Pages

செவ்வாய், ஏப்ரல் 30, 2013

மருத்துவர் இராமதாசு அய்யா விழுப்புரத்தில் கைது!

"விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அப்பாவி வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வன்னியர்கள் மீதே 1500 வன்னியர்கள் மீது வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், வன்னியர்கள் தாக்கப்பட்டது குறித்தும் வாகனங்கள் உடைக்கப்பட்டது குறித்தும் ஒரே ஒரு வழக்குக் கூட போடப்படவில்லை.

இதனைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மருத்துவர் அய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, அதற்குப் பதிலாக மதியம் இரண்டு மணிக்கு தொடர்வண்டி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என திங்கள் கிழமை மதியம் காவல்துறையினர் அனுமதிக் கடிதம் வழங்கினர். பின்னர் இரவு அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற மருத்துவர் அய்யா அவர்களும் அவருடன் நான்காயிரம் பேரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்."


தொடர்புடைய சுட்டி:

கருத்துகள் இல்லை: