Pages

வெள்ளி, மே 03, 2013

தமிழ்நாட்டின் சாதிவெறியர்களே - மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைக் கேளுங்கள்! உங்கள் மனம் குளிரட்டும்! உங்கள் கொலைவெறி இனியாவது அடங்கட்டும்!

சட்டப்படி கைது செய்து உள்ளே தள்ளுகிறார்கள். மிக்க சரி. 

மனித உரிமை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யுங்கள் என்று கோருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்கள் 'குற்றவாளிகள்' அல்ல. பன்னாட்டு மனித உரிமை கொள்கைகளின் அடிப்படையில் அவர்கள் 'மனசாட்சி கைதிகள்'. அதாவது தான் கொண்ட கொள்கைக்காக சிறை சென்றவர்கள். அவர்கள் குற்றவாளிகளைப் போன்று நடத்தப்படக்கூடாது.

ஒரு சமுதாயத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைக்கும் 74 வயது முதியவரை இரவும் பகலுமாக - அந்த ஊருக்கும் இந்த ஊருக்குமாக அலைகழிக்கிறார்கள். வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக்காக பேசுவது அவ்வளவு பெரிய குற்றமா?

இந்த அநீதியான மனித உரிமை மீறல் பற்றி பேசினால் - தமிழ்நாட்டின் மனித உரிமை போர்வாள்கள் எல்லாமும் "உங்களுக்கு இது தேவைதான்" என்கிறார்கள்? மனித உரிமைப் பேசுவதிலும் சாதி வெறி. 
மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகள் இதோ:

மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைக் கேளுங்கள்! உங்கள் மனம் குளிரட்டும்! உங்கள் கொலைவெறி இனியாவது அடங்கட்டும்! 

வாழ்க ஜனநாயகம், வாழ்க மனித உரிமை

கருத்துகள் இல்லை: