Pages

சனி, டிசம்பர் 31, 2016

தி இந்து கும்பலின் சாதிவெறி: மருத்துவர் அன்புமணிக்கு சாதிப்பட்டம்!

'தி இந்து' வெளிவராத புத்தகங்கள்- 2016 என்ற தலைப்பில் தமிழகத்தின் தலைவர்களை விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் இதர தலைவர்களை பொதுவாக விமர்சனம் செய்துள்ள அப்பத்திரிகை, பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்களை மட்டும் சாதி பொருள் படும்படி "பள்ளி" என்று விமர்சனம் செய்துள்ளது.  

ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் மட்டம் தட்டி, தி இந்து தனது சாதி வெறி அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டும். ஊடகத்தில் இருக்கும்  பிராமண சாதியினர் தொடர்ந்து தமிழர் உரிமைக்காக பாடுபடும் தலைவர்களை குறிவைத்து தாக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும்.

பள்ளி என்பது வழக்கொழிந்துபோன சொல்.

பார்ப்பான் என்கிற பெயரை பிராமணர் பயன்படுத்த விரும்புவதில்லை. அதுபோல இன்னும் பல சமூகங்கள் அவரவர் சாதியின் 'கொச்சையானது என்று கருதப்படும் பெயர்சொற்களை' பயன்படுத்துவது இல்லை (அந்த நீண்ட பட்டியலை இங்கே குறிப்பிடும் தேவையும் இல்லை).

அதுபோல, ஒருகாலத்தில் பள்ளி என்கிற வார்த்தை மன்னர் பரம்பரை என்கிற பெயரில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் - விஜயநகர பேரரசின் ஊடுருவலுக்கு பின்பு, வன்னியர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், பள்ளி என்கிற வார்த்தை சாதாரண வழக்கத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை.

இதன் உச்சமாக, 1850 ஆண்டு வாக்கில், சாதிவாரி கணக்கெடுப்பில் பள்ளி என்கிற பெயரை கீழான சாதி என்கிற வரையறையின் கீழ் கொண்டுவர ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயன்றனர். இதனை எதிர்த்து, 1888 ஆம் ஆண்டு வன்னியகுல சத்திரிய மகா சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் முதன்மை நோக்கம், பள்ளி என்கிற பெயரை சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்தில் வெற்றியும் அடைந்தனர்.

பள்ளி என்று அழைப்பதை இன்றைக்கும் திட்டும் வார்த்தையாகவே வன்னியர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதனால், பெரும் சண்டைகளும், கொலைகளும் கூட நடந்துள்ளன.

இலக்கியங்களில் பள்ளி எனும் சொல்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1950 ஆம் ஆண்டில் எழுதிய 'சௌந்தர கோகிலம்' எனும் நாவலில் - பள்ளி என்பதும் பாப்பான் என்பதும் கொச்சையான சொல் - என்று பொருள்படும் பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது:
'ஒகோ! அப்படியா சங்கதி "கண்டால் காமாட்சி நாயக்கர், காணாவிட்டால் பள்ளிப்பயல்" என்றும், "கண்டால் சாமி சாமி, கானாவிட்டால் பாப்பான்" என்றும் சிலர் நடந்து கொள்வதுண்டு. அதுபோல இருக்கிறது காரியம். சொந்தக்காரர் இல்லா விட்டால், அவர்களுடைய பெயரை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுகிறது. அவர்கள் இருந்தால் அவர்களிடம் நிரம்பவும் மரியாதையாக நடந்து கொள்ளுகிறது. இந்த மாதிரி நியாயம் மூட ஜனங்களிடத்தில் இருக்கத் தகுந்ததென்றல்லவா நான் நினைத்தேன். நாகரீகம் கண்ணியம் முதலியவை வாய்ந்த நம்மைப் போன்றவர்களிடத்தில்கூட இந்த நியாயம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது'. 
- இவ்வாறு 'சௌந்தர கோகிலம்' நாவல் கூறுகிறது.

வன்னிய புராணம் வசன வடிவிலான காவியத்திலும் பள்ளி என்கிற சொல் கொச்சையான சொல்லாக கீழ்கண்டவாறு அடையாள படுத்தப்பட்டுள்ளது:
தேவேந்திரன் அங்குவந்து "பள்ளியாரே! பரமசிவன் வரத்தால் பிறந்த உங்களுக்கு இந்த அல்லல் வந்தது என்ன" என்று விளையாட்டாகக் கேட்டான்.

உடனே வன்னிய குமாரர்கள் கோபமுற்று, "எங்களைப் பள்ளி என்று சொல்லி நீர் பழிக்கலாகுமோ? உம் தேகத்தை இப்போதே வெட்டி வீழ்த்தி எமதூதர் கையிலே கொடுக்கிறோம் பாரும்!" என்று கூறி கண்களாலே நெருப்புப் பொறி பறக்க வீரமீசைகள் படபடக்க ஆத்திரத்துடன் வீரவாள்களை உருவினார்கள். 
- இவ்வாறு வன்னிய புராணம்' கூறுகிறது.

இந்துவை கண்டிக்க வேண்டும்.

சுமார் கடந்த இருநூறு ஆண்டுகளாக வன்னியர்களை பழிக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும் 'பள்ளி' என்கிற சொல்லைக்கொண்டு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை கேலி செய்துள்ளது தி இந்து.

பள்ளி என்பது ஒரு அரசபரம்பரை சொல்தான். ஆனால், அந்த சொல் அதே பொருளில் இப்போது பயன்பாட்டில் இல்லை. அதிலும் குறிப்பாக, சாதியை சொல்லி மருத்துவர் அன்புமணி அவர்களை திட்டவேண்டும் என்கிற இழிநோக்கில்தான் தி இந்து இதனை எழுதியுள்ளது. எனவே, இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: