு என பல நிலைகளிலும் இது நாட்டு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

எனவே, இந்திய நாட்டில் குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 வயது முடிவடையாத ஆண்களும் 18 வயது முடிவடையாத பெண்களும் குழந்தைகள் என்று கருதப்படுகிறார்கள்.


Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age

இந்த வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும். நடைபெற்றாலும் மணமக்கள் பிரிக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்தை நடத்துபவர்கள், துணை நிற்பவர்கள் என அனைவருக்கும் இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் தண்டமும் விதிக்கப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

தருமபுரியில் நடந்தது குழந்தைத் திருமணம்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் வக்காலத்து வாங்கும் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம் ஆகும். இது குறித்து பார்ப்போம்:

திருமணம் செய்து கொண்ட மணமகன் இளவரசன் 19 வயது நிரம்பியவர். அவரது பிரந்த தேதி 3.3.1993. ஆகவே, 2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வ திருமண வயதான 21 வயதினை அவர் இன்னமும் எட்டவில்லை.

இளவரசன் இன்னமும் 21 வயதை எட்டவில்லை. 
அவரது வயது 19 மட்டுமே என்பதற்கான ஆதாரம்  இதோ:

இளவரசனின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் - பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19)

ஆக, இந்திய குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குழந்தைத் திருமணமாக வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சட்டவிரோத திருமணத்திற்காகத்தான் எல்லோரும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைத் திருமணம் பிரிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் - இதனை எல்லோரும் ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை?

சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் இனியும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய சுட்டி: தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்!

வெள்ளி, நவம்பர் 16, 2012


இலங்கை போர்க்குற்றம்: ஐநா அறிக்கையின் மறைக்கப்பட்ட பகுதிகள்!


இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் ஐநா அவை கடமை தவறியதன் மூலம் 70,000 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலைக்கு துணை போனது தொடர்பான சார்லஸ் பெட்ரி குழுவின் அறிக்கையை ஐநா அவை பகிரங்கமாக வெளியிட்டது. ஆனாலும் அதன் சில பகுதிகள் கருப்பு மையினால் மறைக்கப்பட்டுள்ளன.
சார்லஸ் பெட்ரி அறிக்கை அளிக்கிறார்
இதுகுறித்த கேள்விக்கு, ஐநா அவையின் இரகசிய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஐநா ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை ஐநா பொதுச் செயலர் பான்கி மூன் கருப்பு மையினால் மறைத்துவிட்டதாக ஐநா செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதாவது, சார்லஸ் பெட்ரி குழு அளித்த அறிக்கையின் பகுதிகள் பான்கி மூன் அவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. (ஐ.நா அறிக்கை இங்கே காண்க)

மறைக்கப்பட்டவை எவை?

சார்லஸ் பெட்ரி குழு அறிக்கை இப்போது உள்ள வடிவிலேயே ஐக்கிய நாடுகள் அவையையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டும் வகையில்தான் உள்ளது. அதிலிருந்து இன்னும் தீவிரமான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம்

128 பக்க அறிக்கையில் முதன்மை அறிக்கையானது 32 பக்கங்களில் அமைந்திள்ளது. இத்தகைய சிறிய அறிக்கைக்கு "அறிக்கையின் சுருக்கம்" தேவையில்லை என்பதற்காக மூன்று பக்க அறிக்கை சுருக்கம் நீக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. ஆனால், முழு அறிக்கையின் தாக்கத்தையும் உணரும் வகையில் முதல் மூன்று பக்க அறிக்கை சுருக்கம் இருந்ததாலேயே அது நீக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். (நீக்கப்பட்ட அந்த அறிக்கைச் சுருக்கத்தை கடைசியில் கீழே காணலாம்.)

விஜய் நம்பியார், பான்கி மூன் மீது நேரடி குற்றச்சாட்டுகள்!

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 70,000 பேர் படுகொலை செய்யப்பட்டப் போது அதனை தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல், போர்க்குற்றத்திற்கு துணை போனவர்கள் பட்டியலில் பான்கி மூனின் பிரதிநிதி விஜய் நம்பியார், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த ஜான் ஹோம்ஸ், பான்கி மூன் ஆகிய மூன்று பேரும் இடம்பெருகிறார்கள்.
ஜான் ஹோம்சுடன் நான் (2009 கோபன்ஹெகன், டென்மார்க்)
இலங்கை ராணுவம் அப்பாவி பொதுமக்களை கொலை செய்தது தொடர்பான புள்ளி விவரங்களை மறைத்ததுடன் - இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்துள்ளது என்கிற தகவலை கூறக்கூடாது என்று ஜான் ஹோம்ஸ் வாதாடிய செய்தி கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.

ஈழப்போரின் உச்சக்கட்டத்தின் போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தமது சிறப்பு தூதராக இலங்கைக்கு அனுப்பிய ஆள் விஜய் நம்பியார். (அவரது தம்பி சதீஷ் நம்பியார் 7 ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார்.) கடைசிக்கட்டத்தில் நடேசன் வெள்ளைக்கொடியோடு சரணடைய வந்தபோது - அதனை ஒருங்கிணைத்தவர் இதே விஜய நம்பியார்தான். புலிகளிடம் காப்பாற்றுவதாக நாடகம் ஆடி அவர்களை சுட்டுக்கொலை செய்ய துணை போனார் விஜய நம்பியார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 
விஜய நம்பியார்
விஜய் நம்பியாரை நேரடியாகக் குற்றம் சாட்டும் பகுதிகளை இந்த அறிக்கையில் இருந்து பான்கி மூன் நீக்கியுள்ளார்.

அவ்வாறே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்கிற விவாதத்தின் போது "இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று பான்கி மூன் அவர்களே வாதாடியுள்ளார்.
ராஜபட்சவுடன் பான்கி மூன்
இப்படிப்பட்ட நேரடியான குற்றச்சாட்டுகளை, அந்த அறிக்கையில் இருந்து கருப்பு மை வைத்து பான்கி மூன் அழித்துள்ளார். இதைத்தான் "ஐநா அவையின் இரகசிய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஐநா ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பகுதிகளை ஐநா பொதுச் செயலர் பான்கி மூன் நீக்கிவிட்டதாக" ஐநா செய்தித்தொடர்பாளர் குறிப்பிடுகிறார்.

ஐநா அறிக்கையில் கருப்பு மையினால் அழிக்கப்பட்ட சில பகுதிகளும் அதன் உண்மை பகுதியும் இதோ!

பக்கம் 11: 
கருப்பு மையினால் அழிக்கப்பட்ட பகுதி
உண்மை பகுதி

26. Three days later, on 12 March, at a UNHQ meeting of the Policy Committee to discuss Sri Lanka [several USG participants and the RC did not stand by the casualty numbers, saying that the data were ‘not verified’. Participants in the meeting questioned an OHCHR proposal to release a public statement referencing the numbers and possible crimes.] The next day, after receiving a draft of the statement, the Chef de Cabinet, the USG-Humanitarian Affairs, and the RC all wrote to the OHCHR leadership urging that the statement be changed to exclude specific reference to the number of casualties and possible crimes and violations of international law by the Government."


பக்கம் 68:
கருப்பு மையினால் அழிக்கப்பட்ட பகுதி
உண்மை பகுதி

"USG-Humanitarian Affairs, who responded on 13 March stating: ".... we have ourselves avoided being too specific about the casualty figures because of the difficulty of being able to defend them with confidence in the absence of reliable, verifiable information … The civilian casualties have certainly been, and continue to be, heavy, but the detailed figures are still hard to be sure about [… (ii) The references to possible war crimes will be controversial … I am not sure going into this dimension is helpful, as opposed to more indirect references to the need for accountability, in this conflict as elsewhere.” ]

 பக்கம் 96: 
கருப்பு மையினால் அழிக்கப்பட்ட பகுதி
உண்மை பகுதி
"the Secretary-General met with President Rajapaksa and urged him 'to uphold his commitment to establish an accountability process.' On 30 July the Policy Committee met again at UNHQ to address 'follow-up on accountability' in Sri Lanka. [Discussing whether or not the SecretaryGeneral should establish an international Commission of Experts, many participants were reticent to do so without the support of the Government and at a time when Member States were also not supportive. At the same time, participants also acknowledged that a Government-led mechanism was unlikely to seriously address past violations. The Secretary-General said that 'the Government should be given the political space to develop a domestic mechanism and that only if this did not occur within a limited time frame would the UN look at alternatives.] The meeting agreed"

கருப்பு மையினால் அழிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்

Page 15:
Several participants noted the limited support from Member States at the Human Rights Council and suggested the UN advocate instead for a domestic mechanism, although it was recognized that past domestic mechanisms in Sri Lanka had not led to genuine accountability. One participant said that “[i]t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...” 
Page 66 and 67:
The Policy Committee met two days later, on 12 March, to discuss Sri Lanka. Participants noted variously that “this crisis was being somewhat overlooked by the international community”, the policy “of coordinating a series of high level visits seemed to have produced some positive results”, and that the possible involvement of the Special Adviser on the Prevention of Genocide (SAPG) would not indicate a suspicion of genocide but may add to overcrowding of UN actors involved. Participants acknowledged the apparent need for a Special Envoy but noted this “did not seem politically feasible”. It was suggested that “the Secretary General’s [public] statements may have appeared a bit soft compared with recent statements on other conflict areas [and it] was suggested [he] cite the estimated number of casualty figures ….”. OHCHR said it would be issuing a “strong” statement which would include indicative casualty figures and raise the issue of possible crimes under international law by both sides.                                                        
Several participants questioned whether it was the right time for such a statement, asked to see  the draft before release and suggested it be reviewed by OLA. There was a discussion on “balancing” the High Commissioner’s mandate with other UN action in situations requiring the UN to play several different roles. The meeting led to the adoption by the Secretary-General, through the Policy Committee, of several decisions, including: continued engagement on “the immediate humanitarian, human rights and political aspects of the situation”; “system-wide advocacy” to press the LTTE to allow safe passage for civilians and UN staff; pressing the Government on protection and assistance to IDPs; inter-ethnic accommodation and reconciliation; political advice to Sri Lanka; child protection; transitional justice; demining; reconstruction; disarmament, demobilization and rehabilitation; political solutions to the underlying causes of the conflict; and renewed efforts to establish an OHCHR field office.  
Page 67:
At today’s Policy Committee meeting,
Page 88:
Members agreed to: urge the Government to ensure protection and assistance for IDPs in accordance with international law; continue dialogue toward a durable political solution and reconciliation; seek a principled and coordinated international approach to relief, rehabilitation, resettlement, political dialogue and reconciliation; and pursue a “principle-based engagement by UNHQ and RC/HC/UNCT, with the Government, International Financial Institutions, and other partners on early recovery …”. It was agreed that the UNCT would engage with international partners and develop principles of engagement, and a monitoring mechanism to ensure adherence to these principles.
Page 89:
Members of the Policy Committee also noted “politically, there was little to show for the UN's engagement with all stakeholders” and that the President was “not receptive to the Secretary-General's suggestion to appoint an envoy.”
Page 92 and 93:
“The Government has not agreed to proposals for the establishment of a body involving donors and the UN which would facilitate humanitarian and recovery coordination.”
Pages 95 and 96:
albeit with considerable disagreement on what action should be taken. In the 23 June Policy Committee meeting in New York

One participant said that “[i]t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...”  OHCHR was tasked with preparation of a UN strategy and position on justice and accountability issues, including the possibility of an international investigation.  
நீக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கம்The Removed Executive Summary-Internal Review Panel on United Nations Action in Sri Lanka

புதன், நவம்பர் 14, 2012

ஐ.நா அறிக்கை இதோ: தமிழினப் படுகொலையை ஐநா வேடிக்கைப் பார்த்தற்கான ஆதாரம்!


இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள்விசாரணை அறிக்கை.

ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான இந்த விசாரணைக் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஐநா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது (15.11.2012). 

இதுகுறித்த எனது முந்தைய பதிவு: (குற்றவாளிக் கூண்டில் இலங்கையுடன் ஐநா: போர்குற்றத்தை ஐநா வேடிக்கைப் பார்த்தது தொடர்பான அறிக்கை பான்கி மூனிடம் அளிக்கப்பட்டது!)

அந்த அறிக்கை இதோ:



The Internal Review Panel Report on Sri Lanka

குற்றவாளிக் கூண்டில் இலங்கையுடன் ஐநா: போர்குற்றத்தை ஐநா வேடிக்கைப் பார்த்தது தொடர்பான அறிக்கை பான்கி மூனிடம் அளிக்கப்பட்டது!


இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள்விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் நேற்று கசிய விடப்பட்டன.

இப்போது ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான இந்த விசாரணைக் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஐநா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது (15.11.2012). 


அந்த அறிக்கை இதோ:


விசாரணைக் குழு அறிக்கையை ஐநா பொதுச்செயலரிடம் கையளிக்கும் சார்லஸ் பெட்ரி
விசாரணைக் குழு அறிக்கையை பான்கி மூனிடம் சார்லஸ் பெட்ரி அளிக்கும் நிகழ்வில் விஜய் நம்பியார் பங்கேற்கவில்லை.
இலங்கையில் இருந்த ஐ.நா. குழுவினர் ஈழத்தமிழர்களின் உயிர்களை எவ்வளவு துச்சமாக மதித்தனர் என்பது தொடர்பாக அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தவதாக உள்ளன என்று இது குறித்து மருத்துவர் இராமதாசு அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

“இலங்கையில் பணியிலிருந்த ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள தமிழர்களை காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டனர்; 2008ஆம் ஆண்டில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, வடக்கு மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டாம் என ஈழத்தமிழர்கள் கண்ணீர் மல்க மன்றாடிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்; அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும்; இலங்கையில் அபாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது , அங்கு என்ன நடக்கிறதுஎன்பதை உலகிற்கு தெரிவித்து,இனப்படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு அதன் அறிக்கையில் சாட்டையடி கொடுத்திக்கிறது.

இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போதே அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோர் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடையவரும் தகவல் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மேரி கால்வின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. உயரதிகாரி விஜய் நம்பியார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படுவார்கள் என்று விஜய் நம்பியார் உறுதியளித்திருந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதே இலங்கை அரசுக்கு ஐ.நா. மற்றும் இந்திய அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது அம்பலமானது. இந்த நிலையில் ஐ.நா.வின் தவறு இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உலகில் அமைதியை நிலைநிறுத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்தல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுதல் ஆகியவை தான் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம். ஆனால், ஈழத்தமிழர் பிரச்னையில் இந்தக் கடமைகளில் ஒன்றைக் கூட ஐ.நா. செய்யவில்லை. மொத்தத்தில் உலகின் மனசாட்சியாக செயல்படவேண்டிய ஐ.நா. இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியிருக்கிறது." என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். (இலங்கையின் போர் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா.: ராமதாஸ்)

அறிக்கையில் உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்

ஐநா குழு அறிக்கையில் ஐநா அமைப்பு கடமைத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக பி.பி.சி மற்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. (இறுதியுத்தத்தில் தமிழர்களை பாதுகாக்க தவறியது ஐ.நா: கசிந்தது விசாரணை அறிக்கை)

ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை

இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது.
இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐநா விலகியது

யுத்தப் பிரதேசத்துக்குள்ளிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறு இடத்தில் பொதுமக்கள் மாட்டப்பட்டிருந்தனர். செப்டம்பர் 2008ல், ஐநா தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது.

ஐநா ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்திரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐநா எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐநா அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.

கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை

இலங்கையில் மிக மோசமான ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐநா அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டுவருகிறது ஐநா என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐநா பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது.

மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐநா தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. ஆனால் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐநா வாதிடுகிறது.

இவையெல்லாம் ஏன் நடந்தன?

ஐநா கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாச்சாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை. ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையைப் பிரசுரித்து அதிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான விஷயம் நடக்காமல் பார்த்துக்கொள்ள ஐநா முயல வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை விறைவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, நவம்பர் 02, 2012


ஜெனீவா ஐநா மனிதஉரிமை விசாரணையில் ஓர் அதிசயம்: இந்தியாவின் நம்பிக்கையளிக்கும் மாற்றம்!

War Crimes Proved, We want Justice!

ஜெனீவா ஐநா அவை முன்பு நான்
ஜெனீவா ஐநா மனித உரிமை அவையிலிருந்து இந்தப் பதிவை எழுதுகிறேன் (2.11.2012). இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பன்னாட்டளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றுள்ளதை கடந்த மூன்று நாள் நிகழ்வுகள் சுட்டுகின்றன. அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 2 ஆகிய நாட்களில் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து துணைக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முதல் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு. கோ.க. மணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
இலங்கை மீதான ஐநா காலமுறை விசாரணையில் திரு. கோ.க. மணி அவர்கள்
மிகமுக்கிய நிகழவான இலங்கை மீதான காலமுறை விசாரணை 1.11.2012 அன்று மனித உரிமை அவையில் நடந்தது. இதில் இலங்கை அரசின் பிரதிநிதி மகிந்த சமரசிங்க 'இலங்கை மனித உரிமையை மதிக்கும் நாடு' என மிகவும் நிட்டி முழக்கி பொய்யுரைத்தார். இதனை உலக நாடுகள் எதுவும் நம்பவில்லை என்று உடனடியாக அறிய முடிந்தது.

இலங்கை மீதான ஐநா காலமுறை விசாரணையில் திரு. கோ.க. மணி மற்றும் நான்
இலங்கை மீதான விவாதத்தில் 99 நாடுகள் பேசினர். இதில் மிகச்சில நாடுகள் தவிர மற்ற எல்லா நாடுகளுமே இலங்கையைக் கண்டிக்கும் விதமாகவே பேசினர். இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பிலும், இலங்கையில் தொடரும் மனித உரிமைகள் தொடர்பாகவும் பெரும்பாலான நாடுகள் கேள்வியெழுப்பின. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகள் செயலாக்கம், இலங்கை நீதித்துறை மற்றும் இலங்கை மனிதஉரிமை ஆணையத்தின் தனித்தன்மை இல்லாத நிலை, பத்திரிகையாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல் என எல்லாமும் கேள்விக்குள்ளானது.

இந்தியாவின் எதிர்பாராத மாற்றம்

இந்த நிகழ்வின் போது நேர்ந்த எதிர்பாராத மாற்றம் என்பது இந்தியாவின் நிலைபாடுதான்.  இலங்கைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 13 ஆவது சட்டத்திருத்தம், வடக்கில் தேர்தல், மனித உரிமை மீறல் குறித்த விசாரணை என பலவற்றைக் குறித்தும் சரமாரியாக இந்தியா கேள்வி எழுப்பியது. அளிக்கப்பட்ட 1 நிமிடம் 22 வினாடிகளில் எல்லாக் கேள்விகளையும் இந்தியாவின் சார்பில் பேசியவர் எழுப்பினர்.

உண்மையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பேசினர். இதில் அதிகமாக பேசிய நாடு இந்தியாதான். இந்தியாவின் இந்த புதிய நிலைபாடு தொடர வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எத்ர்பார்க்கிறார்கள் என்பதை இங்கு நிலவும் மனநிலை உணர்த்துகிறது.
இலங்கை அரசின் கண்காட்சி - கொடூரத்தை மறைக்க அப்துல் கலாம்.
ஐநா அவையின் இந்த விசாரணையின் போது நுழைவாயிலில் ஒரு கண்காட்சியை இலங்கை வைத்திருந்தது. இதனை ஒருவரும் கண்டு கொள்ளவோ, நம்பவோ இல்லை. இனியும் பன்னாட்டு சமூகத்தை இலங்கை ஏமாற்ற முடியாது என்பதை ஜெனீவா நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


குறிப்பு: மருத்துவர் அய்யா அவர்கள் அளித்த அரிய வாய்ப்பின் காரணமாக, வரலாற்று சிறப்புமிக்க இலங்கை மீதான ஐநா விசாரணையில் நானும் கலந்து கொண்டுள்ளேன். இந்த விசாரணையில் இந்தியாவிலிருந்து அரசு சாராமல் பங்கேற்றுள்ளவர்கள் திரு. கோ.க.மணி அவர்களும் நானும்தான்.

 பின்னர் விரிவாக எழுதுவேன்...