Pages

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

காதல் நாடகத் திருமணக் கொடுமைக்கு எதிர்ப்பு: திரளும் தமிழ்நாட்டு சமூகங்கள்!

அனைத்து சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் 2.12.2012 அன்று சென்னை எழும்பூரில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தின் தீர்மானங்கள்

1. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பிடிகாதவர்களைப் பழிவாங்கவும், பொய் புகார் அளிக்கவும், கட்டப் பஞ்சாயத்துக்காகவும் முறைகேடாகப் பயனபடுத்துவதைத் தடுக்க அச்சட்டத்தை திருத்த வேண்டும்.

2. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்தக் கோரி 4.01.2013 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்து சமுகத்தினர் ங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

3. காவல்துறையினர் ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கை தடுத்து, அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. பதின் வயதில் நடைபெறும் காதல் நாடக திருமணங்களைத் தடுக்கும் வகையில், பிரேசில், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் போன்ற இடங்களில் உள்ளது போன்று 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றொரின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்கிற சட்டதைக் கொண்டுவர வேண்டும்
5. பெண்கள், மகளிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சிறப்பு நடவடிக்கைகள் வேண்டும்.

6. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தனித்தொகுதிகளை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்

7. கடந்த நான்காண்டுகளில் நடைபெற்ற காதல் நாடகத் திருமாணங்கள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணக் குழு அமைத்து உண்மை நிலையை வெளியிட வேண்டும்.

--ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பங்கேற்றோர்

இக்கூட்டத்தில் மருத்துவர் அய்யா, வன்னியர் சங்கத்தின் ஜெ. குரு, 

தேவர் அமைப்புகளின் பி.டி. அரசக்குமார், தி. அரப்பா, இ.ஜி. பாண்டியன், சைதை கணேசன், மாறன், பார்வர்ட் பிளாக் ஆ. சாமி அய்யா உள்ளிட்டோர்,

பாரிவேந்தரின் பார்கவ குல (உடையார்) சங்கத்தின் சார்பில் கோவைத் தம்பி,

கொங்கு வேளாளர்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஜி.கே. நாகராஜன், பெ. செந்தமிழன் உள்ளிட்டோர்,

இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் த.மு.மு.க'வின் குனங்குடி ஆர்.எம். அனீபா, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் எம். ஷபீக் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் அப்துல் சத்தார் உள்ளிட்டோர்,
நாடார் அமைப்புகளின் சார்பில் புழல் ஏ. தர்மராஜ், த. மோகன், இரா. சிவக்குமார் உள்ளிட்டோர்,

வேளாளர்கள், பிள்ளைமார், முதலியார் கூட்டமைப்பின் நடிகர் கே. ராஜன்,

மீனவர் அமைப்புகளின் எம்.இ. இராஜா, ஏ. சௌந்தர் உள்ளிட்டோர்,

மற்றும் யாதவர், நாயுடு, முத்தரையர், முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது. (இக்கூட்டத்திற்கு தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பினர் அழைக்கப்படவில்லை.)

தீர்மான நகல் இதோ:
PMK All Community Meet- Resolutions

28 கருத்துகள்:

சிவக்குமார் சொன்னது…

அருள், எனக்கு பல முரண்கள் இருந்தாலும் அவைகளைப்பற்றிக் கேட்க விருப்பமில்லை. இருப்பினும் சில

தலித் பகுதிகளில் செல்லும் பெண்கள் ஈவ் டீஸிங் செய்யப்படுகிறார்கள் என்பது என்ன வகை நியாயம் என்பது புரியவில்லை. தமிழகத்தில் எத்தனை ஊர்களில் பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் வழியில் தலித்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. அவர்கள் பெரும்பான்மையாக இருப்பது கிராமங்களில்தான். ஈவ் டீஸிங் எல்லா ஜாதி ஆண்களும் செய்கிறார்கள். அப்படியே தலித்கள் செய்தாலும் தலித் பெண்களையும் சேர்த்தேதானே செய்வார்கள்.

அந்த நாமக்கல் மாவட்ட புள்ளிவிபரத்திற்கு என்ன ஆதாரம் ? 955 நாடகத்திருமணங்களில் ஆண்கள் அனைவருமே தலித்களா ? இது போன்ற காதல் திருமணங்கள் ரகசியமாகவும், அவசரமாகவும் நடப்பதற்குக் காரணமே ஜாதி வெறியர்கள், பெற்றோர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்தும், உயிருக்கு ஆபத்து என்பதற்காகவும் ஒழிய பெற்றோரை ஏமாற்ற வேண்டும் என்பதில்லை. இப்படிக் காதல் திருமணம் செய்து கொண்ட இணையர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளதையும் எண்ணிப்பார்க்கவும். அவர்களைக் கொலை செய்தவர்கள் நீங்கள் பிரதிநிதியாகவுள்ள அனைத்து சமூகத் தலைவர்களின் கட்சிக்காரர்களாகவோ, கொள்கைகளை பின்பற்றுகிறவர்களாகவோ இருப்பர். காதல் திருமணத்தின் காரணமாக இச்சமூகப் பெண்கள் கௌரவக் கொலை செய்யப்படுகின்றனர். ஜாதியக்(சமூக்) கருத்துக்களே இது போன்ற போலியான கௌரவம் கற்பித்து கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் காரணமாகிறது. இது தலித் ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறது.

ஜாதிக்குள் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன காதல் திருமணங்களை விட இது அதிகம். அதே போல் சொத்துக்காகவும் திருமணங்கள், சீதனம், பேரங்கள், வெட்டுக் குத்துக்கள் வரை இத்திருமணங்களிலும் காணக்கிடக்கின்றன. இச்சமூகத்தைச்சார்ந்த ஆண்களால் பெண்கள் கைவிடப்படுவது, பெற்றோர் தற்கொலைகள் கூட நடக்கின்றன.

இதில் பங்கு கொண்ட கொங்கு வேளாளர்கள் பெண்களுக்கான சொத்துரிமையை எதிர்ப்பது ஏன் ?

இக்கட்சி மாநாடுகளில் சீதனம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்ற தீர்மானங்கள் ஏதுவும் போடப்பட்டனவா ?

சீதனம், சொத்துரிமை எதிர்ப்பு இவையெல்லாம் தலித் அல்லாத சமூகப் பெண்களுக்கு எதிரானதில்லையா ?

வன்கொடுமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் இவையெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மைதான். அதே நேரம் ஜாதி வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை செய்தவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

தற்போது நடந்த தர்மபுரி கலவரத்தில் கூட எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. கலவரத்தில் காயமடைந்த ஒரு இளம்பெண் இறந்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். இதிலேயே தெரிகிறது காவல்துறை, அரசு ஆகியோர் எந்த சமூகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று. இந்த தீர்மானம் தலித் வெறுப்பையே சொல்கிறது. பெண்களின் உரிமைகளுக்கும் எதிராக உள்ளது.

அ. வேல்முருகன் சொன்னது…

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பழங்குடியினர் என 252 சாதிகள், இதில் சேராத முன்னேறிய சாதிகள் எண்ணிக்கை தனி. அப்படியிருக்க ஒரு பத்து சாதிக்காரனை கூப்பிட்டு கூட்டம் போட்டா என்ன அர்த்தம். அதற்கு அனைத்து சாதி கூட்டம் பெயர். பிராமனாள் சங்கத்தையும் கூப்பிட்டிருக்கலாம். ஆமாம் உங்க கணக்கு தனி கணக்குதான்

அதென்ன கூடவே இருக்கும் தொல். திருமாவை காணவில்லை, அழைப்பு இல்லையா இல்லை அவருக்கு வர மனமில்லையா

21 வயது முடிய சான்றிதழ்படி 15 மாதங்கள் குறைந்தாலே குழந்தை என கணக்கிடும் கணக்கு எங்களுக்கு எப்போதும் புரிவதில்லை

இப்படி ஒரு திருமணத்திற்கு முன்நின்ற போது உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்தவன் என சபிக்கப்பட்டேன். அந்த பெண் உறுதியாக நின்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இன்று நன்றாகவே உள்ளனர்.

அப்படியே திருமணம் நடந்தால் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நாமே, அப்படிப்பட்ட திருமணங்கள் நடக்க கூடாது என்பதற்கு ஒரு கூட்டம்

சேலம் அருகில் ஒரு பெரியவரை சந்தித்தேன், பேச்சு வாக்கில் அவரின் பக்கத்து ஊரை சேர்ந்த இன்னாரை தெரியுமா என்று கேட்டபோது, அவர்கள் கொங்கு வேளாள.......... நான் வன்னிய..............

நீங்கள் முதலில் இந்த வேற்றுமையை களையுங்கள், தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள்.

பிறகு குழந்தை கணக்கை சரிசெய்வோம்

paadam சொன்னது…

தமிழக சாதிக்கட்சித் தலைவர்களின் உச்சக்கட்ட ஆணாதிக்க பிற்போக்குப் பித்தலாட்டங்கள், பார்க்கும்போதும் படிக்கும் போதும் அடிவயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வாந்தி வருகிறது. மருத்துவர் ராமதாஸ், அவரது கட்சி பாமக மேல் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதை, பாராட்டு அடியோடு ஒழிந்தது. பித்தலாட்டத்தின், முற்போக்கு முகமுடி போட்ட பிற்போக்குத்தனமே, உன் பெயர்தான் பாமக.

உங்களைவிட அமரர் பால்தாக்கரே எவ்வளவோ புனிதமானவர்.

ஆணாதிக்கத்தின் விஸ்வருபங்களே, தமிழகத்தின் தலிபன்களே, நச்சுவிதை விருட்சங்களே, சமுகத்தில் வளர்ந்துள்ள பார்த்தீனியச் செடிகளே, எதிர்காலத்தைத் திணறடிக்கும் போபால் விஷ வாயுக்களே, செர்நோபைல், புகிசிமாவை விட ஆபத்தானவர்களே, உங்களின் மறு உருவம்தான் தமிழக சாதிக்கட்சிகளா? உங்களது அணுகுமுறையைவிட கூடங்குளம் அணுஉலை நூறு மடங்கு பாதுகாப்பானது.

-அ .நாராயணன் (9840393581)
ஆசிரியர், பாடம் மாத இதழ்

Robin சொன்னது…

முற்பட்ட பிற்பட்ட சாதிகள் அனைத்தும் ஒன்று கூடிவிட்டதால் பிற்படுத்தப்படவர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு அந்த சலுகையை கலப்புத் திருமணம் செய்வோருக்கு கொடுத்துவிடவேண்டும். அப்படியாவது சாதி ஒழிகிறதா என்று பார்ப்போம்.

குலசேகரன் சொன்னது…

தமிழ்நாட்டில் கலப்பு மணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜாதி பார்ப்பனர்களே. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றாவது இருக்கும். பெற்றோர்களால் தங்கள் பெண்ணையோ அல்லது அவனையோ அவன் வீட்டாரையோ மிரட்ட முடியவில்லை. தமிழ்நாடு பிராமணர் சங்கம் எவ்வளவுதான் முயன்று வரண் தேடும்படலம் நடத்தினால் இந்த கலப்பு மணத்தொல்லை போனபாடில்லை. இனமே அழியும் அபாயத்திலிருக்கிறது. மேலும் தலித்துகளுக்கு முதலில், பின்னர் பிசிகள்க்கு என்று இடஒதுக்கீட்டால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்ப்னர்களே.

இப்படி பாதிக்கப்பட்டவர்களைச் சேர்க்காமல் முசுலீம்களை மட்டும் சேர்க்கக்காரணமென்ன? அவர்கள் பெண்கள் கலப்புமணம் என்றால் அவர்களைப்பொருத்தவரை மதக்கலப்பு தானே?அவர்களிடம் ஜாதிக்கலப்பு எப்படி சாத்தியாமாகும்? நீங்கள் எந்த கலப்புக்கு எதிரி? கிருத்துவ வன்னியரும் இந்து வன்னியரும் மணம் செய்தால் தடுப்பீர்களா? இல்லையென்றால் ஏன் முசுலீகளுக்கு அழைப்பு?

தலித்துகளால் பாதிக்கப்பட்ட, க‌லப்பு மணங்களால், இனமே அழியும் அபாயத்திலுள்ள தமிழ்நாடு பிராமணர் சங்கத்தைக் கூட்டத்துக்கு அழைக்காத காரணமென்ன?

குலசேகரன் சொன்னது…

தலித்து வன்னியரை மணம் செய்தால் மட்டுமே எதிர்க்கிறீர்களா?

இல்லை வன்னியப்பெண்களை பிராமணப்பையன், முதலிப்பையன், செட்டிப்பையன், பிள்ளைப்பையன், இப்படி உயர்ஜாதிப்பையன்கள் மணம் செய்தாலும் எதிர்க்கிறீர்களா?

இதை முதலில் விளக்கிவிடுங்கள்.

குலசேகரன் சொன்னது…

//பதின் வயதில் நடைபெறும் காதல் நாடக திருமணங்களைத் தடுக்கும் வகையில், பிரேசில், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் போன்ற இடங்களில் உள்ளது போன்று 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றொரின் ஒப்புதல் கட்டாயம் தேவை என்கிற சட்டதைக் கொண்டுவர வேண்டும்//

இதில் ஒரு குழப்பம் இருக்கிறது. பதின் வயதென்றால் டீன் ஏஜ். அம்மணங்கள் தடுக்கப்படுகின்றன. அதே இங்கும் உள்ளதே? எவராவது 12 வயதுப்பெண்ணை மணமுடிக்கச் சட்டப்படி முடியாது. ஏற்கனவே சட்டம் இருக்க என்ன புதிய சட்டம் பிற்நாடுகளைப்பார்த்து என்கிறீர்கள்?

அடுத்து 21 வயதுக்கு முன்பு என்றால் 20 வயதைச் சொல்கிறீர்களா? 20 வயதுப்பெண் கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவள். வேலைக்குச் செல்பவர்களும் இருப்பர். இவர்களை தங்கள் விருப்பப்படி மணம் செய்ய விரும்புவதைச் சட்டம்போட்டுத்தடுக்க வேண்டுமென்கிறீர்கள். சர்வாதிகார நாட்டிலும் மனித உரிமைகள் தடுக்கப்பட்ட நாடுகளிலுமே சாத்தியம். ராமதாஸ், காடுவெட்டி குரு சட்டம் போட்டு வன்னியப்பெண்களை மட்டும் தடுத்துக்கொள்ளட்டும் தாலிபான் செய்யவில்லையா அதைப்போல!

ஏன் எல்லாப்பெண்களின் சார்பாக ஒரு நாலுபேர் பேசுகிறார்கள்? சட்டம் போட்டுத்தடுப்பதென்றால், 7 கோடி தமிழ்மக்களையும் தடுக்கவே. இல்லையா? அதைச்செய்ய நீங்கள் யார்? எந்தெந்த ஜாதியினர் தம் பெண்களைத் தடுக்க நினைக்கிறார்களோ அவர்கள் தங்கள் ஜாதியமைப்பின் மூலமாக தடுக்க சட்டம்போட்டு தம் ஜாதிப்பெண்களை மிரட்டும். ஒட்டு மொத்த தமிழர்களுக்காக அவர்கள் பேசமுடியாது.

குழப்பத்தைப் போக்குவீர்கள் என நம்புகிறேன்.

நம்பள்கி சொன்னது…

[[தமிழ்நாட்டில் கலப்பு மணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜாதி பார்ப்பனர்களே. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றாவது இருக்கும். பெற்றோர்களால் தங்கள் பெண்ணையோ அல்லது அவனையோ அவன் வீட்டாரையோ மிரட்ட முடியவில்லை.]]

பெற்றோர்களால் தங்கள் பெண்ணை கௌரவக் கொலை செய்யல்லாம். வெட்டிக் கொல்ல மனது இல்லாவிடில பாலில் விஷம் கலந்து கொள்ளலாமே? யார் அவர்களைத் தடுக்கிறது.

உண்மையான காரணம்: இந்த விஷயத்தில், Most of the Brahmins are civilized with a few exceptions.

Unknown சொன்னது…

தோழர்களே, இது தலித் அல்லாத தலித்துக்களால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் முதல்கட்ட கூட்டம் என்று எண்ணுகிறேன். இனிவரும் கூட்டங்களில், தலித் அல்லாத அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இதில் கலந்துக்கொண்ட அனைத்து சமுதாய மக்களும், தனித் தன்மை உள்ளாவர்கள். எனவே கலப்பு திருமணம் என்பது எல்லா சாதிக்கும் பொருந்தும். தலித் அல்லாத சாதிகள் அனைத்தும் ஒன்றினைந்து, ஒற்றுமையோடு செயல்படுவோம்.

நாம் தலித்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதேப்போல் "நட்பு / தோழமை என்பது வேறு ! உறவு என்பது வேறு என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அழகாபுரம்.இரா.தங்கதுரை.

தமிழ் உணர்வுள்ளவன். சொன்னது…

This news published in Dinamani news paper also.

See
http://dinamani.com/latest_news/article1363954.ece

விஜய் சொன்னது…

@ Thangadurai Alagapuram Raja

//"நட்பு / தோழமை என்பது வேறு ! உறவு என்பது வேறு என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.//

ஐயா என்ன சொல்ல வர்ரிங்க?

PRINCENRSAMA சொன்னது…

பசுமையாய் இருந்த உங்கள் பக்கங்கள் அனைத்தும் கருகிப் போனதாகத் தோன்றுகிறது. வருத்தப்படுகிறேன் அருள்!

புரட்சி தமிழன் சொன்னது…

//Robin சொன்னது…

முற்பட்ட பிற்பட்ட சாதிகள் அனைத்தும் ஒன்று கூடிவிட்டதால் பிற்படுத்தப்படவர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு அந்த சலுகையை கலப்புத் திருமணம் செய்வோருக்கு கொடுத்துவிடவேண்டும். அப்படியாவது சாதி ஒழிகிறதா என்று பார்ப்போம்.
10:28 pm, டிசம்பர் 02, 2012 //

கலப்பு திருமணம் அல்லது ஜாதி ஒழிப்பு திருமணம் செய்து இந்த நபர் எந்த சாதியையும் சார்ந்தவர் அல்ல, சாதி என்ற இடத்தில் (இல்லை) என்று ஒரு சான்றிதழ் வாங்கியவரை காட்ட முடியுமா? இந்திய அரசியல் அமைப்பில் சாதி மற்றும் மதம் இல்லாத ஒரு மனிதன் வாழ வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்து தமிழ் நாட்டுல சாதிய ஒழிக்கலாம்.

புரட்சி தமிழன் சொன்னது…

//பிளாகர் விஜய் கூறியது...

@ Thangadurai Alagapuram Raja

//"நட்பு / தோழமை என்பது வேறு ! உறவு என்பது வேறு என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.//

ஐயா என்ன சொல்ல வர்ரிங்க?

2:04 pm, டிசம்பர் 03, 2012//

சாப்பாட்டு மேசை வரை வர்ரது நட்பு சாயந்தரம் படுக்கை அறைக்கு வர்ரது உறவு, அடுத்தவன் வீட்டு படுக்கை அறைக்கு சென்றால் அது தகாத உறவு . இப்ப தெறிஞ்சுதா என்ன சொல்ல வார்ராங்கனு.

புரட்சி தமிழன் சொன்னது…

பெரியார் என்ன சொன்னார் இளைஞர்களே வாருங்கள் மேல் சாதி பெண்களை லவ் பண்ணுங்க அப்பதான் நீங்க எல்லாம் முன்னேறுவீர்கள்னு சொன்னாரா?

அட டா என் சட்டையெல்லாம் ஒரே ஊழல் கரை இதை மறைக்க கருப்பு சட்டைதான் நல்லா இருக்கும் என்று எடுத்து போட்டுக்கொண்டு அங்கே மஞ்சல் சட்டை பளிச்சினு தெறியுது அதை எப்படியாவது கறையாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு புறபட்டு இருக்கிறார் தி மு க .

மணிமகன் சொன்னது…

கட்டுரையாளர் அருள் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை
தருமபுரியைத் தகிக்கும் பிரதிவோமம்!
http://www.viduthalai.in/page3/49791.html

குலசேகரன் சொன்னது…

புரட்சித்தமிழன் எனக்குப் பதில் சொல்லுங்க.

ஏன் தமிழ் பிராமணர்கள் சங்கத்தை ஒதுக்கினீர்கள்? அவர்களும் தலித்துகளோடு தங்கள் பெண்கள் கலப்பு செய்வதை எதிர்க்கிறவர்கள். ஆனால் தலித்துகள் வீடுகளை எரிக்கத் தைரியமில்லாதவர்கள். உங்ககூடச் சேர்த்து கொண்டால் தைரியம் வருமல்லவா?

அடுத்து ஒரு கேள்வி கேட்டேன். ஒரு பார்ப்பனப்பையன் வன்னியப்பெண்ணை இழுத்துக்கொண்டு அக்ரஹாரத்தில் வைத்துத் தாலிகட்டிவிட்டான். அக்ரஹாரத்தை ஒரேயடியாகக் கொழுத்தி, தங்கம், அவர்கள் பள்ளி, கல்லூரிச்சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு ஓடுவீர்களா?

இதற்கு முன் வன்னியப்பெண்கள் தலித்தல்லா இளைஞர்கள் கலப்புமணம் செய்யவேயில்லையா? அந்தச்சாதி வீடுகளையெல்லாம் ஏன் கொளுத்தவில்லை ? அப்படிக்கொளுத்தினால்தானே புரட்சி?

ராவணன் சொன்னது…

அருள் சாமி...ஒரு பிஞ்சுப் பாலகனை...ஒரு சிறு குழந்தையைக் கடத்திச் சென்று திருமணம் செய்த அந்த பெண்ணிற்கு என்ன தண்டனை?
அப்படி செய்யத்தூண்டிய அந்தப் பெண்ணின் சாதிக்கு என்ன தண்டனை?

அருள் சாமி இந்தப் பின்னூட்டம் இங்கே வராவிட்டாலும் பல இடங்களில் பதிந்துள்ளேன்.

Robin சொன்னது…

//கலப்பு திருமணம் அல்லது ஜாதி ஒழிப்பு திருமணம் செய்து இந்த நபர் எந்த சாதியையும் சார்ந்தவர் அல்ல, சாதி என்ற இடத்தில் (இல்லை) என்று ஒரு சான்றிதழ் வாங்கியவரை காட்ட முடியுமா?// கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு சாதி என்ற இடத்தில் "கலப்புத் திருமணம் செய்தவர்" அல்லது "சாதி மறுப்பாளர்" என்று குறிப்பிட்டு அரசாங்கம் இட ஒதுக்கீடு கொடுக்குமானால் கண்டிப்பாக கலப்புத் திருமணம் செய்தவர்கள் ஒத்துழைப்பார்கள். மேலும் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு கலப்புத் திருமணம் நிலையும் படிப்படியாக ஏற்படும்.

//இந்திய அரசியல் அமைப்பில் சாதி மற்றும் மதம் இல்லாத ஒரு மனிதன் வாழ வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்து தமிழ் நாட்டுல சாதிய ஒழிக்கலாம்.// இந்திய அரசியல் அமைப்பில் சாதி மற்றும் மதம் இல்லாத ஒரு மனிதன் வாழ வழி செய்யுமாறு உங்கள் மருத்துவர் ஐயாவை குரல் கொடுக்க சொல்லலாமே.

புரட்சி தமிழன் சொன்னது…

//
அருள் சாமி...ஒரு பிஞ்சுப் பாலகனை...ஒரு சிறு குழந்தையைக் கடத்திச் சென்று திருமணம் செய்த அந்த பெண்ணிற்கு என்ன தண்டனை?
அப்படி செய்யத்தூண்டிய அந்தப் பெண்ணின் சாதிக்கு என்ன தண்டனை?//
பிஞ்சு பாலகனை கடத்தி சென்ற பெண்மீது புகார் பதிவு செய்து நீதி மன்றத்திற்கு அனுப்பி யிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காதே அதை ஏன் உங்கள் தரப்பு செய்யவில்லை. அப்படி செய்து அந்த பெண்ணிற்க்கு தன்டனை அளித்திருந்தால் யாரும் அதற்காக போராட மாட்டார்கள். அந்த ஊரில் உள்ள காவல்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்ததே இதற்கு காரணம். எங்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்குதான் வன்முறை தோன்றுகிறது.

புரட்சி தமிழன் சொன்னது…

// பிளாகர் Robin கூறியது...

//கலப்பு திருமணம் அல்லது ஜாதி ஒழிப்பு திருமணம் செய்து இந்த நபர் எந்த சாதியையும் சார்ந்தவர் அல்ல, சாதி என்ற இடத்தில் (இல்லை) என்று ஒரு சான்றிதழ் வாங்கியவரை காட்ட முடியுமா?// கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு சாதி என்ற இடத்தில் "கலப்புத் திருமணம் செய்தவர்" அல்லது "சாதி மறுப்பாளர்" என்று குறிப்பிட்டு அரசாங்கம் இட ஒதுக்கீடு கொடுக்குமானால் கண்டிப்பாக கலப்புத் திருமணம் செய்தவர்கள் ஒத்துழைப்பார்கள். மேலும் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு கலப்புத் திருமணம் நிலையும் படிப்படியாக ஏற்படும்.

//இந்திய அரசியல் அமைப்பில் சாதி மற்றும் மதம் இல்லாத ஒரு மனிதன் வாழ வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்து தமிழ் நாட்டுல சாதிய ஒழிக்கலாம்.// இந்திய அரசியல் அமைப்பில் சாதி மற்றும் மதம் இல்லாத ஒரு மனிதன் வாழ வழி செய்யுமாறு உங்கள் மருத்துவர் ஐயாவை குரல் கொடுக்க சொல்லலாமே.//
முதலில் அதற்கென்றே உள்ள திராவிடர் கழகத்தை தில்லி சென்று குறல் கொடுக்கச்சொல்லும் இங்கே மக்களை ஏமாற்றித் திரியவேண்டாம். தருமபுரியில் போராட்டம் செய்வதை விடுத்து பிரதமரை சந்திது பேசச்சொல்லுங்கள். தி மு க எம் பி களை இதற்கான தீர்மாணங்களை எடுத்துபோகச்சொல்லுஙள்.

Unknown சொன்னது…

கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சாதி பிரதிநிதிகளே !
நீங்கள் எதிர்ப்பது
1. தலித்துடன் கலப்பு திருமணத்தையா (இல்ல ) கலந்து கொண்ட ுங்களுக்குள்ளும் ஏற்கனவே நடந்துள்ள கலப்பு திருமணத்தையா

2. உங்க குடும்பத்துல ஆணுக்கு பெண் எடுக்கும் போது நம்ம சாதி பொண்ணுணு வரதட்சனை வாங்காமவா கல்யாணம் செய்ரிங்க


அப்படி நடந்திருந்தா ஏன் உங்க பொண்ணுக காதலுணு அடுத்த ாணை தேடுராங்க

பொண்ணு கொடுக்கும்போது இவன் நம்ம சாதிக்காரன் படிக்காட்டியும் பணம் வேலைவெட்டி இல்லாட்டியும் பராவாய்யில்ல கொடுக்கலாமுனு பொண்ணா கொடுக்கிற

அத்த புள்ள மாமன் புள்ளையா இருந்தாலும் அந்தஷ்த்து பார்த்துதானே கொடுக்கிறிங்க

ுங்கள பார்த்து உங்க பொண்ணுக என்ன ஐ லவ் யூ சொன்ன உடனே ஆம்பளங்க பின்னாடி வந்திடுராங்களா என்ன

ெந்த சாதி பொண்ணா இருந்தாலும் கட்டிக்கிற போரவன் தன்னை நல்லா வச்சு வாழ்வாணா அவனிடம் வேல வருமாணம் இருக்கா என்று பார்க்கிறாங்க இன்னும் சொல்லப்போணா அவன் சரியான ாம்பளயா இருப்பான ென்று பார்த்துதான் முடிவுசெய்ராங்க

கலப்பு காதல் திருமணம் செய்தவர்களை விட நீங்க பார்த்து திருமணம் செய்து வைத்த குடும்பங்கள்தான் வரதட்சணை கொடுமை கொலை இறப்பஉ மிக அதிகமாக ிருப்பதை உங்களால் மருக்கமுடியுமா?

சாதி என்கிற பேர்ல ெற்கனவே அம்மக்கள ேமாற்றி தனது குடும்பத்தை மட்டும் வளர்த்து இப்போ தண்டனை மற்றும் அரசியல் வாழ்க்கை அஷ்தமாகிவிட கூடாது என்பதற்க்காக மீண்டும் அம்மக்களிடம் நேரடியாக செல்ல முஉடியாம

தலித் எதிர்ப்பு என்ற பெயரில நுழைந்து அதுவும் தான்மட்டும் சொன்னா எடுபடாதுனு பல சாதிக்காரங்கள சேர்த்து தன்னுடைய சுயநல வாழ்க்கைக்காகா உங்களை பலி கொடுக்கத்தான் இந்த வேலையல்லாம்



குலசேகரன் சொன்னது…

தி க போய் குரல் கொடுக்கிறார்களா இல்லையா என்பதை ஒரு தி ககாரனிடம் கேட்பார்கள். அவன் அதற்கு பதில் சொல்லட்டும்

உங்களிடம் உங்கள் தலைவர் குரல் கொடுப்பாரா என்றுதான் கேட்பார்கள்.

கொடுப்பார இல்லையா என்று சொல்லுங்கள் புரட்சித்தமிழன்?

என் கேள்விகளுக்கு இன்னும் பதிலைக்காணேமே!

புரட்சி தமிழன் சொன்னது…

//ுங்கள பார்த்து உங்க பொண்ணுக என்ன ஐ லவ் யூ சொன்ன உடனே ஆம்பளங்க பின்னாடி வந்திடுராங்களா என்ன

ெந்த சாதி பொண்ணா இருந்தாலும் கட்டிக்கிற போரவன் தன்னை நல்லா வச்சு வாழ்வாணா அவனிடம் வேல வருமாணம் இருக்கா என்று பார்க்கிறாங்க இன்னும் சொல்லப்போணா அவன் சரியான ாம்பளயா இருப்பான ென்று பார்த்துதான் முடிவுசெய்ராங்க //
வயதில் அனுபவம் மிக்கவர்களையே ஈமு , நிதி நிறுவனம், தேக்குமரதிட்டமுனு ஏமாறும்போது 20 வயது பெண்களை விடலை பருவத்தில் தடுமாற்றமான நிலையில் இருக்கும் பெண்களை ஏமாற்றுவதா கடினம் , கேவலம் சினிமாவில் ரவுடிகளையும் பொருக்கிகளையும் ஆம்பளையாக காட்டுவதால் வரும் விளைவு. ரோடு ரோடாக திரிந்து பெண்களைத்தேடினால் அது காதல் அல்ல காமவெறி. கலப்பு திருமண காதல்கணவன்களால் கைவிடப்பட்ட பெண்கள் பெற்றோர் வீட்டிற்கும் போகமுடியாமல் ஆதரவின்றி விபச்சாரிகளாக அலைகிறவர்களையும் தற்கொலை செய்து கொண்டவர்களையும் யாருக்கும் தெறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

புரட்சி தமிழன் சொன்னது…

உங்களுக்கு பசியெடுத்தா நீங்கதான் போய் சாப்பிடனும், எனக்கு சாப்பிட கூட கஷ்ட்டமா இருக்கு யாராவது சாப்பிட்டு செறித்து கொடுங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது உங்கள் கேள்வி

குலசேகரன் சொன்னது…

புரட்சித்தமிழன்!

பிரச்சினையே வீட்டு வளர்ப்பில்தான் வருகிறது. பெண்ணை எப்படி வளர்க்கவேண்டுமென இருக்கிறது. அதன்படி ஒழுக்கமாக வளர்க்கப்படும் பெண்களும், தன்னை தன் பெற்றோர் நல்லபடியாக மணமுடித்துவைப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்குமிடத்தில் பெண்கள் கண்டவனிடம்போய் சோரம் போகமாட்டார்கள். உங்கள் பெண்கள் எளிதில் தலித்துப்பசங்களோடு ஓடிவிடுகிறார்களென்றால் உங்கள் குடும்பக்கலாச்சாரத்தில்தான் குறைபாடு.

புரட்சி தமிழன் சொன்னது…

திருவாளர் குலசேகரன் நீங்கள் என்னை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருப்பாளியாகவோ அல்லது அதன் ஆதரவாலனகவோ பேசுபவனாக நினைத்து எதிர்வினையாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன். என் எதிரே ஒரு கேள்வி கேட்க்கப்பட்டால் அதற்க்கான சரியான பதில் எனக்குத்தெரிந்திருந்தால் நான் பதிலலிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து வேறொருவர் பதிவில் இட்ட என் கருத்துக்களுக்கு வேறொருவரின் பதிவில் என் பதிலை எதிர் பார்ப்பதை நான் அ நாகரீகமாக கருதுகிறேன். தொடர்ந்து நாம் இருவருவரும் என்றோ வெளியான ஒரு பதிவில் கருத்துப்போரிட்டால் தேடித் தேடி சன்டையிடும் தெரு நாய்களின்கூச்சல்போல் ஆகிவிடும்.

G.T.Arasu சொன்னது…

ஆயிரம் ஆண்டுகட்கு மேலாக தமிழினத்தை கூறுபோட்டு முள்வேலிகள் இல்லாமல் நடந்த அடக்கமுறைக்கு பெரிய வியாக்கியானம்.ஆரியமாயையோ திராவிட மாயையோ இந்த சாதி அடக்குமுறைக்கு முடிவு கட்டவேண்டும்.விடுதலை,குடியரசுக்கு ஒரு பொருள் வேண்டும்.இருக்கும் இடமும் ,கடைசியாக கொண்டு சென்று கொளுத்தும் இடங்கள் பிறப்பிலேயே நிர்னயிக்கப்பட்டால்==எல்லாவற்றிற்கும் முதலாக இந்த நாட்டின் கிராமங்களில் சாதிகளின் வேர்களை அறுத்து எறிய வேண்டும்.இதை ஏற்காமல் தமிழ்த்தேசியத்தை எப்படி கூசாமல் பேசுகிறார்கள். அன்னிய ஆதிக்கத்தை முறியடிக்க என்ன தெம்பு எஞ்சப்போகிறது.
மருத்துவர் ஐயா,பாரிவேந்தர், கொங்கு தங்கங்கள் நீங்கள் மட்டுமே தமிழினமாக என்ன சாதிக்கமுடியும்.வரும் தலைமுறை நடப்புகளை கேவலமாகப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாதா? தமிழினம் என்ன ஒரு மோசமான காலகட்டத்தின் வழியே உழல்கின்றது.