Pages

விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 31, 2016

பிச்சை போடும் பிரேமலதா குடும்பம்; கை ஏந்தி நிற்கும் வைகோ, கொம்யூனிஸ்ட் கும்பல்!

ம.ந.கூட்டணி என்று துவக்கப்பட்டதும், தேதிமுக – ம.ந.கூட்டணி என ஒப்பந்தம் செய்யப்பட்டதும், விஜயகாந்த் துணைவியார் அறிவித்தது போல், கிராம மக்களுக்கு புரியும் வகையில் கே.கூ. அதாவது கேப்டன் விஜயகாந்த் அணி என்றும், அந்த அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்றும், கே.கூ.அணியின் ஒட்டு மொத்த அமைப்பாளர் வைகோ பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.
தற்போது, இந்த அணியின் துணை முதல்வர் வைகோ என்றும், நிதி அமைச்சர் திருமா என்றும், மற்றும் காம்ரேட்கள் ராமகிருஷ்ணன், முத்தரசனுக்கும் அமைச்சர் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜன நாயகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பதே அதிகப்பட்ச செயல் என்று பலராலும் சொல்லப்பட்ட நிலையில், இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யாமலேயே, முதல்வர் வேட்பாளர் என்பதையும் தாண்டி, அடுத்து உள்ள அமைச்சர் பதவிகளுக்கும் பெயர்களை அறிவித்து இருப்பது உலக அரசியல் வரலாற்றில் கே.கூ.அணியாகத்தான் இருக்கும். இதுவும் பெரிய மாற்றம்தான்.

சரி. இந்த அறிவிப்பை செய்தவர் யார்? முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தா? இல்லை. அவர் வீட்டில் அமர்ந்து முதல்வர் பதவியில் என்ன என்ன சாதிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்.

பிறகு, அமைப்பாளர் வைகோவா என்றால் பாவம் அவர் மேடைக்கு மேடை வீரவசனம் பேசுகிறார்; தற்போது ஊடகம் என்றால் சற்று கலக்கமாக இருக்கிறது என்கிறார்; அவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் சொல்லமாட்டேன் என்று சஸ்பென்ஸ் படம் காட்டுகிறார்.

பிறகு யார் தான் இந்த அமைச்சர் பட்டியலை வெளியிடுவது? கே.கூ.அணியின் முதல்வர் வேட்பாளரின் மனைவியின் தம்பி வெளியிடுகிறார்.
இதை யாரும் குடும்ப அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். கே.கூ.அணியின் அடுத்தக் கட்ட தலைவருக்கு, முதல்வருடன் யார் யாரெல்லாம் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவும் பெரிய புரட்சிகர மாற்றம்தான்.

இன்னும் தேர்தலுக்கு ஐம்பது நாட்களுக்கு மேல் உள்ளது. பல புரட்சிகர அறிவிப்புகள் கே.கூ.அணியின் சார்பில் வரக்கூடும். ஆவலுடன் காத்திருப்போம்.
தொடர்புடைய இடுகைகள்:




திங்கள், மார்ச் 28, 2016

விஜயகாந்த் அணி: பெயருக்காக அடித்துக் கொள்ளும் கூட்டம்!

கூட்டணி கட்சிகள் இடையே கொள்கை இழுபறி இருப்பது நியாயம்தான். ஆனால், கூட்டணியின் பெயருக்காக அடித்துக்கொள்ளும் கூத்து இப்போதுதான் நடக்கிறது.

புதிய கூட்டணிக்கு பெயர் "கேப்டன் விஜயகாந்த அணி" என்று திட்டவட்டமாக அறிவித்தார் வைகோ. அதனை மீண்டும் மீண்டும் வழிமொழிந்தார் பிரேமலதா. "விஜயகாந்த அணி"  என்பதுதான் சரி என்றார் திருமாவளவன்.

ஆனால், இதனை வன்மையாக மறுத்துள்ளன கொம்யூனிஸ்ட் கட்சிகள். CPI தலைவர் நல்லக்கண்ணு, CPI முன்னாள் செயலாளர் தா. பாண்டியன், CPM செயலாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் இதனை எதிர்த்துள்ளனர்.

இந்த உள்குத்து கோமாளிக் காட்சிகளை இங்கே காண்க:

விஜயகாந்த அணி தான்

கேப்டன் விஜயகாந்த் அணிதான்: பிரேமலதா கருத்து: காணொலி

இது விஜயகாந்த் அணிதான் - திருமாவளவன் கருத்து: காணொலி


விஜயகாந்த் அணி அல்ல

இது விஜயகாந்த் அணி அல்ல - தா. பாண்டியன் ஆவேச மறுப்பு!

இது விஜயகாந்த் அணி அல்ல - எதிர்த்துப் பேசும் நல்லக்கண்ணு
இது விஜயகாந்த் அணி அல்ல - இராமகிருஷ்ணன் மறுப்பு!

இதெல்லாம் பார்த்து ரொம்ப தலை சுத்துதா?
அப்போ இதப் பாருங்க...!

சனி, மார்ச் 26, 2016

விஜயகாந்த் அணியின் பல கோடி பண பேரம்: முழு உண்மையும் வெளிவருமா?

விஜயகாந்த் கட்சியை திமுகவிடம் சேர்க்க 80 இடங்கள், 500 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாக வைகோ கூறினார். ஆனால், விஜயகாந்த் கட்சி திமுகவுடன் சேராமல் தடுக்க அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள் என்று இப்போது தகவல் பரவுகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் வைகோ 'அவரது அலுவலகத்திலேயே வெளிநடப்பு' செய்துள்ளார்.

தமிழக அரசியலில் என்ன தான் நடக்கிறது? விஜயகாந்த் அணியின் பணபேரம் குறித்து அறிய பின்வரும் காணொலிகளைக் காண்க:

அதிமுகவிடம் 1500 கோடி

விஜயகாந்த் கட்சி திமுகவுடன் சேராமல் தடுக்க அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள் 
பாலிமர் தொலைக்காட்சி:

YOUTUBE: https://youtu.be/E3S0QPJYctw

திமுகவிடம் 500 கோடி 

விஜயகாந்த் கட்சியை திமுகவிடம் சேர்க்க 80 இடங்கள், 500 கோடி பணம் பேரம் பேசப்பட்டது. இதனை கலைஞர் கருணாநிதியே துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார்.
புதிய தலைமுறை செய்தி:

தந்தி தொலைக்காட்சி செய்தி - பிரேமலதா மறுப்பு:
விஜயகாந்த் - வைகோ - திமுக - அதிமுக: பண பேர உண்மைகள் உலகிற்கு தெரிய வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

கூட்டணி பேரம்: தேர்தல் ஆணையத்திடம் பாமக புகார்

'பணத்தைப் பெற்றுக்கொண்டு கூட்டணி பேரம் நடந்தது' என்கிற செய்தி குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் காணொலி:

புதன், பிப்ரவரி 24, 2016

விஜயகாந்த் பேச்சு: 001 = 100 தமிழக ஊடகங்களின் அழிச்சாட்டியம்!

உலகை மாற்றிய பேச்சுகள் சில உள்ளன. மார்ட்டின் லூதர் கிங்கின் "எனக்கொரு கனவு இருக்கிறது", சாக்கரட்டீசின் "விடைபெரும் நேரம் வந்துவிட்டது", ஜவகர்லால் நேருவின் "உலகமே உறங்கும் நள்ளிரவு வேளையில் இந்தியா விழித்துள்ளது" சுதந்திரநாள் பேச்சு - என்பன வரலாற்று சிறப்பு மிக்கவை. 

உலகை மாற்றிய பேச்சுகளுக்கு இணையாக - தமிழக அரசியல் வரலாற்றை மாற்றிய பேச்சாக - காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த பேசிய பேச்சினை, தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டன. அப்படி அந்த 'வரலாற்று சிறப்பு மிக்க பேச்சில் என்னதான் இருக்கிறது என்பதை கீழே உள்ள - ஜூனியர் விகடன் கட்டுரையில் காண்க:

குறிப்பு: விஜயகாந்த் தனது பேச்சின் இடையே, புதிய தலைமுறை தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி, தினமலர் நாளிதழ், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை ஆகியவற்றை விமர்சித்தார். அந்தப் பெயர்கள் ஜூனியர் விகடனின் கட்டுரையில் தவிர்க்கப்பட்டுள்ளன.

இனி ஜூனியர் விகடனின் கட்டுரை (படங்கள்: ராவணன் கார்ட்டூன்ஸ்):

டிக்கு… டிக்கு… டிக்குனு… டக்கு… டக்கு… டக்குனு!

எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே… அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.

டக்கு… டக்கு… டக்குனு!

‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே… தாய்​மார்களே! அன்புகொண்ட சகோதர, சகோதரிகளே! என் உயிரினும் மேலோன அன்பு நெஞ்சங்களே! காஞ்சி குலுங்கட்டும் காலம் கனியட்டும்! ஆட்சி மலரட்டும்! காஞ்சி குலுங்கிருச்சு. அதனாலதான்… எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெயலலிதா. காஞ்சி மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் அவர்களுக்கும் இந்த மாநாட்டை குறைந்த நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அனகை முருகேசன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்ற வழியெல்லாம் மக்கள் தரையில உட்கார்ந்து சாப்பிடுறாங்க. அவங்க எதுக்காக தரையில உட்காரணும்? விதியா? இல்லை விதிதான். ஏனென்றால், விஜயகாந்த்தைப் பார்க்க வேண்டுமே! விஜயகாந்த்தைப் பார்த்திருக்கோம்.

தலைவர் விஜயகாந்த்தைக் கேட்டிருக்கோம். எதற்காகச் செல்கிறீர்கள்? செல்வோம்யா உனக்கென்னயா அப்படின்னு நம்ம பாட்டுக்கு வந்துகிட்டு இருப்போம். அதைப் பார்த்துப் பார்த்து என் மனசெல்லாம் எங்கு தெரியுமா பறந்துச்சு? எங்கோ பறந்துச்சு. ஏனென்றால், நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… டக்கு, டங்கு… டக்கு, டங்கு… டக்குன்னு ஒவ்வொருத்​தரும் கொட்டு அடிச்சிகிட்டிருந்தீங்களே. அதை​யெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திச்சு. அவங்கல்லாம் என்னை விட்டுருப்​பீங்களா? நீங்களும் டங்கு… டக்கு… டங்கு… டக்குன்னு, நானும் உங்களோட சேர்ந்து ஆடிக்கிட்டுதான் வந்திருப்பேன். ஆடிகிட்டு இவ்வளவு தூரமா வந்துகிட்டு இருக்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துகிட்டு இருக்கணும். என்ன பண்றது?

என்னோட தொண்டர்க்கு விஜயகாந்த் தலைவன். தலைவன் எவ்வழியோ அவ்வழி தொண்டன். தொண்டன் எவ்வழியோ அவ்வழியே தலைவன். ஏன் வரக் கூடாது என்பதை நீங்கள்தான் மாற்றி இருக்கிறீர்கள். மாற்றிக்காட்டி காஞ்சி குலுங்கட்டும்ன்னு சொன்னா… காஞ்சி குலுங்கிடுச்சே! இதற்கு மேல என்ன வேணும்? ஏன்னா…. என் தொண்டர்களைப் பற்றி எனக்குத் தெரியும்.

பார்த்தசாரதி அவர்கள் சொன்னபடி, தலைமை கழகச் செயலாளர் பார்த்தசாரதி இங்க உட்கார்ந்திருக்கார். சொன்னார் இல்ல. வெட்டிவா என்று சொன்னால், தலையைக் கொண்டுவந்து விடுவார்கள் என் தொண்டர்கள். அப்படிப்பட்ட தொண்டர்களைப் படைத்த நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்க அப்படிப்பட்ட தொண்டர்கள். ஆனா, ராணுவம்… ராணுவம் மாதிரி இருக்கக்கூடிய என் தொண்டர்கள், நான் சொல்றது அனைத்தையும் கேட்பான்… கட்டுப்படுவான். உட்காருன்னா உட்காருவான். எழுந்திருன்னா எழுந்திருப்பான். அடின்னு சொன்னா அடிப்பாங்க. உதைன்னு சொன்னா உதைப்பாங்க. யாரு சாப்பிட கூப்பிட்​டாலும் சாப்பிட மாட்டாங்க. அப்படி​பட்டவங்கதான் என்னுடைய தொண்டர்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!
‘‘என் குடும்பத்தைப் பத்திச் சொல்றேன்!”

என்னுடைய தொண்டர்களைப் பத்தி நான் அடிக்கடி பெருமையா என் மனைவிகிட்ட சொல்லு​வேன். என் பசங்ககிட்டயும் சொல்லுவேன். தெரியாது… தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்… என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லி வளர்க்கறதுதானே?

பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்​துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான்.

அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு… சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கறதுல, என்னை ஒருத்தரும் சொல்லல. எனக்குக் குடும்பமே உலகம். நான் வாழ்ந்து பணம் சம்பாதிக்கணும்ங்கறதுல எனக்கு ஆசையே கிடையாது. என் ரெண்டு பசங்களும் என்னைக் கண்ணுலயே வச்சு என்னைக் காப்பாத்துவாங்களே. என் பொண்டாட்டி கவலைப்பட. நானும் என்மனைவியும்,  இவ்வளவு கூட்டம் இருக்கே, ஒரு நேரம் நீங்க சோறு… எனக்கு ரொம்ப வேணாம். கொஞ்சம் பழைய சோறும், ஒரு வெங்காயத்தையும் நான் கடிச்சிகிட்டு, நானும் பிரேமலதாவும் போய்கிட்டே இருந்தா போட மாட்டீங்களா சாப்பாடு.

இதைதான்…. இதுதான்… பாருங்க எப்படி கத்துறீங்க. இதுதான் வேணும் உற்சாகத்துக்​காக. ஆனால், பேப்பர்ல எழுதுவாங்க உற்சாகத்துக்கான உண்மையை. என் மனைவி சொல்லிச்சே. ஏன்னா இங்க ஜால்ரா அடிக்​கறாங்க. ஜால்ரா அடிக்கிற பத்திரிகையும், ஊடகங்களும் அதிகம்.

‘‘என்னோட கேள்வி வேற மாதிரி இருக்கும்?”

என்னய்யா ஜெயலலிதா? ஜெயலலிதா ஆட்சியில போன 13 தேர்தலை சந்திச்சுதா இந்த அம்மா?

இதைவிட இவங்க பர்கூர்னு ஒரு தொகுதி. இதுல இவங்க ஜெயிச்சாங்களா? ஏன் தோத்தீங்க. நத்தம்… நத்தம் (சத்தமாகச் சொல்கிறார்). சொல்ல முடியுமா? நீ வந்து எங்களை ஜீரோங்கற. ஆண்ணா அப்படிங்கறதுதான் ஏன் வாயில வருது. ஏன்யான்னு மந்திரி வயசுல அதிகமா இருந்தாலும், என்னைவிட வயசுல அதிகமா இருந்தவர் சொன்னாரு. ஜீரோ சட்டசபைங்கறதால நீங்க தப்பிச்சீங்க. நான் போயிருந்தா நிகழ்ச்சியில, யாரு ஜீரோ? உங்க அம்மா ஜீரோவா? நீ ஜீரோவா? உங்க தலைவி ஜீரோவான்னு நான் கேட்டிருப்பேன்.

நான் சட்டசபைக்குப் போகல. போயிருந்தா என்னுடைய கேள்வி வேறமாதிரி இருக்கும். நீதான் ஜீரோ. 2004 தேர்தல்ல 40 சீட்டுல தி.மு.க வந்துச்சே. அப்ப நீங்கதான் ஜீரோ. யாரை ஜீரோன்னு எங்களைப் பார்த்து ஜீரோங்கறீங்க. போனதடவை 13 இடைத்தேர்தல்ல நீங்க தோத்தீங்களே அது ஜீரோ.

உங்ககிட்ட இருப்பது ஜீரோ பன்னீர்செல்வம்தான். அதே ஜீரோ பன்னீர் செல்வம் இருக்குற வரைக்கும் இந்த நாடும் உருப்படாது. அந்தக் கட்சியும் உருப்படாது. ஏனென்றால் சைபர் ஓ.பன்னீர்செல்வம். ஓ என்பது என்ன? சைபர் என்பது என்ன? ஜீரோ என்பதுதான் சைபர். ‘ஓ’ங்கறது நாம என்ன சொல்வோம்? என்னடா இப்படி போட்டா… முட்டைய வாங்கி வந்திருக்குறன்னு சொல்வோம் இல்லை. கோழி முட்டையிலும் இவங்க லஞ்சம் வாங்கி இருக்காங்க. கொள்ளையடிக்கணும்னா கொள்ளையடி! மக்களைத் திருத்தணும்ங்கண்ணே!”

‘‘டிக்கு… டிக்கு… டிக்குன்னு ஆடுது!”

இதுல வேற சாலை பாதுகாப்பு விழா என்னங்கறது? தெருவுல போற இவர் வண்டியெல்லாம் டிக்கு டிக்கு… டிக்கு… டிக்குன்னு ஆடுது. இந்த வண்டியே வேணாம்னு பழைய வண்டியில போனா, டயர்ல காத்து இருக்குதா? காத்து கரெக்டாதானே வச்சிருக்கேன். ஏன்டா ஆடுதுன்னா ரோடு சரியில்ல. இதுல சாலை பாதுகாப்பு வாரம்னு இந்த அம்மா வச்சிருக்கா? என்னய்யா பாதுகாப்புங்குற… இங்கிருக்குற செல்போன் டிக்கு… டிக்குன்னு குதிச்சு பக்கத்து பாக்கெட்ல போய் செல் விழுதாம். அந்த அளவுக்கு மோசமான சாலையை வச்சுகிட்டு சாலை பாதுகாப்பு விழா.

சரி 20 லட்சம் லிட்டரு, அதாவது 20 லிட்டர் தண்ணி ஃப்ரியா இப்ப குடுக்கறேன்னு ஏழை மக்கள்கிட்ட சொல்றாங்க. இப்ப சுத்திகரிக்கப்பட்ட தண்ணீன்னு, அப்ப நீங்க எங்க போனீங்க. அதை கடைசியிலதான் அறிவிக்க வேண்டுமா? அடுத்த தடவை யார் ஆட்சிக்கு வந்தாலும், இல்ல விஜயகாந்த் அவர்களேன்னு வச்சிக்குவமே? நாங்க ஏற்கெனவே கொண்டுவந்த திட்டம்னு சொல்றதுக்கா? இதுலதான் போன திட்டங்கள்.
‘‘எதுக்காகத் திரும்பணும்?”

ஊழல் செய்த கை நிற்காது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த ஆட்சி. ஏன் இதெல்லாம் சொல்றேன்னு நீங்க எல்லாம் நினைக்கணும். உண்மையைச் சொல்லுகிறேன். நான் அதிகபட்சமா பேசல. அப்ப சட்டசபைக்குள்ள வரல. இனிமே சட்டசபைக்குள்ள வரலன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன். எல்லாரும் என்ன சொன்னாங்க? நீங்களும் சட்டசபைக்கு வராதீங்க. வந்துட்டா அவ்வளவுதான் நீங்க வரவே வராதீங்க. எத்தனை பேரு எம்.எல்.ஏ இல்லன்னு சொல்றாங்க. நீங்க வரவே வராதீங்கன்னாங்க. நான் போகல. சட்டசபை ஏன்னா சட்டசபை செத்துடுச்சேன்னு சொன்னாங்க. சட்டசபை செத்தா நான் எப்படி போக முடியும்?

சட்டசபையில பழ.கருப்பையா சொன்னமாதிரி ஒருத்தன் தூங்கிகிட்டு இருந்தான். ஏங்கண்ணே எனக்குக்கூட கைதட்டணும், எதுக்குன்னான். நீ இப்படி கையை வச்சிக்க. அப்புறம் டேபிளைத் தட்றான்னேன். எல்லாம் டேபிளைத் தட்டினா இவங்களும் டேபிளைத் தட்டிக்கிட்டே இருப்பாங்க. எதுக்கு தட்றாங்கன்னே தெரியாது.

(கூட்டத்தினைப் பார்த்து கைகளை ஆட்டிக்கொண்டே) கையை ஆட்டணும் அவ்வளதுதானே. ஒரு நிமிசம்… ஒரு நிமிசம்… நான் வந்து நேரா… அதான் இவங்க இப்படி இப்படி திரும்பனா எப்படி பேச முடியும்? எப்பவுமே மேடைப்​பேச்சு இருக்கறவங்க பக்கத்துல இருக்கறவங்கள பார்க்காதீங்க. நீங்க உங்க கண்பார்வையை தூரமா வச்சிக்கங்கன்னுவாங்க.

எனக்கு நடிக்க வராது. எனக்கு நடிக்கத் தெரியாது. மக்களை ஏமாற்றத் தெரியாது. எதுக்காகத் திரும்பணும். பேச்சு மாறணும். மாறாது அது பத்தியெல்லாம் பத்திச் சொல்லாதே. என்ன பேச்சு மாறப்போது? அவங்க எத்தனை தடவ டாட்டா காட்டினாலும் இங்கிட்டு அவ்வளவுதானே? அதுக்கு மேல யாரும் கைய ஆட்ட மாட்டாங்க. நீங்க பேசுனாலும் கேட்க மாட்டான். எனக்குப் பார்க்கத் தெரியாது. நடிக்கத் தெரியாது. சினிமாவுல வேணும்னா விஜயகாந்த் நடிக்க முடியும். மக்கள்கிட்ட நடிக்கணும்னா…. (நாக்கு குழைய ஏதோ சொல்கிறார்!) உங்கம்மா எதுக்கு நடிக்கணும்? நான் ஒரு லட்சம் தொண்டர்களை வச்சிகிட்டு என்ன பண்றது?

‘‘அடகு வைக்கச் சொல்றியா?”

சரி தேர்தலில் என்ன… ஒரு குறிப்பிட்ட அறிக்கைதான். இவங்க விஜயகாந்த் என்னன்னு சொல்வார்? விஜயகாந்த் ரேட்டை கூட்டிவிடுவாரா? விஜயகாந்த் இடத்தைக் கூட்டிவிடுவாரா? விஜயகாந்த்துக்கு பயமா? ஏன் மெளனம். இதெல்லாம் நீங்க பத்திரிகைகாரங்க செய்யுறது. விஜயகாந்த் தெளிவாக, அமைதியாக, அற்புதமாக யோசிச்சு கொண்டுதான் இருக்கிறேன். ஊழலற்ற மக்களை எங்கு கொண்டுபோய் விடச்சொல்றீங்க? யார்கிட்டயாவது அடகு வைக்க சொல்றீயா? அடகு வச்சதெல்லாம் எனக்குப் போதும். என் தொண்டர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான்ங்​கறது எனக்குத் தெரியும். அவங்களை எப்படியெல்லாம் விலைக்கு வாங்கலாம்னு நினைச்சீங்கன்னு தெரியும். அதை நீங்க சொல்லணும் சொல்லணும்ங்கறீங்க. நான் சொல்றேன்னு என்னைக்​காவது சொல்லியிருக்கேனா பார்த்துக்​கங்க. நான் சொல்றேன்னு சொல்லியிருக்கேனா? இல்லை… இல்லை!

‘‘பத்திரிகைகாரங்க திரும்பிப் பாருங்க!”

சரி உங்ககிட்டயே கேட்குறேன். நான் கூட்டணிக்குப் போவோமா, வேண்டாமா? அதைச் சொல்லுங்க பார்ப்போம். என்னய்யா வேண்டாம் வேண்டாம்ங்கறீங்க. வேண்டாம்ங்கறாங்க, பத்திரிகை​காரங்க வேணும்னா திரும்பிப் பார்த்துக்கங்க. அப்ப நான் என்ன சொல்றது. இதுவந்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதுக்கு பேர் என்ன? எல்லாப் பக்கமும் கை காட்றாங்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு எல்லா மாவட்டச் செயலாளரை அழைத்துப் பேசுகிறேன். நாளையில இருந்து விருப்பமனு நேர்காணல். அதை நான் பார்த்து கேட்டுக்குறேன். நீங்க ஊருக்குப் போய்ச் சொல்லுங்க. அந்த மாவட்டச் செயலாளர்கிட்ட நான் எப்ப வேணுமோ கேட்டுக்குறேன்.

என் கட்சிக்காரங்கள அடகா வைக்கச் சொல்றீங்க? நான் விரும்பல. ஆனா அவங்க கண்ணை மூடிகிட்டு கிணத்துக்குள்ள விழணும்னா விழுந்துடுவாங்க. அதுலயெல்லாம் என் தொண்டர்கள் கிட்ட யார்கிட்டேயும் மாற்றம் கிடையாது. விழு… தலைவர் சொல்லிட்டார். போடான்னு விழுந்துடுவாங்க. ஏன்னா தலைவரை பற்றித் தொண்டர்களுக்குத் தெரியாதா? அடுத்த தலைவர் மாதிரி இல்ல விஜயகாந்த். உங்களுடைய தொண்டர்களை அழுக விட்டுக்கிட்டு போகவிட மாட்டான். விஜயகாந்த் நல்லமனிதர் எங்களைக் காப்பாத்துவார்னு நினைக்கிறீங்க. அதை என்னைக்கும் காப்பாத்துவேன். (பின்பு பிரேமலதா சொல்வதைத் திரும்பிக் கேட்கிறார்)
‘‘கேரளா ஜால்ரா அடிக்கிறாங்க!”

விஜயகாந்த் எப்பவுமே, இப்பகூட தனி ஒருவன்னு ஒரு படத்தைப் போட்டான். நானும் பிரேமலதாவும் பார்த்துக்கிட்டிருந்தோம். இவன்லாம் ஒரு முதலமைச்சரான்னு எனக்குக் கோவம் வந்துச்சு. தலைவர் தலைவர்னு சொல்கிறானே. அந்தப் பிரசவ வலியில துடிச்சிகிட்டு இருந்த அந்த அம்மாவை ஹாஸ்பிட்டல் கொண்டு போற நேரத்துல என் தொண்டர்கள் சாகக் கூடாது. அப்படி இப்படிங்​கறாரு. எல்லாருமே தலைவருக்காகத்தான் இருக்கும். தலைவர் நல்லா இருந்தா தொண்டர்களும் நல்லா இருக்க வேண்டும்.

விஜயகாந்த் வாழ்ந்தான்… வாழ்ந்தான்… வாழ்ந்தானே தவிர, விஜயகாந்த் ஏழை மக்களுக்காக வாழ்ந்தான்னுதான் இருக்கணும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஏன் இதைச் சொல்கிறேன். பத்திரிகைகாரங்க நேரடியா சொல்ல முடியாது. ஏன்னா பயம். ஜெயலலிதா எங்கயாவது அடிச்சிடுமா? ஜெயலலிதா போலீஸ், பத்திரிகை, ஓபிஎஸ். ஓ.பி.எஸ்ன்னா ஜீரோ. இந்த மூன்று பேரும் நம்மளை ஏன்னா நான் டி.வி-யைப் பார்ப்பேன். டி.வி-யில விழுந்து விழுந்து ஜெயலலிதாவைத்தான் காட்டுவாங்க. டி.வி-யில பாருங்க சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் வரமாட்டான். பத்திரிகை முழுக்க ஜால்ரா அடிக்குது. என்ன ஜால்ரா? கேரளா ஜால்ரா அடிக்குது. டி.வி-யில விழுந்து விழுந்து அந்த ரெண்டு சேனலும் ஜெயலலிதாவைக் காட்டுவாங்க. எங்களைப் போட்டு காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுவாங்க. ஒரு அளவு வேண்டாம்.

ஒருசில பத்திரிகை தி.மு.க-வுக்கு ஜால்ரா அடிக்குது. நமக்கும் ஒரு பத்திரிகை ஜால்ரா அடிக்கணும்னு நினைக்கிறேன். அது தே.மு.தி.க-வுக்கு ஜால்ரா அடிக்கும். எந்தப் பத்திரிகை அடிக்கணும்னு தெரியல. பார்ப்போம். இல்லைன்னா அடிக்க வைக்கணும். இல்ல டி.வி-யை அடிக்க வைக்கணும்.

‘‘கிச்சன் கேபினெட்டுல பார்த்தேன்!”

நெல்லு தஞ்சாவூர்ல அளக்கறதுக்கு லஞ்சம் கேட்கறாங்களாம். இவங்க 100 கிலோ அளக்கறதுக்கு ரெண்டு கிலோ எக்ஸ்ட்ரா போடுங்கறாங்களாம். 100 கிலோ போட்டு ஏதோ 10 ரூபாய் வாங்குறாங்களாம். கிலோ 5 ரூபாய் மூட்டைக்கு ரெண்டு கிலோ ஐந்தும் ஐந்தும் 10. மூட்டைக்கு என்னாச்சு. இது ஒரு பத்து… இது ஒரு பத்து மூட்டைக்கு மட்டும் 20 ரூபாய் கிடைக்குது. ஒரு ஆயிரம் மூட்டை வாங்கினா எவ்வளவு ஆச்சு? 2,000 ரூபாய்… தேவையா? தேவைதான். இல்ல 20,000 ரூபாயா? 2,000 இல்ல 20,000. நாம சொல்றோம் இல்ல நாலும் நாலும் எவ்வளவு?… எட்டு. அதுதான் கரெக்ட். ஆனால் குமாரசாமி கணக்குல, நாலும் நாலும் என்ன சொல்லுவான்? மூணுன்னு சொல்லுவான். அதான் பெங்களூர் குமாரசாமியின் கணக்கு. நாம எட்டுங்கறமே… அவர் மூணுன்னு சொல்றாறேன்னா… என்னடா கணக்குன்னா அதான் குமாரசாமியோட கணக்கு. இதை நான் சொல்லல. வாட்ஸ் அப்பில் சொல்றாங்கோ. இதை கிச்சன் கேபினேட்டில் பார்த்தேன். எனக்குத் தெரியாதுங்க “சொல்லிட்டாங்கோ..” அப்படீங்கறங்கோ, நானும் சொல்றேங்கோ, அப்படின்னா நீங்க நம்பணும்கோ, இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ரேட்டை கூட்டணும்னு நெனைக்கறாங்க. என்ன பண்றது? மக்களுக்குப் பொழுதுபோகணும். சினிமா நடிகர்தானே அதனால நான் கே டி.வி பார்க்குறேன். அடுத்து இவங்க வாங்குறாங்க நீங்க பாருங்க. ரெண்டு டி.வி படாத பாடுபடும், நாலு டிவி படாத பாடுபடும், ரெண்டு, நாலு, எட்டு இல்ல. எத்தனை டி.வி இவங்களை சப்போர்ட் பண்ணுச்சோ, அது படாதபாடுபடும். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் படாத பாடுபடும் என்பதை தெளிவாகச் சொல்றேன்.
‘‘இப்ப மணி என்ன?”

இப்ப நம்மள பத்திரிகைகாரங்க சொல்றாங்க விஜயகாந்த் கூட்டணி போயிடுவாரா? இல்ல போயிடுவார்… போயிடுவார்னு சொல்றாங்க. தலைவன் வேண்டாங்குறேன்… நீ ஏன் (திடீரென சுதாரித்துக் கொண்டவரைப்போல்) இல்ல சரிதான்… சரிதான்பா. கேட்குறாங்க பத்திரிகை நண்பர்கள்… நீங்க கேட்டீங்களா வேணாம்… வேணாம்… வேணாம்னு சொல்றாங்க. நீங்க எழுதுங்க தொண்டர்கள் வேண்டாங்கறாங்க. தொண்டர்களும் அந்த வழிதான் போவார்னு தலைவர்ன்றாங்க. தலைவர் எங்க இருக்கார்னு நீங்களே சொல்லுங்க. ஏன் இத்தனை பேரும்… நீங்க இப்ப வந்து மணி என்ன? ஏன்னா நீங்க வந்து பக்குவமா போகணும்? எல்லா ஊர் வண்டிக்கும் ஒரு சீஃப் இருப்பாங்க. அவங்ககிட்ட போய்ட்டு சண்ட இல்லாம சச்சரவு இல்லாம போகணும். தேசிய முற்போக்கு திராவிட கழகம்ன்னாலே கடையில தகராறு பண்ணாம ஒழுங்கா சாப்பிட்டமா வந்தமான்னு இருப்பாங்க. மத்த கட்சி மாநாடுன்னா கடையை இழுத்து மூடிடுவாங்க. யார்ரா இவன் சண்டையை போட்டுக்கிட்டே இருப்பான். அவன்கிட்ட போய் கடையைத் தொறந்து வச்சிகிட்டு இருக்கணும்? அதுக்கு சும்மா இருந்துகிட்டு போயிடலாம். வியாபாரமும் வேணாம் ஒண்ணும் வேணாம். ஆக, எதை எதை நாம் எப்படி வைக்கிறது?

‘கிங்’… ‘கிங்மேக்கர்’!

பிரேமா கிட்டயே நான் கேக்குறேன். ‘கிங் மேக்கரா’ இருக்கணுமா? ‘கிங்’கா இருக்கணுமா? சொல்லுங்க பார்க்கலாம். ‘கிங்’…  சரி ஒரு தடவை சொல்லீட்டீங்க. ரெண்டு தடவை கேட்பேன். ‘கிங் மேக்கரா’ இருக்கணுமா? ‘கிங்’கா இருக்கணுமா? காது கேட்கலையே… பத்திரிகைகாரங்களைப் பார்த்துச் சொல்லுங்க… ‘கிங்’கா இருக்கணுமா? சரி. நீங்களும் ‘கிங்’காதான் இருப்பீங்க. கவலையே படாதீங்க. நான் ‘கிங்’குன்னா நீங்களும் ‘கிங்’குதான். யாரும் இங்கே சர்வாதிகாரி கிடையாது. ஆக, எல்லோரும் நேரத்துக்குப் போகணும்… வீட்டுக்குப் போகணும்ங்கறதால. நாளைக்கு லீவு நாளா? மணி என்ன? ஒன்பதா? ஒன்பதாச்சா… எல்லோரும் பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேர்ற வரைக்கும் எனக்குத் தூக்கம் வராது நண்பர்களே… தொண்டர்களே… நான் அதிக நேரம் பேசலேன்னு யாரும் வருத்தப்பட்டுக்காதீங்க. எனக்கு சில பிரச்னை இருந்தது. அதனால வண்டில உட்கார்ந்து அவங்ககிட்ட பேசி அனுப்பிட்டு வந்திருக்கேன். இந்த ஏவி எல்லாம் பார்த்திருப்பீங்க. இது வந்து முதல்தடவை. இதைப் பார்த்து காப்பியடிச்சு திருடத்தானே செய்யறாங்க. திருட திருட. என் மனைவி இதைப் பார்த்து வேற என்ன பொருள்ள என்ன பேரு வச்சி கூப்பிட்டாலும் திருடித்தான் அவங்க சொல்றாங்கன்னுதான் வரும். செஞ்சுபார்க்கட்டுமே. ஜெயலலிதா இன்னும் ரெண்டுமாசம். ரெண்டுமாசத்துல எதையும் செய்யமாட்டாங்க. குறைஞ்சது 5 வருஷம் ஆகும். 5 வருஷத்துல நிச்சயமாக நான் முடிக்கிறேன்னு சொல்லி முடிக்கிறேன். மக்களே வணக்கம்! நன்றி… நன்றி… நன்றி… வணக்கம்… வணக்கம்… வணக்கம்!”

– தெளிவா புரிஞ்சு போச்சுங்க! 

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

விஜயகாந்த்: இனவெறி, சாதிவெறி ஊடகங்கள் காட்டும் பூச்சாண்டி!

அரசியல் கட்சி நடத்த எந்த அருகதையும் இல்லாத குழப்பவாதிதான் விஜயகாந்த் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது தேமுதிகவின் காஞ்சிபுரம் மாநாடு. ஆனால், இனவெறி, சாதிவெறியின் காரணமாக அவரை தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றன கேடுகெட்ட ஊடகங்கள்.

இந்த மானம்கெட்ட Presstitute கும்பல் ஒழியாத வரை தமிழ் நாடு உருப்படாது.

ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் கட்டுரை

ஊடகங்களின் அவலநிலைகுறித்த, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் செந்தில் அவர்களின் சுவாரசியமான கட்டுரை இதோ:
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் சோ அவர்கள் எழுதிய ஒரு கதை. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கிறது. ஏறத்தாழ இதுப் போலத் தான் இருக்கும்:

ஒரு கல்லூரியில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்காக கவிதைப் போட்டி நடத்துவார்கள். அந்தக் கல்லூரி மாணவன் ஒருவன் மனம் வெறுத்துப் போய் ஒரு காகித்தில்

`நீ பெண்ணா, ஆணா? பேயா? என்னை ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறாய். வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது` - என்று எழுதி கசக்கி எறிந்து விடுவான். அதனை அவன் தோழன் ஒருவன் கொண்டு போய் கவிதைப் போட்டிக்குக் கொடுத்து விடுவான். தமிழ் பேராசிரியர் அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கொடுத்து விடுவார்.

கொடுத்து அந்தக் கவிதைக்கு விளக்கமும் தருவார் `ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் விளங்கி, சுடுகாட்டில் பேயாகத் திரியும் சிவனே! இந்த மனித வாழ்வெனும் துன்பத்தில் இருந்து விடுவித்து ஆட்கொள்வாய்` எனப் பொருள் படும் அருமையான கவிதை எனப் பாராட்டிப் பேசுவார்.

பின்னர் அந்த மாணவனை அழைத்து `எவனுமே கவிதை எழுதவில்லையே. நீயும் சும்மா இருக்க வேண்டியது தானே? இனிமேல் கவிதை எழுதினால் தெரியும் சேதி` என்று மிரட்டி அனுப்பி விடுவார்.

அந்தக் கல்லூரி மாணவி ஒருத்தி அவன் கவிதையில் மயங்கி அவனிடம் அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதித் தரச் சொல்லித் தொல்லை செய்வாள். அந்த மாணவன் மீண்டும்

`சண்டையென்ன உனக்கு ஜோலியா? மண்டையென்ன காலியா`- என்று எழுதிக் கொடுப்பான்.

அதை வீட்டுக்குச் சென்று படித்து விட்டு அந்தப் பெண் அடுத்த நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு `ஞாயிற்றுக்கிழமை உனக்கு வேலையில்லாமல் இருந்தால் சந்திக்கலாமா அல்லது திங்கள் கிழமை நேரமிருந்தால் சந்திக்கலாமா என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்' என்று மயங்குவாள்.

இந்தக் கதையை சோ தன் நடையில் நகைச்சுவையோடு சொல்லியிருப்பார். அதைப் படித்த காலத்தில் நான் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நடைமுறை வாழ்க்கையிலே கூட இதுவெல்லாம் நடக்கும் என்று.

விஜய்காந்த் மேடையிலே உளரும் உளரல்களுக்கு தெளிவான விளக்கம் எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கும், மேலே சொன்ன கதையில் வரும் அந்தப் பைத்தியக்கார மாணவனின் கவிதைக்கு விளக்கம் தரும் தமிழ் பேராசிரியருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 

அந்தத் தமிழ் பேராசிரியருக்கு முதல் பரிசு தந்த காரணத்தை விளக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகளுக்கு என்ன நிர்பந்தம் இருக்க முடியும்?

சாதியாக இருக்குமோ?
மொழியாக இருக்குமோ?

தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் அரசியல் ஆளுமை பெற்றுவிடவே கூடாது என்ற உறுதியான நோக்கமாக இருக்குமோ?

இந்தப் பேத்தல்காரன் தான் எங்களுக்கு விடிவெள்ளி என்று உறுதியாக நம்பும் கம்யூனிஸ்டுகள் மனதில் இருப்பது அரசியலா? சாதியா? நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் என்று மார்தட்டும் கருணாநிதியின் உள்ளம் முழுவதும் கள்ளம் மட்டும் தானா? சுயமரியாதை சொல்லில் மட்டும் தானா?

எதுவாக இருந்தாலும்.....

வெட்கக் கேடு
வெட்கக் கேடு
வெட்கக் கேடு

`தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா`

என்றுச் சொல்லி, பேசிப் பேசியே தமிழனை ஏமாற்றிய திராவிடக் கூட்டத்தின் வெற்றியே தமிழனை முட்டாளாகவும், சிந்திக்கவே தெரியாத, முதுகெலும்பில்லாத பிண்டமாகவும் வைத்திருப்பது தான்.

விஜயகாந்த் போன்றவர்களைத் தலைவர்களாக, தமிழ் நாட்டு அரசியலின் மையப்புள்ளியாகப் பார்க்க வைக்கிற ஊடகச் சதிகாரர்களிடமிருந்து தமிழ் சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமா?

விழித்தெழுமா?

விடியுமா?’

வெள்ளி, ஜனவரி 29, 2016

'விலைபோன' தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்?

எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளி தி.மு.க., இந்த பிரச்சினையை பாமக மீது திசைதிருப்பி விடுகிறது.

திமுகவின் பணத்துக்கு அடிமையாகி, பத்திரிகை தர்மத்தை விலைபேசி விற்றுள்ள தி இந்து மற்றும் விகடன் பத்திரிகைகள் -இந்த இழிசெயலுக்கு துணை போயுள்ளன. அபாண்டமான கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி பரப்பி வருகின்றன இந்த பத்திரிகைகள். 
நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு அவர்களும், முன்னாள் இராணுவ தளபதி வி.கே. சிங் அவர்களும் சொன்னது போல தி இந்துவும் விகடனும் Presstitutes தொழிலில் ஈடுபட்டுள்ளன.

அபாண்டமாக பழிபோடும் கோயபல்ஸ் பிரச்சாரம்

1. தி இந்து பத்திரிகையின் அபாண்டம்.

'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'முன்னாள் தமிழக மத்திய அமைச்சர் ஒருவர் தான் மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கல்லூரிக்கு அனுமதி அளித்தார்' என்று 25.1.2016 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டார்.

இதனை 27.1.2016 ஆம் நாளன்று, "இந்த கல்லூரிக்கு அன்புமணி அமைச்சராக இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்டது" ('Nod given during Anbumani tenure') என்று தலைப்பிட்டு பிரச்சாரம் செய்தது தி இந்து.
அதாவது - விஜயகாந்த் அறிக்கையில் அன்புமணி என்கிற பெயர் இல்லாத நிலையில் - அன்புமணி என்று தலைப்பிலேயே குறிப்பிட்டது தி இந்து.

2. விகடன் கும்பலின் அராஜகம்.

தி இந்துவின் செய்தியை பின்தொடர்ந்து உடனடியாக, "எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?" என்று கட்டுரை எழுதியது விகடன். (திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு 'ராஜநாயகம் சர்வே' என்பதை 'லயோலா சர்வே' என்று சொன்னது தான் விகடன் கும்பல்).

(விகடன் மற்றும் இந்து பத்திரிகைகளின் வதந்திகளுக்கு பதில் அளித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் - 'மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்த எந்த கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை. இந்த விஷயத்தில் நடந்த உண்மை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரினார்)

3. திருமாவளவனின் கட்டுக்கதை.

இதன் தொடர்ச்சியாக பேட்டியளித்த திருமாவளவன்  "விழுப்புரம் மாவட்டம் எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவ கல்லுாரிக்கு அனுமதி அளித்ததில் தனக்கு சம்மந்தம் இல்லை என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். கேபினட் அமைச்சர் தான் அனுமதி வழங்க முடியும்" என்று கூறினார். (காண்க: அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய் திருமாவளவன் பேட்டி)

(விசிக திருமாவளவனுக்கு நெருக்கமானவராக கருதப்படும் 'ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம்' எனும் அமைப்பை நடத்தும் கள்ளக்குறிச்சி 'தாதா' வெங்கடேசன் என்பவர்தான் எஸ்.வி.எஸ் கல்லூரியில் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு காரணமானவர். இந்த உண்மையை மறைக்கவே மருத்துவர் அன்புமணி மீது பாய்கிறார் திருமாவளவன்)

உண்மை இதுதான்: மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை - திமுகவே காரணம்!

மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதிக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இது 100% மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரி.

அலோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் வருகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறைகளுக்கு மாநில அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறை அனுமதி அளிக்கிறது.

விழுப்புரம் கல்லூரி இந்தப் பட்டியல் எதிலும் வரவில்லை. எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை கல்லூரி என்பது ஒரு சித்தமருத்துவக் கல்லூரி அல்ல. அது இயற்கை மற்றும் யோகா கல்லூரி மட்டுமே (BNYS).

மத்திய அரசின் 2006 உத்தரவு

இயற்கை மற்றும் யோகா துறைகள் விவகாரத்தை மத்திய அரசு கவனிப்பது இல்லை. 4.9.2006 ஆம் நாள் மத்திய அரசின் ஆயுஷ் துறை வெளியிட்ட உத்தரவில் "இயற்கை மற்றும் யோகா" படிப்புகளில் மிகக் குறைவானவர்களே படிப்பதால், இதனை முறைப்படுத்தும் சட்டங்களை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. காண்க படம்:

மத்திய அரசின் 2014 விளக்கம்

7.2.2014 ஆம் நாள் இதுகுறித்து Press Information Bureau வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், "இயற்கை மற்றும் யோகா" படிப்புகளை மத்திய அரசு கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தி விட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் 1995 ஆம் ஆண்டுமுதல் இதற்கான மாநில சட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளது. இங்கே காண்க: 

(There is no system of registration of Yoga practitioners under Act/guidelines of Government of India. The Department of AYUSH has already asked State Governments to enact comprehensive legislation for the regulation of naturopathy covering registration of practitioners, medical education and all matters related to naturopathy.)

ஆக, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலோ, பார்வையிலோ இல்லாத  "இயற்கை மற்றும் யோகா" படிப்புக்கு - மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாஸ் அவர்கள்தான் அனுமதி அளித்தார் என்று கட்டுக்கதையை பரப்புகின்றன தி இந்து + விகடன் கட்டுக்கதை கும்பல்.

பணத்துக்காக செய்தி வெளியிடும் அநியாயம் தடுக்கப் பட வேண்டும்.

இந்திய ஜனநாயக அமைப்பில் ஊடகங்கள் இன்றியமையாதவை. அவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் தமிழக ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளின் தொங்கு சதையாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக, அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகின்றன.

தி இந்து + விகடன் கும்பல், திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளை திசை திருப்புவதை புதிய தொழிலாக தொடங்கியுள்ளன. இது ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிட்டு, ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதை விட, மிகக் கேவலமான வேறு தொழிலை நாடுவது - சிறிதளவாவது மனசாட்சி உள்ள செயலாக இருக்கும்.




புதன், ஜனவரி 27, 2016

மாணவிகள் மரணம் - SVS தலித் கல்லூரிக்கு தலித் அமைச்சர் அனுமதி அளித்தார்: பா.ம.க.,வை குற்றம் சாட்டுவது ஏன்?

சின்னசேலம் எஸ்.வி.எஸ் கல்லூரி தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரி ஆகும். இதற்கு அனுமதி அளித்தவரும் ஒரு தலித் அமைச்சர் தான். பிரச்சினைக்கு காரணமான கல்லூரியும் அனுமதி அளித்தவரும் தலித் பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் போது - திமுக கூட்டணி பத்திரிகைகள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.
எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். "மத்திய சுகாதார துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இருந்தபோதுதான், இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்கிற வதந்தியை 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்தும், தி.மு.க கும்பலும் பரப்பிவருகிறது.

தி.மு.க ஆதரவு நிலையில் இருக்கும் தி இந்து ஆங்கிலப் பத்திரிகை இதனை ஒரு செய்தி தலைப்பாகவே வெளியிட்டுள்ளது ('Nod given during Anbumani tenure' - The Hindu)

எஸ்.வி.எஸ் கல்லூரி அனுமதியின் பின்னணி

சித்த மருத்துவ கல்லூரி நடத்த விரும்புகிறவர்கள் மாநில அரசிடம் (Essentialist Certificate) எனும் சான்றிதழை வாங்க வேண்டும். பின்னர் 'அனைத்து அடிப்படை வசதிகளையும் பரிசோதித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்க வேண்டும். இந்த அனுமதிகளுக்கு பின்னரே மத்திய அரசிடம் அனுமதி கோர முடியும்.

எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு இந்த 'போலி' அனுமதிகளை அளித்தது வேறு யாருமல்ல, பா.ம.க மீது அவதூறு பரப்பும் அதே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தான் அனுமதி அளித்தது.

எஸ்.வி.எஸ் கல்லூரியில் எல்லா வசதிகளும் இருப்பதாக தி.மு.க அரசு அனுமதி அளித்த பின்னர், மத்திய அரசின் அனுமதியை வழங்கியவர் அப்போது மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த பனபாக லட்சுமி. இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

(யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் ஆயுஷ் பிரிவு பனபாக லட்சுமி அவர்கள் தலைமையில்தான் இயங்கியது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அதற்கு பொறுப்பாக இல்லை)

எஸ்.வி.எஸ் கல்லூரி தொடர்பான எந்த ஒரு கோப்பும் மருத்துவர் அன்புமணி அவர்கள் பார்வைக்கு வரவில்லை. அப்படி எந்த ஒரு கோப்பிலும் அவர் கையொப்பம் இடவுமில்லை.

திமுக ஊடகங்களும் கிறிஸ்தவ மதபோதக டாக்டரும் வதந்தி பரப்புவது ஏன்?

மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு எதிராக 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை திமுக ஆதரவு தி இந்து ஆங்கிலப் பத்திரிகை 'Nod given during Anbumani tenure' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் அனுமதியையும், எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதியும் தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதை திட்டமிட்டு மறைத்துவிட்டது The Hindu. #PaidNews
(திமுக என்கிற எஜமானர் எப்படி விரும்புகிறரோ, அப்படியே திமுக அடிமை தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் ஜனவரி 25 ஆம் தேதி விஜயகாந்த் அறிக்கையை 27 ஆம் தேதி காலம் தாழ்த்தி வெளியிட்டுள்ளது தி இந்து.)

தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரிக்கு, திமுக அரசும் ஒரு தலித் அமைச்சர் ஒருவரும் அனுமதி அளித்தனர் என்பதே உண்மை. இதற்காக திமுக, தி இந்து, டாக்டர்' விஜயகாந்..த்தூ.. ஆகியோர் மருத்துவர் அன்புமணி மீது பாய்வது என்ன நியாயம்?  இனி வானத்துக்கீழ் எந்த தீமை நடந்தாலும் - அதற்கு பாமக காரணம் என்று கூறாவிட்டால் இந்த திமுக கூட்டணிக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! 

(தற்போதைய திமுக கூட்டணி = திமுக + தேமுதிக + விகடன் குழுமம் + தி இந்து)
-------------------------------------
(குறிப்பு:  'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்': பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி ஆகியவற்றில் விஜயகாந்த் நிபுணத்துவம் பெற்றமைக்காக பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனத்தில் (International Institute of Church Management Inc.) டாக்டர் பட்டம் பெற்றவர் விஜயகாந்த். அவர் "டாக்டர் விஜயகாந்த்" ஆனது இப்படித்தான்: "'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?" http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_10.html  

திங்கள், டிசம்பர் 28, 2015

பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ: ஊடகங்களுக்குத் தேவை ஆத்மபரிசோதனை!

ஆடு வளர்ப்பவனை நம்பாது.... கசாப்புக்கடைக் காரணத்தைத் தான் நம்பும் என்பதற்கு சென்னையில் நேற்று புதிய உதாரணம் படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சித் (கட்சி பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில் தான்) தலைவரான நடிகர் விஜயகாந்த் செய்தியாளர்கள் மீது ‘த்த்தூதூ’ என காறித் துப்பியிருக்கிறார்.  ("பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ" - இது விஜயகாந்த் வாசகம்)
ஓர் அரசியல் கட்சித் தலைவர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இனி இப்படி ஒரு அசிங்கம் அரங்கேறக் கூடாது என்று விரும்புவோம்.

விதைத்ததை அறுவடை செய்

விஜயகாந்தின் செயல் கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்த அவமதிப்புக்கு ஊடகவியலாளர்கள் தகுதியானவர்கள் தான். அவர்கள் விதைத்ததை அவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். ஒரு ஜீரோவை ஹீரோவாக்க பாடுபட்ட பத்திரிகையாளர்கள் இப்போது காமெடியன்களை விட கீழானவர்களாக மாறியிருக்கிறார்கள்.

விஜயகாந்தின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து விடும். சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ‘‘ஏண்டா... உன் பத்திரிகையா எனக்கு சம்பளம் தருகிறது? போடா நாயி’’ என்று திட்டியது, தில்லியில் செய்தியாளர் சந்திப்பின் போது, ‘‘அப்படியே... மைக்கை தூக்கி அடிச்சிடுவேன்’’ என்று மிரட்டியது, சென்னையில் கட்சி அலுவலகத்தில் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களைப் பார்த்து,‘‘ உங்களை நாங்களாய்யா கூப்பிட்டோம்....கூப்பிடாமலேயே ஏன்ய்யா இங்க வரீங்க?’’ என்று விரட்டியது என பத்திரிகையாளர்களை விஜயகாந்த் இழிவுபடுத்திய நிகழ்வுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

அறிவிருக்கா? என்று கேட்டதற்காக இளையராஜாவை கடுமையாக விமர்சித்த ஊடகக் காரர்களும், கருத்துரிமை போராளிகளும் விஜயகாந்தின் இந்த செயல்களுக்காக அவரை கண்டித்ததே இல்லை.

தன்மானம் பற்றி வாய்கிழிய பேசும் பத்திரிகையாளர்களுக்கு, உண்மையாகவே அப்படி ஒன்று இருந்திருந்தால் விஜயகாந்த் பற்றிய செய்திகளையும், அவரது நிகழ்வுகளையும் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருமுறை கூட அப்படி செய்யவில்லை... செய்யவும் மாட்டார்கள். காரணம் பத்திரிகையாளர்கள் சிக்கியுள்ள டிசைன் அப்படி.

விஜயகாந்தை பாதுகாக்கும் ஊடகங்கள்

ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு அருகில் அதைவிட பெரிய கோட்டை கிழிக்க வேண்டும். அதுவே, ஒரு சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற வேண்டுமானால் அதற்கு அருகில் அதைவிட சிறிய கோட்டை போட வேண்டும். விஜயகாந்த் என்ற சிறிய கோட்டை பெரிய கோடாக மாற்ற நடக்கும் டிசைனில் ஊடகங்களும் ஓர் அங்கம் என்பதால் தான் அவருக்கு எதிராக ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

விஜயகாந்த் காறி துப்பிய பிறகும் கூட அவரிடம் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ‘‘இந்த கேள்வியையெல்லாம் ஜெயலலிதாவிடம் கேட்க உங்களுக்கு துப்பில்லையா?’’ என விஜயகாந்த் கேட்டார். இந்த கேள்வி சரியானது தான். ஆனால், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசின் சலுகைகள் அனைத்தையும் அனுபவிக்கும் விஜயகாந்த் ஆட்சியின் அவலங்களைப் பற்றி ஒருமுறையாவது சட்டப்பேரவையில் பேசியிருப்பாரா? இதைப் பற்றி விஜயகாந்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமல்லவா? அதை செய்தார்களா? செய்யவில்லையே?

2014 நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கட்டும், 2016 சட்டமன்றத் தேர்தலாக இருக்கட்டும், எந்த கொள்கையுமே இல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று தரப்புடன் கூட்டணி பேசி டிமாண்டை அதிகரித்துக் கொள்ளும் விஜயகாந்தின் வணிக நோக்கத்தை ஏதாவது ஊடகங்கள் அம்பலப்படுத்தி இருக்குமா?  அம்பலப்படுத்தவில்லையே?
மாறாக, கொள்கைக் கோமாளியை கிங் மேக்கராகத் தானே ஊடகங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடின. தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் தே.மு.தி.க. கட்சியின் நிலைப்பாடு என்னவென்று விஜயகாந்துக்கு தெரியுமா? அதைப்பற்றி எந்த ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கின்றனவா? எழுப்பவில்லையே?

காரணம் என்ன? 
அது தான் மில்லியன் டாலர் கேள்வி

ஒரு கடையில் இரு பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டுமே அழுகிப் போன பழங்கள். அதன் அருகில் ஒரு நல்ல பழத்தை விற்பனைக்கு வைத்தால் அந்த பழம் தான் விற்பனையாகும். ஆனால், வியாபாரியின் நோக்கம் நல்ல பழத்தை விற்பதல்ல... அழுகிப் போன பழங்களை விற்பது தான் நோக்கம். அப்படியானால் அழுகிய பழங்களை விற்க என்ன செய்வது?  வேறென்ன... மீண்டும் சிறிய கோடு... பெரிய கோடு தத்துவம் தான்.

அழுகிப் போன பழங்களை விட மோசமான பழத்தை விற்பனைக்கு வைத்தால் அழுகிய பழமே பரவாயில்லை என்று வாங்கிச் செல்வார்கள் அல்லவா? அதனால் தான் இரு திராவிடப் பழங்களை நல்லவையாக்க இன்னொரு தேசிய திராவிடப் பழத்தை முன்வைக்கிறார்கள் ஊடக நிறுவன வியாபாரிகள். நல்ல பழம் எதுவும்  வாடிக்கையாளர்களின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தாம் ‘மாம்பழத்தை’ மறைத்து வைக்கிறார்கள்.

விஜயகாந்த் விஷயத்தில் ஊடகங்கள் தங்களின் செயலை ஆத்மபரிசோதனை செய்து கொள்ள இதுவே சரியான தருணம். ஆனால், ஊடகங்கள் அதற்கு தயாராக இருக்காது. இதற்கு முன் விஜயகாந்தின் அவமதிப்புகள் எப்படி ஊடகங்களை பாதிக்கவில்லையோ, அதேபோல் இந்த காறித் துப்பலும் பாதிக்காது. இதற்குப் பிறகும்  விஜயகாந்தை  ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவே செய்யும். விஜயகாந்தும் ஊடகங்களை காறித் துப்பிக் கொண்டு தான் இருப்பார்.

துப்புங்க கேப்டன் துப்புங்க.... ரொம்ப நல்லாவே காறித் துப்புங்க!

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

காறித்துப்பும் விஜயகாந்த் - காலில் விழும் பத்திரிகைகள்: இவரை நம்பிதான் ஊடகங்களின் பிழைத்தாக வேண்டும்!

"இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே.. பயப்படுவீங்க, பத்திரிகைகாரங்களா நீங்க....த்தூ" என்று காறி துப்பி பத்திரிகைகளை அவமதித்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.

'நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" என்றார் சுவாமி விவேகானந்தர். தமிழக பத்திரிகைகள் விஜயகாந்தின் கழிசடை அரசியலை போற்றிப்புகழ்ந்தார்கள். இன்று, அதே கழிசடை அரசியலுக்கான பலனை பெற்றிருக்கிறார்கள். இதில் வியப்படைய எதுவும் இல்லை.

  • "அறிவிருக்கா" என்று கேட்ட இசைஞானி இளையராஜா மீது பாய்ந்தது போல... "பத்திரிகைகளா நீங்க'... த்தூ..." என்று காறி உமிழ்ந்த விஜயகாந்தின் மீது பத்திரிகைகளால் பாய முடியாது. 


  • இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது போல... விஜயகாந்த மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகைகளால் கோர முடியாது.

ஏனென்றால், இந்த ஊடகங்களை நம்பி விஜயகாந்தின் பிழைப்பு இல்லை. ஆனால், விஜயகாந்தை வைத்துதான் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பத்திரிகைகள் பிழைப்பு நடத்தியாக வேண்டும்.
--------------------------------
"பால், பீர் அபிசேகம் ரசிகனின் கலாச்சாரம் மட்டுமல்ல... பத்திரிகையாளனின் கலாச்சாரமும் தான்!" - என்று நேற்று பதிவிட்டிருந்தேன். அதில்:

"நடிகனைப் புகழ்ந்து அவன் ரசிகன் துண்டு நோட்டீஸ் அச்சிட்டு வெளியிடுவதைப் போல, நடிக அரசியல்வாதியின் அத்தனை பிழைப்பு வாதத்தையும் அவரது பெருமை போல நாளிதழில் அச்சிட்டு வெளியிடுவது தான் ஒரு பத்திரிகையாளனின் பிழைப்பு என்றால், அந்த பத்திரிகையாளனுக்கும், பீர் அபிசேகம் செய்யும் ரசிகனுக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் அல்ல... ஒரே ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது. வாழ்க... கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மம்!" - என்று குறிப்பிட்டிருந்தேன்.

கோமாளிகளுக்கு கொடி பிடிக்கும் இதழியல் தர்மத்துக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இனி இன்னும் அதிகமாக கிடைக்கும்.

வியாழன், டிசம்பர் 24, 2015

ம.ந.கூ: காரியக்கார மீனவனும், 4 தூண்டில் புழுக்களும்!

தமிழக அரசியலின் மிகப் பெரிய சக்தியான மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள், தங்களை விட சக்தி வாய்ந்த மிக மிகப்பெரிய சக்தியான நடிகரை அவரது அலுவலகத்துக்கு தேடிச் சென்று சந்தித்து பேசியிருக்கிறார்கள். 
இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக சந்திக்கச் சென்ற தலைவர்கள் கற்பனைக் குதிரையை கயிற்றைப் பிடிக்காமலேயே ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் செல்வதற்காக கோயம்பேடு அலுவலகத்தின் கதவு திறந்ததை ஏதோ கூட்டணிக் கதவே திறந்து விட்டதாகக் கருதி தாழ்ப்பாள் போடாமலேயே தன்மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்.... தாங்கள் அனைவரும் மீனை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் மண்புழுக்கள் என்பதை அறியாமலேயே!

மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள 4 கட்சிகளுமே தாங்கள் தான் கொள்கைக் கோமான்கள் என்று கூறிக்கொள்வார்கள். ஆனால், இடதுசாரிக் கட்சிகளின் கொள்கை என்பது எப்படியாவது, யார் காலிலாவது விழுந்தாவது 8 முதல் 10 எம்.எல்.ஏக்களை பெற்று விட வேண்டும் என்பது தான். விடுதலை சிறுத்தைகளுக்கு கொஞ்சம் பணமும், கொஞ்சம் இடமும் வாங்கி விட வேண்டும்  என்பதை விட சிறந்த கொள்கை இருக்க முடியாது.

புரட்சிப் புயலுக்கோ நமக்கு இரு கண்கள் போனாலும் பரவாயில்லை... அடுத்தவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பது தான் கொள்கை. சரி... அவை கிடக்கட்டும். அவர்களுக்கு கொள்கை இருப்பதாகவாவது கூறிக் கொள்கிறார்களே.  அப்படிப்பட்ட 4 கட்சிகளும் தஞ்சம் தேடி சென்றிருப்பது யாரைத் தெரியுமா? தனது கட்சியின் கொள்கைகள் என்னவென்று தனக்கே தெரியாது என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடும் தலைவர் தலைமையிலான கட்சியிடம் தான். தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் இதுவரை அந்த கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அந்தக் கட்சி கொள்கைக் குன்று!

காற்றில் பறந்த குப்பை கோபுரத்தில் அமர்ந்ததைப் போல கடந்த தேர்தலில், தி.மு.க. மீது மக்களுக்கு  ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் விஜயகாந்த். நான்கரை ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் இதுவரை நான்கரை நாட்கள் கூட சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றதில்லை. அவைக்கு சென்ற நாட்களில் கூட நாக்கைத் துறுத்திக் காட்டியதையும், ‘ஒண்டிக்கு ஒண்டி வாங்கடா’ என்று சவால் விட்டதையும் தவிர வேறு எதையும் செய்ததில்லை.
சரி.... அவைக்கு உள்ளே நடந்ததை விடுங்கள்... வெளியில் அவர் சாதித்தது என்ன? சென்னை விமான நிலையத்தில் மூத்த பத்திரிக்கையாளரை தாக்கியது, தில்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘‘அப்படியே... மைக்கை தூக்கி அடிச்சிடுவேன்’’ என்று மிரட்டியது, வெள்ள பாதிப்பு பற்றி கேட்டபோது, அதுபற்றியெல்லாம் சென்னைக்கு போய் தான் சொல்லுவேன் என்று சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டே கூறியது, சிங்கப்பூரில் தமது மகன் நடித்த சகாப்தம் படப்பிடிப்புக்காக சென்று திரும்பியவரிடம் அரசியல் நிலவரம் பற்றி கேட்ட போது, ‘‘நான் ஒரு மாதமாக பத்திரிகைகளே படிக்க வில்லை. தமிழ் தொலைக்காட்சி செய்திகளும் பார்க்கவில்லை’’ என்று பொறுப்பாக பதில் கூறியது, நடிகை மஞ்சுளாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்று விட்டு, ‘‘அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த நன்றிகள்’’ என்று உளறியது என எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய பணிகளுக்கு ஏராளமான உதாரணங்களைக் கூறலாம்.

இன்னொரு பக்கம் கொள்கைக்காகவே வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் இடதுசாரிகள், நேற்று வரை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக விரோதம் என்று முழங்கி வந்தனர். இன்றோ, மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கோயம்பேடு அலுவலக வளாகத்தில் நின்று ஆசை காட்டியிருக்கின்றனர். அதற்கு முன்பே முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட விஜயகாந்தின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று இந்து நாளிதழ் மூலம் தூது விட்டார். அவர்களைப் பொறுத்தவரை அன்புமணி இராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் அது ஜனநாயக விரோதம்... அதுவே விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அது சீன சித்தாந்தத்தை விட சிறந்த கொள்கை. அய்யா இடதுசாரிகளே... உங்கள் கொள்கைக் கோவணம் கிழிந்து தொங்கி நீண்ட நாட்களாகி விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

தம்மை சந்திக்க வந்த பாரதிய ஜனதா தலைவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த நடிகர், உங்களை வழியனுப்ப வாசல் வரை வந்ததை நினைத்து நீங்கள் புளங்காகிதம் அடையாதீர்கள். அது உங்களுக்கான மரியாதை அல்ல. தனக்கு எவ்வளவு மரியாதை தேவை என வேறு சிலருக்கு தெரிவிப்பதற்கான சிக்னல்.
நடிகர் விஜயகாந்த் வேறு சில இடங்களில் இருந்து வேறு சிலவற்றை எதிர்பார்க்கிறார். அவை கிடைக்க வேண்டுமானால் தனக்கு அதிக கிராக்கி இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். ஜப்பானில் சாக்கி சான் கூப்பிட்டாக.... அமெரிக்காவில் மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக... இங்கிலாந்தில் இருந்து எமி ஜாக்சன் கூப்பிட்டாக... என்கிற ரேஞ்சில் சீன் கேட்டால் நடிகர் எதிர்பார்ப்பது நடக்கும்.

ஒரு பெரிய மீனை பிடிப்பதற்கான தூண்டிலில் குத்தப்பட்டிருக்க புழுக்கள் தான் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள். இந்த சந்திப்புக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால், அது உற்சாகத்தால் அல்ல... தூண்டிலில் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வலியால் தான்.... என்பது விரைவில் புரியும்!

வெள்ளி, டிசம்பர் 10, 2010

'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?

"பணம் கொடுத்து திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் வாங்கினாரா?" என்று சந்தேகிக்க இடமான தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன.

இணையத்தின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பான "பன்னாட்டு கிறித் தேவாலய மேலாண்மை நிறுவனம் - ..சி.எம்" (International Institute of Church Management Inc.) திரு. விஜயகாந்த் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் ..சி.எம். அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல. அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் - என்று நான் எனது  "விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!"  எனும் பதிவில் எழுதியிருந்தேன்.

தற்போது இதுகுறித்து மேலும் கிடைக்கும் விவரங்கள் வியப்பளிக்கின்றன.

பணத்திற்கு 'டாக்டர்' பட்டம்.

..சி.எம் இணயதளத்தில், இந்த மதப்பிரச்சார அமைப்பிடம் 'டாக்டர்' பட்டம் பெற விரும்புவோர் "ஒரு குறிப்பிட்ட அளவு நன்கொடை அளிக்க வேண்டும்" என்றும், இதனுடன் கூடுதலாக "வாழ்நாள் உறுப்பினராக ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும்" வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளனர். (the Honorary Doctoral Degrees...will be conferred upon the candidate,...after the candidates give a certain minimum contribution, towards the Honorary Doctoral Degree and a one-time contribution of the Life-Time Membership )
இங்கே காண்க: http://www.iicmweb.org/hon.htm

ஆக, பணத்திற்கு 'டாக்டர்' பட்டம் அளிக்கப்படலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழக பட்டம் அல்ல.

"அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ..சி.எம் பல்கலைக்கழகம் வழங்கும் டாக்டர் பட்டம்" என்று 3.12.2010 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்திருந்தனர். ஆனால், இதுவும் கூட உண்மை அல்ல.

அமெரிக்காவில்  ..சி.எம் என்பது பல்கலைக் கழகமாகவோ, கல்வி அமைப்பாகவோ பதிவுசெய்யப்படவும் இல்லை, இயங்கவும் இல்லைசென்னை நகரில்தான் அது ஒரு 'கல்வி அறக்கட்டளை' (Educational Trust) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது

கூடவே, டாக்டர் பட்டம் பெற வேண்டுமானால், அதற்கு  செலுத்த வேண்டிய ரூ. 1000 வாழ்நாள் உறுப்பினர் கட்டணத்தையே - ..சி.எம் கல்வி அறக்கட்டளை, 240 ரூபி டவர், வேளச்சேரி முதன்மைச் சாலை, சேலையூர், சென்னை - 73 எனும் முகவரிக்குதான் அனுப்பக் கூறியுள்ளனர்.

ஆக, இந்திய கல்வி அறக்கட்டளை ஒன்றிடம் பட்டம் "வாங்கி" - அதனை 'அமெரிக்க பல்கலைக்கழகத்திடம் வாங்கியதாக' பெருமை பேசுவது வியப்பாக இருக்கிறது!

திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் புகழாரம்:

தமிழ்நாட்டின் உயர்ந்த பதவிகளை அலங்கரித்த பண்ருட்டி திரு. ராமச்சந்திரன் அவர்களின் கருத்து இதோ

"அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்து அதற்குப் பிறகு டாக்டர் பட்டம் பெற்றவர்கள் நம்மிடையே உண்டு. ஆனால், எதிர்க்கட்சியாக இயங்குகிற பொழுதே, மனிதநேயப் பணிக்காக டாக்டர் பட்டம் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். அதுவும் கடல் கடந்த நாடான அமெரிக்காவில் இருந்து புளோரிடா மாகாணத்தைச் சேர்ந் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் என்ற அமைப்பினர் நமது இதய தெய்வம் புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்களின் மனிதநேய தொண்டினை உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது அவருக்கு மட்டுமல்ல நமது இயக்கத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே பெருமை"

தமிழ்நாட்டிற்கே பெருமையாம் - இது எப்படி இருக்கு!!!

செவ்வாய், டிசம்பர் 07, 2010

விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

"விஜயகாந்த் இனி 'புரட்சிக்கலைஞர் டாக்டர் விஜயகாந்த்'.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிள்ளது." - இது பத்திரிகை செய்தி.

நடிகர் - அரசியல்வாதியான திரு. விஜயகாந்த் அவர்கள் டாக்டர் பட்டம் வாங்குவதில் குறைசொல்ல எதுவும் இல்லை. அது வரவேற்க வேண்டியதுதான்.

அதேசமயம், நாட்டின் புகழ்பெற்ற முன்னணி பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது நாம் அறிந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பலரும் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூட டாக்டர் பட்டம் தருகின்றன. கமலஹாசன், நடிகர் விஜய் போன்றோர் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவ்வாறெல்லாம் இல்லாமல் - அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகத்தில் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அது என்ன - ஐ.ஐ.சி.எம்?

பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனம் (International Institute of Church Management Inc.) என்பதுதான்"ஐ.ஐ.சி.எம்" ஆகும். இது இணையத்தின் மூலம் கிறித்துவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பு. நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் அது. அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல.

அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அதிலும் அந்த அமைப்பு "டாக்டர் பட்டம்" அளிக்க வைத்திருக்கும் நிபந்தனைகளை பார்த்தால் - திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றது விந்தையாக இருக்கிறது.

கிறித்தவ மதம் தொடர்பான "Biblical Studies, Church Management, Christian Leadership, Ministry" ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது "பயோ - டேட்டாவை" அனுப்பினால் "டாக்டர் பட்டம்" கிடைக்குமாம். ஆக, பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் திரு. விஜயகாந்த் எப்போது நிபுணத்துவம் பெற்றார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படிதான் முன்பு ஐ.நா. அவையின் பேரைச்சொல்லி - இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு "தங்கத்தாரகை விருது" கொடுத்தது. இப்போது - ஒரு மதப் பிரச்சார அமைப்பு பல்கலைக்கழகத்தின் பெயரால் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" அளிக்கிறது.

இப்படி செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை காண்க.

http://www.iicmweb.org/

ஐ.ஐ.சி.எம் நிறுவனத்தின் நோக்கங்கள் இதோ:

OBJECTIVES OF IICM

To provide Continuing Education for Pastors, Evangelists, Bible Teachers and Christian Leaders;

To Equip Professionals, Businessmen/Women & Lay Leaders for Ministry.

To Teach the Word of God, topically in a Simple and Practical Way to make it Easy to Understand and Apply it, both in their Lives and Ministries

To help understand the importance of using Management Skills and Modern Technologies of Communication to Maximize Results in the Ministry

To impart Revelation Knowledge of the Word of God and the Anointing of the Holy Spirit

To facilitate Spiritual, Leadership and Church Growth and Development

To help being Effective and Successful in Life and Ministry in terms of achieving Goals and realizing Full Potential

To help Discover and Fulfill God's Will & Purpose!