Pages

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

விஜயகாந்த்: இனவெறி, சாதிவெறி ஊடகங்கள் காட்டும் பூச்சாண்டி!

அரசியல் கட்சி நடத்த எந்த அருகதையும் இல்லாத குழப்பவாதிதான் விஜயகாந்த் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது தேமுதிகவின் காஞ்சிபுரம் மாநாடு. ஆனால், இனவெறி, சாதிவெறியின் காரணமாக அவரை தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றன கேடுகெட்ட ஊடகங்கள்.

இந்த மானம்கெட்ட Presstitute கும்பல் ஒழியாத வரை தமிழ் நாடு உருப்படாது.

ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் கட்டுரை

ஊடகங்களின் அவலநிலைகுறித்த, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் செந்தில் அவர்களின் சுவாரசியமான கட்டுரை இதோ:
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் சோ அவர்கள் எழுதிய ஒரு கதை. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கிறது. ஏறத்தாழ இதுப் போலத் தான் இருக்கும்:

ஒரு கல்லூரியில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்காக கவிதைப் போட்டி நடத்துவார்கள். அந்தக் கல்லூரி மாணவன் ஒருவன் மனம் வெறுத்துப் போய் ஒரு காகித்தில்

`நீ பெண்ணா, ஆணா? பேயா? என்னை ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறாய். வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது` - என்று எழுதி கசக்கி எறிந்து விடுவான். அதனை அவன் தோழன் ஒருவன் கொண்டு போய் கவிதைப் போட்டிக்குக் கொடுத்து விடுவான். தமிழ் பேராசிரியர் அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கொடுத்து விடுவார்.

கொடுத்து அந்தக் கவிதைக்கு விளக்கமும் தருவார் `ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் விளங்கி, சுடுகாட்டில் பேயாகத் திரியும் சிவனே! இந்த மனித வாழ்வெனும் துன்பத்தில் இருந்து விடுவித்து ஆட்கொள்வாய்` எனப் பொருள் படும் அருமையான கவிதை எனப் பாராட்டிப் பேசுவார்.

பின்னர் அந்த மாணவனை அழைத்து `எவனுமே கவிதை எழுதவில்லையே. நீயும் சும்மா இருக்க வேண்டியது தானே? இனிமேல் கவிதை எழுதினால் தெரியும் சேதி` என்று மிரட்டி அனுப்பி விடுவார்.

அந்தக் கல்லூரி மாணவி ஒருத்தி அவன் கவிதையில் மயங்கி அவனிடம் அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதித் தரச் சொல்லித் தொல்லை செய்வாள். அந்த மாணவன் மீண்டும்

`சண்டையென்ன உனக்கு ஜோலியா? மண்டையென்ன காலியா`- என்று எழுதிக் கொடுப்பான்.

அதை வீட்டுக்குச் சென்று படித்து விட்டு அந்தப் பெண் அடுத்த நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு `ஞாயிற்றுக்கிழமை உனக்கு வேலையில்லாமல் இருந்தால் சந்திக்கலாமா அல்லது திங்கள் கிழமை நேரமிருந்தால் சந்திக்கலாமா என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்' என்று மயங்குவாள்.

இந்தக் கதையை சோ தன் நடையில் நகைச்சுவையோடு சொல்லியிருப்பார். அதைப் படித்த காலத்தில் நான் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நடைமுறை வாழ்க்கையிலே கூட இதுவெல்லாம் நடக்கும் என்று.

விஜய்காந்த் மேடையிலே உளரும் உளரல்களுக்கு தெளிவான விளக்கம் எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கும், மேலே சொன்ன கதையில் வரும் அந்தப் பைத்தியக்கார மாணவனின் கவிதைக்கு விளக்கம் தரும் தமிழ் பேராசிரியருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 

அந்தத் தமிழ் பேராசிரியருக்கு முதல் பரிசு தந்த காரணத்தை விளக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகளுக்கு என்ன நிர்பந்தம் இருக்க முடியும்?

சாதியாக இருக்குமோ?
மொழியாக இருக்குமோ?

தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் அரசியல் ஆளுமை பெற்றுவிடவே கூடாது என்ற உறுதியான நோக்கமாக இருக்குமோ?

இந்தப் பேத்தல்காரன் தான் எங்களுக்கு விடிவெள்ளி என்று உறுதியாக நம்பும் கம்யூனிஸ்டுகள் மனதில் இருப்பது அரசியலா? சாதியா? நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் என்று மார்தட்டும் கருணாநிதியின் உள்ளம் முழுவதும் கள்ளம் மட்டும் தானா? சுயமரியாதை சொல்லில் மட்டும் தானா?

எதுவாக இருந்தாலும்.....

வெட்கக் கேடு
வெட்கக் கேடு
வெட்கக் கேடு

`தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா`

என்றுச் சொல்லி, பேசிப் பேசியே தமிழனை ஏமாற்றிய திராவிடக் கூட்டத்தின் வெற்றியே தமிழனை முட்டாளாகவும், சிந்திக்கவே தெரியாத, முதுகெலும்பில்லாத பிண்டமாகவும் வைத்திருப்பது தான்.

விஜயகாந்த் போன்றவர்களைத் தலைவர்களாக, தமிழ் நாட்டு அரசியலின் மையப்புள்ளியாகப் பார்க்க வைக்கிற ஊடகச் சதிகாரர்களிடமிருந்து தமிழ் சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமா?

விழித்தெழுமா?

விடியுமா?’

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மையை ஓங்கி ஒலிக்கும் கட்டுரை

Unknown சொன்னது…

அ.தி.மு.க ஆட்சி முடியபோகிறது அடுத்து என்ன தி.மு.க தானே ???
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை, அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக்கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. எனவே அவன் "மன்னா, என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறென்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை எனவே வெங்காயமே திண்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்குமேல் முடியவில்லை, எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்- எரிச்சல் தாங்கமுடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான். அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்க தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்க முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?
We want change
We want Thamilan
We want Educated
We want youth
We want Vast Visioner
We want Dr Anbumani for CM 2016

Unknown சொன்னது…

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால், " பெண்ணாய் பிறப்பதற்க்கே இம்மண்ணில் மாதவம் செய்திட வேண்டும்ம்மா" என்றான் பாரதி, ஆனால் அந்த பெண்ணினம் படும் துயர் இவ்வுலகில் சொல்லி மாலாது, அதுபோல் பாரான்ட என்னினம் மீது இச்சமூகத்தின் பார்வையையும் எண்ணி உள்ளம் குமுறுகிறேன்.