Pages

சாலைப் பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலைப் பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

உலக மதுஒழிப்பு மாநாட்டில் பாமகவின் சாதனை: சாதிவெறி பிடித்த ஊடகங்களின் பார்வைக்காக...!

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் கே. பாலு தொடர்ந்த வழக்கில் - 'சென்னை உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில்தான்' - இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடளவில் அளித்த உத்தரவு, இப்போது உச்சநீதிமன்றத்தால் இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக மதுஒழிப்பு மாநாட்டில் பாமகவின் சாதனை

2015 அக்டோபர் மாதம் ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நடத்தப்பட்ட உலக மது ஒழிப்பு கொள்கை மாநாட்டில் (Global Alcohol Policy Conference - Momentum for change: research and advocacy reducing alcohol harm, 7th-9th October 2015 in Edinburgh, Scotland) - பாமகவின் சாதனை மாநாட்டு உரையாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  


Litigation: A Tool for Enforcing Alcohol Regulation Legal Provisions எனும் தலைப்பில் வழக்கறிஞர் கே. பாலு உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது (படம் காண்க). 

(குறித்த நேரத்தில் விசா ஏற்பாடுகளை செய்ய முடியாததால் அவர் உலக மதுஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை). 

ஊடகங்களின் சாதிவெறி

உலக மது ஒழிப்புக் கொள்கை மாநாட்டிலேயே இந்த சாதனை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாமக வழக்கறிஞர் கே. பாலு தொடுத்த வழக்கு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் முகப்பிலேயே உள்ள நிலையில் - பாமகவையும் வழக்கறிஞர் பாலுவையும் இன்னமும் ஊடகங்கள் மூடி மறைப்பது ஏன்?

ஊடகங்களின் சாதிவெறிக்கு ஒரு எல்லையே இல்லையா? எல்லாவற்றையும் சாதிவெறியுடன் பார்க்கும் இந்தக் கொடூரத்துக்கு ஒரு முடிவே இல்லையா?
உச்சநீதிமன்ற தீர்ப்பின் முகப்பு
தொடர்புடைய இடுகை: டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

மலையாளிகளால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' - தமிழர் கட்சி ஒன்று இந்திய அளவில் சாதனை படைத்ததை மறைத்து எழுதியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிகையின் இனவெறியும், சாதிவெறியும் இதன் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 

மறைக்கப்படும் சாதனை

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதால், இதனை எவரும் பேச மறுக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU Versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது, பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு 'தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற வேண்டும்' என்று தொடுத்த வழக்கின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டின் போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, பாமகவின் வழக்குடன் அதுபோன்ற இதர வழக்குகளையும் இணைத்து விசாரணை நடத்தி 'இந்தியா முழுவதுக்குமாக' தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், ஊடகங்களும் சாதி வெறியர்களும் - ஏதோ சில பொதுநல அமைப்புகள் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது - என்பது போல மேம்போக்காக எழுதுகின்றனர். குறிப்பாக, மலையாளிகள் ஆதிக்கத்தில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், இந்த வழக்கின் தலைப்பு  "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" என்பதைக் கூட குறிப்பிடாமல், வேறு ஒருவர் தொடுத்த வழக்கு என்பது போல எழுதியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18.12.2016
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இவ்வாறு சாதிவெறி, இனவெறியுடன் உணமையை மறைத்து செய்திகளை வெளியிடுவதை விட, அந்த ஊடகத்தை நடத்துபவர்கள் பாலியல் தொழிலை நடத்துவது மேலானதாக இருக்கும்.

பாமகவின் மாபெரும் சாதனை

பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் - இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்; நெடுஞ்சாலைகளின் வெளிப்புற எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்ககக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து பார்க்கும் போது, பார்வையில் படும் வகையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் பலகைகளோ, விளம்பரங்களோ எதுவும் இருக்கக் கூடாது - என்று தீர்ப்பளித்துள்ளது.

இது உலகளாவிய சாதனை
1. உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உலக நாடுகள் உருவாக்கியுள்ள 'ஆபத்தான மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்கான உலக வியூகத்திட்டத்தின் படி (Global strategy to reduce harmful use of alcohol 2010)- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், மதுபானம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், மதுமான விளம்பரங்களை ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகள் (drink-driving policies and countermeasures; availability of alcohol; marketing of alcoholic beverages) இந்த தீர்ப்பின் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.
2. ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'தொற்றா நோய்களை தடுக்கும் திட்டத்தின்' (Global Action Plan for the Prevention and Control of NCDs 2013-2020) ஒரு முக்கிய அங்கமான, மதுப்பழக்கதை குறைத்தல் (At least a 10% relative reduction in the harmful use of alcohol) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு வழிசெய்கிறது.
3.  ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்தின்' (Global Plan for the Decade of Action for Road Safety 2011-2020) ஒரு முக்கிய அங்கமான,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல் (Set and seek compliance with drink–driving laws and evidence-based standards and rules to reduce alcohol-related crashes and injuries) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு மிகப்பெரிய அளவில் வழிசெய்கிறது.

பாமக வழக்கின் வெற்றி என்பது, ஐநா அவையும், உலக சுகாதார நிறுவனமும் முன்வைக்கும் உலகளாவிய மாபெரும் லட்சியத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு - ஒரு மாபெரும் வரலாற்று சாதனை - இதனை சாதித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்கிற ஒரே காரணத்துக்காக கண்டும் காணாமல் செய்யப்படுகிறது.

ஊடகங்களின் இந்த மூடிமறைத்தலுக்கு சாதி வெறியைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இணைப்பு: பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதோTHE STATE OF TAMILNADU Versus K BALU & ANR

CIVIL APPEAL Nos .12164-12166 OF 2016
THE STATE OF TAMILNADU Versus K BALU & ANR 

Hon'ble the Chief Justice, His Lordship T.S. Thakur
Hon'ble Dr. Justice D.Y. Chandrachud  
Hon'ble Mr. Justice L. Nageswara Rao.

- judgment of the Bench - 

We accordingly hereby direct and order as follows :

(i) All states and union territories shall forthwith cease and desist from granting licences for the sale of liquor along national and state highways;

(ii) The prohibition contained in (i) above shall extend to and include stretches of such highways which fall within the limits of a municipal corporation, city, town or local authority;

(iii) The existing licences which have already been renewed prior to the date of this order shall continue until the term of the licence expires but no later than 1 April 2017;

(iv) All signages and advertisements of the availability of liquor shall be prohibited and existing ones removed forthwith both on national and state highways;

(v) No shop for the sale of liquor shall be (i) visible from a national or state highway; (ii) directly accessible from a national or state highway and (iii) situated within a distance of 500 metres of the outer edge of the national or state highway or of a service lane along the highway.

(vi) All States and Union territories are mandated to strictly enforce the above directions. The Chief Secretaries and Directors General of Police shall within one month chalk out a plan for enforcement in consultation with the state revenue and home departments. Responsibility shall be assigned interalia to District Collectors and Superintendents of Police and other competent authorities. Compliance shall be strictly monitored by calling for fortnightly reports on action taken.

(vii) These directions issue under Article 142 of the Constitution.
------------------


சனி, நவம்பர் 26, 2016

சென்னை - வடபழனி மேம்பாலம் யாருக்காக காத்திருக்கிறது?

மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில், மக்கள் பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்காமல் "யாருக்காகவோ" காத்திருக்கிறார்கள்!

சென்னை வடபழனியில் ஜவகர்லால் சாலை மற்றும் ஆற்காடு சாலை சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டும் திட்டத்தை, 2006 ஆம் ஆண்டில் உருவாக்கி, 2011-ல் ஒப்புதல் அளித்து, 2014-ல் கட்டத்தொடங்கினார்கள்.

ஒருவழியாக கட்டிமுடித்து, இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் போக்குவரத்துக்கு திறக்கப் போவதாக கூறினார்கள்.

ஆனால், போக்குவரத்துக்கு தயாராக உள்ள இந்த மேம்பாலத்தை கடந்த ஒருமாத காலமாக திறக்காமல் வைத்துள்ளனர்.
தமிழகத்தின் பிறபகுதிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் இணைக்கும், 100 அடி சாலை எனப்படும் ஜவகர்லால் நேரு சாலையில் தினமும் 1 லட்சத்து 85 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. சென்னை நகரின் குறுக்காக செல்லும் ஆற்காடு சாலையில் தினமும் 40 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இதனால், பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திண்டாடுகிறது வடபழனி.

ஆனாலும், மக்கள் பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்காமல் "யாருக்காகவோ" காத்திருக்கிறார்கள்!

இதனைக் கண்டித்தும், வடபழனி மேம்பாலத்தை உடனடியாக திறக்கக் கோரியும் தென் சென்னை மேற்கு மாவட்டம் தி.நகர் மேற்கு பகுதி 130 வது வார்டு பா.ம.க சார்பில் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

செய்தி:

Vadapalani flyover ready, govt. to decide inauguration date

Commuters seek early opening of Vadapalani flyover

திங்கள், ஜூலை 20, 2015

கலைஞரின் வார்த்தை ஜால நாடகம்: திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு இல்லை!

'பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து முழு மதுவிலக்குதான்' என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு கிடைத்துள்ள ஆதரவைக் கண்டு, கண்துடைப்பு நாடகத்தை தொடங்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.

திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கை அமலாக்கப்போவதாக ஒரு செய்தியை ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ஆனால், இதில் முழு உண்மை இல்லை.

உண்மை என்ன?

"தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று மட்டுமே கலைஞர் கூறியுள்ளார்.

"உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்" என்பது வேறு - இது எடுத்த எடுப்பில் மதுபானங்களை தடை செய்வதாகும். இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி கூறுகிறது. ஆனால், "மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்பது வேறு. இதைத்தான் கலைஞர் கூறுகிறார்.

கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "முழு மதுவிலக்கு" என்கிற வார்த்தையும் இல்லை. "மதுவிலக்கை எப்போது அமலாக்குவோம்" என்பதும் இல்லை. "மதுவிலக்கை எவ்வாறு அமலாக்குவோம்" என்கிற விளக்கமும் இல்லை.

கலைஞரின் ஏமாற்று நாடகம்

"மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள்" என்றால் என்ன? இது ஒரு ஏமாற்று நாடகம். 

சாராயக்கடைகளை திறந்த கலைஞரின் காலத்தில், திமுகவினரே சாராய ஆலைகளை நடத்தும் நிலையில் - திமுக ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு என்பது காணல் நீர் தான்!

ஓட்டுக்காக திமுக வீசும் வலை இது. முழு மதுவிலக்கு பாமகவால் மட்டுமே சாத்தியம். பாமக மட்டுமே ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டும்.

வியாழன், ஜூன் 12, 2014

போதையில் விபத்து: வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை தேவை

போதையில் விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை தேவை - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

"தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்ற போதிலும், மனிதத் தவறுகளை திருத்திக் கொள்ள வாகன ஓட்டிகள் தயாராக இல்லை எனும்போது இனி பயணங்கள் பாதுகாப்பானவையாக இருக்குமா? என்ற கவலை எழுகிறது.
சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தான் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 67,757 ஆகும். இந்த விபத்துக்களில் சிக்கி 16,175 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 78,000 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோரில் சுமார் 7,000 பேர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகியுள்ளனர். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 23,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன. அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விபத்துக்களுக்கு காரணமானவர்கள் எவரும் தவறுகளை உணர்ந்ததாக தெரியவில்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், தமிழக போக்குவரத்து ஆணையமும் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு காரணமாக இருப்பவை சரக்குந்துகள் தான் என்று தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளில் 9192 விபத்துக்களுக்கு சரக்குந்துகளே காரணம் ஆகும். விபத்துக்களை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுனர்களில் 70 % மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதும் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே அதிக ஊர்திகளைக் கொண்ட மாநிலம் மராட்டியம் தான். 1.75 கோடி வாகனங்களைக் கொண்ட அம்மாநிலத்தில் ஆண்டுக்கு 45,000 விபத்துக்களும், 13,963 உயிரிழப்புகளும் மட்டுமே ஏற்படும் நிலையில், 1.5 கோடி ஊர்திகளை மட்டுமே கொண்ட தமிழகத்தில் 68,000 விபத்துக்களும், 16,175 உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் பெரும்பாலான ஓட்டுனர்கள் போதையில் வாகனம் ஓட்டுவது தான்.

அண்மையில், அரியலூர் அருகே 15 பேர் உயிரிழக்கக் காரணமான கொடூரமான சாலைவிபத்துக்கு காரணம் சரக்குந்து ஓட்டுனர் அளவுக்கு அதிகமான போதையில் வாகனத்தை ஓட்டி பேரூந்து மீது மோதியது தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கூட பேரூந்துகளையும், மற்ற வாகனங்களையும் உரசிக் கொண்டு சரக்குந்துகள் சீறிப் பாய்வதையும், இதனால் சரக்குந்துகளைப் கண்டாலே மற்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், குறிப்பாக இருசக்கர ஊர்தி ஓட்டுபவர்கள் பயந்து ஒதுங்குவதையும் பார்க்க முடிகிறது.

புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தாறுமாறாக பறக்கும் சரக்குந்துகள் மோதி இரு சக்கர ஊர்திகளில் சென்ற கணவன்& மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள் ஏராளம். இதேபோல், புதுச்சேரியிலிருந்து கடலூர், விழுப்புரம் செல்லும் சாலைகளிலும் இத்தகைய விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன. சரக்குந்துகளின் ஓட்டுனர்கள் போதையில் கண்மூடித்தனமாக ஊர்திகளை ஓட்டுவது தான் இதற்கு காரணம் ஆகும்.
சரக்குந்து ஓட்டுனர்களில் பெரும்பாலானவர்கள் கவனத்துடனும், பொறுப்புடனும் வாகனங்களை ஓட்டும் போதிலும், சிலர் குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டுவதால் சரக்குந்து என்றாலே அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குடித்துவிட்டு ஊர்தி ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தில்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழக்கக் காரணமான சாலை விபத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி, சாலை விதிகளை 3 முறை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதன்பிறகும் விதிகளை மீறினால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது தான் என்ற போதிலும், விபத்துக்களைத் தடுக்க இது மட்டுமே போதாது.

சரக்குந்து உள்ளிட்ட அனைத்து ஊர்திகளின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதாக ஒருமுறை பிடிபட்டாலே அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்; தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற விதியை மிகவும் கடுமையாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் சோதனைச்சாவடிகளை அமைத்து அனைத்து வகையான சரக்குந்துகளின் ஓட்டுனர்களும் மது அருந்தியிருக்கிறார்களா? என ஆய்வுசெய்ய வேண்டும். அவர்கள் மது அருந்தாமல் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். அதேபோல், அனைத்து சரக்குந்துகளிலும் வேகத்தடை கருவி பொருத்தப்படுவதை உறுதி செய்வதுடன், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்தில் செல்லும் ஊர்திகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக காவல்துறையில் விபத்துத் தடுப்புப் பிரிவை தனியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

வெள்ளி, மே 24, 2013

வேண்டாம் இந்த விபரீதம்: புதிய சட்டமன்ற கட்டடத்துக்கு நேர்ந்த கதி மோனோ ரயிலுக்கும் நேருமா? 

'மோனோ ரயில் திட்டம் முதல்வர் தலைமையில் ஆய்வு' என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. "'சென்னையில், மோனோ ரயில் சேவை துவக்கப்படும்' என, 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், சென்னையில், மோனோ ரயில் சேவை, இரண்டு கட்டங்களாக, 111 கி.மீ., தூர அளவில், அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூர் -வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி இடையே, மூன்று வழித்தடங்களில், 8,500 கோடி ரூபாய் செலவில், 57 கி.மீ., தூரம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பணி எதுவும் துவக்கப்படவில்லை. இது தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.' என்கிறது அந்த செய்தி.

மோனோ ரயில்: வேண்டாம் இந்த விபரீதம்

தமிழ்நாடு அரசு எதற்காக இந்த மோனோ ரயில் திட்டத்தை பிடித்துக்கொண்டு தொங்குகிறது என்று தெரியவில்லை. ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்லலாம். இந்த திட்டம் ஒருபோதும் சாத்தியமாகாது. ஒரு வீம்புக்கு நிறைவேற்றினாலும் புதிய சட்டமன்றக் கட்டடம் பயன்படாமல் போன நிலைதான் இதற்கும் ஏற்படும். 

இன்னும் சொல்லப்போனால, அந்தக் கட்டடத்தையாவது மாற்றுத் தேவைகளுக்கு பயன்படுத்திடும் வாய்ப்பு உண்டு. ஆனால், மோனோ ரயிலை எதற்குமே பயன்படுத்த முடியாது. இப்போது மதுரவாயிலில் நிற்கும் துறைமுகச்சாலைத் தூண்களைப் போல, இதற்கு முன்பு பல ஆண்டுகளாகக் கிடந்த வீராணம் குழாய்களைப் போன்று - எதிர்கால சென்னையில் 'நடுத்தெருவை அடைத்துக்கொண்டு நிற்கும் மோனோ ரயில் தூண்களை மட்டும்தான்' காணக்கூடியதாக இருக்கும். மோனோ ரயில் அபத்தம் குறித்து நான் முன்பு  (ஜூன் 03, 2011) எழுதிய பதிவு கீழே:

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை. 

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.


மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்!

(ஜூன் 03, 2011)


தொடர்புடைய சுட்டி:

குழப்பும் வினவு: கார்களைக் கட்டுப்படுத்தினால் ஏழைகளுக்கு ஆபத்தாம்!  

திங்கள், மே 30, 2011

உண்மைத்தமிழனின் உளறல் - ஹெல்மெட் அவசியமா?


இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கு உண்மைத்தமிழனின "ஹெல்மெட் அவசியமா..?" எனும் கட்டுரைதான் காரணம். உண்மைத்தமிழன் அவர்களின் பல அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான கட்டுரைகளை கண்டு நான் வியந்திருக்கிறேன். பதிவுலகில் அவர் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகிறார். ஆனால், தலைக்கவசம் அணிவது குறித்த அவரது கட்டுரை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படி பொறுப்பற்ற கட்டுரையை அவர் எழுதியிருப்பது ஒரு வாய்ப்புக்கேடான நிகழ்வு.

சாலைவிபத்துகள் - சாதாரண நிகழ்வா?

உலகெங்கும் சாலைவிபத்துகளில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் சாகிறார்கள். 5 கோடி பேர் காயமடைகின்றனர். அதில் பலர் நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழக்கின்றனர். இவை அனைத்தும் தவிர்க்கக் கூடியவை.

உலகிலேயே மிக அதிகமானோர் சாலைவிபத்துகளில் பலியாகும் நாடு இந்தியா. இங்கு 2009 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரம்பேர் சாலைவிபத்துகளில் இறந்துள்ளனர். இந்திய அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த 60,794 விபத்துகளில் 13,746 விபத்துகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

அதாவது ஆயிரம் இந்தியர்களில் 57 பேர்தான் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் நடக்கும் 1000 சாலைவிபத்துகளில் 144 விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன.

அகில இந்திய மாநகரங்களில் புதுதில்லிக்கு அடுத்ததாக அதிக விபத்துகள் நடக்கும் மாநகரம் சென்னை. இங்கு 2010 ஆம் ஆண்டில் சாலைவிபத்துகளில் 1415 பேர் இறந்துள்ளனர்.
சாலைவிபத்துகள் அரசின் குறைபாட்டால் நேர்பவை. இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இதனை புரிந்துகொள்ள முடியும். உலகில் சாலை விபத்துகளை கணக்கிட - ஒரு லட்சம் வாகனங்கள் சாலையில் ஓடினால், அதனால் ஒரு ஆண்டில் எத்தனைபேர் இறக்கின்றனர்? - என்பதை வைத்து கணக்கிடுகின்றனர். இதன்படி நெதர்லாந்து நாட்டில் ஒரு லட்சம் வாகனங்களுக்கு 5 பேர் சாலைவிபத்தில் இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் 8 பேர், சீனாவில் 56 பேர். ஆனால் இந்தியாவில் 146 பேர்!

தலைக்கவசம் - சாலைவிபத்து இறப்பை தடுக்கும் மிக முக்கிய நடவடிக்கை.

சாலைவிபத்துகளால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க நான்கு முக்கிய நடவடிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை, 1. வேகக்கட்டுப்பாடு, 2. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், 3. தலைக்கவசம், 4. மகிழுந்துகளில் வார்ப்பட்டைக் கட்டாயம் - ஆகியனவே அந்த நடவடிக்கைகள் ஆகும். இதுகுறித்த உலக சுகாதார நிறுவன அறிக்கை இதோ: GLOBAL STATUS REPORT ON ROAD SAFETY

தலைக்கவசம் எனும் ஒற்றை நடவடிக்கை மூலம் இருசக்கர மோட்டார் வாகனங்களில் செல்வோரின் சாலைவிபத்து மரணத்தில் 42% இறப்புகளை தடுக்க முடியும், 69% தலைக்காயத்தை தடுக்க முடியும்.
"Head injuries represent the most devastating injury subcategory for motorcyclists. Victims who survive a head injury often suffer brain damage that impedes their ability to continue as a breadwinner, and in fact may require a lifetime of personal care that can drain resources from already impoverished families.


The logic for using helmets to address this issue is straightforward: helmet use makes a difference. A 2005 Cochrane Study highlights that use of a helmet reduces risk of a fatality by an average of 42% and of severe injury by 69%. By extension, high rates of helmet use lead to fewer deaths, shorter hospital stays, and speedier recoveries, all of which reduce the economic burden on society, and the emotional burden on families. Despite these simple truths, helmet use remains low in many countries." http://www.helmetvaccine.org/about/challenge.html

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றவர்களில் 3251 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிறது தேசிய குற்ற ஆவணப்பிரிவு. தலைக்கவசம் இவர்களில் பலரது உயிரைக்காப்பாற்றி இருக்கும்.

//விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.


"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.// என்கிறார் உண்மைத்தமிழன்.

சாலை விபத்துகளை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள் முடியாது. இப்போது உலகெங்கும் சுமார் 13 லடசம் பேர் ஆண்டுதோரும் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இதில் அதிகமானோர் அதிக வாகனங்கள் உள்ள மேலைநாடுகளில் இறப்பதில்லை. 90% விபத்துகள் ஏழை நாடுகளில்தான் நேருகின்றன. அதிலும் இந்தியா உலகில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

இதை இப்படியே விட்டால் 2030 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 24 லட்சம் பேராக இறப்புகள் அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இன்று உலகின் அனைத்து மரணங்களுக்குமான காரணங்களில் 9 ஆவது இடத்தில் (மொத்த மரணத்தில் 2.2%) உள்ள சாலை விபத்துகள் 2030 ஆம் ஆண்டில் 5 ஆவது காரணமாக (மொத்த மரணத்தில் 3.6%) மாறும் எனக் கணிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்கு ஒரு கெட்ட செய்தி.

சாலை விபத்துகளில் 95% மனித தவறுகளால் நேருபவை. மனித தவறு இயல்பு, அரசாங்கம்தான் உரிய கொள்கைகள் மூலம் நிலைமையை மாற்ற வேண்டும். ஒருலட்சம் வாகனங்களுக்கு 5 பேர் மட்டுமே இறப்பு என்கிற நிலை நெதர்லாந்தில் உள்ளது என்றால், அது இந்தியாவில் மட்டும் ஏன் 146 பேராக இருக்க வேண்டும்? அரசாங்கமே இதற்கு காரணம்.

"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" 

"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என்கிறார் உண்மைத்தமிழன். அவர் குறிப்பிடும் 'இவர்கள்' அரசாங்கம் ஆகும். தற்கொலை செய்வது கூட சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட ஒன்று. எனவே, எவரையும் இயல்புக்கு மாறாக சாக அனுமதிக்க முடியாது. அதிலும் சாலை விபத்தென்பது பலநேரங்களில் "தற்கொலை குண்டாக" நடக்கிறது. அதிவேகத்தில் செல்பவர்களும் குடித்துவிட்டு ஓட்டுபவர்களும் தாங்கள் மட்டும் சாகாமல், தற்கொலை குண்டு போல அடுத்தவரையும் கொலை செய்கிறார்கள்.

சாலைவிபத்து மரணங்கள் இளம் வயதில்/உழைக்கும் வயதில் நேர்கின்றன. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோரின் அகால மரணத்திற்கு முதல் காரணம் சாலைவிபத்துதான் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த வயதில் ஒருவர் இறப்பது அரசாங்கத்திற்கு பெரும் இழப்பாகும். ஏனெனில் கல்வி, நலவாழ்வு என பலவழிகளிலும் அரசின் பணம் அவர்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், அடிபட்டு சிகிச்சை அளிப்பதும் அரசின் பொறுப்பாகிறது, அரசின் பணம் செலவாகிறது. அடுத்து சட்டம் ஒழுங்கு - நீதிவிசாரணை என பல வழிகளில் தனிமனித விபத்துகள் அரசை பாதிக்கின்றன.

எனவே, உண்மைத்தமிழனின் கருத்தை புறந்தள்ளிவிட்டு, தயவு செய்து அனைவரும் தலைக்கவசம் அணியுங்கள்.

சாலை விபத்து: முதலிடம் தமிழ்நாடு!!

சாலை விபத்துகள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை உலகம் முழுவதும் பத்தாண்டுகளுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இப்போது ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 24 லட்சம் பேராக அதிகரித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பு செயல்பாட்டுக்கான பத்தாண்டுகள் 2011 - 2020 பிரச்சாரத்தின் மூலம் இப்போது நடக்கும் சாலை விபத்துகள் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிற்குள் பாதியளவாக குறைக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகில் முதலிடம் இந்தியா. இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு.

உலகிலேயே மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. அகில இந்திய அளவில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாலை விபத்துகளில் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதில் 13 ஆயிரத்து 700 பேர் தமிழ் நாட்டில் மட்டும் இறந்துள்ளனர். இது இந்தியாவின் சாலை விபத்து சாவுகளில் பத்து சதவீதம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 16 முதல் 29 வயதுக்குள் இளம் வயதில் இறந்துவிடுகின்றனர். இது ஈடுசெய்ய முடியாத இழப்பாகிவிடுகிறது.

இந்தியாவின் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகளுக்கு மதுப்பழக்கம் காரணமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளுக்கு மதுபானம் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

சாலைவிபத்துகளை தடுப்பது எப்படி?

தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுத்து உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தடுத்தல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், வாகன வேகத்தை கட்டுப்படுத்துதல், மகிழுந்துகளில் செல்வோர் வார்ப்பட்டை அணிவதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேவை.

உலகம் முழுவது சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா.சபை சொன்னாலும் - உலகிலேயே மிக அதிக விபத்துகள் இந்தியாவிலும், இந்தியாவிலேயே மிக அதிக சாலை விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடப்பதால், இந்த சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டிற்கே மிக முக்கியமானதாகும்.
எனவே, இந்த நேரத்தில் அரசாங்கமும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தமிழ்நாட்டின் சாலை விபத்துகளை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

http://decadeofaction.org/

http://www.flickr.com/groups/roadsafetydecade