Pages

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

மலையாளிகளால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' - தமிழர் கட்சி ஒன்று இந்திய அளவில் சாதனை படைத்ததை மறைத்து எழுதியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிகையின் இனவெறியும், சாதிவெறியும் இதன் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 

மறைக்கப்படும் சாதனை

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதால், இதனை எவரும் பேச மறுக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU Versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது, பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு 'தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற வேண்டும்' என்று தொடுத்த வழக்கின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டின் போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, பாமகவின் வழக்குடன் அதுபோன்ற இதர வழக்குகளையும் இணைத்து விசாரணை நடத்தி 'இந்தியா முழுவதுக்குமாக' தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், ஊடகங்களும் சாதி வெறியர்களும் - ஏதோ சில பொதுநல அமைப்புகள் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது - என்பது போல மேம்போக்காக எழுதுகின்றனர். குறிப்பாக, மலையாளிகள் ஆதிக்கத்தில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், இந்த வழக்கின் தலைப்பு  "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" என்பதைக் கூட குறிப்பிடாமல், வேறு ஒருவர் தொடுத்த வழக்கு என்பது போல எழுதியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18.12.2016
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இவ்வாறு சாதிவெறி, இனவெறியுடன் உணமையை மறைத்து செய்திகளை வெளியிடுவதை விட, அந்த ஊடகத்தை நடத்துபவர்கள் பாலியல் தொழிலை நடத்துவது மேலானதாக இருக்கும்.

பாமகவின் மாபெரும் சாதனை

பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் - இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்; நெடுஞ்சாலைகளின் வெளிப்புற எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்ககக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து பார்க்கும் போது, பார்வையில் படும் வகையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் பலகைகளோ, விளம்பரங்களோ எதுவும் இருக்கக் கூடாது - என்று தீர்ப்பளித்துள்ளது.

இது உலகளாவிய சாதனை
1. உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உலக நாடுகள் உருவாக்கியுள்ள 'ஆபத்தான மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்கான உலக வியூகத்திட்டத்தின் படி (Global strategy to reduce harmful use of alcohol 2010)- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், மதுபானம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், மதுமான விளம்பரங்களை ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகள் (drink-driving policies and countermeasures; availability of alcohol; marketing of alcoholic beverages) இந்த தீர்ப்பின் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.
2. ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'தொற்றா நோய்களை தடுக்கும் திட்டத்தின்' (Global Action Plan for the Prevention and Control of NCDs 2013-2020) ஒரு முக்கிய அங்கமான, மதுப்பழக்கதை குறைத்தல் (At least a 10% relative reduction in the harmful use of alcohol) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு வழிசெய்கிறது.
3.  ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்தின்' (Global Plan for the Decade of Action for Road Safety 2011-2020) ஒரு முக்கிய அங்கமான,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல் (Set and seek compliance with drink–driving laws and evidence-based standards and rules to reduce alcohol-related crashes and injuries) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு மிகப்பெரிய அளவில் வழிசெய்கிறது.

பாமக வழக்கின் வெற்றி என்பது, ஐநா அவையும், உலக சுகாதார நிறுவனமும் முன்வைக்கும் உலகளாவிய மாபெரும் லட்சியத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு - ஒரு மாபெரும் வரலாற்று சாதனை - இதனை சாதித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்கிற ஒரே காரணத்துக்காக கண்டும் காணாமல் செய்யப்படுகிறது.

ஊடகங்களின் இந்த மூடிமறைத்தலுக்கு சாதி வெறியைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இணைப்பு: பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதோTHE STATE OF TAMILNADU Versus K BALU & ANR

CIVIL APPEAL Nos .12164-12166 OF 2016
THE STATE OF TAMILNADU Versus K BALU & ANR 

Hon'ble the Chief Justice, His Lordship T.S. Thakur
Hon'ble Dr. Justice D.Y. Chandrachud  
Hon'ble Mr. Justice L. Nageswara Rao.

- judgment of the Bench - 

We accordingly hereby direct and order as follows :

(i) All states and union territories shall forthwith cease and desist from granting licences for the sale of liquor along national and state highways;

(ii) The prohibition contained in (i) above shall extend to and include stretches of such highways which fall within the limits of a municipal corporation, city, town or local authority;

(iii) The existing licences which have already been renewed prior to the date of this order shall continue until the term of the licence expires but no later than 1 April 2017;

(iv) All signages and advertisements of the availability of liquor shall be prohibited and existing ones removed forthwith both on national and state highways;

(v) No shop for the sale of liquor shall be (i) visible from a national or state highway; (ii) directly accessible from a national or state highway and (iii) situated within a distance of 500 metres of the outer edge of the national or state highway or of a service lane along the highway.

(vi) All States and Union territories are mandated to strictly enforce the above directions. The Chief Secretaries and Directors General of Police shall within one month chalk out a plan for enforcement in consultation with the state revenue and home departments. Responsibility shall be assigned interalia to District Collectors and Superintendents of Police and other competent authorities. Compliance shall be strictly monitored by calling for fortnightly reports on action taken.

(vii) These directions issue under Article 142 of the Constitution.
------------------


கருத்துகள் இல்லை: