Pages

திங்கள், டிசம்பர் 02, 2013

ஏற்காடு தேர்தலில் வன்னிய சாதி பிரச்சாரம்: போலிப்போராளிகள் ஓடி ஒளிந்தது எங்கே?

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றுதான் சாதிக் கட்சி. மற்ற எல்லா கட்சிகளும் சாதிகளுக்கு அப்பாற்பட்ட புனிதர்களின் கட்சி என்கிற ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது. குறிப்பாக, மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன், அ. மார்க்ஸ் போன்றவர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னின்று நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஏற்காடு இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. எனவே, அந்த தொகுதியில் சாதிக்கு அப்பாற்பட்ட தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்ப்பதுதானே சரியாக இருக்கும். ஆனால், அங்கு இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது.

வன்னியர் எதிர்ப்பு அரசியலுக்கு இடைவேளையா?

'தர்மபுரி சம்பவம், மருத்துவர் அய்யா அவர்களின் அனைத்து சமுதாயப் பேரியக்கம்' குறித்து எல்லா தொலைக்காட்சிகளிலும் வெறிகொண்டு பாய்ந்து பிடுங்கும் திமுக அடிவருடிகளான சுப. வீரபாண்டியனும் மனுஷ்யபுத்திரனும் ஏற்காடு தேர்தல் குறித்து பேசவும் இல்லை, அங்கு பிரச்சாரம் செய்யவும் இல்லை. வன்னிய சாதிவெறி குறித்த பிரச்சாரத்தை கவனமாக தவிர்த்து மௌனமாக இருக்கின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக தனித்து பிரச்சாரம் மேற்கொண்ட திருமாவளவன மிகச்சில கூட்டங்களை நடத்தி, அங்கும் கூட தர்மபுரி நிகழ்வு, வன்னிய ஆதிக்க சாதிவெறி என்றெல்லாம் பேசாமல் திரும்பியிருக்கிறார்.

(தர்மபுரி நாயக்கன் கொட்டாய் நிகழ்வுக்கு எல்லோருக்கும் முன்னதாக உண்மை அறியும் குழுவை அனுப்பிய திமுக, இப்போது திண்டுக்கல் கரியாம்பட்டி நிகழ்வுக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பாமல் தவிர்த்திருக்கிறது. இங்கே காண்க: தர்மபுரிக்கு அடுத்தது திண்டுக்கல்லா? வன்னியர்கள் இரத்தம் குடிக்கத் துடிக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்கள்!)

ஸ்டாலின் - கனிமொழி வன்னியர் ஆதரவு பிரச்சாரம்

ஏற்காடு தேர்தலில் வன்னியர் பகுதிகளில் திமுக வன்னியர்களுக்கு ஆதரவான கட்சி என்று ஸ்டாலின் - கனிமொழி ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

"ஏற்காடு தொகுதி வெள்ளாகுண்டம் பிரிவு ரோட்டில், ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, வன்னியர் சமுதாய மக்களுக்கான, 20 சதவீத ஒதுக்கீட்டை பெற, போராடிய வன்னியருக்கு, 3 லட்சம் ரூபாய் வீதம், நிவாரண உதவி வழங்கியது, வன்னியர் சமூகத்தினரை, பல்வேறு உயர் பதவிகளில் நியமித்தது, பொது நலவாரியம் அமைத்தது என, பல்வேறு சலுகைகளை வழங்கியது தி.மு.க., தான், என்றார்.

வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வன்னியர் ஓட்டுகள் அதிகம் உள்ளதால், அங்கு, ஓட்டுகளை கைப்பற்ற, தி.மு.க., நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி, ஸ்டாலின் பேசினார்" (இங்கே காண்க: சமுதாய ஓட்டுகளை கைப்பற்ற ஸ்டாலின் திட்டம்: ஏற்காடு பிரசாரத்தில் தலைவர்களுக்கு புகழாரம்).

"1980ம் ஆண்டு வன்னியர் சங்கம் இட ஒதுக்கீட்டுக்காக போராடியது. அவர்களின் கோரிக்கைக்கு அதிமுக செவிசாய்க்கவில்லை. 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றபிறகு, வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து பேசி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தந்தார். பல்வேறு பிரச்னைகளுக்காக வன்னியர்கள் போராடி சிறை சென்றார்கள். பலர் உயிர் தியாகம் செய்தனர். 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், 42 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து கையெழுத்து போட்டார். வன்னியர்களுக்காக பென்ஷன், நல வாரியம் அமைத்து தந்தது திமுக அரசு. ஆனால், ஜெயலலிதா அந்த நலவாரியத்தை முடக்கினார்" என்று ஸ்டாலின் பேசினார்  (இங்கே காண்க: வீரபாண்டி ஆறுமுகம் மரணத்துக்கு அதிமுக பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு).

ஏற்காடு தொகுதி தும்பல் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கனிமொழி பேசும்போது, "பா.ம.க., மீது பல வழக்குகள், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அக்கட்சியினர் மீது தொடுக்கப்பட்டுள்ளன. ராமதாசுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என கோரினால், அதை வழங்க மறுக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது" என்றார் (இங்கே காண்க: கனிமொழி பிரசாரத்தில் வன்னியர் கோஷம்: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமா?). 

(இதே கனிமொழி தான், வன்னியர்களுக்கு எதிராக இந்தியா டுடே கவின்மலர் நடத்திய கூட்டத்தில் சிறப்புறை ஆற்றினார். இங்கே காண்க: கனிமொழியின் சாதிஒழிப்பு நாடகமும் அம்மணமான புர்ச்சியாளர்களும்: வன்னியர் ஒழிப்பு மட்டும்தான் சாதிஒழிப்பா?)

அதிமுகவின் வன்னியர் ஆதரவு பிரச்சாரம்

அதிமுக அக்கட்சியில் உள்ள வன்னிய அமைச்சர்களை வைத்து வன்னியர் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறது.

மேலும், சிதம்பரத்தில் உள்ள ஒரு நபரின் மூலம் 'மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்' என்கிற ஒரு போலிப்பெயரை வைத்து சுவரொட்ட அடித்து ஏற்காடு தொகுதியில் ஒட்டியுள்ளனர். பாவம் சேலம் மாவட்டத்தில் ஆள் கிடைக்கவில்லை என்று கடலூர் மாவட்டத்திலிருந்து வன்னிய துரோகிகளை பிடித்து வந்துள்ளனர்.
திமுக - அதிமுக ஆதரவு பிரச்சாரம் குறித்த 'தி இந்து' செய்தி


The AIADMK and the DMK are concentrating their efforts on wooing the Vanniyars, a caste-Hindu community, in Yercaud, which goes to polls on December 4.

Reason: they constitute between 41 and 46 per cent in the constituency. The constituency has been reserved for ST candidates ever since it was formed in 1957. The large Vanniyar population is because the Vanniyar-majority Panamarathupatti Assembly constituency was largely merged with Yercaud after the last delimitation exercise.

With the Pattali Makkal Katchi, identified with the Vanniyars, not contesting the by-election, a major part of the campaign by the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) candidate P. Saroja and her rival from the Dravida Munetra Kazhagam (DMK) V. Maran, is not on the hills that make up Yercaud; it’s in the Vanniyar belts of Ayothiyapattinam and Vazhapadi.

“The DMK and the AIADMK are after the Vanniyar vote-bank, on the belief that they will decide the next MLA of Yercaud. They are neglecting more than 83,000 SC and ST voters who constitute 35 per cent of the total voters in the constituency. They will have to give due importance to SC and ST voters,” says Viduthalai Chiruthaigal Katchi’s district secretary R. Navarasan.

போலிப்போராளிகள் ஓடி ஒளிந்தது எங்கே?

சென்னையில் அமர்ந்து வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியில் பேசித்திரியும் திமுக - அதிமுக ஆதரவு போலிப் புரட்சிக் கும்பல், ஏற்காடு தேர்தலில் வன்னியர் எதிர்ப்பு பேசாது 'கள்ள மவுனம்' காப்பது ஏன்?

திமுக - அதிமுக கட்சிகள் வன்னியர் ஆதரவு பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதை இவர்கள் எதற்காக  மவுனமாக வேடிக்கைப் பார்க்கின்றனர்?

பாட்டாளி மக்கள் கட்சி சாதி ஆதரவு பேசினால் அது சாதிவெறி என்கிறவர்கள், திமுக - அதிமுகவினர் அதைச் செய்யும்போது ஏன் ஓடி ஒளிகின்றனர்? 

அறிவு நாணய நேர்மை மயிரிழை அளவுக்காவது இருக்குமானால், திமுக - அதிமுக வன்னியர் ஆதரவு பிரச்சாரத்தைக் கண்டிக்க சுப. வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன், அ. மார்க்ஸ், கம்யூனிஸ்டுகள், திக கட்சிக்காரர்கள் முன்வர வேண்டும்.

போலிப்போராளிகள் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும்: ஓட்டு பிச்சைக்காக வன்னியர் ஆதரவு வேடமிட்டு சாதி பேசும் திமுக - அதிமுகவை விட, வன்னியர்களின் உரிமை மீட்க சாதி பேசும் பாமக மிகமிக மேலானது, புனிதமானது.

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

இதை நான் ஏற்கிறேன் தோழர்களே

Unknown சொன்னது…

இவனுங்க பன்றது சாதி அரசியல் ஆனா நம்மை சொல்லறானுங்க

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

அவர்கள் எல்லாம் புரட்சிய வாதிகள் அல்ல அவர்கள் பா ம க எதிர்ப்பு போராளிகள் திராவிட கைகூலிகள் திராவிட அடிமைகள்

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

அவர்கள் எல்லாம் புரட்சிய வாதிகள் அல்ல அவர்கள் பா ம க எதிர்ப்பு போராளிகள் திராவிட கைகூலிகள் திராவிட அடிமைகள்

அழும்பில்வேள் படையாச்சி சொன்னது…

வன்னியரைப் பற்றியும், மருத்துவர் அய்யா அவர்களைப் பற்றியும் தங்கள் துர்நாற்ற வாயால் ஊடகங்களில் ஓலமிட்ட, தங்களை முற்போக்கு புரச்சிவாதிகளாகக் காட்டிக்கொண்டவர்கள் ஏற்காட்டில், அன்று பேசியதில் பாதியளவுக்காவது பேசியிருக்கலாமே, ஏன் பேசவில்லை? இப்போது தான் வன்னியரின் வாக்கு வங்கியைக் கண்டு பயம் வந்துள்ளது. அந்தப் பயம் இனிமேல் திராவிட கட்சிகளுக்கு நிரந்தமாக இருக்கும்; இருக்கவேண்டும்.

silambarasan.v சொன்னது…

naam yar endru 2014 MP Election katta vendum..vettri kani MANKANI..

silambarasan.v சொன்னது…

vettri kani Maankani_2014