Pages

வியாழன், ஜூலை 24, 2014

இந்திய அரசின் அயோக்கியத்தனம்: நரேந்திர மோடிக்கு தமிழர்கள் தீண்டத்தகாதவர்களா?

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுதான் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை போலும்! 

ஐநா மனித உரிமைப் பேரவையில் - ஈழத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்து பன்னாட்டு விசாரணைக் கோரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த அதே இந்திய அரசு, இப்போது காசாவில் கொலை செய்யப்பட்ட 700 பேருக்காக பன்னாட்டு விசாரணைக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு (India voted YES)

இலங்கை - இஸ்ரேல்: ஆளுக்கொரு நியாமா?

அன்று ஈழப்போரின் போது, ராஜபக்சே என்னவெல்லாம் சப்பைக் கட்டுகளைக் கட்டி, ஈழத்தமிழர்களைக் கொலை செய்தாரோ, இன்று அதே சாக்குப்போக்குகளைக் கூறி, காசாவைத் தாக்குகிறார் - பெஞ்சமின் நேதன்யாகு.
இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் ராஜபக்சே
ஈழத்தில் நடந்த கொடூரப் போர்க்குற்றங்கள் தொடர்பில், பன்னாட்டு விசாரணை தீர்மானம் வந்தபோது - 'நாடுகளின் விவகாரங்களில் அன்னிய தலையீடு கூடாது' என்று வியாக்கியானம் பேசியது இந்திய அரசு.

In an explanation of vote by the Permanent Representative of India to the UN Offices in Geneva, Dilip Sinha, said this resolution at the UN Human Rights Council imposes an “intrusive approach” of international investigative mechanism which was counterproductive apart from being “inconsistent and impractical”

இலங்கை நாட்டில் அன்னியத் தலையீடு கூடாது என்கிற இந்தியாவின் நியாயம், இஸ்ரேல் நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா?

அன்று, ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலை மீதான பன்னாட்டு விசாரணையை எதிர்த்து வாக்களித்த இந்திய அரசு, இன்று, 700 பாலஸ்தீனியர்கள் படுகொலைக்காக மட்டும் பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது ஏன்?

தமிழர்கள் தீண்டத்தகாதவர்களா?

மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களே, பாலஸ்தீனருக்காக துடிக்கும் உங்கள் இதயம், தமிழர்களுக்காக துடிக்க மறுப்பது ஏன்?

தமிழர்கள் நாங்கள், இந்தியப் பேரரசுக்கு அந்த அளவுக்கா தீண்டத்தகாதவர்கள் ஆகிவிட்டோம்?
---------------------------------------------------------------------------
பாலஸ்தீனத்தின் நட்சத்திரம் எனும் விருதை - பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் பெறும் ராஜபக்சே.
இஸ்ரேலுக்கு எதிரான பன்னாட்டு விசாரணைத் தீர்மானம் (23.07.2014)

Human Rights Council - Twenty-first special session - 23 July 2014: Resolution – 

“Decides to urgently dispatch an independent, international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate all violations of international humanitarian law and international human rights law in the Occupied Palestinian Territory, including East Jerusalem, particularly in the occupied Gaza Strip”

NEWS: Human Rights Council establishes Independent, International Commission of Inquiry for the Occupied Palestinian Territory

(குறிப்பு: இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐநா மனித உரிமைப் பேரவை விசாரணையை நாம் ஆதரிக்கிறோம். இதே போன்று இலங்கை மீதானக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை) 

1 கருத்து:

viyasan சொன்னது…

நல்ல பதிவு. இந்திய அரசின் இந்த தமிழர் எதிர்ப்பு இரட்டை வேடத்தை தமிழர்களுக்குப் புரிய வைக்கும் உங்களின் முயற்சிக்கு நன்றி.