Pages

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 19, 2017

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும்.

ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி

வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம்

இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர்

(பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ரஜினி: தலித் தலைவர்  

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
காலா திரைப்படத்தில் MH BR 1956

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

வியாழன், ஜூன் 01, 2017

தலித் தலைவர் வேடமெடுக்கும் ரஜினிகாந்த் - காமராஜருடன் ஒப்பிடும் தினத்தந்தி 

அண்ணல் அம்பேத்கரின் சமூகமான மராட்டிய தலித் மகர் சமூகத்தை சேர்ந்தவரான நடிகர் ரஜினி காந்தை - கர்மவீரர் காமராஜருடன் ஒப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தனக்கென எந்த சொத்துமே இல்லாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் அவர்களை, தமிழக மக்களை சுரண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருக்கும் ரஜினி காந்துடன் ஒப்பிடும் துணிச்சல் தினத்தந்திக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை!

யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. உண்மையில் எல்லா மக்களும் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும், அரசியல் அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவதும் தான் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.

அதே நேரத்தில், அரசியலில் தலைமை பொறுப்புகளுக்கு வர நினைப்பவர்கள், அதற்கான தகுதிகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசியலில் தலைமையேற்க விரும்புகிறவர்கள், அந்த மாநிலத்தின் பிரச்சினைகளில் - சிலவற்றிலாவது தமக்கென நிலைப்பாட்டினையும், தீர்வுகள் குறித்த கருத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும். நடிகர் ரஜினி காந்திற்கு அப்படி ஏதாவது கருத்தோ, தீர்வோ இருக்கிறதா?

தமிழர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக மாநிலத்தின் அடாவடி குறித்து ரஜினியின் கருத்து என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் தமிழினத் துரோகம் குறித்து ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினிக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமா அல்லது கர்நாடகத்தில் உள்ள அவரது கோடிக்கணக்கான முதலீடுகள் முக்கியமா - என தினத்தந்தி கேட்குமா?

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டாரா ரஜினி காந்த்? தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பினாரா? தெருவுக்கு வந்து போராடினாரா? இதுகுறித்தெல்லாம் அவரிடம் கேள்வி கேட்டதா தினத்தந்தி?
மீனவர் படுகொலை, கச்சத்தீவு மீட்பு, முல்லைப்பெரியாறு அணை உயர்த்துதல், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்து, நீட் தேர்வு திணிப்பு, இந்திய அரசின் இந்தி திணிப்பு - இவற்றுக்கெல்லாம் ரஜினி காந்த் என்ன சொல்கிறார் என்பதை தினத்தந்தி ஒருமுறையாவது கேட்டிருக்குமா?

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது, வெள்ள நிவாரணத்துக்காக நடிகை ஹன்சிகா 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். நடிகை சமந்தா 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பலகோடி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் தான் கொடுத்தார். தமிழர்கள் மீதான அக்கறையில் 'ஹன்சிகா - சமந்தா' வை விட கீழானவராகவே ரஜினிகாந்த் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். இந்த உண்மையை இப்போது பேசுமா தினத்தந்தி?

தலித் தலைவர் ரஜினி - உணவு உரிமைக்காக குரல்கொடுக்காதது ஏன்?

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அனைத்து சமூகங்களை போன்று, தலித்துகள் அரசியலில் ஈடுபடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், தனது தலித் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஜினி காந்த் - மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?

அண்ணல் அம்பேத்கரையும், அவரது "Maharashtra BR Ambedkar 1956" புரட்சியையும், தனது தலித் அடையாளத்தையும் மட்டும் ரஜினி காந்த் முன்னிறுத்தினால் போதாது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மட்டிறைச்சிக்கு எதிரான கருத்துகளை எதிர்த்தது போன்று ரஜினி காந்தும் எதிர்க்க வேண்டாமா? இது குறித்து எதுவும் கேட்காமல் தினத்தந்தி மவுனம் சாதிப்பது ஏன்?

காமராஜருக்கு இணையாக ரஜினியை முன்னிறுத்தியதற்காக தினத்தந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

சனி, டிசம்பர் 10, 2016

எனக்கென்று உறவினர் கிடையாது - ஜெயலலிதா சொன்னதும் நடந்ததும்!

"எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. 
எனக்கென்று உறவினர் கிடையாது. 
எனக்கு சுயநலம் அறவே கிடையாது"

செல்வி ஜெயலலிதா வாட்ஸ்அப் பேச்சு (15.12.2015): இங்கே சொடுக்குக.

நடந்தது என்ன? படத்தில் காண்க: 
நக்கீரன் 
ஜூனியர் விகடன்

வியாழன், அக்டோபர் 13, 2016

ரெமோவும் ஆனந்த விகடனும்: தறுதலைக் காதலை எதிர்க்கும் தறுதலை!

தறுதலைக் காதலை போற்றி வளர்க்கும் 'ரெமோ' படத்தின் மீது பாய்ந்து விழுந்து குதறியிருக்கிறது ஆனந்த விகடன். அந்த திரைப்படம் குறித்த விமர்சனத்தில் "இது மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கே கேடு!" என்று பொங்கியிருக்கிறது விகடன் விமர்சனக் குழு!

இந்த விமர்சனத்தில்:

ஒரு பெண்ணைக் காதலிக்கவைக்க, என்னவும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பின்னாலேயே திரிந்து டார்ச்சர் கொடுக்கலாம். அந்தப் பெண்ணே `எனக்கு இந்த லவ்ல விருப்பம் இல்லை, பின்னால் வராதே!' என விரட்டினாலும் விடவே கூடாது. அவரை ஐ லவ் யூ சொல்லவைக்க, எந்த லெவலுக்கும் இறங்கலாம். இதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி. 

படம் நெடுக நிச்சயதார்த்தம் ஆன பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ்… தூத்துக்குடி பிரான்சினாவை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். 

`பெண் என்பவள், இலக்குவைத்து அடையக்கூடிய பொருள்’ என்பதே இயக்குநர் முன்வைக்கும் அழுத்தமான மெசேஜ். 

- என்கிறது ஆனந்த விகடன்.

இடிப்பது பெருமாள் கோவில்: படிப்பது ராமாயணமாயனமா?

தமிழ்நாட்டின் தறுதலைக் காதல் நாடகங்கள் அனைத்துக்கும் வக்காலத்து வாங்கிவந்தது இதே விகடன் கும்பல் தான்.

"தருமபுரி"

தருமபுரி சம்பவத்தின் போது - திருமண வயதை அடையாத 19 வயது நபரின் தறுதலை திருமணம் தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை விகடன். மாறாக, 19 வயது சிறுவனின் காதல்தான் புரட்சிகரமான, புனிதமான, வரலாற்று சிறப்பு மிக்க காதல் என்று கொண்டாடியது விகடன். இதுபோன்ற குழந்தைகளின் சாதி ஒழிப்பு காதலை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது விகடன் கும்பல்.

"நுங்கம்பாக்கம்"

இன்னுமொரு தறுதலை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை முகத்திலேயே வெட்டிக்கொன்றான். அந்தக் கொடியவன் பின்னர் சந்தேகமான முறையில் மரணமடைந்தான். சிலர் அது சிறையில் நடந்த கொலை என்றனர். பிரேத பரிசோதனை செய்த 'எய்ம்ஸ்' மருத்துவர் - அவன் கொலைசெய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

அந்த தறுதலைக் காதல் கொலைக்காரனை தியாகியாக்கி, கவிதை வாசித்தது விகடன்.
கொலைகாரன் ராம்குமாரை புகழ்ந்து  ஜூனியர் விகடனில் வெளியான பழனிபாரதி கவிதை

இப்படி, சாதி ஒழிப்பு போர்வையில் தறுதலைக் காதலுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் விகடன் கும்பல்தான் - இப்போது தறுதலைக் காதல் திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்துள்ளது.

"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா?" என்பார்கள், ஆனால், "பெருமாள் கோவிலை இடிப்பதையே" முழுநேரத் தொழிலாகக் கொண்ட விகடன் கும்பல் - இப்போது "ராமயணம் படிப்பது" கொடுமையாக இருக்கிறது! 
-----------------------------------------------
விகடன் கும்பலின் விநோத கூத்து!

ஆனந்த விகடன் இதழில் ரெமோ திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்திருக்கும் அதே விகடன் கும்பல் - அதன்  விகடன்.காம் இணைய பக்கத்தில் அதே ரெமோ படத்தை போற்றிப் புகழ்ந்திருக்கிறது! 

"லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்! - ரெமோ விமர்சனம் #REMO" - எனும்  விகடன்.காம் இணைய தளவிமர்சனத்தை இங்கே காண்க (இங்கே சொடுக்கவும்) 
-----------------------------------------------
இணைப்பு: ஒருதலை காதலா? தறுதலை காதலா? - மருத்துவர் ச. இராமதாசு, தினமணி கட்டுரை (இங்கே சொடுக்கவும்)

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

இது காதலை ஆதரிக்கும் படமென்றோ அல்லது எதிர்க்கும் படமென்றோ வகைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது உண்மைக் காதலைச் சொல்லும் படமா அல்லது நாடகக் காதலைச் சொல்லும் படமா என்றும் தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் என்பது சுபமான முடிவா அல்லது டிராஜடி முடிவா என்று கூட தெரியவில்லை.

ஆனால், காதலிக்க நினைப்பவர்கள், காதலிப்பவர்கள், காதலிப்போரின் நண்பர்கள், காதலிப்போரின் பெற்றோர்கள், காதலை ஆதரிப்போர், காதலை எதிர்ப்போர் - என எல்லோரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று கட்டாயமாகச் சொல்லலாம்.
படிக்கும் வயதில் இருவர் காதலில் வீழ்கின்றனர், நண்பர்கள் முழு மனதோடு உதவுகின்றனர், அவர்களது காதலை குடும்பத்தினர் எதிர்க்கின்றனர், பின்னர் ஆதரிக்கின்றனர், இவர்களின் காதலில் சாதி தலையிடுகிறது, அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் - பின்னர் இவர்களின் காதல் என்ன ஆனது என்பதைச் சுற்றிவளைக்காமல், சுருக்கமாகவேக் கூறி படத்தை முடித்து விடுகின்றனர்.

ஆனால், காதல் என்பது இரண்டு தனி மனிதர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை மட்டுமல்ல, அதில் அவர்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் என ஏராளமான உயிர்களின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல நன்றாக உறைக்கும்படி சொல்கிறார்கள்.

இது போரடிக்கும் படம் அல்ல. விருவிருப்பான படம்தான். கட்டாயம் பாருங்கள்.

புதன், ஆகஸ்ட் 07, 2013

சட்டத்தை மீறும் வேந்தர் மூவிஸ் தலைவா திரைப்படம்: பதில் சொல்வாரா விஜய்?

அரசின் சட்டங்கள், விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விஜய் நடித்த தலைவா திரைப்படம் அப்பட்டமாக மீறியுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியிடுகிறது.
விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை நகரில் உள்ள திரையரங்குகள் தலைவா பட நுழைவுச் சீட்டு முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன என்றும் செய்திகள் வந்தன. மறுபுறம் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பினர் பெயரில் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சட்டத்தை மீறும் தலைவா திரைப்படம்

விஜய் நடிப்பில், புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியீட்டில் வெளியாகும் தலைவா திரைப்படத்துக்கான விளம்பர பதாகைகள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒற்றன்செய்தி எனும் இணையச் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்:
"சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2007-ல் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் பிரமாண்ட பேனர்கள் சென்னை மாநகரை அலங்கரித்து. அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சினிமா மற்றும் வணிக ரீதியான பேனர்கள் மற்றும் பிரமாண்ட விளம்பர பலகைகளை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்க கூடாது என்றும், வைத்தாலும் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே வைத்து, பின் அகற்றிவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதற்கு அரசிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி கடிதம்  பெறவேண்டும். அரசியல் கட்சிகள் கூட இரண்டு மூன்று நாட்களில் பேனர்களை அகற்றி விடுகிறது. இந்த மாதிரி பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடித்து, விபத்துகள் உருவாவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் மிஸ்ரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமாண்டமான, அகலமான பேனர்கள் சென்னை நகரின் முக்கிய சாலைகளிலும், பெரிய கட்டிடங்களின் மேலும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி சட்ட அதிகாரியிடம், பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு அவர் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொன்னார். சென்னை மாநகரில் பேனர்கள் வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் சார்பில் எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, நாங்கள் அனுமதியும் கொடுக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுப்பார்களா சம்பந்தபட்ட அதிகாரிகள்?" - என்று கேட்கிறது ஒற்றன்செய்தி!

ஒற்றன்செய்தி: சென்னை நகரை அனுமதியின்றி ஆக்கிரமித்திருக்கும் விஜய்’யின் “தலைவா” விளம்பர பலகைகள்

மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். இதற்கு தடைபோடும் அதிகாரத்தை இயக்குநர் சேரனுக்கு அளித்தது யார்? - இந்தக் கேள்விய எழுப்பாமல் தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகள் மவுனம் காப்பாது வியப்பளிக்கிறது.

'முற்போக்கு' கூட்டத்தினர் கேட்க மறந்த கேள்விகள்!

உண்மையில் 'முற்போக்கு' கூட்டத்தினர் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும்:

"'சந்துரு உண்மையான காதலனா இருந்தா நானே சேர்த்து வைப்பேன்' என்கிறார் இயக்குநர் சேரன். சந்துரு - தாமினியைச் சேர்த்துவைக்க இவர் யார்? இவரிடம் யார் அனுமதி கேட்டது? பதினெட்டு வயது நிரம்பிய பெண் யாரிடமும் அனுமதி கேட்கவே தேவையில்லை.

"சந்துரு கெட்டவன், சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு, என்னோட பெரிய பொண்ணுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்" என்கிறார் சேரன். இந்த தகவல்கள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டால் கூட, சந்துரு செய்ததில் என்ன குற்றம் இருக்கிறது?
\
சந்துரு - தாமினி சந்தித்த நிகழ்ச்சி
கெட்டவன் என்பதற்காக அவரைக் காதலிக்கக் கூடாது என்றோ, கெட்டவர்கள் காதலிக்கக் கூடாது என்றோ ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஒரு ஆணுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலும் - ஒரு பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தாலும் அதையெல்லாம் குற்றம் என்று சொல்லும் உரிமை அவரவர் மனைவிக்கும் கணவனுக்கும்தான் உண்டு.

இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகள் இல்லையா? அதையெல்லாம் அவரவர் வீட்டு பெண்கள் ஏற்பது போல - இந்தப் பெண்ணும் ஏற்றுக்கொண்டால் அதை மற்றவர்கள் கேள்விக் கேட்கமுடியுமா?

'ஒரு பெண்ணைக் காதலித்து அவரது அக்காவுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்' என்றால் - அந்த மெசேஜை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம். இதில் சேரன் எதற்காகத் தலையிட வேண்டும்?

ஒருவரது மனைவி மட்டுமே தனது கணவன் இன்னொருப் பெண்ணுக்கு 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்புகிறார் என்பதைக் குற்றமாகக் கூற முடியும். அல்லது அந்த மெசேஜை பெறுகிறவர் குற்றம் சாட்டலாம். மற்றவர்கள் எதற்காக இதைக் கேள்விக் கேட்க வேண்டும்?

எனவே, சந்துரு மீது இயக்குநர் சேரன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சட்டப்படி அடிப்படை ஏதுமற்றவை என்பதுதானே உண்மை?"

- இந்தக் கேள்விகளை 'முற்போக்கு' கூட்டத்தினர்  கேட்டிருக்க வேண்டும்.

முற்போக்கு வேடதாரிகள் மவுனம் ஏன்?


சுமார் பத்து நாட்களுக்கு முன்பு 'கௌரவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்று' என்கிற பெயரில் முற்போக்குக் கூட்டத்தினர் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்பதாகக் கூறப்பட்ட இக்கூட்டத்தில் 'கௌரவக் கொலை தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்' எனப்பேசினர்.

இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இச்சட்டத்தினை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே மேற்கண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, திருமண வயது வந்தவர்களின் திருமணத்தில் மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது. அவ்வாறு பஞ்சாயத்து செய்யும் நோக்கில் யாரும் ஒன்று கூடக் கூடாது' என்பதுதான்.  
கௌரவக் கொலை தடைச் சட்டம் வரைவு
ஆனால், இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக, சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய திரையுலகினர் ஒன்று கூடியுள்ளனர்.

'அடுத்தவர்கள் காதலிலோ, கல்யாணத்திலோ யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது' என்பதற்காக சட்டம் வேண்டும் என்று போராடிய அதே முற்போக்குக் கூட்டம் - இப்போது சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் திரையுலகினர் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்வதைக் கள்ளமவுனத்துடன் வேடிக்கைப் பார்க்கின்றனர். ஏன் இந்த இரட்டை வேடம்?

'முற்போக்கு' கூட்டத்தின் இரட்டை வேடம்

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன.

இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.

அதுதானே, தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம். 

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்!

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்! 

"இளவரசன் - திவ்யாவோடு சந்துரு - தாமினியை ஒப்பிடாதீர்கள்" என்று ஜூனியர் விகடன் அழுகுணி ஆட்டம் ஆடுவது போன்று, முற்போக்காளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்கிறவர்கள் இனியும் ஓடி ஒளியக் கூடாது.

சுப. வீரபாண்டியன், ஞானி, தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வரவேண்டும், இயக்கம் கட்ட வேண்டும், போராட வேண்டும், கருத்தரங்குகள், வெளியீடுகள் என 'தாரைத் தப்பட்டை கிழியும் வரை' முழங்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.
 
இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை.

முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்களே, உங்கள் அறிவு நாணயத்தை நிரூபியுங்கள்.

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே! நாளில் மறப்பாரடீ

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலந்தனில்-கிளியே! இருக்க நிலைமையுண்டோ?"

குறிப்பு: இளவரசனின் வழக்குரைஞர் சங்கர சுப்புதான் சந்துருவுக்காகவும் வழக்காடுகிறார்.

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

சேரன்  மகள் காமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் 

"காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும்" - மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கை:

"தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரனின் மகள் காமினியின் காதல் விவகாரம் பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன. ஒரு பொறுப்புள்ள, பாசமுள்ள தந்தை என்ற வகையில் இந்த விசயத்தில் சேரனின் மனம் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது.

தமது காதலை எதிர்ப்பதாகவும், தனது காதலனை மிரட்டுவதாகவும் சேரன் மீது அவரது மகள்  காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைக்கு நேர்நின்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேரன்,‘‘எனது மகளின் காதலை நான் முதலில் ஆதரித்தேன். ஆனால், ஒரு தகப்பன் என்ற முறையில் எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும் நல்லவரா, கெட்டவரா என்று பார்க்கக்கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்?’’ என்று கேட்டிருக்கிறார்.
இந்த விசயத்தில் சேரனின் கேள்விகள் நியாயமானவை. இது தவிர சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாற்றுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது.  சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப்பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று  தீர்மானத்தில் தெளிவாகக் கூறியிருந்தோம். எங்களின்  நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை இயக்குனர் சேரனும், அவரைப் போன்ற சூழலில் உள்ள பெற்றோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறை கடைப்பிடித்து வரும் முதிர்ச்சியான அணுகுமுறையும் வரவேற்கத் தக்கது. சேரனின் மகளும், அவரது காதலரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை அடைந்துவிட்டவர்கள் என்பதைக் காரணம் காட்டி, அவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பச்சைக் கொடி காட்டிவிடாமல், படிப்பை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வேலைவாய்ப்பு பெற்று வாழ்க்கையில் நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுரை கூறியிருப்பது பாராட்டத்தக்கது. 

தருமபுரி இளவரசன் - திவ்யா காதல் நாடகத் திருமண விவகாரத்திலும் அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இத்தகைய  அணுகுமுறையை கடைபிடித்திருந்தால், திவ்யாவின் தந்தை நாகராஜன் தேவையின்றி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால், முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் செயல்பட்டுவரும் சில பிற்போக்கு சக்திகள் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ என்று கூறி படிக்கும் வயதில் காதல் செய்யும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கும், கலாச்சார சீரழிவுக்கும் மட்டுமே இத்தகைய பிரச்சாரங்கள் வழி வகுக்கும். இனி வரும் காலங்களிலாவது நல்லது, கெட்டது அறியாத வயதில் வரும் காதல் பிரச்சினைகளில் அனைத்து தரப்பினரும் முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அப்பாவி பெற்றோர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும்.

பதின்வயதில் வயதில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக ஏற்படும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரங்கள் மற்றும் கொந்தளிப்புகள் குறித்து ஒரு வழக்கில் விரிவாக விளக்கியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் வழங்கியுள்ளது. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும்போது அத்திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்- இல்லாவிட்டால் அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்து செய்யத் தகுந்தவை என அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்திருக்கிறது.

21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்யும்போது அதற்கு பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, 21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் வகையில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்.

வியாழன், ஜூலை 18, 2013

ஆனந்த விகடனின் அட்டகாசம்: இளவரசன் இல்லாத திவ்யா - ஹன்சிகா இல்லாத சிம்பு!

ஆனந்த விகடன் கடந்த இரண்டு இதழ்களாக 'காதல் பிரிவு' என்பதை கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது.

17.7.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் "இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?" என்பது கவர் ஸ்டோரி. அதற்கு அடுத்த, 24.7.2013 தேதியிட்ட  ஆனந்த விகடன் இதழில் "சிம்புவும் நானும் பிரிஞ்சுட்டோம்! ஸீ யூ ஹன்சிகா" என்பது கவர் ஸ்டோரி.
17.7.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் 
24.7.2013 தேதியிட்ட  ஆனந்த விகடன் 
இந்த இரண்டு இதழ்களுக்கு இடையே - குறைந்தபட்சம் ஒரே ஒரு இதழிலாவது 'வேறு எந்த கருமாந்திரத்தையாவது' கவர் ஸ்டோரியாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

திவ்யாவிடம் கேள்வி, ஹன்சிகாவிடம்  பதில்!

சென்ற இதழ் கவர் ஸ்டோரியில் "திவ்யா இப்போது பேச வேண்டும். தன் அன்புக் காதலனை பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா  துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்!" என உசுப்பி விட்டது ஆனந்த விகடன்.

இந்த இதழ் கவர் ஸ்டோரியில் திவ்யாவுக்கு பதிலாக பதில் அளித்துள்ளார் ஹன்சிகா: "நானும் சிம்புவும் பிரிஞ்சுட்டோம்னு பெருசா எழுதிடுங்க. இந்தக் கதைக்கு ஒரு டிராஜடி க்ளைமாக்ஸ் கிடைச்சுடும். என்னப் பத்தி இப்படித் தப்பு தப்பா கிளப்பி விடறவங்களை அந்தக் கடவுள் நிச்சயம் பார்த்துப்பார். அவ்வளவுதான்." என்றிருக்கிறார்  ஹன்சிகா.

நடிகைகளின் தொடை, தொப்புள், மார்பு இல்லாத ஆனந்த விகடன் சாத்தியமா?

நீதி, நியாயம், தர்மம், வெங்காயம், புண்ணாக்கு என்று வக்கணையாகப் பேசும் ஆனந்த விகடன் - பலரின் அபிமானத்துக்குரிய தலைவர்களை அநாகரீக கேலிப்படமாக சித்தரித்து, தனது குரூரமான அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் ஆனந்த விகடன் - இந்த தமிழ் சமூகத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையுள்ள பத்திரிகையாக இருக்குமானால், ஒரு ஆறுமாத காலத்திற்காவது, நடிகைகளின் தொடை, தொப்புள், மார்பை அட்டையில் வெளியிடாமல் பத்திரிகையை நடத்திக்காட்டட்டும்.

புதன், ஏப்ரல் 03, 2013

விஜய் டிவி நீயா நானா விரும்புவது இதைத்தானா? கௌரவக் கொலை வேண்டாம் - காதல் கொலை வேண்டுமா?

சாதியின் பெயரால் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டிக்கும் விதமாக ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்பட்டது. இதற்காக 'கௌரவம்' என்கிற திரைப்படத்தை இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் எடுத்துள்ளாராம்.

நல்ல விடயம்தான். கௌரவக் கொலைகளை நாம் ஆதரிக்கவில்லை. அதனை ஊக்கப்படுத்தவும் இல்லை. இத்தகையக் கொடூரங்களை நாம் எதிர்க்கிறோம். 

அதே நேரத்தில் காதல் திருமணம் செய்பவர்களைக் கௌரவக் கொலைசெய்வது போலவே - அப்பாவிப் பெண்களிடம் காதலை திணிப்பது, கட்டாயப்படுத்துவது, பள்ளி, கல்லூரி செல்லும் இளம் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது, மிரட்டுவது, சடையைப் பிடித்து இழுப்பது, தட்டிக்கேட்பவர்களை தாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் காட்டி மிரட்டுவது என பலவிதமான அராஜகங்களை சில அமைப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டுள்ளனர். 

இதற்காகவும் விஜய் டிவி நிகழ்ச்சி நடத்த வேண்டும். பிரகாஷ் ராஜ் படம் எடுக்க வேண்டும். அதற்கான ஒரு சம்பவம் கீழே:


"இளம்பெண் கிண்டலை தட்டிக் கேட்ட தந்தையை கொன்றோர் மீது நடவடிக்கை" - மருத்துவர் இராமதாசு அறிக்கை

"காஞ்சிபுரம் மாவட்டம்  செங்கல்பட்டை  அடுத்த  பாலூர் வெங்கடாபுரம் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை  தட்டிக்கேட்ட  தந்தை கொடூரமான முறையில் அடித்து கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

திருப்பதி  திருமலை கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும்  ராமன் குருக்கள் என்பவர் தமது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி திதி கொடுப்பதற்காக செங்கல்பட்டை அடுத்த பாலூர் வெங்கடாபுரத்தில் உள்ள தமது மூத்த மகளின் வீட்டிற்கு வந்திருக்கிறார். திதி கொடுத்து முடிந்த பின்னர் தமது திருமணமாகாத இளைய மகள் பத்மஸ்ரீ மற்றும் 5 வயது பேத்தி அட்சயஸ்ரீ ஆகியோருடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது வெங்கடாபுரம் காலனியை சேர்ந்த சில இளைஞர்கள் பத்மஸ்ரீ மற்றும் அட்சயஸ்ரீயை கிண்டல் செய்ததுடன், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளனர். இதை ராமன் குருக்கள் தட்டிக் கேட்ட போது, ''இது எங்கள் பகுதி இங்கு வந்தால் இப்படித்தான் செய்வோம். நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ'' என்று கூறியுள்ளனர்.
அப்பாவி பெண்ணிடமும், சிறுமியிடமும்  இப்படி முறை தவறி நடந்து கொள்வது சரியா? என ராமன் குருக்கள் கேட்டபோது அவரை அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி  பத்மஸ்ரீயும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பயனின்றி ராமன் குருக்கள் உயிரிழந்தார். பத்மஸ்ரீயின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக 16 தையல் போடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

சாலையில் சென்ற அப்பாவி பெண்களை பாலியல் சீண்டல் செய்ததும், அதை தட்டிகேட்ட தந்தையை அடித்து கொலை செய்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காலனிகள் வழியாக செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருவதையும் , அதை தட்டிக் கேட்பவர்கள்  தாக்கப்படுவதையும்  பலமுறை நான் சுட்டிக்காட்டியிருப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்  என்றும் வலியுறுத்தியுள்ளேன். ஆனால் இதுதொடர்பாக அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

"நள்ளிரவு 12 மணிக்கு எந்த அச்சமும் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக வெளியில்  நடமாடும் நிலை என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத் தான் இந்தியா உண்மையான  சுதந்திரம் அடைந்ததாக கருதுவேன்" என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். ஆனால் பகலிலேயே பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலை இருப்பதை பார்க்கும்போது இந்தியா இன்னும் உண்மையான விடுதலை அடையவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

இத்தகைய  சமூக சீர்கேடுகள் தொடர்வதை பார்க்கும்போது  நமது  மாநிலம் எங்கே செல்கிறது என்ற கவலையும், அச்சமும் தான் ஏற்படுகிறது. ஒரு சமுதாயத்தினரால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுவதும், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும் தொடர்ந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

எனவே, பாலூர் வெங்கடாபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்து தாக்கியதுடன், அதை தட்டிக் கேட்ட தந்தையை கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்து நீதிபதி வர்மா குழு பரிந்துரையின்  அடிப்படையில்  இயற்றப்பட்ட சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இளம்பெண்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் எதிராக இத்தகைய குற்றங்கள் நடப்பதை தடுக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சனி, ஜனவரி 26, 2013

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் - மருத்துவர் இராமதாசு அய்யா

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடையை நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

"தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்படுவதாக இருந்த நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் இப்படத்தை வெளியிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு அமைப்புகள் புகார் அளித்திருப்பதாகவும், அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் தான் இப்படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் கதை பற்றியோ அல்லது காட்சி அமைப்புகள் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது என்பதாலும், இது குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், நடிகர் கமலஹாசன் மதங்களைக் கடந்த கலைஞர். எந்த மதத்தினர் எந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர். 1992 -ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதை கடுமையாக கண்டித்ததுடன், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை நேரில் சந்தித்து , இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தியவர். 
இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் முக்கியப் பொறுப்பில் இருந்து பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இப்படிப்பட்ட கமலஹாசன் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுத்திருக்க மாட்டார் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி , விஸ்வரூபம் திரைப்படம்  நடுநிலையான இஸ்லாமியர்களை பெருமையடையச் செய்யும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கமலஹாசன் கூறியுள்ள நிலையில், இதை பொதுவான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ரசிகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது தான் சரியானதாக இருக்கும். மாறாக படத்தை முடக்க முயல்வது எதிர்மறையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு திடீரென தடைவிதித்ததன் பின்னணியில் அரசியலும் கலந்திருப்பதாக கருதுகிறேன். விஸ்வரூபம் படத்திற்கு தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் , தமிழக அரசு தலையிட்டு, யாருடைய கருத்தையும் கேட்காமல் தடை விதித்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும். 

அண்மைக்காலமாகவே தமிழக அரசு கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டம் - ஒழுங்கிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்; இதற்காக திரைப்படத்திற்கு தடை விதிப்பது முறையல்ல.

எனவே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கவேண்டும். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வேகத்தில் அணுகாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி யதார்த்தமான தீர்வை எட்ட முன்வரவேண்டும்."

- என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்:

வியாழன், ஜனவரி 10, 2013

பாவத்தைக் கழுவியதா ஆனந்த விகடன்: சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது!

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் குறித்து அநியாயமாக எதிர்ப்பு விமர்சனத்தை பத்திரிகைகளும் வலைப்பூ விமர்சகர்களும் எழுதினர். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் சொன்னது போல, கௌதம் மேனனின் படத்தை உள்வாங்கும் திறன் விமர்சர்களுக்கு இல்லை என்பதை இப்படம் மெய்ப்பித்தது. 

ஆனால், தாமதமாக வந்த பல வலைப்பூ விமர்சனங்கள் நீதானே என் பொன்வசந்தம் மிகச்சிறந்த திரைப்படம் என எடுத்துக்கூறின. (1. வீடு திரும்பல்,  2. யுவகிருஷ்ணா, 3. நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!)
மிகச்சிறந்த இப்படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்து பாவம் தேடிக்கொண்டது ஆனந்த விகடன். ஆனால், நல்ல வேலையாக 2012 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை என்று "நீதானே என் பொன்வசந்தம்" கதாநாயகி சமந்தாவிற்கு விருது வழங்கியுள்ளது ஆனந்த விகடன்.

"வீடு திரும்பல்" வலைப்பூவிலிருந்து ஒரு பின்னூட்டம்:

"வெளியேதெரியாமல் அமுங்கிப்போன சில நல்ல படங்களை தேடிப்பிடித்து பார்க்கவைத்தவர்கள் நம் இணையதள விமர்சகர்கள் இவர்கள் விமர்சனம் தரமானது, உண்மையானது. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தரமான படங்களுக்கு 45 மதிப்பெண்னும், குப்பை படங்களுக்கு 42 மதிப்பெண்னும் வாரி வழங்கும் வருமான விசுவாசம் இங்கே இருக்காது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்த நீதானே என் பொன் வசந்தத்திற்கு இவர்களின் எதிர்மறையான விமர்சனம் படத்தின் மீதான எனது ஆர்வத்தை குறைத்துவிட்டது. 
"அம் மனநிலையிலேயே படத்தை பார்த்தேன். ஆனால் படம் ஓட ஓட என்னை முழுதும் ஆக்ரமித்துவிட்டது. படம் முடிந்தும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை. சமந்தா- சமகால நடிகைகளிடம் இல்லாத ஒரு ஈர்ப்பு. கணகள் முழுவதும் காதல். காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. 
ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers. என்ன ஆச்சி உங்களுக்கு. சறுக்கியது கௌதம் அல்ல.- ரசிகர்கள்தான்." என்று அந்த வலைப்பூவில் கூறப்பட்டிருந்தது.

கொஞ்சமாவது பாவத்தைக் கழுவிய ஆனந்த விகடனுக்கு நன்றி.

வெள்ளி, ஜனவரி 04, 2013

ரஜினி ஒரு மாமனிதர் - எனது அனுபவம்!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் செய்தியாக "தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.

சைதாப்பேட்டையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.இந்த நிலையில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி.
ரசிகர்கள் கூறும்போது, "தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்" என்றனர். ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிய ரஜினி, இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்" என்று செய்திகள் கூறுகின்றன. (இங்கே காண்க: புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ரசிகர்களை நேரில் பாராட்டிய ரஜினி!)

இந்த நிகழ்வினை கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட ஒரு மாபெரும் மாற்றம் என்று நான் கருதுகிறேன்.

ஓர் நெகிழ்ச்சியான அனுபவம்.

1998 ஆம் ஆண்டு வாக்கில் மருத்துவர் அய்யா அவர்கள், புகையிலை தீமையை எதிர்த்து பசுமைத் தாயகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆணையிட்டார்கள். அது தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட காலத்தில் 2000 ஆவது ஆண்டுவாக்கில், 'சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாகிறது' என சில அறிவியல் ஆய்வுகள் வெளிவந்ததைக் காண முடிந்தது. எனவே, பசுமைத் தாயகம் சார்பில் 'சினிமாவும் புகைபிடிக்கும் பழக்கமும்' என்கிற கருத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கினோம்.

நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சி - உலகின் முதல் போராட்டம்!

2002 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நடிகர் சூர்யா நடித்த 'ஸ்ரீ' திரைப்படம் வெளிவர இருந்தது. இதற்கான மிகப்பெரிய விளம்பர பேனர்,  நடிகர் சூர்யா புகைபிடிக்கும் காட்சியுடன் சென்னை அண்ணா சாலையில் தேவி திரையரங்கின் எதிரே மே மாதமே அமைக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தெரிவித்தார்கள்.
மே 31 உலக புகையில எதிர்ப்பு நாளை முன்னிட்டு அந்த பதாகையை மறைத்து பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு பதாகையைக் கட்டப்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் அது செய்தியாக வெளியானது. உண்மையில் சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்த்து உலகில் நடந்த முதல் போராட்டம் அதுதான்.

பாபா பட எதிர்ப்பு போராட்டம்

2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர இருந்த பாபா திரைப்படத்தின் முதன்மை விளம்பரம் நடிகர் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் படத்துடன் வெளிவந்திருந்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் பசுமைத் தாயகம் சார்பில் கோரப்பட்டது. பாபா திரைப்படத்தின் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர் அய்யா அவர்கள் 2002 ஆகஸ்ட் 11 அன்று பூம்புகாரில் நடந்த மாநாட்டில்  பேசினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஒரு அரசியல் சக்தியாக பார்க்கப்பட்ட அக்காலத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவர் அய்யா அவர்களை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பின்னர், சினிமாவில் புகைபிடிப்பதற்கு எதிரான ஆய்வுகளும் வெளியாயின. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (Effect of Smoking on Movies - THE LANCET 2003) இந்தியத் திரைப்படங்களில் சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை கூறியது. (“BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
அதே ஆண்டில் (2003) உலக புகையிலை எதிர்ப்பு நாள் முழக்கமாக "புகையில்லா சினிமா" எனும் கருத்தை முன்வைத்தது உலக சுகாதார நிறுவனம். (World No Tobacco Day 2003: Tobacco free film)

அதன் பிறகு, திரைப்படங்களில் புகைபிடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் போராடியது. தமிழ் திரைப்பட நடிகர்களில் திரு. கமலஹாசன், திரு. சூர்யா, திரு. விஜய், திரு. விக்ரம் ஆகியோர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தனர். ஏ.வி.எம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளுடன் இனி திரைப்படங்கள் எடுக்க மாட்டோம் என்று அறிவித்தது.
(மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய நலவாழ்வுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிராக சட்ட விதிகளை உண்டாக்கினார். பலவிதமான சட்ட போராட்டங்களுக்கு பின்னர் இப்போது - திரைப்படங்களில் புகையிலை எச்சரிக்கை, விழிப்புணர்வு விளம்பரம், புகைபிடிக்கும் காட்சி வரும்போது அதற்குள் எச்சரிக்கை என அந்த விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.)
விஜய் 'துப்பாக்கி' படத்தில் புகைபிடிக்கும் காட்சியுடன் சுவரொட்டி வெளியானதற்கு பசுமைத் தாயகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படத்தில் அக்காட்சி இடம்பெறவில்லை.

ரஜினி - மாபெரும் மனமாற்றம்

மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையின் பேரில், சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பு தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில், தனது 63ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் "சிகரெட் பிடித்தனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்சினை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் நான் ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது இதுதான். தயவு செய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்" என்று கோரினார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், முன்பு அவர் 'பாபா' படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தற்கு மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை சூசகமாகக் குறிப்பிட்டு "ஆவர் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை" என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் அவர்களைத் தனிப்பட்ட முறையிலோ, உள்நோக்கத்துடனோ எதிர்க்கவில்லை. ஒரு நியாயமான நோக்கத்திற்காக, ரஜினிகாந்த் எதிர்க்கவே முடியாதவர் என்று கருதப்பட்ட நேரத்தில், இதற்காக பலராலும் தூற்றப்படுவோம் என்று தெரிந்தும் மருத்துவர் அய்யா அவர்கள் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சிகளை எதிர்த்தார். அன்று பலரும் மருத்துவர் அய்யாவுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்டனர். அந்தக் கேள்விக்கு இன்று ரஜினிகாந்த் அவர்களே பதில் சொல்லிவிட்டார்.

ஒருகாலத்தில் புகைபிடிப்பதை ஒரு ஸ்டைலாக அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த அவர்கள், இன்று புகைபிடிப்பதைக் கைவிடுவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறார். இந்த மாற்றம் வரவேற்க தக்கதாகும். அதுமட்டுமில்லாமல், தவறான நிலைபாடுகளில் வீம்பாக இருக்கும் சராசரி மனிதர்களைப் போன்று இல்லாமல் - தவறுதான் என தன்னைத் திருத்திக்கொண்டு, தவறு செய்யவேண்டாம் என அடுத்தவருக்கும் போதிக்கும் ரஜினிகாந்த் அவர்கள் மாமனிதர்தான்.
மேலே உள்ள சுவரொட்டி ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சென்னையில் ஒட்டப்பட்டது. இதனைப் பார்த்துவிட்டு மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 'நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்று கூறினாராம். வாழ்க ரஜினி.