Pages

புதன், ஜூன் 11, 2014

வடபழனியில் வன்னியர் வரலாறு மறைப்பு

ஓர் இனக்குழுவை அழிக்க வேண்டுமானல் அதன் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இனக்குழுவின் வரலாற்றை அழிப்பதை, 'இனவெறியின் ஓர் அங்கம்' என்றும் சொல்லலாம்.

(வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA சிலரைப் பீடித்திருப்பது குறித்து "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA" பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்)

வன்னியர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டினர் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு காடவராய கோப்பெருஞ்சிங்கன்:

தமிழ்நாட்டின் பாடநூல்களிலும் வரலாற்று நூல்களிலும் எத்தனையோ மன்னர்களைப் படித்திருப்போம். ஆனால், கடலூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வடதமிழ் நாட்டை ஆண்ட காடவராய கோப்பெருஞ்சிங்கன் எனும் மாமன்னனைப் பற்றி யாரும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் சிலை
தெற்கே தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி, வடக்கே கோதாவரி ஆறு வரை கல்வெட்டுகள் கொண்ட இந்த மாமன்னன் வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட - கோப்பெருஞ்சிங்கன் தன்னை ஒரு வன்னியன் என்று சொல்லிக்கொண்டதுதான்  காரணம்!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு எதிரான இனவெறி கோலோச்சுகிறது என்பதற்கு கோப்பெருஞ்சிங்கனும் ஒரு உதாரணம் எனலாம்.

இதுபோன்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வடபழனியின் வரலாறு!

வடபழனியில் ஒரு வரலாற்று மறைப்பு

புலியூர்கோட்டம் எனப்படுகிற சென்னை வடபழனியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அண்ணாசாமி நாயக்கர். தனது வயிற்றுவலித் தீரவேண்டும் என்று முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடத் தொடங்கினார். நேர்த்திக் கடனாக திருத்தணி கோவிலில் நாக்கை அறுத்துக் கொண்டார். எனினும் அவருக்கு தொடர்ந்து பேச்சு வந்ததாகவும் வயிற்றுவலி தீர்ந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

பழனிமலை முருகன் கோவிலுக்கு நடந்தே சென்ற அண்ணாசாமி நாயக்கர், அங்கு ஒரு முருகன் படத்தை வாங்கி, அதனை தலையில் சுமந்து புலியூர்க் கோட்டம் வந்தார். அங்கு சிறு குடிசை அமைத்து முருகன் படத்தை வைத்து வழிபட்டார். அங்கு வந்தவர்களுக்கு குறிசொன்னார். அதனால் அந்த இடம் குறிமேடை ஆனது. (அந்த முருகன் படம் இப்போது வடபழனி ஆலயத்தின் தென்கிழக்கு மண்டபத்தில் உள்ளது)
அண்ணாசாமி நாயக்கர் பழனியிலிருந்து கொண்டுவந்து வழிபட்ட முருகன் படம்
பின்னர் இரத்தினசாமி செட்டியார் என்பவர் அண்ணாசாமி நாயகருக்கு அறிமுகமானார். அவர் அண்ணாசாமி நாயகரின் தொண்டராக ஆனார். இருவரும் சேர்ந்து முருகப்பெருமானுக்கு சிறு கோயில் ஒன்றை கட்டினார்கள். இரத்தினசாமி செட்டியார் தனது தொண்டராக பாக்யலிங்க தம்பிரான் என்பவரை தேர்வு செய்தார்.

இவ்வாறாக, வடபழனி முருகன் கோவிலில் அண்ணாசாமி நாயகர் முதல் சித்தராகவும், இரத்தினசாமி செட்டியார் இரண்டாம் சித்தராகவும், பாக்கியலிங்க தம்பிரான் மூன்றம் சித்தராகவும் கருதப்படுகிறர்கள்.

எங்கே இருக்கிறது வரலாற்று மறைப்பு?

மேற்கண்ட வரலாற்றின் படி தெரியவரும் செய்தி, வடபழனி கோவிலை உருவாக்கியவர் அண்ணாசாமி நாயகர். அவர் ஒரு வன்னியர் என்பதாகும்.

ஆனால், வரலாற்று அடையாளங்களில் இருந்து வன்னியர்களை அப்புறப்படுத்த வேண்டும். வன்னியர்களது அடையாளங்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டில் வழிவழியாக வரும் குணமாக இருப்பதால் - வடபழனி ஆலயத்திலும் அதனை அரங்கேற்றினார்கள்.

வன்னியர் அடையாளம் அழிப்பு

வடபழனி முருகன் கோவிலுக்கு வடமேற்கே, நெற்குன்றம் சாலையில் வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை நிர்மானித்து இதற்கான மண்டபத்தை 1997 இல் கட்டினார்கள்.

அவ்வாறு 'வடபழனி முருகன் கோவில் உருவாகக் காரணமான சித்தர்கள் ஆலயம்' அமைக்கப்பட்ட போது அதற்கான கல்வெட்டில் சித்தர்களின் சாதி அடையாளத்தை மாற்றிவிட்டார்கள். அதாவது:

முதலாம் சித்தர்: அண்ணாசாமி நாயகர்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி செட்டியார்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்

- என்பதை:

முதலாம் சித்தர்: அண்ணாசாமி தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி தம்பிரான்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்

- என்று மாற்றிவிட்டனர்.
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில் 'அண்ணாசாமி தம்பிரான்'
அதாவது, வன்னியர், செட்டியார் என்கிற சாதி அடையாளம் மறைக்கப்பட்டது. இந்த மூன்று சித்தர்களும் ஒரே குடும்பத்தை (தம்பிரான்) சேர்ந்தவர்கள் என்பது போன்ற கட்டுக்கதையைக் கட்டிவிட்டார்கள்.

இப்போது தினமலர் பத்திரிகை போன்ற பல இடங்களிலும் வடபழனி முருகன் கோவிலை உருவாக்கியவர் 'அண்ணாசாமி தம்பிரான்' என்கிற கட்டுக்கதைதான் வலம் வருகிறது.

வன்னியர் சங்கத்தின் போராட்டம்

அண்ணாசாமி நாயகர் என்கிற பெயரை அண்ணாசாமி தம்பிரான் என்று மாற்றியதற்கு வன்னியர் சங்கம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து 'அண்ணாசாமி தம்பிரான்' என்பதை வடபழனி கோவில் தென்கிழக்கு மண்டபப் படத்திலும், கோவில் இணயதளத்திலும் 'நாயக்கர்' என்று மாற்றியுள்ளனர்.

தமிழக அரசு கோவில் இணயதளத்தில் 'அண்ணாசாமி நாயக்கர்' என இருப்பதை இங்கே காண்க: ARULMIGU VADAPALANI ANDAVAR THIRUKOIL 

சித்தர்கள் ஆலயத்தில் உள்ள அண்ணாசாமி நாயக்கர் நினைவிடத்தில் 'தம்பிரான்' என்பதை அழித்துவிட்டு, அதன்மேல் 'நாயக்கர்' என எழுதியுள்ளனர். இப்போது இரண்டு பெயர்களுமே ஒன்றாகி தெரிகிறது!
 தம்பிரான் என்பதை அழித்துவிட்டு 'நாயக்கர்' என திருத்தியுள்ள படம்
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில், இன்னமும் 'அண்ணாசாமி தம்பிரான்' என்றே உள்ளது. தினமலர் நாளிதழ் அண்ணாசாமி நாயக்கரை, அண்ணாசாமி தம்பிரான் என்று சொல்வதை இங்கே காண்க: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் 

வடபழனி ஆலய கோபுர பதாகையில் அண்ணாசாமி நாயக்கர் என்று மாற்றுயுள்ளனர். ஆனால், இராமலிங்க செட்டியார் என்பது இராமலிங்க தமிபிரான் என்றுதான் உள்ளது.
தொடரும் இனவெறி

சுமார் 150 ஆண்டுகால வரலாற்றிலேயே இப்படி அப்பட்டமாக வன்னியர் வரலாற்று அழிப்பை செய்கிறவர்கள், கடந்த 1000 ஆண்டுகளில் எப்படியெல்லாம் இனவெறி வரலாற்று அழிப்பு வேலைகளைச் செய்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் செய்த மாபெரும் சாதனைகள் மறைக்கப்படுவதும், ஒரு சமூக நீதிப் போராளியான மருத்துவர் அய்யா அவர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு சாதி வெறியர் என்று பதிவுசெய்யப்படுவதும் - வன்னியர்கள் எனும் இனக்குழுவின் வரலாற்றை அழிக்கும் இனவெறி (VANNIYAPHOBIA) திட்டத்தின் ஓர் அங்கம்தான்.

அடையாள அழிப்பு இனவெறியர்களையும், அவர்களது தந்திரங்களையும் முறியடிப்பது ஒவ்வொரு வன்னியரின் கடமை என்பதை உணரும் காலம் வரவேண்டும். அப்போதுதான் உண்மை இனவெறியர்கள், நம்மைப் பார்த்து சாதிவெறியர் என்று சொல்லும் அவலத்தை முறியடிக்க முடியும்.

நாம் மீண்டெழுவோம். VANNIYAPHOBIA எனும் இனவெறி மனநோயை முறியடிப்போம்.

கருத்துகள் இல்லை: