Pages

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம்: மனுவின் மறுபதிப்பாகும் தலித் ஆதரவு!!

மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கடுமையாக தாக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பலர் வழக்கே பதிவு செய்யாமல் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

திட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா?
சிறுவன் விவேக் படுகொலை
வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! ஆனால் தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம் என்கிறது அரசியல் மற்றும் பத்திரிகை சாதிவெறிக் கூட்டம். மனுவின் மறுபதிப்பாகிறது தலித் ஆதரவு சாதிவெறி!

தலித் ஆதரவு சாதிவெறி கொடூரம் இதோ:

மரக்காணம் அகரம் காலனியில் தலை, வலது கை, முகத்தில் வெட்டப்பட்ட வன்னியர் லட்சுமணன்.
கையில் வெட்டுபட்ட விழுப்புரம் மாவட்ட வன்னியர்
தலையில் வெட்டப்பட்ட வன்னியர் கணேசன்
அகரம் காலனியில் வன்னியர்களைத் தாக்கிவிட்டு ஓடும் வன்முறைக் கூட்டம்
 அகரம் காலனியில் வன்னியர்களை தாக்க வரும் வன்முறைக் கூட்டம்
வன்னியர்களை தாக்க வரும் வன்முறைக் கூட்டம்
வன்னியர்களை தாக்க வரும் வன்முறைக் கூட்டம்

நாதியற்று போனார்களா வன்னியர்கள்?

மரக்காணம் பகுதியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் சிலர் இரத்தபாசத்தால் சதிகாரர்களுடன் கூட்டு சேர்ந்த வன்னியர்களைத் தாக்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் எனும் இளைஞரை மரக்காணம் அருகே கழிக்குப்பம் எனும் இடத்தில் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதுமட்டுமல்லாமல், அவரது கைபேசியில் செல்வராஜ் குடும்பத்தினரை அழைத்து "நாங்கள்தான் கொலைசெய்தோம். இனி இப்படித்தான் செய்வோம். முடிந்தால் பிணத்தை வாங்கிச்செல்லுங்கள்" என்று மிரட்டியுள்ளனர். இப்போதும் அந்த கைபேசி குற்றவாளிகள் வசம்தான் இருக்கிறது. (இதுகுறித்து கொலைசெய்யப்பட்ட செல்வராஜின் தம்பி மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை)

இந்நிலையில், வன்னியர்களிடம் ஓட்டுப்பொறுக்க வரும் தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சிகளும், மனசாட்சியை அடகுவைத்துவிட்டு வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றன.

'வன்னியன் ஓட்டு மட்டும் இனிக்கும், வன்னியன் உரிமைக் கேட்டால் கசக்கும்' என்கிற அரசியல் கட்சிகள் உள்ள தமிழ் நாட்டில் - 'ஐநூறு ரூபாய் நோட்டுக்கும் அரை பாட்டில் சாராயத்துக்கும்' ஓட்டுப்போடும் கூட்டமாக வன்னியப் பேரினம் இருப்பதுதான் இந்த கொடூர நிலைக்கு காரணம்.

இனியும் பொறுப்பது ஏமாளித்தனம்: ஓரணியில் திரளவும் ஓட்டுக்கட்சிகளை விரட்டவும் இதுவே தக்க தருணம்.

மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். மரக்காணத்தில் வன்னியர்களைக் கொலைசெய்துவிட்டு, பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே பழிசுமத்தும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு வன்னிய மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகுவிரைவில் வரும்.

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

மரக்காணம் கொலைவெறி தாக்குதல்: நாதியற்று போனார்களா வன்னியர்கள்?

http://needjusticeinmarakkanam.blogspot.de/2013/04/blog-post_2153.html

மரக்காணம் கலவரம்: தலித் ஆதரவு சாதிவெறி கொலைவெறி தாக்குதல் கொடூரம் படங்கள் இதோ

http://needjusticeinmarakkanam.blogspot.de/2013/04/blog-post_8949.html

வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம்

http://needjusticeinmarakkanam.blogspot.de/2013/04/blog-post_1719.html

பெயரில்லா சொன்னது…

படுகொலை செய்யப்பட்டாலும், கை கால்கள் துண்டிக்கப்பட்டாலும் செத்துப் போவோரும், ஊனமாவோரும் மனிதர்கள் மனிதர்கள் தான். சாதிகள் அல்ல. ஏனோ வன்னியர் என்ற சாதிவெறி தலைக்கேறிவிட்டு அதை நியாயப்படுத்தும் விதமாகவும் இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா?

