Pages

புதன், பிப்ரவரி 19, 2014

நீதியரசர் சதாசிவம்: வரலாற்று சிறப்புமிக்க முழுமையான தீர்ப்பை இங்கே காண்க

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 18.2.2014ல் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன், இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை 19.2.2014ல் கூட்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இதோ:

2 கருத்துகள்:

Unknown சொன்னது…


vinoth says:
9:43 முப இல் பிப்ரவரி20, 2014

http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
போதும் என்று நினைக்கிறேன்
vinoth says:
9:58 முப இல் பிப்ரவரி20, 2014

இல்லை எழுதுவோம்…
http://mathimaran.wordpress.com/2014/01/23/surprise-742/#comment-12570
// தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.//

தமிழன் என்றால் செண்டிமெண்டல் இடியட்ஸ் என்று டெல்லி வாலாக்கள் சொல்வது உண்மை தான்.

சாதசிவ கவுண்டர் படத்தை போட்டு . நன்றி யாருக்கு சொல்கிறீர்கள். எதற்கு நன்றி..

நடந்திருப்பது என்ன ? தமிழர்கள் ஆகிய நமக்கு சூடு சுரணை மானம் ஈனம் வெட்கம் ரோசம் எதாவது உள்ளதா?

சு சாமி , ச சாமி உள்ளிட்ட பலர் மேல் கொலை பழி குற்றச்சாட்டு விசாரிக்கபடாமல் இருக்கு. வேண்டுமென்றே சம்பந்தம் இல்லாத சிலரை தூக்கிலிட்டால் வேலை முடிந்தது சாமிகள் & கோ தப்பித்து விடலாம் என்று தானே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..

இப்போதும் விடுதலை பற்றிய செய்தியில் இருப்பது என்ன? ராஜிவ் காந்தி குற்றவாளிகள் விடுதலை..

காமேடியாக இல்லையா.. குற்றவாளையை ஏன அய்யா விடுதலை செய்யவேண்டும் ? நிரபராதி என்று அல்லவா விடுதலை செய்யவேண்டும் ? அப்படி செய்தால் அப்போது குற்றம் செய்தது யார் என்ற கேள்வி வரும்.. சாமி & சோ மாட்டும்.

சதி என்னவென்றால் .. விடுதலை என்று சொன்னலே தமிழனுக்கு போதும். அதின் பின்னனி குறித்தெல்லாம் பார்க்க தமிழனுக்கு மூளை இருக்க என்ன ?. நாளையே தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு..இது ஒரு தவறான முன் உதாரணம் என்றூ சொல்லி வழக்கை நடத்தினால்.. இந்த தீர்ப்பு ரத்தாகி கழுத்தில் தூக்கு கயிறு இருகும்.

இப்போது செய்யவேண்டியது வழக்கை மறு விசாரணைக்கு எடுக்க வேண்டும். ரகோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்கு மூலம் வாங்கி, இவர்கல் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்ய வேணுடும்…

மேலும் இவர்கள் சிறையில் கழித்த ஆண்டுக்கும் இழந்த வாழ்க்கைகும் ஈடாக தலைக்கு 50 கோடியாவது நட்ட ஈடு தரவேண்டும். அந்த தொகையும் தவறாக வழக்கை நடத்தி, இவர்களை சிக்க வைத்த அதிகாரிகளின் சேமிப்பு சம்பளம் தனிப்பட்ட/ குடும்ப சொத்தில் பறிமுதல் செய்டு ஈடு கட்ட வேண்டும்.

அப்போது தான் இனி தவறாக வழக்கு நடத்த எந்த அதிகாரியும் நினைக்க கூட மாட்டர்.

இதை விடுத்து.. இப்படி கண்கள் பணீத்தால் சிரமம் தான்.

mani சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.