Pages

வியாழன், ஜூன் 16, 2011

"பழைய பாடத்திட்டம்" இனி இல்லவே இல்லை - உண்மையை சொல்ல தமிழகஅரசு தயங்குவது ஏன்?


"பாடத்திட்டம் குறித்த முடிவு தெரியும் வரை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடங்கள் எவை?" எனும் 16.6.2011 செய்தியில் "தமிழகத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் சமச்சீர் கல்வி கற்பிப்பதா அல்லது பழைய பாடபுத்தகங்கள் படி சொல்லித்தருவதா என்பதில் முடிவு காணப்படவில்லை." என செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

அதே பக்க செய்தியில் "பள்ளிகளில் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா? 3 வாரங்களுக்கு என்ன பாடம் நடத்தப்போகிறார்கள் என்பது குறித்து ஆசிரியர்கள் வெளியில் யாரிடமும் கருத்துச் சொல்லக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, மெட்ரி குலேசன் பள்ளி முதலாளிகள் தொலைக்காட்சி பேட்டிகளில் "பாடத்திட்டத்தை முடிவு செய்யும் வரையில் நாங்கள் பழைய பாடங்களையே நடத்துவோம்" என்று வேறு கூறியுள்ளனர்.

ஏன் இந்த 'தேவையில்லாத' குழப்பம்?

சமச்சீர் கல்வி குறித்த குழப்பத்தில், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்பு ஒரு செய்தி தெளிவாக இருக்கிறது. 'இனி ஒருபோதும் பழைய பாடங்களுக்கு வேலை இல்லை' என்பதுதான் அந்த தெளிவான செய்தி.

அதாவது "பள்ளிகளில் சமச்சீர் கல்வியா? பழைய பாடத்திட்டமா?" என்ற கேள்விக்கு இனி வேலையே இல்லை. மாறாக "சமச்சீர் கல்விக்கு இப்போது அச்சடிக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது வேறு புதிய புத்தகங்களா? எதைப் பயன்படுத்தப் போகின்றனர்?" என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

சமச்சீர் கல்விக்கு முந்தைய பழைய புத்தகங்களை தமிழ்நாடு அரசு அச்சிட்டாலும் கூட அவற்றை இனி பயன்படுத்த முடியாது. உச்சநீதி மன்றம் அதற்கு முடிவு கட்டிவிட்டது.

இதுகுறித்து ஆங்கில பத்திரிகைகள் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளன:


1. Indian Express: Hearing the state government’s challenge against the HC order, a vacation bench of Justices B S Chauhan and Swatanter Kumar decided on the expert panel to “examine ways and means to implement the Unified System of School Education”.

2. India Education Review: The Supreme Court of India has directed the Tamil Nadu government to set up an expert committee to examine ways and means to implement the Uniform System of School Education in the state.

3. The Hindu: It made it clear that since the validity of the Act had been upheld by the High Court and the Supreme Court, the committee could not go into the issue of change of the system. It said the committee should consider how to implement the directions of the High Court given in April 2010 for the implementation of the Act. It should complete the proceedings to enable the High Court to decide the writ petition expeditiously.
பழைய புத்தகங்கள் இனி வராது, அவற்றை பள்ளிகளில் நடத்தவோ, மாணவர்கள் படிக்கவோ வேண்டாம். பெற்றொர்கள் அவற்றை தேடிப்பிடித்து வாங்கவும் வேண்டாம் - என்கிற எளிதான உண்மையை தமிழக அரசோ தமிழ் பத்திரிகைகளோ இன்னமும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, பெற்றோரையும் மாணவர்களையும் குழப்பத்திலிருந்து விடுவிக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.

அடுத்தக்கட்ட சோதனை.

பழைய பாட புத்தகங்கள் செல்லாது என்கிற நிலையில் -

1. சமச்சீர் கல்வி பட புத்தகங்களை 'சிலவற்றை நீக்கிவிட்டு' ஏற்க வேண்டும், அல்லது

2. புதிதாக பாட புத்தகங்களை எழுத வேண்டும்

 - என்கிற இரண்டு வாய்ப்புகள்தான் தமிழக கல்வித்துறைக்கு இருக்கிறது.

சமச்சீர் கல்வி பட புத்தகங்களை 'சிலவற்றை நீக்கிவிட்டு' ஏற்றால் இன்னும் ஒருமாத 'உள்ளிருப்பு விடுமுறைக்கு பின்' பள்ளிகள் நடத்தலாம். 


அதைவிட்டுவிட்டு 'புதிதாக பாட புத்தகங்களை எழுத வேண்டும்' என்று முடிவெடுத்தால் - உள்ளிருப்பு விடுமுறையை 4 மாதங்கள் நீட்டிக்க வேண்டியதுதான்.

பெற்றோர் மாணவர் மன உளைச்சலுக்கு ஓட்டுப்போட்ட மக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!


"The Apex Court said that the present case was a glaring example of a legislative enactment affecting the future of two crore students who are studying in Tamil Nadu schools." - India Education Review




2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

விரைவில் ஒரு தீர்வு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சமச்சீர் கல்வியே என் விருப்பமும் கூ்ட....