அருள் சொன்னது…

//படுகொலை செய்யப்பட்டாலும், கை கால்கள் துண்டிக்கப்பட்டாலும் செத்துப் போவோரும், ஊனமாவோரும் மனிதர்கள் மனிதர்கள் தான். சாதிகள் அல்ல.//

எல்லோரும் மனிதர்கள்தான் என்றால் அப்புறம் எப்படி "அடித்தவனுக்கு பாதுகாப்பு, அடிவாங்கியவன் மீது வன்கொடுமை வழக்கு" என்று போடுகிறார்கள்?

வன்கொடுமைச் சட்டம் எனும் கேடயத்தை வாளாக பயன்படுத்தி அப்பாவிகளைத் தாக்கும் தலித் சாதிவெறியர்களிடம் போய் சொல்லுங்கள், எல்லோரும் மனிதர்கள்தான் என்று.

Robin சொன்னது…

சாதிக் கட்சிகள் தடை செய்யப்பட்டால்தான் பிரச்சினை தீரும்.

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

இந்த திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவத்தினை கடுமையாக கண்டிக்கின்றோம்.. தொடர்ந்து ஒரு கும்பல் வன்னிய சமுதாயத்திற்க்கு எதிராக இம்மாதிரியான வன்முறையில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றது....

இதில் வன்னிய மக்கள் இருவர் கொல்லப்பட்டும் வன்னியர்கள் மீதுதான் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றது.. ஆனால் அவற்றை அறங்கேற்றிய அந்த வெறிக்கும்பல் மீது...?!!


ஏன்?!! இது தான் உங்கள் தர்மமா? அவர்களுக்கு மட்டும்தான் இந்த தமிழக அரசா?

Prakash சொன்னது…

அருள் அவர்களே, வன்முறையை ஆரம்பம்செய்தது வன்னியர்கள்தான். கோட்டக்குப்பம், பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையாம், பிள்ளைச்சாவடி என வழி நெடுகிலும் கடைகளை அடைக்கச் சொல்லியும், பீர் பாட்டில்களை வீசியும், கற்களை வீசியும், வேட்டியை தூக்கி காட்டி அசிங்கசிங்கமாக பேசி கீழ்த்தரமான நடந்துகொண்டனர். பாண்டிச்சேரி பல்கலைக் கழக வாயிலில் பேரூந்திற்காக நின்று கொண்டிருந்த பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டனர். அதற்கு சரியான முறையில் அவர்களுக்க்கு பதிலடி தரப்பட்டது.

viyasan சொன்னது…

த‌லித்துகளுக்கும் வ‌ன்னிய‌ர்க‌ளுக்கும் எந்த‌ உருவ‌ வேறுபாடும் என‌க்குத் தெரிய‌வில்லை. எல்லோரும் அண்ண‌ன் த‌ம்பி போல‌ தான் இருக்கிறார்க‌ள். ச‌ரியா அந்த‌ முத‌ல் ப‌ட‌த்திலிருக்கிற‌ 'வ‌ன்னிய‌ர்' பைய‌ன் போல‌வே ஒரு பைய‌ன், திருமாவ‌ள‌வ‌னின் த‌ம்பிக‌ளில் ஒருவ‌னை என‌க்கும் தெரியும். ஏன் இவ‌ன்க‌ள் எல்லாம் இப்ப‌டி அடித்துக் கொண்டு சாகிறான்க‌ள் என்று தெரிய‌வில்லை. எல்லா சாதிக்க‌ட்சிக‌ளையும் த‌டை செய்து, திருமாவ‌ள‌வ‌ன், இராமதாஸ், போன்ற‌ சாதிக்கட்சித் த‌லைவ‌ர்க‌ள‌னைவ‌ர‌தும் குடியிய‌ல் உரிமைக‌ளைப் ப‌றித்து தேர்த‌லில் போட்டியிடாம‌ல் செய்ய‌ வேண்டும். இந்த‌ சாதிச்ச‌ண்டைக‌ளைப் பார்க்க‌ த‌மிழ‌ன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்க‌மாக‌ இருக்கிற‌து.