Pages

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூன்றுபேர் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா இப்போது கடவுளுக்கு நிகரானவர்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை 23 வருட சிறைவாசத்திற்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதற்காக நீதியரசர் சதாசிவம் அவர்களுக்கு தமிழினம் கடமைப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவுசெய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது (Considering the fact that the convicts were languishing jail for nearly 23 years, the Bench also gave a ray of hope for their release by saying that the State government could exercise its remission powers under Section 432 and 433 and following the due procedure in law).

எனவே, 14 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்தவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 இன் கீழ் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.

மன்னிப்பு - ஒரு வானளாவிய அதிகாரம்!

இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும். இந்த மன்னிப்புக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
குற்றம் எதுவானாலும் விசாரணை தொடங்கும் முன்பு, விசாரணை நடக்கும் போது, தண்டனை அளிக்கப்பட்ட பின்பு என எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் எந்த ஒரு குற்றவாளியையும் மன்னிக்கலாம். இது ஒரு உச்சபட்சமான அதிகாரம் ஆகும். இந்திய அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின்படி மாநில அரசுக்கு இந்த மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னிக்கும் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம். 

நேற்றுவரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை குறைக்கும் அதிகாரம், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் என இரண்டு அதிகாரங்கள் இருந்தன. உச்சநீதிமன்றம் மரணதண்டனையை குறைத்துள்ளதால், இப்போது விடுதலை செய்யும் அதிகாரம் மட்டுமே மீதமிருக்கிறது.

விடுதலை செய்யும் அதிகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றத்தை விட மேலான அதிகாரம் படைத்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.

எனவே, கடவுளுக்கு இருப்பதாகக் கருதப்படும் அதே அதிகாரம் இப்போது தமிழக முதல்வருக்கும் இருப்பதால் - 

14 ஆண்டு சிறைதண்டனை முடிந்தவர்கள் விடுவிக்கப்படலாம் என்கிற குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433 பிரிவுகளின் கீழோ; எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் என்கிற இந்திய அரசியல் சாசன அதிகாரம் 161 இன் கீழோ;

சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உட்பட நீண்டகாலமாக சிறையில் இருப்போர் அனைவரையும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

2. தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா? 


3. முதலமைச்சர் நினைத்தால் இப்போதும் 3 உயிர்களை காக்க முடியும்.


4. தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?


5. மருத்துவர் இராமதாசு அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் -இங்கே காண்க. (தமிழ்)

1 கருத்து:

Samy சொன்னது…

Thanks a lot Supreme Court. Samy