Pages

திங்கள், டிசம்பர் 19, 2016

ரூ.5000 புதிய உச்சவரம்பு: இந்தியாவில் கருப்பு பணமே இல்லையாம்!

டிசம்பர் 30 ஆம் தேதிவரை, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கியில் செலுத்தலாம் என்று அறிவித்த மத்திய அரசு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது. அடுத்த பத்து நாட்களில் ஒரே ஒருமுறை மட்டும்தான் 5000 ரூபாய்க்கு மேல் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

அதுவும் கூட, இரண்டு வங்கி அதிகாரிகள் முன்பாக, 'இவ்வளவு நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தாதற்கான காரணத்தை விளக்கிக் கூறி', அவர்கள் அதனை நம்பினால் மட்டுமே, 'ஒரே ஒருமுறை' வங்கியில் பழைய பணத்தை செலுத்த முடியுமாம். மற்ற எல்லோருக்கும் அடுத்த பத்து நாட்களில் மொத்தமாக 4999 ரூபாய்தான் உச்சவரம்பு!

"ஏன் இந்த தடுமாற்றம்?"

கருப்பு பணத்தை ஒழிக்கிறேன், கள்ளப் பணத்தை ஒழிக்கிறேன் என்பதெல்லாம் வெளியில் சொல்லப்பட்ட மோசடி காரணங்கள்.  'மக்களிடம் உள்ள பணத்தை வங்கிக் கணக்கில் முடக்கி, அதனை பெரும் பணக்காரர்களுக்கு கடனாக வாரி வழங்குவது மட்டும்தான்' மோடி அரசின் உண்மையான நோக்கம்!

எனினும், சுமார் 14 லட்சம் கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளை ஒழிக்கும் போது, அதில் சுமார் 4 லட்சம் கோடி அளவுக்கு பணம் திரும்ப வராது என்றும், அந்தப் பணம் ரிசர்வ் வங்கியின் பணமாக மாறுவதால், அதிலிருந்து ஓரிரு லட்சம் கோடி ரூபாயை எடுத்து - ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று மோடி அரசு திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார்கள்!

அதாவது, பெரும் பணக்காரர்களுக்கு கொடுத்த 8 லட்சம் கோடி ரூபாய் பணம் வராக்கடனாக போய்விட்டதால் - திவாலாகிவிட்ட வங்கிகளின் கணக்கில் மக்கள் பணத்தை குவித்து, மீண்டும் பணக்காரர்களுக்கே கடனை வாரி வழங்கும் நோக்கம் ஒருபக்கம் - மக்களின் கொந்தளிப்பை அடக்க, ஏழைகளின் கணக்கில் கருப்புப் பணத்தை பகிர்ந்தளிப்பது இன்னொரு நோக்கம் ஆகும்.

"ஏமாந்து போனது மோடி அரசு"

மக்களின் பணத்தை பிடுங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் ஒரு நோக்கத்தில் மட்டும்தான் மோடி அரசு வெற்றி அடைந்துள்ளது. ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 14 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் முழுவதுமே வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் நிலை இப்போது உருவாகி உள்ளது.

அதாவது, ஜனவரி முதல் வாரத்தில் கணக்கு பார்க்கும் போது - எல்லா ரூபாய் நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன. இந்தியாவில் பணத்தாளாக கருப்பு பணமே இல்லை என்று அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!

இப்படி, எல்லா பணமும் திரும்பவும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதை தடுக்கவே இப்போதைய புதிய 5000 ரூபாய் உச்சவரம்பு திணிக்கப்படுகிறது.
இந்தியாவில் இப்போது நடப்பது மீண்டும் ஒரு துக்ளக் தர்பார்! எதற்கும் நாமும் சொல்லி வைப்போம் - "பாரத் மாதாகீ ஜே!"

தொடர்புடைய சுட்டிகள்:

1. 500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

2. மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

3. மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

4. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?


5. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

கருத்துகள் இல்லை: