Pages

செவ்வாய், ஜூன் 20, 2017

வீர சிவாஜியும் நடிகர் ரஜினி காந்தும்: வியப்பளிக்கும் வரலாற்று தொடர்பு!

மராட்டிய மாநிலத்தை பூர்வீக பூமியாகக் கொண்ட நடிகர் ரஜினி காந்த், மராட்டியர்களின் அடையாளமான வீர சிவாஜியின் படத்தை தனது வீட்டில் பிரதானமாக வைத்துள்ளார். இதனை அவரது மராட்டிய இனப்பற்றுக்கான குறியீடாகவும் கொள்ளலாம். ஆனால், இதுமட்டுமே அவருக்கும் வீர சிவாஜிக்குமான தொடர்பு அல்ல. வீர சிவாஜியின் மகனை, நல்லடக்கம் செய்தவர்கள் 'கெய்க்வாட்' சமூகத்தை சேர்ந்தவர்கள். அதே வகுப்பை சேர்ந்தவர் ரஜினிகாந்த் என்பது வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.

வீர சிவாஜியின் பரம்பரையும் கெய்க்வாட் சமூகமும்

கெய்க்வாட் எனும் பெயரில் ஏராளமான தலித் மக்கள் இருக்கின்றனர். மகர் சமூகத்தவர்கள் - ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். மகர் சமூகத்தை சேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

பேரரசர் வீர சிவாஜியின் மரணத்துக்கு பின் அவரது மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆட்சிக்கு வந்தார். இவர் 1689-ல் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் சங்கமேஷ்வர் எனும் ஊரில் சிறை பிடிக்கப்பட்டார்.  கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டார். கண்களை தோண்டி, நகங்களை பிடுங்கி, தோலை உரித்து பல நாட்கள் சித்தரவதை செய்து - பின்னர் உடலைக் கிழித்து, தலையை வெட்டி கொலைசெய்தார் ஔரங்கசீப். சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை துண்டுகளாக்கி புனே அருகில் உள்ள துலாப்பூர் எனும் இடத்தில் பீமா ஆற்றில் வீசினர்.
சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னம்

சத்ரபதி சாம்பாஜி மகராஜின் உடலை அடக்கம் செய்யக் கூட அனைவரும் பயந்தனர். துலாப்பூர் அருகில் உள்ள வாது எனும் கிராமத்தின் கெய்க்வாட் பிரிவினர்தான், முகலாயர்களுக்கு பயப்படாமல் துணிச்சலாக இறுதி சடங்குகளை செய்தனர். அந்த ஊரினை சேர்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட் எனும் தலித் விவசாயி சாம்பாஜியின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.

மறைக்கப்பட்ட வரலாறும் தலித் எதிர்ப்பும்

வாது கிராமத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில், "இறுதி சடங்குகளை செய்தவர் கோவிந்த் கோபால் கெய்க்வாட்" என்பது முதலில் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அதனை அழித்து விட்டனர். இந்த வரலாற்று இருட்டடிப்புக்கு எதிராக மராட்டிய தலித் அமைப்பினர் குரல்கொடுத்து வருகின்றனர்.  சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நினைவுச் சின்னத்தில் மீண்டும் கோவிந்த் கோபால் கெய்க்வாட் பெயர் இடம்பெற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

வீர சிவாஜிக்கும், 'சிவாஜிராவ் கெய்க்வாட்' எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கும் இப்படியும் ஒரு பூர்வீக பிணைப்பு இருக்கிறது. 

திங்கள், ஜூன் 19, 2017

ஜனாதிபதி ஆகிறார் சாதிச் சங்கத் தலைவர்

"சாதியே இல்லை" என்றும், "சாதியே பேசாதீர்" என்றும் தொடர்ச்சியாக பலரும் வகுப்பெடுக்கின்றனர். ஆனால், இப்போது ஒரு சாதி சங்கத் தலைவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்த விவாதங்களில் கூட - அவரது சாதிதான் அவரது முதன்மை தகுதியாக பேசப்படுகிறது.

ஆளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித்துகளில் ஒரு தனி சாதியாக அடையாளம் காணப்படும் 'கோலி' சாதிச் சங்கத்தின் தலைவரும் கூட. அவர் அகில இந்திய கோலி சமாஜம் (All-India Koli Samaj) எனும் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இப்போது இந்தியா முழுவதும் இடம்பெறும் தலைப்பு செய்தியே: தலித் ஒருவர் ஜனாதிபதி ஆகிறார் என்பதுதான். சாதியே இல்லை என்று இரட்டை வேடம் போடும் இந்திய மக்கள், இப்போது சாதிக்காகவே ஒருவர் ஜனாதிபதி ஆவதை கொண்டாடுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்ட நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள்!


இந்தியாவில் ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய வெற்றிக்கும், மேற்கு இந்திய பகுதி முழுவதும் பிரிட்டிஷ் ஆட்சி அமைவதற்கும் வழிவகுத்தவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் முன்னோர்கள் ஆகும்.

1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் படைக்கும், மராட்டிய பேஷ்வாக்களின் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர். இந்தப் போரில் ஆங்கிலேயர்களுக்காக போரிட்டவர்கள் மராட்டிய மாநிலத்தின் மகர் சமூகத்தினர் ஆகும். இவர்கள் கெய்க்வாட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பெரும் விழாவாக இப்போதும் கொண்டாடி வருகின்றனர். அதே மகர் சமூகத்தின் பிரிவான மராட்டிய கெய்க்வாட் வகுப்பை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும்.

ஆங்கிலேயர்களின் மாபெரும் வெற்றி

வீர சிவாஜியின் மராட்டிய பேரரசில் பிரதம மந்திரிகளாக இருந்தவர்கள் பேஷ்வாக்கள். பின்னர் மராட்டிய பேரரசின் மன்னர்களாக ஆயினர். முகலாயர்களை தோற்கடித்து இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர். வீர சிவாஜியின் காலத்தில் பேஷ்வாக்களின் படையில் மகர் சமூகத்தினரும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், பின்னர் வந்த பேஷ்வா மன்னர்கள் தமது பிராமண மேலாதிக்கத்தின் காரணமாக - மகர் சமூகத்தினரை இராணுவத்தில் சேர்க்க மறுத்து, அவர்களை தீண்டத்தகாக மக்களாக மாற்றி, சாதீய கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்காக, மராட்டிய பேஷ்வாக்கள் மீது போர் தொடுத்தனர். பேஷ்வாக்களுக்கு எதிராக போரிடுவதற்காக பிரிட்டிஷ் படையில் மகர் சமூகத்தவரை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்டனர். 1818 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், புனே நகருக்கு அருகில் கோரேகான் எனும் இடத்தில் நடந்த போரில், வெறும் 800 மகர் படையினர், பேஷ்வா மன்னரின் 20,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையை தோற்கடித்தனர். இந்த போரின் மூலம்தான் மேற்கு இந்திய பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம்

இந்தப் போரில் 275 மகர் வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கான நினைவுத் தூணை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் 1851 ஆம் ஆண்டு பீமா கோரேகான் கிராமத்தில் அமைத்தனர். பின்னர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் இந்த நினைவுத் தூண் இடத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வினை நடத்தினார். அப்போது முதல் ஆண்டுதோரும் ஜனவரி 1 ஆம் நாள் மராட்டிய மாநில தலித் அமைப்பினர் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி, ஆங்கிலேய வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினி காந்தின் கெய்க்வாட் எனும் சாதிப்பெயரினை உள்ளடக்கிய மகர் சமூகத்தினர் தான் - மேற்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிவகுத்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். சாதிக் கொடுமைகளை தம்மீது திணித்த பேஷ்வாக்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து மகர் சமூகத்தினர் வீழ்த்தியதன் மூலம், தமது விடுதலைக்கும் அவர்கள் வழிவகுத்தனர் என்பது ஒரு மிக முதன்மையான வரலாற்று நிகழ்வாக இப்போதும் கோண்டாடப்படுகிறது.
பீமா கோரேகான் நினைவுச்சின்னம் முன்பாக அண்ணல் அம்பேத்கர்

(பிரிட்டிஷ் ராணுவத்தில் மகர் ரெஜிமெண்ட் தொடங்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவப்பள்ளியில் அண்ணல் அம்பேத்கரின் தந்தை ஆசிரியராக பணியாற்றினார். அங்கு ராணுவ கண்டோன்மென்டில்தான் அம்பேத்கர் சிறுவயதில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

ரஜினி: தலித் தலைவர்  

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.
காலா திரைப்படத்தில் MH BR 1956

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

சனி, ஜூன் 17, 2017

ரஜினிக்கு திருமாவளவன் ஆதரவு: சாதி தான் காரணமா?


தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் "அடுத்தது ரஜினிதான்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறுவதாக செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழ்நாட்டை சேர்ந்தவரே வரவேண்டும் என்கிற உரிமைக்குரலுக்கு எதிராக - மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு தலித் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் - தனது சாதிப்பற்றை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன். தண்ணீரை விட இரத்தமே அடர்த்தியானது (blood is thicker than water) என்கிற வாக்கை உண்மையாக்கும் விதத்தில், மாநில உரிமையை விட தன் சாதிப்பற்றுதான் மேலானது என்பதை மெய்ப்பித்துள்ளார் திருமாவளவன்.

ரஜினி: தலித் தலைவர் 

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்ன?

இந்தியாவில் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பது இந்திய தேசியவாதிகள் கூறும் அயோக்கியத்தனமான வாதம். நடைமுறையில் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் கோலோச்ச முடியாது. ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடக மாநிலத்திலோ - தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் முதல்வராவது கனவிலும் நடக்காது. ஆனால், தன்னுடைய தலித் இனத்தை சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தால் - ரஜினியை தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சிக்கிறார் திருமாவளவன்.

தமிழ்த் தேசிய அடையாளம் என்பது இன்னும் பிறக்காத குழந்தை. சிலர் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள் என்கின்றனர். வேறு சிலர் குறிப்பிட்ட காலமாக (எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து) தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் மட்டுமே தமிழர்கள் என்கிறனர். இந்தக் கருத்துக்கள் விவாதத்திற்கு உரியவை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக ஒருவரை அடையாளப்படுத்த - சாதி, இனம், மதம், தாய்மொழி போன்ற எதுவுமே தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் நமது விருப்பம்.

அதே நேரத்தில், தமிழ்நாடு என்கிற நாட்டின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறிதளவும் பற்றில்லாதவர் - தமிழக மக்களின் பணத்தை பிடுங்கி, கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருப்பவர் - காவிரிக்காக கன்னடநடிகனை மாவீரன் வீரப்பனார் கடத்திய போது, வீரப்பனாரை அரக்கன் என கடுமையாக திட்டியவர் - தமிழ்நாட்டின் அடிப்படை அரசியல் சிக்கல்களில் கருத்து ஏதும் கொண்டிராதவரான ரஜினிகாந்த், தன்னை தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக காட்டிக்கொள்ள முயல்வது, தமிழக மக்களின் தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள சவால்.

சாதிப்பற்றின் காரணமாக மட்டுமே ரஜினியை தமிழகத்தின் முதல்வராக்கும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

செவ்வாய், ஜூன் 13, 2017

ஏமாளி மு.க. ஸ்டாலின்: டுபாக்கூர் கும்பலிடம் சிக்கிய தலைவர்கள்!

மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள். ஆனால், இந்த தலைவர்களையே ஏமாற்றும் மாபெரும் மோசடிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், மு.க. ஸ்டாலின் ஆகியோரை சில டுபாக்கூர் பேர்விழிகள் படுமோசமாக ஏமாற்றினர். இப்போதும் மு.க. ஸ்டாலின் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

ஜெயலலிதா: 'தங்கத்தாரகை' விருது

2004 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள். அப்பொது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழிகளில் அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள். அதை ஐநா விருதென்று அப்பொது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.

உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும், அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டர்கள் (Golden Star of Honour and Dignity Award by the International Human Rights Defense Committee, Ukraine). ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை. (தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை)

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.


ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும். அப்படி ஒரு ஸ்டாம்பினை வாங்கிக் கொடுத்து யாரோ சிலர் கலைஞர் கருணாநிதியை நன்றாக ஏமாற்றினார்கள்.

விஜயகாந்த்: டாக்டர் பட்டம்

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக தேமுதிகவினர் விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித்தவ தேவாலய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.சி.எம்" (International Institute of Church Management Inc.) விஜயகாந்த்திற்கு டாக்டர் பட்டம் அளித்தது.
பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இந்த அமைப்பினர் டாக்டர் பட்டம் தருகின்றனர். இப்படி முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் தான் விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் ஐ.ஐ.சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லை. சென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தை - ஐ.ஐ.சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்கு அனுப்பக் கூறியுள்ளனர். ஆக, இந்திய கிறித்துவ கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசினர் தேமுதிகவினர்.

மு.க. ஸ்டாலின்: கென்டகி கர்னல் 

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டகி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டகி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். இப்படி, மு.க. ஸ்டாலின் பெயரில் பணம் கட்டி, விருது வாங்கினர் திமுகவினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். இப்போதும் கூட கென்டகி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

மு.க. ஸ்டாலின்: ஐநா அவை மனித உரிமைகள் பேரவையில் கூட்டம்

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதினார்.
"தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டன.

நடக்காத கூட்டத்திற்கே மறுப்பு எழுதும் அளவுக்கு யாரோ சிலரால் படு கேவலாமாக ஏமாற்றப்பட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

ஏமாளி மக்களுக்கு ஏமாளி தலைவர்கள்

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த், போலி ஐநா விருதிடம் ஏமாந்த ஜெயலலிதா, நடக்காத கூட்டத்திற்கு மறுப்பு எழுதிய மு.க. ஸ்டாலின் - இப்படிப்பட்ட தலைவர்களிடம் தான் தமிழக மக்களும் 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!

திங்கள், ஜூன் 12, 2017

மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்!

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதியுள்ளார்.
ஐநா மனித உரிமைப் பேரவையின் 35 ஆம் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்: "இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது 'அண்டப்புளுகு' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்!

உண்மையில் நடப்பது என்ன?

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு. இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும். இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஸ்டாலின் அழைக்கப்பட்ட Tamil Uzagam NGO துணை நிகழ்ச்சி விவரம்.

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி "இலங்கையில் மனித உரிமை" எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்

கடந்த மார்ச் மாதம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார். இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.
NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் - ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் பொன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

2. மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

வியாழன், ஜூன் 01, 2017

தலித் தலைவர் வேடமெடுக்கும் ரஜினிகாந்த் - காமராஜருடன் ஒப்பிடும் தினத்தந்தி 

அண்ணல் அம்பேத்கரின் சமூகமான மராட்டிய தலித் மகர் சமூகத்தை சேர்ந்தவரான நடிகர் ரஜினி காந்தை - கர்மவீரர் காமராஜருடன் ஒப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

தனக்கென எந்த சொத்துமே இல்லாமல், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் அவர்களை, தமிழக மக்களை சுரண்டி கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்திருக்கும் ரஜினி காந்துடன் ஒப்பிடும் துணிச்சல் தினத்தந்திக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை!

யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. உண்மையில் எல்லா மக்களும் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும், அரசியல் அமைப்புகளில் இணைந்து செயலாற்றுவதும் தான் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் நல்லது.

அதே நேரத்தில், அரசியலில் தலைமை பொறுப்புகளுக்கு வர நினைப்பவர்கள், அதற்கான தகுதிகளை கொஞ்சமாவது வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் அரசியலில் தலைமையேற்க விரும்புகிறவர்கள், அந்த மாநிலத்தின் பிரச்சினைகளில் - சிலவற்றிலாவது தமக்கென நிலைப்பாட்டினையும், தீர்வுகள் குறித்த கருத்துக்களையும் கொண்டிருக்க வேண்டும். நடிகர் ரஜினி காந்திற்கு அப்படி ஏதாவது கருத்தோ, தீர்வோ இருக்கிறதா?

தமிழர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக மாநிலத்தின் அடாவடி குறித்து ரஜினியின் கருத்து என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் தமிழினத் துரோகம் குறித்து ரஜினி என்ன சொல்கிறார்? ரஜினிக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமா அல்லது கர்நாடகத்தில் உள்ள அவரது கோடிக்கணக்கான முதலீடுகள் முக்கியமா - என தினத்தந்தி கேட்குமா?

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டாரா ரஜினி காந்த்? தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பினாரா? தெருவுக்கு வந்து போராடினாரா? இதுகுறித்தெல்லாம் அவரிடம் கேள்வி கேட்டதா தினத்தந்தி?
மீனவர் படுகொலை, கச்சத்தீவு மீட்பு, முல்லைப்பெரியாறு அணை உயர்த்துதல், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்து, நீட் தேர்வு திணிப்பு, இந்திய அரசின் இந்தி திணிப்பு - இவற்றுக்கெல்லாம் ரஜினி காந்த் என்ன சொல்கிறார் என்பதை தினத்தந்தி ஒருமுறையாவது கேட்டிருக்குமா?

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிய போது, வெள்ள நிவாரணத்துக்காக நடிகை ஹன்சிகா 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். நடிகை சமந்தா 30 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பலகோடி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் தான் கொடுத்தார். தமிழர்கள் மீதான அக்கறையில் 'ஹன்சிகா - சமந்தா' வை விட கீழானவராகவே ரஜினிகாந்த் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். இந்த உண்மையை இப்போது பேசுமா தினத்தந்தி?

தலித் தலைவர் ரஜினி - உணவு உரிமைக்காக குரல்கொடுக்காதது ஏன்?

அண்ணல் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மகர் சமூகத்தில் பிறந்தவர். அதே மகர் சமூகத்தை சேர்ந்தவர்தான் நடிகர் ரஜினி காந்த் ஆகும். மகர் சமூகத்தவர் ஜாதவ், போஸ்லே, கெய்க்வாட் எனும் பல பட்டப்பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அதில் கெய்க்வாட் பட்டப்பெயரை கொண்டவர் ரஜினி காந்த்.

உண்மையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தலித் இயக்கத்தில் பலர் கெய்க்வாட் எனும் பட்டப்பெயருடன் இருந்தனர். அவர்களில் - தாதாசாகிப் பாவுராவ் கெய்க்வாட் (தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் மும்பை மாகாணத் தலைவர். அம்பேத்கருடன் இணைந்து குடியரசு கட்சியை தோற்றுவித்தவர்), சாம்பாஜி துக்காராம் கெய்க்வாட் (மகர் பஞ்சாயத் சமிதி எனும் அமைப்பை தோற்றுவித்தவர்) - போன்றவர்கள் முதன்மையானவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பணியாற்றியவர்களின் அதே கெய்க்வாட் சமுதாயத்தில் பிறந்தவரான, சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் இயற்பெயர் கொண்ட ரஜினி காந்த், இப்போது அவர் நடிக்கும் காலா திரைப்படத்தில் - அண்ணல் அம்பேத்கரின் மாபெரும் புரட்சியான 1956 ஆம் ஆண்டில், அவர் மராட்டிய மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கான தலித்துகளுடன் பௌத்த மதத்திற்கு மாறியதை குறிக்கும் வகையில் "MH BR 1956" (Maharashtra BR Ambedkar 1956) எனும் வாகன எண்ணை குறியீடாக பயன்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் அனைத்து சமூகங்களை போன்று, தலித்துகள் அரசியலில் ஈடுபடுவதை நாம் வரவேற்கிறோம். ஆனால், தனது தலித் அடையாளத்தை முன்னிறுத்தும் ரஜினி காந்த் - மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?

அண்ணல் அம்பேத்கரையும், அவரது "Maharashtra BR Ambedkar 1956" புரட்சியையும், தனது தலித் அடையாளத்தையும் மட்டும் ரஜினி காந்த் முன்னிறுத்தினால் போதாது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மட்டிறைச்சிக்கு எதிரான கருத்துகளை எதிர்த்தது போன்று ரஜினி காந்தும் எதிர்க்க வேண்டாமா? இது குறித்து எதுவும் கேட்காமல் தினத்தந்தி மவுனம் சாதிப்பது ஏன்?

காமராஜருக்கு இணையாக ரஜினியை முன்னிறுத்தியதற்காக தினத்தந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.