Pages

புதன், டிசம்பர் 28, 2016

இன்று: ஒரு பிரதமர் அக்னி பிரவேசம் செய்யும் நாள்!

50 நாட்களில் பணத்தாள் தட்டுப்பாடு நீங்காவிட்டல் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார் நரேந்திர மோடி.

இன்றுதான் அந்த 50 ஆவது நாள் என்பதை அவருக்கு யாராவது புரிய வைப்பார்களா?

"பணமதிப்பு நீக்கம் என்பது மாபெரும் ஊழல்" 

2017 ஆம் ஆண்டு முழுவதுமே பணத்தாள் பற்றாக்குறை நீங்காது. ஏடிஎம் எந்திரங்கள் இயங்காது. வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தினை - சில ஆயிரம் மதிப்பிலான பெரிய தொகை - பணத்தாளாக வாங்கவே முடியாது.

புதிய பணத்தாளை தேவையான அளவு அச்சடிக்கவே இல்லை. இனி அச்சடிக்கவும் மாட்டார்கள்!

ஏனெனில், பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு (வராக்)கடனாக கொடுக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் செலுத்தப்படும் பணத்தை வங்கிகளிலேயே முடக்கி விட்டார்கள். இனி அதில் பெரும்பகுதியினை பணத்தாளாக வெளியே எடுக்க வாய்ப்பே இல்லை.

பணமதிப்பு நீக்கம் என்பதுதான் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் என்பதை எதிர்கால வரலாறு சொல்லும்.

கருத்துகள் இல்லை: