Pages

செவ்வாய், டிசம்பர் 27, 2016

அதிர்ச்சி செய்தி: சசிகலாவிடம் வசமாக சிக்கினார் நரேந்திர மோடி!

சசிகலா தரப்புக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சேகர் ரெட்டியை கைது செய்து, அப்படியே ஊழல் விஞ்ஞானி ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தியது மத்திய அரசு. அதுவரை நடந்தவை எல்லாம் சரிதான். ஆனால், அதன் பிறகு நடந்தவை பாஜக அரசின் சுயநல சொதப்பல் மட்டுமே. 

ராமமோகன ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், பணம், ஆவணங்கள் குறித்து வருமானவரித்துறை அறிவிக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தால் அதன் தொடர் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன் பிறகு சமாதானமாக போக முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்யவில்லை மத்திய அரசு.

மேலும், ராமமோகன ராவுடன் சேர்ந்து கொள்ளையடித்த அரசியல் மேலிடங்கள் மீதும் கை வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, 'ஹைதராபாத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். துணை ராணுவம் வந்துள்ளது. அவர்கள் அங்கே சோதனை செய்யப்போகிறார்கள், இங்கே சோதனை செய்யப்போகிறார்கள்' என புலிவருகிறது கதையாக பூச்சாண்டி காட்டினர்.

அரசியல் லாபமே மோடியின் நோக்கம்

மோடி அரசின் பூச்சாண்டிக்கான காரணம் மிகத்தெளிவானது. அவர்களுக்கு அதிமுக ஒரு பொன்முட்டையிடும் வாத்து. அதன் கழுத்தை எதற்காகவும் அறுக்க மாட்டார்கள். அதிமுகவின் 13 ராஜ்ய சபா உறுப்பினர்களின் ஆதரவு மோடி அரசுக்கு தேவை. அப்படியே, தமிழ்நாடு அரசையும் தமது விருப்பம் போல நடத்த பாஜக விரும்பியிருக்கலாம்.

சசிகலா தரப்பை மிரட்டியே காரியம் சாதிக்கலாம் என்கிற பாஜக நினைப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் ராமமோகன ராவ். இனிமேல் சசிகலா தரப்புக்கு எதிராக ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் - அது பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை அறுத்த கதை ஆகிவிடும்.

தப்பி ஓடும் பாஜக

முள் மேல் விழுந்த சேலையின் நிலையில் இருக்கிறார் மோடி. இனி, சேலை கிழியாமல் தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக அரசு.

ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி, சசிகலாவிடமிருந்து தப்பி ஓடுவதை விட்டால், மோடி அரசுக்கு வேறு வழியே இல்லை!

கருத்துகள் இல்லை: