Pages

சனி, ஜூன் 18, 2011

குற்றவாளிகளே நீதிபதிகளான கொடுமை: சாதிவெறியில் சிக்கிய சமச்சீர்கல்வி!


தனியார் பள்ளிகளின் கொடுமையிலிருந்து குழந்தைகளை விடுவித்து, எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் தமிழ்நாடு அரசு நியமித்துள்ள குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளே 'கல்வி நிபுணர்' போர்வையில் இடம் பிடித்துள்ளனர். அதிலும் ஆதிக்க உயர்சாதிக் கூட்டமே இக்குழுவை பெருமளவுக்கு ஆக்கிரமித்துள்ளனர். 

இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை:

"சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.
சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் ஒசார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும்". என்று வலியுறுத்துவதாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

5 கருத்துகள்:

virutcham சொன்னது…

//தனியார் பள்ளிகளின் கொடுமையிலிருந்து குழந்தைகளை விடுவித்து, எல்லோருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது.//

அதற்கு அரசு நிறைய அரசுப் பள்ளிகளைத் திறந்து இருக்க வேண்டும். அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கோரிக்கை வைத்தும் இருக்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டியும் ஏன் யாருமே போராடுவதில்லை? தனியார் பள்ளிகளை குறிவைத்தே ஏன் போராட்டங்கள் இருக்கின்றன? அரசால் நேரடியாகச் செய்யக் கூடியதை விடுத்து தனியாரை நோக்கிப் பாய்ந்தால் அவர்கள் எப்படி ஒத்துழைப்பு கொடுப்பார்கள்?

virutcham சொன்னது…

பாடப் புத்தகங்கள் இல்லாத பள்ளி நாட்கள் சுகம்

http://www.virutcham.com/2011/06/பாடப்-புத்தகங்கள்-இல்லாத/

பெயரில்லா சொன்னது…

///ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர்.// வேலிக்கு ஓணான் சாட்சி ..கொடும ...

Unknown சொன்னது…

தாங்கள் சுட்டியுள்ள இருவரையும்
போட்டது பாலுக்குக் காவல் பூணை
----------------------
என்பதாகும்
இனி எல்லாமே இப்படித்தான்
நடக்கும்
புலவர் சா இராமாநுசம்

Aruna சொன்னது…

வேலிக்கு ஓணான் சாட்சி ....

பணம், பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
மானமும், அறிவும் மனிதருக்கு அழகு - பெரியார்.

மதுவும், மறதியும் தமிழனுக்கு அழகு

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே..........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...........