Pages

திங்கள், ஜூன் 19, 2017

ஜனாதிபதி ஆகிறார் சாதிச் சங்கத் தலைவர்

"சாதியே இல்லை" என்றும், "சாதியே பேசாதீர்" என்றும் தொடர்ச்சியாக பலரும் வகுப்பெடுக்கின்றனர். ஆனால், இப்போது ஒரு சாதி சங்கத் தலைவர் இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்த விவாதங்களில் கூட - அவரது சாதிதான் அவரது முதன்மை தகுதியாக பேசப்படுகிறது.

ஆளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தலித்துகளில் ஒரு தனி சாதியாக அடையாளம் காணப்படும் 'கோலி' சாதிச் சங்கத்தின் தலைவரும் கூட. அவர் அகில இந்திய கோலி சமாஜம் (All-India Koli Samaj) எனும் சாதிச் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

இப்போது இந்தியா முழுவதும் இடம்பெறும் தலைப்பு செய்தியே: தலித் ஒருவர் ஜனாதிபதி ஆகிறார் என்பதுதான். சாதியே இல்லை என்று இரட்டை வேடம் போடும் இந்திய மக்கள், இப்போது சாதிக்காகவே ஒருவர் ஜனாதிபதி ஆவதை கொண்டாடுகின்றனர்.

கருத்துகள் இல்லை: