Pages

திங்கள், டிசம்பர் 26, 2016

வன்னியர்களை தோற்கடித்த தெலுங்கு மன்னன்: மாபெரும் தமிழர் வீழ்ச்சியின் தொடக்கம்

பாஜகவுக்கு காவடி தூக்கும் வன்னியர்கள் சிலபேர், அப்படியே இந்து விஜயநகரப் பேரரசுக்கும் சேர்ந்து ஜால்ரா அடிக்கிறார்கள். ஆனால், இதே இந்து விஜயநகரப் பேரரசால்தான் வன்னியர்கள் பேரழிவுக்கு ஆளானார்கள்.

இன்று வரை தொடரும் வன்னியரின் வீழ்ச்சி விஜயநகரப் பேரரசின் ஊடுருவலில்தான் தொடங்கியது.

தெலுங்கு ஆதிக்கத்தின் தொடக்கம்

துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம மரபினரான ஹரிஹரன்-புக்கன் உள்ளிட்ட சகோதரர்களால் விஜயநகர அரசு 1336-ல் உருவானது. இந்த புக்கனின் மகன்தான் குமார கம்பணன். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக தமிழகத்தின் மீது படையெடுத்தான் குமார கம்பணன். அப்போது அவனது சாம்ராஜ்ய விரிவாக்கத்துக்கு மிகப்பெரிய தடையாக இருந்தவர்கள் வன்னியர்கள்.

அப்போது - தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் சம்புவராயர் மரபைச் சேர்ந்த இராஜ நாராயணன் (கி.பி.1339 - 1363) என்பவர். சம்புவராயர்களின் அரசிற்குப் படைவீடு ராச்சியம் என்று பெயர். இராஜ நாராயணனின் தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கியது படைவீடு ராச்சியம். சம்புவராயர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாட்சிகள் எனப்படும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.

எல்லை காத்த வன்னியர்கள்

தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் - அதற்கு வன்னியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் குமார கம்பணனின் முக்கிய இலக்காக இருந்தது. இதனை 1380 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட மதுராவிஜயம் எனும் சமற்கிருத காவியம் குறிப்பிடுகிறது.
'தமிழ்நாட்டை வெற்றியடைய வேண்டுமானால் நீ முதலில் வன்னியர் ஆட்சியை வீழ்த்த வேண்டும்' என்று குமார கம்பணனிடம் அவனது தந்தை புக்கன் அறிவுரைக் கூறினான். அதனை ஏற்று வன்னியர் ஆட்சியை வீழ்த்தினான் என்கிறது குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல்.

தனது தெலுங்கு - இந்து இராஜ்யத்தை விரிவுபடுத்தவே குமார கம்பணன் தமிழ்நாட்டை கைப்பற்றினான், வடதமிழ்நாட்டை ஆட்சி செய்த வன்னிய மன்னர்களை தோற்கடித்தான். அதன்பின்னர் மதுரையை ஆண்ட முஸ்லிம் சுல்தான்களை வெற்றி கொண்டான். அதுவே தமிழ்நாட்டில் தெலுங்கு சாம்ராஜ்ய ஆதிக்கமாக விரிவடைந்தது.
ஹரிஹர சாஸ்திரி, சுப்ரமணிய சாஸ்திரி ஆகிய வரலாற்று அறிஞர்கள் 1924 ஆம் ஆண்டில் எழுதிய 'மதுராவிஜயம்' குறித்த ஆய்வு நூலில், முதலில் வன்னிய ராஜாவை தோற்கடித்து அதன் பின்னர் துருக்க ராஜாவை தோற்கடிக்க வேண்டும் என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதை குறிப்பிட்டுள்ளனர். (attack and conquer the "Vannyarajas" further south and the Turushkarajas reigning at Madhura - Madhura Vijaya or Virakamparaya Charita - An Historical Kavya by Ganga Devi, by G. Harihara Sastri and V. Srinivasa Sastri 1924. படம் 1.)
இதே கருத்தை 'வன்னியர்களின் தலைவன் சம்புவராயனை தோற்கடிக்க வேண்டும்' என்று குமார கம்பணனின் தந்தை ஆலோசனை கூறியதாக கர்நாடக பல்கலைக்கழகத்தின் கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் ஆய்வு நூலும் குறிப்பிடுகிறது. (Bukka I advised his son Kumara Kampana to march against the Shambuvaraya...The Sambuvaraya is the leader of "Vanniyas", Gangadevi's Madhravijayam - A Critical Study, by BA. Dodamani, Karnataka University 1991 படம் 2.)

தொடரும் தெலுங்கு ஆதிக்கம்

கி.பி.1362 -ல் இராஜ நாராயணச் சம்புவராயரை தோற்கடித்து தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையைச் சிற்றரசர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினான்.

விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உறவுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது. விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான தெலுங்கு படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இப்படித்தான் தெலுங்கு நாயக்கர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ்நாடு சென்றது.

அன்று வன்னிய ராஜ்யத்தினை வீழ்த்தியதில் தொடங்கிய தெலுங்கு ஆட்சியும் தமிழகக் கொள்ளையடிப்பும் இன்று  ராம மோகன ராவ், சேகர் ரெட்டி வரை தொடருகிறது!

இந்த ஆதிக்க போக்கிற்கு இந்து சாம்ராஜ்யம் என்கிற போர்வையை போர்த்தி ஏமாற்றுகிறது இந்துத்வ கும்பல்!

கருத்துகள் இல்லை: