Pages

வியாழன், நவம்பர் 24, 2016

வெட்கக்கேடு: மு.க. ஸ்டாலினின் பொது அறிவு லட்சணம் இதுதானா?

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினுக்கு, உலக அளவில் புகழ்பெற்ற ஒரு சாதாரண பொது அறிவுக்கேள்விக்கு பதில் தெரியவில்லை. இப்படிப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுத்ததற்காக தமிழக மக்கள் வெட்கித் தலைக்குனிய வேண்டும்!

சென்னை கொளத்தூர் தொகுதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் ஆஜரானார். அப்போது கொளத்தூர் தொகுதி தேர்தலில் "திருமங்கலம் பார்முலா'வைப் பயன்படுத்தி வாக்குக்காக பணம் வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, "திருமங்கலம் பார்முலா' என்றால் என்ன? எனக்கு புரியவில்லை, தெரியவில்லை" என்று மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

"திருமங்கலம் பார்முலா"

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறைக்கு உலக அளவில் புகழ்பெற்றது "திருமங்கலம் பார்முலா" ஆகும். 

2009 ஆம் ஆண்டு மதுரை திருமங்கலத்தில் நடந்த தேர்தலில், ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 5000 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அதுவும் காலை நாளிதழுடன் 'கவருக்குள் பூத் சிலிப்புடன்' பணத்தை வைத்து வீடுவீடாக வழங்கினார்கள்.

இதுகுறித்து, திமுக பிரமுகரும் அப்போதைய மத்திய அமைச்சருமான மு.க. அழகிரிக்கு நெருக்கமான முன்னாள் மேயர் பட்டுராஜன் என்பவர், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் விரிவாக விளக்கினார். இதனை அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள்.
பின்னர் அமெரிக்காவின் வெளியுறவு ரகசியங்களை வெளிக்கொண்டுவந்த 'விக்கிலீக்ஸ்' மூலம் இது உலகப்புகழ்பெற்ற செய்தியாக மாறியது. எல்லா அரசியல் பத்திரிகைகளும் இது குறித்து எழுதினர்.

இவ்வளவு பிரபலமான ஒரு செய்தி தெரியாத அளவுக்கு, பொது அறிவு இல்லாதவராக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இருப்பது - தமிழக மக்களுக்கு நேர்ந்த அவமானமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இணைப்பு: 

விக்கி லீக்ஸ் வெளியிட்ட 'திருமங்கலம் பார்முலா': CASH FOR VOTES IN SOUTH INDIA

லண்டன் பத்திரிகையில் 'திருமங்கலம் பார்முலா': WikiLeaks: Indian politicians 'bought votes with cash tucked inside newspapers'

கருத்துகள் இல்லை: