Pages

சனி, ஏப்ரல் 14, 2012

சாதிவாரிக் கணக்கெடுப்பு-ஏப்ரல் 23 முதல் நடக்கிறது: வன்னியர்களின் கடமை என்ன?


சாதிவாரிக் கணக்கெடுப்பு - தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாக மாற்றும் ஒரு ஆயுதமாக மாறக்கூடும். ஏப்ரல் 23 முதல் நடக்க இருப்பதாகக் கருதப்படும் இக்கணக்கெடுப்பால், தமிழ்நாட்டில் எந்த சாதியினர் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்களின் சமூகப் பொருளாதார நிலை என்ன? என்கிற விவரங்கள் இந்த ஆண்டே வெட்ட வெளிச்சமாகிவிடக் கூடிய நல்வாய்ப்பு வந்துள்ளது.

(தனிப்பட்ட நபர்களின் சாதி விவரம் வெளியிடப்படாது என்று கூறப்பட்டுள்ளது - Information on the person’s / household’s religion and caste/ tribe name will not be published. ஆனால், சாதிவாரி மக்கள் தொகை விவரத்தை வெளியிடுவதும், சாதிகளின் சமூக பொருளாதார விவரங்களை வெளியிடுவதும்தான் இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது -To make available authentic information that will enable castewise population enumeration of the country, To make available authentic information regarding the socioeconomic condition, and education status of various castes and sections of the population)

உண்மையில் 'வன்னியர் அரசியல்' எனும் கருத்தாக்கத்திற்கு வரலாற்றில் ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய மாபெரும் வாய்ப்பாக இதனைக் கருத வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தத் தவறினால் - இனி தலைமுறை தலைமுறையாக இதன் பாதிப்பு தொடரக்கூடும்.

வன்னியர்கள் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதானாலும், வன்னியர் சமுதாய முன்னேற்றமானாலும் - அதன் அடிப்படையாக அமையப்போவது இந்தக் கணக்கெடுப்புதான். முழுமையாக, நேர்மையாக இக்கணக்கெடுப்பு நடந்தால் - தமிழ்நாட்டில் வன்னியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அவர்களின் சமூக, பொருளாதார நிலை என்ன? என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதன் பிறகு வன்னியர்களின் சமுதாய எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது.

கணக்கெடுப்பில் என்ன கேட்கப்போகிறார்கள்?

சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பு (Socio Economic and Caste Census - SECC) எனப்படும் இக்கணக்கெடுப்பில்

1. சாதி விவரங்கள்


2. சமூக பொருளாதார விவரங்கள் 

-- என இரண்டுவிதமான புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு நபர் குறித்தும் - கல்வி, வேலை, தொழில், சொத்து, வருமானம், வீடு, நிலம், வாகனம் உள்ளிட்ட சமூக பொருளாதார விவரங்கள் விரிவாக கேட்கப்பட உள்ளது.

ஒவ்வொரு நபர் குறித்தும் - மதம், சாதி விவரங்கள் சுருக்கமாக கேட்கப்பட உள்ளது.

இந்த இரண்டு வகையான விவரங்களும் முக்கியமானவை. எனினும் - சாதி குறித்த விவரங்கள் மிக மிக முக்கியம் ஆகும்.

சாதி குறித்து எவ்வாறு கேட்பார்கள்?

சாதி குறித்து இரண்டு மிக முக்கிய தகவல்கள்

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தகவல்களை உள்ளடக்கிய இக்கணக்கெடுப்பில் - சாதி நிலவரம் (Caste/Tribe Status) என்ற தலைப்பில் - சாதி குறித்து இரண்டு தகவல்கள் மட்டுமே கேட்கப்பட உள்ளன. அவை இரண்டுமே மிக முக்கியமானவை ஆகும்.

முதல் தகவல்: பட்டியல் இனமா? பழங்குடியினரா? வேறு சாதியா?
கிராமப்புறங்களில் 13 ஆவது தகவலாகவும் நகரப்பகுதிகளில் 16 ஆவது தகவலாகவும் பின்வரும் தகவல் கேட்கப்படும்:

1. SC பட்டியல் இனமா?


2. ST பழங்குடி இனமா?

அல்லது

3. Others - இதர வகுப்பா?

- என்று கேட்பார்கள்.

இந்தக் கேள்விக்கு வன்னியர்கள் - "3. இதர வகுப்பு - Others" என்று பதில் சொல்ல வேண்டும். இதனை கணினியில் குறிக்கும் போது "3" என்று குறிப்பார்கள்.

கவனிக்க வேண்டியது என்ன?

சாதி குறித்த முதல் கேள்வியின் போது - SC பட்டியல் இனமும் இல்லை. ST பழங்குடி இனமும் இல்லை என்று சொன்னாலே - கணக்கெடுப்பவர் "3. இதர வகுப்பு - Others" என்று குறித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி "எனக்கு எந்த சாதியும் இல்லை" என்று வீம்பாக யாராவது கூறினால் - அவர்கள் "4. சாதி இல்லை" எனும் பிரிவில் சேர்க்கப்படுவார்கள். எனவே, தப்பித்தவறி கூட "சாதி இல்லை, சாதி பார்ப்பது இல்லை, சாதி தெரியாது" என்றெல்லாம் ஒரு வன்னியரும் கூறக்கூடாது.

வன்னியர்கள் அனைவரும் "3. இதர வகுப்பு - Others" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

இரண்டாவது தகவல்: சாதியின் பெயர் என்ன? (Name of Caste/Tribe)

இக்கணக்கெடுப்பில் அதி முக்கியமான, உயிர்நாடியான தகவல் இதுதான். கிராமங்களில் 14 ஆவது பத்தியாகவும், நகரங்களில் 17 ஆவது பத்தியாகவும் இந்த தகவல் கேட்கப்படும்.

"சாதி பெயரைக் கூறவும் (Name of Caste/Tribe)" என்பதுதான் அந்த தகவல் ஆகும். இக்கேள்விக்கு வன்னியர்கள் மிகக் கவனமாக " வன்னியக் குல சத்திரியர் " என்று பதில் கூற வேண்டும்.

கவனிக்க வேண்டியது என்ன?

கணக்கெடுப்பு நடத்துபவர் - சாதி பெயர் என்ன? என்று கேட்கும் போது, பதில் சொல்பவர் எதைச் சொன்னாலும், அதை எதிர் கேள்வி கேட்காமல் எழுதிக்கொள்ள வேண்டும் - என்று கூறப்பட்டுள்ளது. எனவே, வன்னியர்கள் ஆளுக்கொரு பெயரைக் கூறினால், அதைத்தான் எழுதுவார்கள். மிகமிகக் கவனமாக ஒவ்வொரு வன்னியரும் தனது சாதி "வன்னியக் குல சத்திரியர்"  என்பதை தெளிவாக ஒரே பதிலாகக் கூற வேண்டும்.

மிகப்பெரிய ஆபத்து

வன்னியர்களில் பலர் ரெட்டியார், கவுண்டர், பிள்ளை, வாண்டையார் போன்ற பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.  சாதிப் பெயரைக் கேட்டால் இந்த பட்டப்பெயரையே கூறுகின்றனர். இதே பெயரை மற்ற சாதியினரும் பயன்படுத்துகின்றனர்.

இப்போதையக் கணக்கெடுப்பில் - ஒரே ஒரு பெயரை குறிப்பிட மட்டுமே இடம் உள்ளது. எனவே, வன்னியர்கள் "வன்னியக் குல சத்திரியர்"  என்று சொன்னால் மட்டுமே அது வன்னியர் சாதியாகக் கருதப்படும். பட்டப்பெயர்களைச் சொன்னால், ஒவ்வொரு பட்டப்பெயரும் ஒரு தனி சாதியாகக் கருதப்படும் ஆபத்து உள்ளது.

வன்னியர் ஒருவர் தன்னை கவுண்டர் என்று குறிப்பிட்டால் - அவர் வன்னியக் கவுண்டரா? வெள்ளாளக் கவுண்டரா? என்று பிரித்துப்பார்க்க இந்தக் கணக்கெடுப்பில் வாய்ப்பு இல்லை.

இக்கணக்கெடுப்பில் "தாய்மொழி" குறித்த கேள்வி இடம்பெறவில்லை. எனவே, வன்னியர் ஒருவர் தன்னை "ரெட்டியார்" என்று கூறினால் அவர் வன்னிய ரெட்டியாரா? தெலுங்கு ரெட்டியாரா? என்று கண்டுபிடிக்க முடியாது.

வன்னியர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டப்பெயர்களை பயன்படுத்தும் நிலையில் - ஒவ்வொருவரும் தனித்தனி பட்டப்பெயரைக் கூறினால் - ஒவ்வொன்றும் ஒரு தனி சாதியாகக் கருதப்படுவதற்கும், வன்னியர்கள் வெள்ளாளக் கவுண்டர்களாகவும் தெலுங்கு ரெட்டியார்களாகவும் குறிப்பிடப்படும் பேராபத்து உள்ளது. 

எனவே ஒவ்வொருவரும் தம்மை "வன்னியக் குல சத்திரியர்" என்று கூறினால் மட்டுமே, வன்னியர் சமூகத்தின் உண்மையான எண்ணிக்கையும், சமூகப் பொருளாதார நிலையும் தெரியவரும்.

இந்தக் கணக்கெடுப்பை போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த தவறினால் 'தும்பை விட்டுவிட்டு, வாலை பிடிக்கும் கதையாக' வன்னியர்கள் விடிவுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடக்கூடும்.

சரிசெய்ய ஒரு வாய்ப்பும் இல்லை.

இந்தக் கணக்கெடுப்பில் - சாதிப் பெயரை ஒருமுறை தவறாகக் கூறிவிட்டால் - அந்த தவறை கண்டுபிடிக்கவோ, சரிசெய்யவோ வாய்ப்பே இல்லை.

கணக்கெடுப்பின் சமூக பொருளாதார விவரங்கள் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கிராமசபையிலும் இணையத்தின் மூலமும் வெளிப்படையாக வெளியிடப்படும். திருத்தம் செய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சாதி விவரங்கள் வெளிப்படையாக வைக்கப்பட மாட்டாது.

அதாவது, தமிழ்நாட்டில் வன்னியர்கள் எத்தனைப் பேர்? அவர்களின் நிலை என்ன? என்பது வெளியிடப்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரு கிராமத்தில் யார் வன்னியர் என்கிற தகவல் வெளியிடப்படாது.

எனவே, கணக்கெடுப்பின் போது வன்னியர் ஒருவரது சாதி மாற்றப்பட்டால் - அதனைக் கண்டுபிடிக்கவும் முடியாது, சரிசெய்யவும் முடியாது.

வன்னியர் நலன் காக்க என்ன வழி?

வன்னியர்களின் தலையாயப் பணியாக - வன்னியர் சங்கமும், வன்னியர் தலைவர்களும் உடனடியாக - ஒவ்வொரு வன்னியரும் தம்மை 'வன்னியக் குல சத்திரியர்' என்று கணக்கெடுப்பில் கூற வேண்டும் என்கிற பிரச்சாரத்தை போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.
கணக்கெடுப்புக்கு முன்பாக:

1. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்கள்

2. ஒவ்வொரு வன்னியர் கிராமத்திலும் ஒரு ஆலோசனைக் கூட்டம்

3. ஒவ்வொரு வன்னியர் குடும்பத்திற்கும் யாரேனும் ஒருவர் நேரில் சென்று பேசுதல்

4. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துண்டுப்பிரசுரம்

5. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சுவரொட்டி அல்லது பதாகை

--ஆகியன கணக்கெடுப்புக்கு முன்பு தேவை.

கணக்கெடுப்பின்போது

உள்ளூர் பிரமுகர்கள் கணக்கெடுப்பின் போது உடனிருந்து கண்காணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு நடத்துபவர் கணக்கெடுப்பின் முடிவில் - தகவல் எல்லாம் சரியாக உள்ளாதா? என்று வீட்டுத்தலைவரிடம் படித்துக்காட்டி கையெழுத்து வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனை வன்னியர் சங்க பிரமுகர்களும் ஊரில் உள்ள வன்னிய பிரமுகர்களும் உடனிருந்து கண்காணிக்க வேண்டும்.

(குறிப்பு: வீட்டில் உள்ளவர்கள்தான் தம்மை ' வன்னியக் குல சத்திரியர் ' என்று குறிப்பிட வேண்டும். வெளியிலிருந்து எவரும் தலையிட முடியாது)

கணக்கெடுப்பின் விதிமுறை என்ன?

சாதி குறித்து ஒருவர் பதில் சொல்லும்போது, கணக்கெடுப்பவர் விளக்கமோ, எதிர்க்கேள்வியோ கேட்கக்கூடாது. ஒருவர் தான் இந்த சாதி என்று கூறினால் - அதற்கு ஆதாரமாக எதையும் கேட்கக் கூடாது.

எனவே, வன்னியர் ஒருவர் தம்மை  வன்னியக் குல சத்திரியர் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் காட்ட வேண்டியது இல்லை.

ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ஒவ்வொருவரது சாதியையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டும்.

இரண்டு கேள்விகள்: ஒவ்வொரு வன்னியரின் கடைமை என்ன?

கேள்வி 1: வகுப்பு என்ன?


பதில்: "நாங்கள் 1. SC அல்ல, 2. ST அல்ல. 
நாங்கள் 3. இதர வகுப்பு (Others)"


கேள்வி 2: சாதியின் பெயர் என்ன?


பதில்: " வன்னியக் குல சத்திரியர் "

ஒவ்வொரு வன்னியரும் இதே பதிலை சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்ல வைப்பது முன்னணி வன்னியர்களின் கடைமை.

இதுதான் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரின் தலையாயக் கடைமை. உடனடித் தேவை.
குறிப்பு: சாதிச்சான்றிதழில் உள்ளது போல வன்னியர்கள் தம்மை "வன்னியக் குல சத்திரியர்" என்று குறிப்பிட வேண்டும் என்கிற கருத்து உள்ளது. ஏனெனில், ஆங்கிலத்தில் "வன்னியர்" (Vanniyar) என்பது "வாணியர்" (Vaniyar) என்று மாற்றி எழுதப்படும் ஆபத்து உள்ளது.

அதே நேரத்தில், கிராமங்களில் "வன்னியக் குல சத்திரியர்" என்று உச்சரிப்பது குழப்பமாகிவிடும் என்பதால் "வன்னியர்" என்றே கூற வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.


மேலும் தகவல்களுக்கு

1. FAQ: Socio Economic and Caste Census SECC
2. SECC questionnaire
3. SECC Census 2011 RURAL
4. SECC Census 2011 URBAN


Note:



SECC will have three important outcomes:


Firstly, the SECC, 2011 will rank households based on their socioeconomic status, so that State/Union Territory Governments can objectively prepare a list of families living below the poverty line in rural and urban areas


Secondly, it will make available authentic information on the caste-wise breakup of population in the country


Thirdly, it will provide the socio-economic profile of various castes

1 கருத்து:

கிராமத்தான் சொன்னது…

உங்கள் கருத்துக்கள் மிக மதிப்புமிக்கவை
தங்களின் பதிவை நகல் எடுத்து வன்னிய மக்கள் வாழும் பகுதிகளில் வினியோகிக்கும் பணியை நான் தொடங்கியுள்ளேன்...