Pages

வியாழன், மே 02, 2013

மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? தொலைக்காட்சியில் எனது நேர்காணல்-காணொலி!

மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான வன்னியர்கள் அடித்தும் வெட்டியும் காயப்படுத்தப்பட்டனர். வன்னியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகாயப் படுத்தப்பட்டுள்ளனர். வன்னியர்கள் வந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமிட்ட கலவரம் குறித்து நீதிவிசாரணை கேட்டுப்போராடிய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் காவல்துறையால் அலைகழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மரக்காணத்தில் கொல்லப்பட்ட வன்னியர்கள் விபத்தில் இறந்தார்கள் என்று சாதித்த காவல்துறையினர் , பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் படுகொலைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த கொடுமைகள் குறித்து 01.05.2013 அன்று மக்கள் தொலைக்காட்சியின் "நீதியின் குரல்" நேரலை நிகழ்ச்சியில் எனது நேர்காணல்.
மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 1


மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 2


மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 3


மரக்காணம்: உண்மையில் நடந்தது என்ன? - காணொலி - பகுதி 4



கருத்துகள் இல்லை: