Pages

சனி, நவம்பர் 30, 2013

தி இந்துவின் சாதிவெறி ஒருபோதும் அடங்காதா? வன்னியர்கள் மீது வன்மம் ஏன்?

தி இந்து பத்திரிகை சாதிவெறியின் உச்சத்தில் இருக்கும் ஒரு பத்திரிகை. அதிலும் குறிப்பாக, வன்னியர்கள் குறித்து செய்தி வெளியிடும் போதெல்லாம் அதில் 'உள்ளடி வேலையாக' வன்மத்தைக் கலந்து விஷமத்துடன் எழுதுவது தி இந்துவின் வாடிக்கை.


திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டி வன்னியர் இன பனிரெண்டாம் வகுப்பு மாணவி தனது உறவினரைப் பார்த்துவிட்டு நடுப்பட்டி அருந்ததியினர் காலனி வழியாக திரும்பியபோது கேலி, கிண்டல், வன்பகடிக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பான மோதலில் 51 வன்னியர்களும் 21 அருந்ததியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (இங்கே காண்க: தர்மபுரிக்கு அடுத்தது திண்டுக்கல்லா? வன்னியர்கள் இரத்தம் குடிக்கத் துடிக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்கள்!)
இந்த சம்பவத்தில் 'வன்னியர்களும் அருந்ததியினரும்' சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் மிகத் தெளிவாக வெளியிட்டுள்ளது. ஆனால், தி இந்து பத்திரிகையோ வன்னியர்களை மட்டும் சாதியைக் குறிப்பிட்டுவிட்டு - அருந்ததியினரை பொத்தாம் பொதுவாக 'தலித்' என்று குறிப்பிடுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி:


Tension grips two villages near Nilakottai in Dindigul district even nearly a week after inter-community clashes on Sunday. ....Vanniyars from Kariyampatti village on her village Nadupatti which is predominantly inhabited by Arunthathiyars, a dalit community.

தி இந்து செய்தி:


Five days after a Dalit-Vanniyar clash in a hamlet in Dindigul district, all the men in the Dalit hamlet of about 300 families, Nadupatti, have gone missing: as many as 50 were arrested by the police, while the remaining fled the hamlet. The clash has its genesis in a complaint of eve-teasing.

(இந்த முதல் பத்தியிலேயே வனமம்: 800 வன்னியர் குடும்பங்களின் ஆண்கள் ஊரில் இல்லை என்கிற விவரம் இந்த செய்தியில் இல்லை. அதுபோலவே, கைது செய்யப்பட்ட 50 பேரும் வன்னியர்கள் என்கிற தகவலும் இல்லை.)


தமிழ்நாட்டில் ஊடகங்கள் சாதி மோதல்கள் நேரும் போது, பொத்தாம் பொதுவாக 'இரு தரப்பினர் இடையேயான மோதல்' என்று குறிப்பிடுவார்கள். அல்லது 'தலித் - சாதி இந்துக்கள் மோதல்' என்று குறிப்பிடுவார்கள். இதனை தி இந்து இன்னும் கேவலாமாக்கி 'தலித் - இடைநிலைச் சாதி மோதல்' என்று குறிப்பிடும்.
இதற்கு மாறாக, எந்த ஒரு தனிப்பட்ட சாதியையும் நேரடியாகக் குறிப்பிட நேர்ந்தால், அதற்கு எதிர் தரப்பில் உள்ள தனி சாதியையும் குறிப்பிடுவதுதான் குறைந்தபட்ச ஊடகத் தர்மமாக இருக்க முடியும். எனவே, திண்டுக்கல் சம்பவத்தில் ஒரு தரப்பில் இருப்பது 'வன்னியர்' என்றால் - மறு தரப்பில் இருப்பது 'அருந்ததியினர்' என்று குறிப்பிடுவதே சரி.  ஆனால், இத்தகைய குறைந்தபட்ச நேர்மை எதுவும் தி இந்துவின் சாதிவெறிக் கண்களுக்கு புலப்படவில்லை.

தி இந்துவின் சாதிக்கலவரச் சதி!

திண்டுக்கல் சம்பவத்தினை 'வன்னியர் - அருந்ததியினர்' மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டது போன்று அல்லாமல் 'தலித் - வன்னியர் மோதல்' என தி இந்து குறிப்பிடக் காரணம் - வடதமிழ் நாட்டில் அருகருகே வாழும் 'வன்னியர்களுக்கும் பறையர் இன வகுப்பினருக்கும் இடையே' மோதல் நிலையை உறுவாக்க வேண்டும்' என்பதுதான்.

ஏனெனில், 'வன்னியர் - தலித்' மோதல் என்கிற செய்தி வந்தாலே வடதமிழ்நாட்டில் அது இந்த இரு பிரிவினருக்கும் இடையேயான மோதல் என்றே புரிந்துகொள்ளப்படும்.

எனவே, எப்படியாவது வன்னியர்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்ட வேண்டும் என்கிற அடங்காத வன்மத்துடன் எழுதுவதே தி இந்து பத்திரிகையின் குலத்தொழில் ஆகிவிட்டது.

தி இந்துவின் சாதிவெறி!

தி இந்து பத்திரிகை அதன் தமிழ் பதிப்பைத் தொடங்கிய போது - அதன் தலைமைப் பொறுப்பில் பார்ப்பனர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நிர்வாகக் கூட்டத்தில் முடிவெடுத்தனர். அதன்படி தி இந்து தமிழ் பதிப்பின் முதல் ஆறு தலைமைப் பொறுப்புகளில் பார்ப்பனர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளனர். இது தி இந்து குழுமத்தின் தன் சாதிப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

காஞ்சி சங்கராச்சாரிகளின் விடுதலையை, தி இந்து அன்று இரவே கொண்டாடியது. முதல் பக்கத்தில் வண்ணப் படத்துடன் தலைப்புச் செய்தி, உள்ளே கூடுதல் செய்தி ஒன்று, அப்புறம் தலையங்கம், கடைசிப் பக்கத்தில் சங்கரமடத்தின் முழுப்பக்க வண்ண விளம்பரம் என சாதிப்பாசம் வழிந்து ஓடியது.
தி இந்துவின் பார்ப்பனப் பாசத்தில் குறை காண எதுவும் இல்லை. ஆனால், வன்னியர்கள் மீது தி இந்துவுக்கு வன்மம் ஏன்? பார்ப்பனர்களிடம் ஊடக பலம் இருக்கிறது, வன்னியர்களிடம் ஊடக பலம் இல்லை என்கிற அதிகாரத்திமிர் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது?

கல்வி, ஆயுதம், பணம் என்கிற அடிப்படை அதிகாரங்கள் எல்லா காலங்களிலும் சிறுபான்மைக் கூட்டத்திடம் மட்டுமே இருக்காது. பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை ஆதிக்கத்தை அகற்றி, அதிகாரத்தை மீட்கும் காலம் வரும்.

தொடர்புடைய சுட்டிகள்:

தி இந்து - ஒரு விபச்சார பத்திரிகையா...? குற்றங்களில் கூட்டாளியாகும் பத்திரிகை அதர்மம்!

சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்:பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!

கருத்துகள் இல்லை: