Pages

பத்திரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

மாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி!

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் "மாநில சுயாட்சி" எனும் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி ஒரு வெட்கம் கெட்ட கோரிக்கையை முன்வைப்பது என்பது வியப்பளிக்கிறது! 1957 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் கோரிக்கை "மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்பதாகும்.

நம் நாடு பத்திரிகை செய்தி 1957


எந்த ஒரு மாநிலமும் எப்போது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கலாம் என்கிற திருத்தம் இந்திய அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் முதல் கோரிக்கை ஆகும்.

இந்திய யூனியனில் எல்லா மாநிலங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை ஆகும். அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப அல்லாமல் - எல்லா மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் இரண்டாவது கோரிக்கை.

மத்திய ஆட்சி அதிகாரங்களுக்கு வரம்பு வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை. அதாவது, மாநில உரிமைகளுக்கு மத்திய அரசு வரம்பு விதிப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் அதிகாரத்தை குறைத்து வரம்பு வைக்க வேண்டும் என்பது 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் மூன்றாவது கோரிக்கை.
திமுக தேர்தல் அறிக்கை 1957

1962, 1967, 1971 என பின்வந்த தேர்தல்களிலும் மாநில சுயாட்சி கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக வைத்தது திமுக.

60 ஆண்டுகளாக திமுக கிழித்தது என்ன?

1957 ஆம் ஆண்டில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போட்டியிட்ட திமுக, இப்போது 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன் வைக்கிறது. மாநிலங்களுக்கு சம அதிகாரம், மத்திய அரசின் அதிகாரங்கள் குறைப்பு என இப்போதும் தீர்மானம் நிறைவேற்றுகிறது திமுக.

கடந்த 60 ஆண்டுகளில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், அதன் செயல்தலைவர் முக ஸ்டாலின் - மாநில சுயாட்சிக்காகவும் 1957, 1962, 1967, 1971-ல் முன்வைத்த தேர்தல் அறிக்கைகளுக்காகவும் இத்தனை நாட்களாக கிழித்தது என்ன?

அதிகாரத்தில் இருந்தபோது, காங்கிரசு கட்சியிடம் தமிழ்நாட்டின் நலன்களை அடகுவைத்த திமுக - இப்போது அதே காங்கிரசுடன் சேர்ந்து மாநில சுயாட்சிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது எதற்காக?

முக ஸ்டாலினுக்கு ஏனிந்த வெட்கம் கெட்ட வேலை? 

திங்கள், ஜூன் 19, 2017

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும்.

ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி

வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம்

இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர்

(பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ரஜினி: தலித் தலைவர்  

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
காலா திரைப்படத்தில் MH BR 1956

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

செவ்வாய், ஜூன் 13, 2017

ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.


ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.
"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள்

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

வியாழன், ஜூன் 01, 2017

தலித் தலைவர் வேடமெடுக்கும் ரஜினிகாந்த் - காமராஜருடன் ஒப்பிடும் தினத்தந்தி 

அண்ணல் அம்பேத்கரின் சமூகமான மராட்டிய தலித் மகர் சமூகத்தை சேர்ந்தவரான நடிகர் ரஜினி காந்தை - கர்மவீரர் காமராஜருடன் ஒப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தனக்கென எந்த சொத்துமே இல்லாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் அவர்களை, தமிழக மக்களை சுரண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருக்கும் ரஜினி காந்துடன் ஒப்பிடும் துணிச்சல் தினத்தந்திக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை!

யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. உண்மையில் எல்லா மக்களும் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும், அரசியல் அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவதும் தான் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.

அதே நேரத்தில், அரசியலில் தலைமை பொறுப்புகளுக்கு வர நினைப்பவர்கள், அதற்கான தகுதிகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசியலில் தலைமையேற்க விரும்புகிறவர்கள், அந்த மாநிலத்தின் பிரச்சினைகளில் - சிலவற்றிலாவது தமக்கென நிலைப்பாட்டினையும், தீர்வுகள் குறித்த கருத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும். நடிகர் ரஜினி காந்திற்கு அப்படி ஏதாவது கருத்தோ, தீர்வோ இருக்கிறதா?

தமிழர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக மாநிலத்தின் அடாவடி குறித்து ரஜினியின் கருத்து என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் தமிழினத் துரோகம் குறித்து ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினிக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமா அல்லது கர்நாடகத்தில் உள்ள அவரது கோடிக்கணக்கான முதலீடுகள் முக்கியமா - என தினத்தந்தி கேட்குமா?

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டாரா ரஜினி காந்த்? தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பினாரா? தெருவுக்கு வந்து போராடினாரா? இதுகுறித்தெல்லாம் அவரிடம் கேள்வி கேட்டதா தினத்தந்தி?
மீனவர் படுகொலை, கச்சத்தீவு மீட்பு, முல்லைப்பெரியாறு அணை உயர்த்துதல், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்து, நீட் தேர்வு திணிப்பு, இந்திய அரசின் இந்தி திணிப்பு - இவற்றுக்கெல்லாம் ரஜினி காந்த் என்ன சொல்கிறார் என்பதை தினத்தந்தி ஒருமுறையாவது கேட்டிருக்குமா?

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது, வெள்ள நிவாரணத்துக்காக நடிகை ஹன்சிகா 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். நடிகை சமந்தா 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பலகோடி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் தான் கொடுத்தார். தமிழர்கள் மீதான அக்கறையில் 'ஹன்சிகா - சமந்தா' வை விட கீழானவராகவே ரஜினிகாந்த் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். இந்த உண்மையை இப்போது பேசுமா தினத்தந்தி?

தலித் தலைவர் ரஜினி - உணவு உரிமைக்காக குரல்கொடுக்காதது ஏன்?

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அனைத்து சமூகங்களை போன்று, தலித்துகள் அரசியலில் ஈடுபடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், தனது தலித் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஜினி காந்த் - மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?

அண்ணல் அம்பேத்கரையும், அவரது "Maharashtra BR Ambedkar 1956" புரட்சியையும், தனது தலித் அடையாளத்தையும் மட்டும் ரஜினி காந்த் முன்னிறுத்தினால் போதாது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மட்டிறைச்சிக்கு எதிரான கருத்துகளை எதிர்த்தது போன்று ரஜினி காந்தும் எதிர்க்க வேண்டாமா? இது குறித்து எதுவும் கேட்காமல் தினத்தந்தி மவுனம் சாதிப்பது ஏன்?

காமராஜருக்கு இணையாக ரஜினியை முன்னிறுத்தியதற்காக தினத்தந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

சனி, டிசம்பர் 31, 2016

பட்டை நாமம்: மோடி போட்டதும், மோடிக்கு போட்டதும்!

இந்தியாவின் 'மாபெரும் புரட்சி' என்று பேசப்பட்ட, மோடியின் செல்லாக்காசு நடவடிக்கை, இப்போது இந்திய வரலாற்றின் 'மாபெரும் ஊழல்' என்கிற நிலையை அடைந்துள்ளது. 

அதனால்தான் - கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் ஒழிக்கிறேன் என்று பேசிக் கிளம்பிய டேஷ் பக்த கும்பல், இப்போது 'கேஷ் லெஸ் எகானமி' - 'லெஸ் கேஷ் எகானமி' என்று புதிது புதிதாக புரூடா விடுகிறது. 

மோடிக்கு வங்கிகள் போட்ட பட்டை நாமம்

லட்சக்கணக்கான கோடி கருப்புப் பணத்தை பிடிக்கப்போகிறேன் என்று பிரதமர் மோடி பீலா விட்டார். ஆனால், டிசம்பர் 23 ஆம் நாள் கணக்கின் படி, மக்களிடம் மீதமிருந்த 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களின் மதிப்பு 97,613 கோடி ரூபாய் மட்டும் தானாம்! அதாவது - ஒரு லட்சம் கோடிக்கும் குறைவு.

நவம்பர் 8 ஆம் நாளில் மக்களிடம் இருந்த செல்லா தாள்களின் மதிப்பு 15,45,816 கோடி. அதில் டிசம்பர் 23 ஆம் நாள் வரை, வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ள பணம் 14,48,203 கோடி! மீதம் இருந்த பழை தாள்களின் அளவு 97,613 கோடி ரூபாய்.

டிசம்பர் 23 முதன் 30 வரையில் வங்கிகளில் செலுத்தப்படும் பழை தாள்கள், மற்றும் ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளில் செலுத்தப்படவுள்ள பழை தாள்கள் ஆகியவற்றையும் சேர்த்து பார்த்தால் - மிகப்பெரிய பூஜ்யத்தை மோடி பெறுவார் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

அதாவது, வங்கிகளின் துணையுடன் எல்லா கருப்பு பணமும் இப்போது நல்ல பணம் ஆகிவிட்டது! இது வங்கிகள் மோடிக்கு போட்ட பட்டை நாமம் ஆகும்!

மக்களுக்கு மோடி போட்ட பட்டை நாமம்

மக்களும் கருப்பு பண முதலைகளும் 14,48,203 கோடி ரூபாயை வங்கிகளில் செலுத்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கு புதிய ரூபாய் தாள்களாக 5,92,613 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய தாள்களில் பாதியளவுக்கு கூட புதிய தாளை தரவில்லை. சுமார் 8,55,000 கோடி மக்கள் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக, கேஷ் லெஸ் எகானமிக்கு மாறுகிறோம் என்று சொல்லி, மக்கள் பணத்தை வங்கிகளில் குவித்து, பெரும் கார்ப்பரேட் பணக்காரர்களுக்கு (வராக்)கடனாக கொடுக்கப் போகிறார்கள். இது இந்திய வரலாற்றின் 'மாபெரும் ஊழல்'. மோடி மக்களுக்கு போடும் பட்டைநாமம்.

பாரத் மாதாகீ ஜே...!

புதன், டிசம்பர் 28, 2016

இன்று: ஒரு பிரதமர் அக்னி பிரவேசம் செய்யும் நாள்!

50 நாட்களில் பணத்தாள் தட்டுப்பாடு நீங்காவிட்டல் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார் நரேந்திர மோடி.

இன்றுதான் அந்த 50 ஆவது நாள் என்பதை அவருக்கு யாராவது புரிய வைப்பார்களா?

"பணமதிப்பு நீக்கம் என்பது மாபெரும் ஊழல்" 

2017 ஆம் ஆண்டு முழுவதுமே பணத்தாள் பற்றாக்குறை நீங்காது. ஏடிஎம் எந்திரங்கள் இயங்காது. வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தினை - சில ஆயிரம் மதிப்பிலான பெரிய தொகை - பணத்தாளாக வாங்கவே முடியாது.

புதிய பணத்தாளை தேவையான அளவு அச்சடிக்கவே இல்லை. இனி அச்சடிக்கவும் மாட்டார்கள்!

ஏனெனில், பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு (வராக்)கடனாக கொடுக்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் செலுத்தப்படும் பணத்தை வங்கிகளிலேயே முடக்கி விட்டார்கள். இனி அதில் பெரும்பகுதியினை பணத்தாளாக வெளியே எடுக்க வாய்ப்பே இல்லை.

பணமதிப்பு நீக்கம் என்பதுதான் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் என்பதை எதிர்கால வரலாறு சொல்லும்.

செவ்வாய், டிசம்பர் 27, 2016

கி. வீரமணியின் சசிகலா புராணம்: நாகபதனிக்காக களமிறங்கும் நாகப்பதனி!

நாகபதனி குழுவை சேர்ந்த அதிமுகவுக்காக - நாகப்பதனி குழுவை சேர்ந்த கி. வீரமணி வாள் வீச்சில் இறங்கியுள்ளார். அதிமுகவின் தலைமைப் பதவிக்கு சசிகலாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்!

'அதிமுகவின் தலைமைக்கு சசிகலாவைத் தேர்வு' செய்ய வேண்டும். இதுவரை கேடயமாய் பயன் பட்டவர்; இனி வாளும் - கேடயமாய் நின்று அந்த இயக்கத்திற்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டம்!" - என்று முழங்கியுள்ளார் திராவிடர் பூசாரி கி. வீரமணி!

இந்த உலகமகா தத்துவத்துக்கு தந்தை பெரியாரையும் துணைக்கழைத்து ‘‘இந்நாட்டில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை; அரசியல் பெயரில் - போர் வைக்குள் நடைபெற்றவை அத்துணையும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’’ என்று நீட்டி முழக்கியுள்ளார்.

கூடவே, 'திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்' என்றும் கூறியுள்ளார் கி. வீரமணி. அவரின் இந்த உரிமைப்பாசத்தில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்! 

வீரமணி நாகப்பதனி குரூப்: அதிமுக நாகபதனி குரூப்

வடிவேலுவின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் 'நாகபதனி' மற்றும் 'நாகப்பதனி' என இரண்டு சாதிகளுக்குள் சண்டைப் போட்டி நடக்கும். இரண்டும் ஒருசாதி தானே என்று கேட்கும் போது - நடுவில் 'ப்' இல்லாததை கவனியுங்கள் மன்னா என்பார்கள்.

அதேபோல - கி. வீரமணி என்பவர் 'திராவிடர்' இயக்கத்தை சேர்ந்தவர். அதிமுக கட்சி 'திராவிட' இயக்கத்தை சேர்ந்தது. இரண்டுக்கும் நடுவே 'ர்' விட்டுவிட்டதை கவனியுங்கள்! 
அதாவது, இவை இரண்டும் வெவ்வேறு குழுக்கள் ஆகும். எப்படி 'இந்தியன் பேங்க்' என்பதும் 'பேங்க் ஆஃப் இந்தியா' என்பதும் இரண்டு வெவ்வேறு வங்கிகளோ, அதுபோலத்தான் இவை இரண்டும் வெவ்வேறு கொள்கைக் கொண்ட அமைப்புகள்!

திராவிட"ர்" இயக்கம் என்பதில்தான் வீரமணியின் திராவிடர் கழகம் உள்ளது. திராவி"ட" இயக்கம் என்பதில் திமுகவும் அதிமுகவும் உள்ளன. இவை இரண்டுக்கும் இடையே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்குமான மாபெரும் வேறுபாடு உள்ளது.

பெரியாருக்கு எதிரான இயக்கம்

தந்தை பெரியார் தலைமையிலான 'திராவிடர்' இயக்கம், 'பிராமணர் - பிராமணர் அல்லாதார்' என்கிற வேறுபாட்டை முன்னிறுத்தியது. அது 'திராவிடர்' என்கிற மக்கள் பிரிவினருக்கான இயக்கம் ஆகும். அதாவது, பிராமணர் அல்லாத மக்களின் இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.

பெரியாரின் கொள்கைக்கு நேர் எதிராக, அண்ணா உருவாக்கியது 'திராவிட' இயக்கம் ஆகும். 'தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதியை 'திராவிட நாடு' என்று குறிப்பிட்டு - இந்த நிலப்பகுதியின் நலனை முன்னிறுத்தியது 'திராவிட' இயக்கம். இது பிராமணர் உள்ளிட்ட எல்லோருக்குமான இயக்கம் ஆகும்.

"திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று கூறும்போது அதில் திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்துவிடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப்போக்குக்கு இது உகந்ததாகப் படவில்லை. நம்முடைய கட்சியின் லட்சியம் திராவிட நாட்டைச் செழுமையான பூமியாகப் பேணிக் காப்பதாகும்" - என்று 1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தபோது அண்ணா தெரிவித்தார். (அண்ணா 'ர்' எழுத்தை கைவிட்டு விட்டதைக் கவனியுங்கள்)

அதாவது, திராவிடர் இனம் என்கிற பெரியாரின் கோட்பாட்டை குழிதோண்டி புதைத்துவிட்டு, திராவிட நாடு என்கிற இடத்துக்காகத்தான் அண்ணா கட்சி தொடங்கினார். அதிலிருந்து உருவானதுதான் அதிமுக. 'ஆரியர் - திராவிடர்' என்கிற வேறுபாட்டை 67 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட கட்சிகள் கைவிட்டுவிட்டதால்தான்,  சட்டமன்றத்திலேயே 'நான் பாப்பாத்திதான்' என்று கூறிக்கொண்ட ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக வரமுடிந்தது.

யார் பெற்ற பிள்ளைக்கு யார் அப்பா?

யாரோ பெற்ற பிள்ளைக்கு தன்னுடைய இனிஷியலை சூட்டக் கூறுவது போல, கி. வீரமணிக்கு தொடர்பே இல்லாத அதிமுகவுக்கு வக்காலத்து வாங்கும் சாக்கில் -  'திராவிடர் இயக்கங்களின் தாய்க்கழகம் என்ற உரிமையோடும், உறவோடும் கூறுகிறோம்' என்கிறார் வீரமணி!

அதிமுக திராவிடர் இயக்கமே இல்லை. அது திராவிட இயக்கம். அப்புறம் எப்படி உரிமையும் உறவும் வரும்? இந்தியன் பேங்க் மேனஜர், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு மேனஜர் ஆக முடியுமா?

யாராவது  கி. வீரமணியிடம் சொல்லுங்கள் - அது நாகப்பதனி குரூப் அல்ல. நாகபதனி குரூப் என்று! 

அதிர்ச்சி செய்தி: சசிகலாவிடம் வசமாக சிக்கினார் நரேந்திர மோடி!

சசிகலா தரப்புக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சேகர் ரெட்டியை கைது செய்து, அப்படியே ஊழல் விஞ்ஞானி ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தியது மத்திய அரசு. அதுவரை நடந்தவை எல்லாம் சரிதான். ஆனால், அதன் பிறகு நடந்தவை பாஜக அரசின் சுயநல சொதப்பல் மட்டுமே. 

ராமமோகன ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், பணம், ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அறிவிக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தால் அதன் தொடர் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் பிறகு சமாதானமாக போக முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்யவில்லை மத்திய அரசு.

மேலும், ராமமோகன ராவுடன் சேர்ந்து கொள்ளையடித்த அரசியல் மேலிடங்கள் மீதும் கை வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'ஹைதராபாத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். துணை ராணுவம் வந்துள்ளது. அவர்கள் அங்கே சோதனை செய்யப்போகிறார்கள், இங்கே சோதனை செய்யப்போகிறார்கள்' என புலிவருகிறது கதையாக பூச்சாண்டி காட்டினர்.

அரசியல் லாபமே மோடியின் நோக்கம்

மோடி அரசின் பூச்சாண்டிக்கான காரணம் மிகத்தெளிவானது. அவர்களுக்கு அதிமுக ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதன் கழுத்தை எதற்காகவும் அறுக்க மாட்டார்கள். அதிமுகவின் 13 ராஜ்ய சபா உறுப்பினர்களின் ஆதரவு மோடி அரசுக்கு தேவை. அப்படியே, தமிழ்நாடு அரசையும் தமது விருப்பம் போல நடத்த பாஜக விரும்பியிருக்கலாம்.

சசிகலா தரப்பை மிரட்டியே காரியம் சாதிக்கலாம் என்கிற பாஜக நினைப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் ராமமோகன ராவ். இனிமேல் சசிகலா தரப்புக்கு எதிராக ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் - அது பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுத்த கதை ஆகிவிடும்.

தப்பி ஓடும் பாஜக

முள் மேல் விழுந்த சேலையின் நிலையில் இருக்கிறார் மோடி. இனி, சேலை கிழியாமல் தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக அரசு.

ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, சசிகலாவிடமிருந்து தப்பி ஓடுவதை விட்டால், மோடி அரசுக்கு வேறு வழியே இல்லை!

சனி, டிசம்பர் 24, 2016

ஜெ. மரணத்தில் மர்மம்: சசிகலாவை எதிர்க்கும் 'சோ'வின் துக்ளக்'!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழுவிவரமும் வெளிவர வேண்டும் என்றும், அதிமுகவின் தலைமைப் பதவிக்கு சசிகலா வரக்கூடாது என்றும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது, சோ நிறுவிய துக்ளக் பத்திரிகை.

துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில் 'ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் சதி செய்தது அம்பலமானதால்தான் அவர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து சோவிடம் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்' என்கிறது துக்ளக்.

'அதிமுகவில் ஜெயலலிதா தவிர மற்ற எல்லோருமே சைபர்கள். அந்த சைபர்கள் எல்லாம் சேர்ந்து சசிகலா எனும் சைபரை தேர்ந்தெடுத்தால் அவர் சைபர் இல்லை என்று ஆகிவிடுமா?...  ஜெயலலிதா பாணியில் சசிகலா தன்னை சின்னம்மா என்று அழைத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போலத்தான்' என்கிறது துக்ளக்.

சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் தலைமையேற்க கோரிக்கை வைப்பதும், பத்திரிகை முதலாளிகள் அவரை வரிசையாக சந்திப்பதும் அப்பட்டமான நாடகம் என்கிறது துக்ளக்.

"துக்ளக் கருத்து முக்கியமானது!"

துக்ளக் இதழ் ஜெயலலிதாவின் ஒரே ஆசான் ஆன சோ'வுடையது. அதுமட்டுமல்லாமல், இந்தியப் பேரரசை ஆளும் தில்லி தலைமையின் முக்கியமான ஆலோசகரும், நாக்பூர் தலைமையகத்தின் முக்கிய பிரதிநிதியுமான ஆடிட்டர் குருமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு துக்ளக் இதழ் வெளிவருகிறது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆகும்.

துக்ளக் இதழின் கடுமையான சசிகலா எதிர்ப்பு - தமிழக அரசியலின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:




திங்கள், டிசம்பர் 19, 2016

ரூ.5000 புதிய உச்சவரம்பு: இந்தியாவில் கருப்பு பணமே இல்லையாம்!

டிசம்பர் 30 ஆம் தேதிவரை, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் வங்கியில் செலுத்தலாம் என்று அறிவித்த மத்திய அரசு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது. அடுத்த பத்து நாட்களில் ஒரே ஒருமுறை மட்டும்தான் 5000 ரூபாய்க்கு மேல் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

அதுவும் கூட, இரண்டு வங்கி அதிகாரிகள் முன்பாக, 'இவ்வளவு நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தாதற்கான காரணத்தை விளக்கிக் கூறி', அவர்கள் அதனை நம்பினால் மட்டுமே, 'ஒரே ஒருமுறை' வங்கியில் பழைய பணத்தை செலுத்த முடியுமாம். மற்ற எல்லோருக்கும் அடுத்த பத்து நாட்களில் மொத்தமாக 4999 ரூபாய்தான் உச்சவரம்பு!

"ஏன் இந்த தடுமாற்றம்?"

கருப்பு பணத்தை ஒழிக்கிறேன், கள்ளப் பணத்தை ஒழிக்கிறேன் என்பதெல்லாம் வெளியில் சொல்லப்பட்ட மோசடி காரணங்கள்.  'மக்களிடம் உள்ள பணத்தை வங்கிக் கணக்கில் முடக்கி, அதனை பெரும் பணக்காரர்களுக்கு கடனாக வாரி வழங்குவது மட்டும்தான்' மோடி அரசின் உண்மையான நோக்கம்!

எனினும், சுமார் 14 லட்சம் கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளை ஒழிக்கும் போது, அதில் சுமார் 4 லட்சம் கோடி அளவுக்கு பணம் திரும்ப வராது என்றும், அந்தப் பணம் ரிசர்வ் வங்கியின் பணமாக மாறுவதால், அதிலிருந்து ஓரிரு லட்சம் கோடி ரூபாயை எடுத்து - ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று மோடி அரசு திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார்கள்!

அதாவது, பெரும் பணக்காரர்களுக்கு கொடுத்த 8 லட்சம் கோடி ரூபாய் பணம் வராக்கடனாக போய்விட்டதால் - திவாலாகிவிட்ட வங்கிகளின் கணக்கில் மக்கள் பணத்தை குவித்து, மீண்டும் பணக்காரர்களுக்கே கடனை வாரி வழங்கும் நோக்கம் ஒருபக்கம் - மக்களின் கொந்தளிப்பை அடக்க, ஏழைகளின் கணக்கில் கருப்புப் பணத்தை பகிர்ந்தளிப்பது இன்னொரு நோக்கம் ஆகும்.

"ஏமாந்து போனது மோடி அரசு"

மக்களின் பணத்தை பிடுங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் ஒரு நோக்கத்தில் மட்டும்தான் மோடி அரசு வெற்றி அடைந்துள்ளது. ஆனால், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 14 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் முழுவதுமே வங்கி கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் நிலை இப்போது உருவாகி உள்ளது.

அதாவது, ஜனவரி முதல் வாரத்தில் கணக்கு பார்க்கும் போது - எல்லா ரூபாய் நோட்டுகளும் திரும்பி வந்துவிட்டன. இந்தியாவில் பணத்தாளாக கருப்பு பணமே இல்லை என்று அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி!

இப்படி, எல்லா பணமும் திரும்பவும் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதை தடுக்கவே இப்போதைய புதிய 5000 ரூபாய் உச்சவரம்பு திணிக்கப்படுகிறது.
இந்தியாவில் இப்போது நடப்பது மீண்டும் ஒரு துக்ளக் தர்பார்! எதற்கும் நாமும் சொல்லி வைப்போம் - "பாரத் மாதாகீ ஜே!"

தொடர்புடைய சுட்டிகள்:

1. 500 ரூபாய் இல்லை: குழப்பத்தின் உச்சத்தில் மோடி அரசு!

2. மோடி அரசின் பண ஒழிப்பு: தேச பக்தியா, தேசத்தின் மீதான தாக்குதலா?

3. மோடி அரசின் பண ஒழிப்பு: இந்திய பொருளாதாரத்தின் மீதான போர்!

4. கருப்பு பண ஒழிப்பு: ஏழைகளிடம் பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் திட்டமா?


5. மோடி அரசின் சதி: கருப்பு பண ஒழிப்பா? கார்ப்பரேட் கொள்ளையா?

ஞாயிறு, டிசம்பர் 18, 2016

உலக மதுஒழிப்பு மாநாட்டில் பாமகவின் சாதனை: சாதிவெறி பிடித்த ஊடகங்களின் பார்வைக்காக...!

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதை ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் கே. பாலு தொடர்ந்த வழக்கில் - 'சென்னை உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அளித்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில்தான்' - இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடளவில் அளித்த உத்தரவு, இப்போது உச்சநீதிமன்றத்தால் இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக மதுஒழிப்பு மாநாட்டில் பாமகவின் சாதனை

2015 அக்டோபர் மாதம் ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நடத்தப்பட்ட உலக மது ஒழிப்பு கொள்கை மாநாட்டில் (Global Alcohol Policy Conference - Momentum for change: research and advocacy reducing alcohol harm, 7th-9th October 2015 in Edinburgh, Scotland) - பாமகவின் சாதனை மாநாட்டு உரையாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  


Litigation: A Tool for Enforcing Alcohol Regulation Legal Provisions எனும் தலைப்பில் வழக்கறிஞர் கே. பாலு உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது (படம் காண்க). 

(குறித்த நேரத்தில் விசா ஏற்பாடுகளை செய்ய முடியாததால் அவர் உலக மதுஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை). 

ஊடகங்களின் சாதிவெறி

உலக மது ஒழிப்புக் கொள்கை மாநாட்டிலேயே இந்த சாதனை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாமக வழக்கறிஞர் கே. பாலு தொடுத்த வழக்கு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் முகப்பிலேயே உள்ள நிலையில் - பாமகவையும் வழக்கறிஞர் பாலுவையும் இன்னமும் ஊடகங்கள் மூடி மறைப்பது ஏன்?

ஊடகங்களின் சாதிவெறிக்கு ஒரு எல்லையே இல்லையா? எல்லாவற்றையும் சாதிவெறியுடன் பார்க்கும் இந்தக் கொடூரத்துக்கு ஒரு முடிவே இல்லையா?
உச்சநீதிமன்ற தீர்ப்பின் முகப்பு
தொடர்புடைய இடுகை: டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

டைம்ஸ் ஆப் இந்தியா: பத்திரிகை தொழிலா? பாலியல் தொழிலா?

மலையாளிகளால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' - தமிழர் கட்சி ஒன்று இந்திய அளவில் சாதனை படைத்ததை மறைத்து எழுதியுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில பத்திரிகையின் இனவெறியும், சாதிவெறியும் இதன் மூலம் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. 

மறைக்கப்படும் சாதனை

'இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான்' இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால், இந்த சாதனையை செய்தது பாட்டாளி மக்கள் கட்சி என்பதால், இதனை எவரும் பேச மறுக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிலேயே "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" (THE STATE OF TAMILNADU Versus K BALU) என பாமக வழக்கறிஞர் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதாவது, பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு 'தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற வேண்டும்' என்று தொடுத்த வழக்கின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டின் போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, பாமகவின் வழக்குடன் அதுபோன்ற இதர வழக்குகளையும் இணைத்து விசாரணை நடத்தி 'இந்தியா முழுவதுக்குமாக' தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், ஊடகங்களும் சாதி வெறியர்களும் - ஏதோ சில பொதுநல அமைப்புகள் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இது - என்பது போல மேம்போக்காக எழுதுகின்றனர். குறிப்பாக, மலையாளிகள் ஆதிக்கத்தில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், இந்த வழக்கின் தலைப்பு  "தமிழ்நாடு அரசு -எதிர்- கே. பாலு" என்பதைக் கூட குறிப்பிடாமல், வேறு ஒருவர் தொடுத்த வழக்கு என்பது போல எழுதியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18.12.2016
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இவ்வாறு சாதிவெறி, இனவெறியுடன் உணமையை மறைத்து செய்திகளை வெளியிடுவதை விட, அந்த ஊடகத்தை நடத்துபவர்கள் பாலியல் தொழிலை நடத்துவது மேலானதாக இருக்கும்.

பாமகவின் மாபெரும் சாதனை

பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் - இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்; நெடுஞ்சாலைகளின் வெளிப்புற எல்லையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்ககக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து பார்க்கும் போது, பார்வையில் படும் வகையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; மதுக்கடைகளுக்கு வழிகாட்டும் பலகைகளோ, விளம்பரங்களோ எதுவும் இருக்கக் கூடாது - என்று தீர்ப்பளித்துள்ளது.

இது உலகளாவிய சாதனை
1. உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உலக நாடுகள் உருவாக்கியுள்ள 'ஆபத்தான மதுப்பழக்கத்தை ஒழிப்பதற்கான உலக வியூகத்திட்டத்தின் படி (Global strategy to reduce harmful use of alcohol 2010)- குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், மதுபானம் எளிதில் கிடைப்பதை தடுத்தல், மதுமான விளம்பரங்களை ஒழித்தல் ஆகிய நடவடிக்கைகள் (drink-driving policies and countermeasures; availability of alcohol; marketing of alcoholic beverages) இந்த தீர்ப்பின் மூலம் சாத்தியமாக்கப்பட்டுள்ளன.
2. ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'தொற்றா நோய்களை தடுக்கும் திட்டத்தின்' (Global Action Plan for the Prevention and Control of NCDs 2013-2020) ஒரு முக்கிய அங்கமான, மதுப்பழக்கதை குறைத்தல் (At least a 10% relative reduction in the harmful use of alcohol) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு வழிசெய்கிறது.
3.  ஐநா அவை தீர்மானத்தின் படி ஏற்கப்பட்டுள்ள 'சாலை விபத்துகளை தடுக்கும் திட்டத்தின்' (Global Plan for the Decade of Action for Road Safety 2011-2020) ஒரு முக்கிய அங்கமான,  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல் (Set and seek compliance with drink–driving laws and evidence-based standards and rules to reduce alcohol-related crashes and injuries) எனும் இலக்கினை அடைய இந்த தீர்ப்பு மிகப்பெரிய அளவில் வழிசெய்கிறது.

பாமக வழக்கின் வெற்றி என்பது, ஐநா அவையும், உலக சுகாதார நிறுவனமும் முன்வைக்கும் உலகளாவிய மாபெரும் லட்சியத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு - ஒரு மாபெரும் வரலாற்று சாதனை - இதனை சாதித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்கிற ஒரே காரணத்துக்காக கண்டும் காணாமல் செய்யப்படுகிறது.

ஊடகங்களின் இந்த மூடிமறைத்தலுக்கு சாதி வெறியைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இணைப்பு: பாமக தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 15 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதோTHE STATE OF TAMILNADU Versus K BALU & ANR

CIVIL APPEAL Nos .12164-12166 OF 2016
THE STATE OF TAMILNADU Versus K BALU & ANR 

Hon'ble the Chief Justice, His Lordship T.S. Thakur
Hon'ble Dr. Justice D.Y. Chandrachud  
Hon'ble Mr. Justice L. Nageswara Rao.

- judgment of the Bench - 

We accordingly hereby direct and order as follows :

(i) All states and union territories shall forthwith cease and desist from granting licences for the sale of liquor along national and state highways;

(ii) The prohibition contained in (i) above shall extend to and include stretches of such highways which fall within the limits of a municipal corporation, city, town or local authority;

(iii) The existing licences which have already been renewed prior to the date of this order shall continue until the term of the licence expires but no later than 1 April 2017;

(iv) All signages and advertisements of the availability of liquor shall be prohibited and existing ones removed forthwith both on national and state highways;

(v) No shop for the sale of liquor shall be (i) visible from a national or state highway; (ii) directly accessible from a national or state highway and (iii) situated within a distance of 500 metres of the outer edge of the national or state highway or of a service lane along the highway.

(vi) All States and Union territories are mandated to strictly enforce the above directions. The Chief Secretaries and Directors General of Police shall within one month chalk out a plan for enforcement in consultation with the state revenue and home departments. Responsibility shall be assigned interalia to District Collectors and Superintendents of Police and other competent authorities. Compliance shall be strictly monitored by calling for fortnightly reports on action taken.

(vii) These directions issue under Article 142 of the Constitution.
------------------


சனி, டிசம்பர் 10, 2016

எனக்கென்று உறவினர் கிடையாது - ஜெயலலிதா சொன்னதும் நடந்ததும்!

"எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. 
எனக்கென்று உறவினர் கிடையாது. 
எனக்கு சுயநலம் அறவே கிடையாது"

செல்வி ஜெயலலிதா வாட்ஸ்அப் பேச்சு (15.12.2015): இங்கே சொடுக்குக.

நடந்தது என்ன? படத்தில் காண்க: 
நக்கீரன் 
ஜூனியர் விகடன்

புதன், டிசம்பர் 07, 2016

தமிழகத்தை இரட்சிக்க வருகிறார் கும்பானி!

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை காற்றும், எண்ணெயும் சேர்த்து நிரப்பப்போகின்றனவாம்.

முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மறைந்துவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக அரசியல் அவதாரம் எடுத்து தமிழ்நாட்டை இரட்சிக்கப் போகிறாராம் கும்பானி.

எண்ணெயில் தொடங்கி காற்று (செல்பேசி, தொலைக்காட்சி), செருப்பு, காய்கறி, மின்னணு பொருட்கள் என அத்தனைக் கடைகளும் திறந்து சிறப்பாக வியாபாரம் செய்து வரும் கும்பானி, அடுத்ததாக அரசியல் வியாபாரம் செய்ய முடிவு செய்திருப்பது குறித்து, ‘‘அடுத்த மாற்று கும்பானி’’ என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியிட்டிருந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

அரசியலில் வெற்றிடம் இல்லாத போதே வெற்றிக்கான வழிகள் குறித்து கனவு கண்டு கொண்டிருந்த கும்பானி, இப்போது வெற்றிடம் ஏற்பட்டிருப்பதால் அதை காசின் உதவியுடன் கைப்பற்றத் துடிக்கிறார். மாவலியின் நாடு வாமணன் காலடியில் அடங்கியதைப் போல, பேனை பெருமாள் ஆக்கி காட்டும் ஊடகங்கள் அனைத்தும் இப்போது கும்பானியின் கைகளுக்குள் அடங்கிவிட்டதால் நினைத்ததை எளிதில் சாதித்து விடலாம் என்று காற்றில் மிதந்தபடி கனவு காண்கிறாராம் அவர்.

அறுவடை செய்வதற்கு வயல் தேவைப்படுவதைப் போல, அதிகாரத்தைப் பிடிப்பதற்கு அரசியல் கட்சி தேவையல்லவா? அதனால் தான் தமிழகத்தில் வயலை வாங்குவதற்காக..... மன்னிக்கவும்.... அரசியல் கட்சியைத் தொடங்குவதற்காக இரு நாட்களுக்கு முன் சென்னை வந்தாராம் கும்பானி. மும்பையிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த கும்பானி, அங்கிருந்து மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு தனி ஹெலிகாப்டரில் பறந்து சென்றாராம்.

அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சென்னையிலுள்ள சில ஊடகங்களின் நிர்வாகிகளையெல்லாம் அழைத்திருந்தாராம் கும்பானி. எதையும் தனித்தனியாக செய்வது தான் கும்பானிக்கு பிடிக்கும் என்பதால் ஊடகக்காரர்களை அழைத்து வருவதற்காக ஒவ்வொருவருக்கும் ஆடி, பென்ஸ், ஜாகுவார், பி.எம்.டபிள்யூ என வகை வகையாக தனித்தனிக் கார்களை அனுப்பி வைத்திருந்தாராம்.

கார் அனுப்பியதிலேயே கவிழ்ந்து போன ஊடகவியலாளர்கள் கும்பானியை புகழ் மழையால் குளிப்பாட்டி விட்டார்களாம். ஆலோசனையின் தொடக்கத்திலேயே தாம் புதிய கட்சி தொடங்கப்போவதை தெரிவித்த கும்பானி, தமது கட்சியின் பெயர் கொஞ்சம் நீளமாக இருக்க வேண்டும் என்று ‘டிப்ஸ்’ கொடுத்தாராம். ‘டிப்ஸ்’ கொடுத்தால் தான் நமது ஊடகவியலாளர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள் அல்லவா? ஆளுக்கு ஒரு பெயரை அள்ளி விட்டார்களாம். ஆனாலும், அவை எதுவும் கும்பானியை குஷிப்படுத்த வில்லையாம்.

கடைசியாக ஒரு பத்திரிகையாளர் எழுந்து,‘‘ நமது கட்சிக்கு ஆவி என்று பெயர் வைக்கலாம்’’ எனக் கூறினாராம். அதைக் கேட்டதும் கும்பானிக்கு கோபம் வந்து விட்டதாம். ‘‘ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... கட்சியின் பெயர் மிக நீளமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மிக சுருக்கமாக  ஒரு பேரை சொல்கிறீர்களே?’’ என்று கேட்டு, இருக்கையை விட்டு எழுந்து குதித்தாராம். அவர் குதித்த குதியில் கட்டிடமே அதிர்ந்ததாம்.

அவரை சமாதானப்படுத்திய அந்த பத்திரிகையாளர்,‘‘ கோபப்படாதீர்கள்... ஆவி என்பது கட்சியின் முழுப்பெயர் அல்ல சுருக்கம் தான். ஆல்இந்தியா விபரீதக் கட்சி என்பதன் சுருக்கம் தான் ஆவிக் கட்சி ஆகும். காவி என்றழைக்கப்படும் காலங்கால விபரீதக் கட்சி விபரீதத்திற்கு மேல் விபரீதத்தை  ஏற்படுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கவில்லையா? அதேபோல் நாமும் நமது பங்குக்கு விபரீதங்களை ஏற்படுத்தி தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புகிறோம்... ஆட்சியைப் பிடிக்கிறோம்’’ என்று இங்கிலீஷ் காரன் படத்தில் திருமணத்தை நிறுத்த திட்டம் வகுத்துக் கொடுக்கும் வடிவேலுவைப் போல பிளானை விளக்கினார். அதைக்கேட்டு உற்சாகமடைந்த கும்பானி ஒரு கைப்பிடி நிறைய தங்கக்காசுகளை அள்ளி அவருக்கு பரிசளித்தாராம்.

அடுத்ததாக கட்சிக்கு ஆலோசகராக யாரைப் போடலாம் என்று ஆலோசனை நடந்ததாம். இதற்காவது சரியான பதிலைக் கூறி தங்கக் காசுவை அள்ளி விடவேண்டும் என்ற எண்ணத்தில் ‘கிரசாந்த் பிஷோரில்’ தொடங்கி ‘போகேந்திர பாதவ்’ வரை பல பெயர்களை பரிந்துரைத்தார்களாம் பத்திரிகையாளர்கள். ஆனால், அவை எதுவுமே கும்பானியை கவரவில்லையாம். ஒருவர் மட்டும் இரண்டாவது வாய்ப்பு கேட்க, ஆமோதித்தாராம் கும்பானி. அவர் சொன்ன பதிலைக் கேட்டதும் கும்பானி உண்மையாகவே குளிர்ந்து விட்டாராம். ஆம்... அந்த பெயர் ‘சதானி’ என்பது தான் அதற்கு காரணமாம்.

அந்த சதானியை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார் கும்பானி. அதற்கு தலையை தலையை ஆட்டிய அந்த பத்திரிகையாளர்,‘‘ அவரை நான் பார்த்திருக்கிறேன். அவரது முகம் சூரிய ஒளியால் ஏற்படும் பவரைப் போல ஜொலிக்கும்’’ என்றார்.

‘‘இனத்துக்கு இனமும் ஆச்சு... பணத்துக்கு பணமும் ஆச்சு’’ என்று திட்டமிட்ட கும்பானி, சதானியையே ஆலோசகராக நியமிக்க முடிவு செய்தார். இந்த யோசனையை சொன்ன பத்திரிகையாளருக்கு, தனது கம்பெனி சிம் கார்டு போட்ட 10 செல்பேசிகளை பரிசாக வழங்கினார் கும்பானி.

அதற்குள், அவருக்கு மேலும் பல நகரங்களில் சந்திப்புகள் இருப்பதை உதவியாளர் நினைவூட்ட, அத்துடன் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானார். ஆலோசனை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த கும்பானி, ‘‘அரிய ஆலோசனைகளை வழங்கியமைக்கு நன்றி. மும்பையிலும் பத்திரிகை தர்மம் நன்றாக இல்லை... தில்லியிலும் பத்திரிகை தர்மம் சரியாக இல்லை. தமிழகத்தின் தான் பத்திரிகை தர்மம் தழைத்தோங்கியிருக்கிறது. உங்களைப் போன்ற விசுவாசிகளை இதுவரை நான் பார்த்ததில்லை. உங்கள் விசுவாசத்தையும் பத்திரிகை தர்மத்தையும் எண்ணெய் ஊற்றி வளருங்கள். அடுத்தக்கட்ட ஆலோசனையை கோவாவில் வைத்துக் கொள்ளலாம். உங்களுக்காக தனி விமானத்தை அனுப்பி வைக்கிறேன்’’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார். போகும்போது வெகுமதியும் கொடுத்தார்.

கும்பானி கொடுத்த வெகுமதி வெயிட்டாக இருக்க, அதனால் ஏற்பட்ட புளங்காகிதத்துடன் ஊடக நண்பர்கள் வெளியில் வந்தார். அப்போது ஒருவர் சொன்னார்...‘‘ கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். ஆனால், கும்பானி தெய்வம் கூப்பிட்டு வைத்து கொடுக்கிறதே?’’ என்றார். அதைக்கேட்டதும் மற்ற பத்திரிகையாளர்கள் அனைவரும், ‘‘ கும்பானிக்கு ஜியோ... கும்பானி வாழ்க’’ என வித்தியாசமாக முழக்கமிட்டவாறே கலைந்தனர்.

இதையெல்லாம் அங்கு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன்,‘‘ ஒழிக பத்திரிகை அதர்மம்’’ என்று கத்தினான்.

வெள்ளி, டிசம்பர் 02, 2016

தமிழர்களின் மார்கழி மாதமும் - தாய்லாந்தின் மாபெரும் ஊஞ்சலும்!

தாய்லாந்து நாட்டில் புதிய மன்னர் முடிசூடவுள்ளார். தமிழ்நாட்டில் பல்லவர்களும் சோழர்களும் முடிசூடிய வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர். குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் முறையில் தாய்லாந்திலும் மன்னர் முடிசூடும் விழா நடக்கிறது.

(இதுகுறித்து "தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!" எனும் பதிவில் விரிவாகக் காண்க)

தமிழ்நாட்டின் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. மார்கழி ஊஞ்சல் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டை பின்பற்றி, தாய்லாந்து நாட்டிலும் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடும் நிகழ்ச்சியும் மார்கழி ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதுகுறித்து காண்போம்:

தமிழர்களின் மார்கழி மாதம்

மார்கழி மாதம் தமிழகப் பண்பாட்டில் இணைந்திருக்கும் ஒரு முதன்மை மாதம் ஆகும். பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பொங்கலை வரவேற்கும் விதமாக வாசலில் பெண்கள் கோலம் போட்டு பூவைத்தல் என பலவாறாக மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் திருப்பாவை மார்கழி நீராடலைக் காட்டுகிறது. சங்க இலக்கியங்கள் தைநீராடலை குறிப்பிடுகின்றன. 'மார்கழி திங்கள் மதிநிறை நன்னாளில்' தொடங்கி தைப்பூசம் முழுமதி நாள் வரை தொடரும் விழாக்காலம் தமிழர் பண்பாட்டில் இருக்கிறது! இதனோடு இளம்பெண்கள் கொண்டாடும் சிறுவீட்டு பொங்கலும் இருக்கிறது.

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்குகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சிவன் கோயிலுக்கு சென்று நடராஜரை வழிபடுவதும், திருவெம்பாவை பாடல்களை பாடுவதும் வழக்கம்.

'சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் மார்கழி திருவாதிரை நாளில்தான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்' - என்பது நம்பிக்கை.

மார்கழி மாதத்தில் தமிழ்நாட்டின் சிவாலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இசைக்கப்படுகின்றது. பல ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி பத்து நாள் திருவெம்பாவை விழா நடைபெறுகின்றது. சிதம்பரம் நகரில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு முன்னால் திருவெம்பாவை எழுதிய மாணிக்கவாசகர் நின்று பாடும் நிகழ்ச்சி பத்து நாட்கள் நடக்கின்றன.

பல ஆலயங்களில் மார்கழி ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாக்களில் மாணிக்கவாசர் எழுதிய "திருப்பொன் ஊசல் பதிகம்" பாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருவெம்பாவை விழாவில் கபாலீஸ்வரரரும், கற்பகாம்பாளும் பொன்னூஞ்சல் ஆடும் திருவிழா நடக்கிறது. சிதம்பரத்தில் மார்கழி தரிசன விழாவின் போது திருவாபரண அலங்கார ஊஞ்சல் விழா நடக்கிறது.
அம்மன் ஊஞ்சல் விழா
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுர ஏகாம்பரேஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயம், கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் மார்கழி மாத ஊஞ்சல் விழா நடக்கிறது. வைணவ ஆலயங்களிலும் இந்த விழாக்கள் நடக்கின்றன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நதியில் ஆண்டாள், ரங்க மன்னருடன் ஊஞ்சலில் காட்சிதரும் நிகழ்ச்சி நடக்கிறது.

தாய்லாந்தில் திருவெம்பாவையும் ஊஞ்சலும்

தாய்லாந்து நாட்டில் மார்கழி மாதத்தில் பத்து நாட்கள் திருவெம்பாவை, திருப்பாவை விழா நடத்தப்படுகிறது. தாய்லாந்து மன்னர் குடும்பத்தின் 12 பாரம்பரிய விழாக்களில் திருப்பாவை, திருவெம்பாவை ஊஞ்சல் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

இந்த நாட்களில் சிவபெருமானும் விஷ்ணுவும் பூமிக்கு வருவதாகவும், அவர்கள் ஊஞ்சலில் ஆடுவதாகவும் கருதி விழா நடத்தப்படுகிறது. அப்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. முதலில் தமிழ் - கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த இப்பாடல்கள், தற்போது தாய்லாந்து மொழி எழுத்துகளின் வழியாக பாடப்படுகிறது.

மிகப்பெரிய ஊஞ்சலில் சிவனாக வேடமிட்டவர்கள் அமர்ந்து ஆடும் வகையில் தாய்லாந்தின் பல பகுதிகளிலும் இந்த விழா 1932 ஆம் ஆண்டுவரை கொண்டாடப்பட்டது. ஆனால், இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பெரிய ஊஞ்சலில் ஆபத்தாக ஆடும் வழக்கம் தடைசெய்யப்பட்டது. பாங்காக் நகரின் கோவிலுக்குள் தற்போது இந்த விழா நடத்தப்படுகிறது.
ஊஞ்சல் திருவிழா 1919 ஆம் ஆண்டு
உண்மையில், இந்த விழா தாய்லாந்து நாட்டின் எல்லா புராதான நகரங்களிலும் நடந்துள்ளது. அயோத்யா, சுக்கோத்தாய், சவாங்லோக், பிட்சானுலோக், நகோர்ன்-சிரிதமராஜ் என்கிற பழங்கால நகரங்களில் கி.பி. 1300 ஆம் ஆண்டுகளில் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை ஊஞ்சல் விழா நடந்ததற்கான ஆதராங்கள் உள்ளன.

கி.பி. 1784 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, பழங்கால மாபெரும் ஊஞ்சல் இன்னமும் பாங்காக் நகரில் இருக்கிறது. பாங்காக் நகரின் ஒரு பாரம்பரிய அடையாளச் சின்னமாக இப்போதும் திருப்பாவை, திருவெம்பாவை ஊஞ்சல் காட்சியளிக்கிறது.

தொடரும் பண்பாடு

மார்கழியும் பாவை நோன்பும் தமிழர் பண்பாட்டில் நெடுங்காலமாக நீடித்து வருகிறது. சைவ மதத்தில் திருவெம்பாவையாகவும் வைணவத்தில் திருப்பாவையாகவும் ஊஞ்சல் திருவிழாவாகவும் மாற்றமடைந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழிசை விழாவும் கர்நாடக சங்கீத விழாக்களும் நடத்தப்படும் மாதமாக மார்கழி இருக்கிறது.

தமிழர்கள் எங்கு சென்றாலும், பண்பாட்டையும் கொண்டு சென்றார்கள் என்பதற்கான அடையாளமாக தாய்லாந்தின் திருவெம்பாவை - திருப்பாவை விழா காட்சியளிக்கிறது. சிதம்பரம் கோவிலின் சோழ மன்னர் முடிசூடலை பின்பற்றும் தாய்லாந்து மன்னர்கள், அதே சிதம்பரம் கோவில் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் மார்கழி திருவெம்பாவை நிகழ்ச்சியையும் கொண்டாடுவது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.
பாங்காக் நகரின் மாபெரும் ஊஞ்சல் 1784 ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னர் முதலாம் இராமரால் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் ஒன்பதாம் இராமரால் புதிதாக மாற்றப்பட்டது. இதன் உயரம் 21.15 மீட்டர் ஆகும்.

தொடர்புடைய சுட்டி:

தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்!

ஆதாரம்:

1. Siamese state ceremonies - their history and function, by Horace Geoffrey Quaritch Wales (1931)

2. Some Aspects of Asian History and Culture, by Upendra Thakur, (1986) 

3. A comparative study of Tiruvempavai: Tradition in Thailand and Tamil Nadu in Historical and musical contexts, by Pannipa Kaveetanathum (1995)

4. God & King, the Devarāja Cult in South Asian Art and Architecture. by Arputha Rani Sengupta, (2001)