Pages

புதன், ஜூலை 31, 2013

கனிமொழியின் சாதிஒழிப்பு நாடகமும் அம்மணமான புர்ச்சியாளர்களும்: வன்னியர் ஒழிப்பு மட்டும்தான் சாதிஒழிப்பா? 

சாதியத்துக்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கம் என்கிற ஒரு கருத்தரங்கம் சென்னையில் 29.7.2013 அன்று நடந்துள்ளது. மனுஷ்யப் புத்திரன், கவின்மலர் உள்ளிட்ட வன்னிய எதிர்ப்பு கும்பலால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டுள்ளார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

சாதியத்துக்கு எதிரான கருத்தரங்கம் என்றால் அதில் கலந்துகொள்பவர்கள் எல்லா சாதியையும் எதிர்ப்பவர்களாக இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் தமிழ்நாடு அல்ல. ஏனெனில், தமிழ்நாட்டில் சாதிய எதிர்ப்பு என்றாலே அதற்கு 'வன்னிய எதிர்ப்பு' என்பதுதான் பொருள்.

கனிமொழியின் நாடார் சாதிப்பற்று!

'சாதியத்துக்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கில்' பங்கேற்ற கனிமொழியின் கடந்த காலத்தை நீங்களே பாருங்கள். அவர் ஒரு தீவிரமான நாடார் சாதிப் பற்றாளர். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற "நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா" நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா மாநாட்டில் பேசுகிறார் கனிமொழி
அந்த மாநாட்டில் பேசிய கனிமொழி, 'நாடார்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதிதான்' என்றார். கூடவே, நாடார் சாதியைச் சேர்ந்த "எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னிலன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்" போன்றோரை நாடார் மாநாட்டுக்கு அழைத்திருக்க வேண்டும் என்றும் கோரினார். (ஆனால் பிரபஞ்சன், பொன்னிலன், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாம் தங்களை நாடார்கள் என்று கூறிக்கொண்டதாகத் தெரியவில்லை)

கனிமொழி நாடார்தான் - கருணாநிதி கருத்து

கனிமொழி மீது 2ஜி வழக்கு விவகாரம் கிளம்பிய போது, மாலை நாளிதழ்களில் பெரிய அளவில் அந்த செய்தி வெளியானது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர் ''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம், ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்." என்று வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறினார். அதாவது ஒரு நாடாரைப் பற்றி நாடார் பத்திரிகைகளே எதிர்மறையான செய்திகளை வெளியிடலாமா? என்று கேட்டார் கருணாநிதி.  (இங்கே காண்க: கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி - கருணாநிதி!)

இத்தனைக்கும் கருணாநிதி இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்தான் நாடார் வகுப்பை சேர்ந்தவர். 

ஆக, கனிமொழி தன்னை நாடார் சாதிப் பற்றாளர் என்று வெளிப்படுத்தியுள்ளார். கருணாநிதியும் கூட 'கனிமொழி நாடார் சாதியைச் சேர்ந்தவர்' என்று விவரித்திருக்கிறார். இப்படி ஒரு சாதியை ஆதரிப்பவரைக் கொண்டுவந்து, வன்னியர்களுக்கு எதிராகக் கூத்தடித்திருக்கிறார்கள் கவின்மலரும், மனுஷ்ய புத்திரனும். இந்த மானங்கெட்ட பிழைப்பு இவர்களுக்கு தேவையா?

சாதியத்துக்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கின் பின்னணி 

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்ட உடன், தமிழச்சி என்பவர் 'தேசியத் தலைவர் பிரபாகரனின் தியாகமும், தர்மபுரி இளவரசனின் தியாகமும் ஒன்றுதான்' என்றார். இதையே பின்பற்றி பலரும் "முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன்" என மாபெரும் தியாகங்களை வரிசைப்படுத்தினர். அதை வழிமொழியும் வகையில் மே 17 இயக்கம், சேவ் தமிள்சு இயக்கம் ஆகியன களம் இறங்கின.
மாபெரும் தியாகம்: முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன் (இது புர்ச்சியாளர்களின் தயாரிப்பு)
உடனே மனுஷ்ய புத்திரன் என்பவர்  "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்" என்கிற தகவலை பகிர்ந்து பொங்கி எழுந்தார்.

இதன்படி, மனுஷ்ய புத்திரனின் தோழரான கவின்மலர் இந்த அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கத்தை கட்டி எழுப்பினார். இதே பிரச்சனைக்காக கவின்மலர் ஏற்கனவே "சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்" என்கிற கடையை திறந்து மூடியவர் என்பதால் - அதே கும்பலை வைத்து புதிய அமைப்பை தொடங்கினார்.

இவர்கள்தான் மேடையில் 'பல' தலைவர்களும் கீழே 'சில' தொண்டர்களுமாக கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் மு.க. கனிமொழி எம்.பி, இரா. நல்லக்கண்ணு, ஜி. இராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், மனுஷ்ய புத்திரன், சங்கர சுப்பு, கவின்மலர் உள்ளிட்டவர்கள் பேசியதாகத் தெரிகிறது.

இவர்களில் 'சுப. வீரபாண்டியன்' கதையை இந்த இணைப்பில் காணலாம்: சுகவீரபாண்டியனின்... அம்மண அரசியல்..

'மனுஷ்ய புத்திரனின்' கதையை இந்த இணைப்பில் காணலாம்: ஒரு கவிஞர் சித்தரான கதை…

கனிமொழியின் நாடார் மாநாட்டு பேச்சு:

சிவகாசி, 2010 டிசம்பர்: "தி.மு.க. அரசைப் பொறுத்தமட்டில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். பொதுவாக பெண்களுக்கு அமைச்சரவையில் பதவி தரப்படுவது இல்லை. அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் மிக சாதாரண துறைகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் தி.மு.க. அரசு உலக அளவில் பேசப்படும் துறையான தகவல் தொழில்நுட்பத்துறையை நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. 
1957ம் ஆண்டு தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காமராஜர் முதல் அமைச்சராக இருந்தார். அப்போது சாதி பட்டியலை அரசு வெளியிட்டது. அந்த சாதி பட்டியலை பார்த்த முதல் அமைச்சர் கருணாநிதி காமராஜரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். நான் சார்ந்த இசை வேளாளர் சமுதாயத்தை மரியாதையுடன் சாதி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சாதியான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நாடான், சாணான் என்று மரியாதை குறைவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே? இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டார். அப்போது காமராஜர், கக்கனை பார்த்து என்னவென்று கேட்டார். அப்போது கக்கன் தவறு நேர்ந்து விட்டது. திருத்திக்கொள்கிறோம் என்று சபையிலே தெரிவித்தார். அந்த அளவுக்கு நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர் முதல் அமைச்சர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இந்த சமுதாயத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னிலன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரை அழைத்திருக்கலாம். அவர்களது கருத்துகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். 
தி.மு.க. அரசு நாடார் சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை அளித்து வருகிறது. தொடர்ந்து இந்த சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை அளிக்க தி.மு.க. அரசு பாடுபடும்." இவ்வாறு நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழாவில் பேசினார் கனிமொழி (இங்கே காண்க: நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி-கனிமொழி)

வன்னியர் ஒழிப்பு என்று வெளிப்படையாக பேசுங்கள்

முற்போக்கு வேடதாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்.  கூத்தடிக்கிற நீங்களும், உங்களை தூண்டிவிடுகிற மதவாத பண முதலைகளும் வன்னியர்களை மட்டும்தான் எதிர்க்கிறீர்கள். வன்னியர்களை மட்டும்தான் ஒழிக்க நினைக்கிறீர்கள். 

அப்புறம் எதற்காக, 'சாதிய ஒழிப்பு' என்று பொத்தாம் பொதுவாக பேசுகிறீர்கள்? நேரடியாக 'வன்னியர்கள்க்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கம்' என்று நடத்துங்கள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம்.

குறிப்பு: நாடார்கள் சாதி ரீதியாக அணி திரள்வதை நாம் ஆதரிக்கிறோம். சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இந்த நாட்டில் சாதி அமைப்புகளும் இருக்கும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. எந்த ஒரு சாதியும் சாதி அடிப்படையில் ஒன்று திரண்டு உரிமைக் கேட்பதில் எந்த தவரும் இருக்க முடியாது. சாதி ரீதியில் ஒன்று திரண்டு ஒட்டுமொத்த சமூகமும் முன்னுக்கு வருவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் நாடார்கள். அந்த வகையில் நாடார்கள் மாநாடு மிகவும் நியாயமானதே. அந்த மாநாடு ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!

2. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

3. இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

4. இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!

5. மனுஷ்ய புத்திரன் - இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற விரும்புகிறாரா?

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான பதிவு.. சாதி மறுத்து தலித்தை திருமணம் செய்ய சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த கூட்டத்தில் ஒருத்தனும் அதை செய்ததில்லை.. அதுவும் குறிப்பாக கனிமொழி, நாடார் சங்கத்தில் பிரதிநிதியாகவே தன்னை காட்டிக்கொள்கிறார்... திமுகவின் காசில் நடக்கும் மானங்கெட்ட மாநாடு..

kamal சொன்னது…

சாதிஇரண்டொழிய வேரு இல்லையெனக்கொண்டாலும் - சாதி இருக்கிரது என ஒரு சாதி. சாதி இல்லை என்கின்ற மற்றொரு சாதி இந்த சாதி இரண்டு ஒழிய சாத்தியம் என்ன...?