Pages

வெள்ளி, டிசம்பர் 06, 2013

பெண் பத்திரிகையாளர்கள் மீது மனுஷ்யபுத்திரன் அபாண்டம்: பாலியல் தொல்லையை சகிப்பது குறுக்குவழியில் முன்னேறும் தந்திரமா?

 
'நடிகையின் ரகசிய வாழ்க்கை - அந்தரங்கம் அம்பலம்!' என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ள ஒரு வாரம்இருமுறை பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக மனுஷ்யபுத்திரன் கட்டுரை எழுதியுள்ளார்.

தெகல்கா ஆசிரியரின் பாலியல் வன்கொடுமைக்கு மறைமுக ஆதரவாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு சில பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக கூறப்பட்டுள்ளது.

"ஊடகங்களுக்குள் பெண்கள்...தங்களுடைய வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக...தங்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளை சகித்துக்கொண்டு மௌனமாக இருந்துவிடுகின்றனர். ஒரு சில பெண்கள் குறுக்கு வழியில் முன்னேறிச் செல்வதற்கு தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்" - என்று மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
  • இவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், அவருக்கு தெரிந்த உண்மையைத்தான் அவர் எழுதியுள்ளார் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? ஒவ்வொரு தொலைக்காட்சியாக 'தலையை ஆட்டி ஆட்டி பேசும்' இவருக்கு சில உண்மைகள் தெரிந்திருக்குமா?
  • பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக குற்றம்சாட்டும் இந்தக் கருத்தை பத்திரிகையாளர்கள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? மௌனம் சம்மதத்துக்கு அடையாளமா?
எனினும், மனுஷ்யபுத்திரன் வாதத்தை நாம் நம்ப முடியாது, நம்பவும் கூடாது. பத்திரிகைகளின் பணியாற்றும் பெண்கள் அநீதியை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டால், அதனை அவர்கள் பகிரங்கமாக எதிர்த்து போராடுவார்கள். மாறாக, அதையே ஒரு சாக்காக பயன்படுத்தி முன்னேற்றமடைய ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அப்படி யாரும் இங்கு இல்லை,.

கருத்துகள் இல்லை: