Pages

சனி, ஜூலை 27, 2013

தர்மபுரி தற்கொலை: பித்தலாட்டக்காரர்கள் முகத்தில் கரிபூசிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!

நாட்டில் ஒரு கும்பல் 'அடக்கமுடியாத வன்னியர் எதிர்ப்பு வெறியோடு' கிளம்பியிருக்கிறது. 

"தர்மபுரியில் மரணமடைந்த இளவரசன் - பாட்டாளி மக்கள் கட்சியினரால் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வாறு வெட்டிக் கொல்ல வேண்டும் என ஆணையிட்டவர் மருத்துவர் இராமதாசு அவர்கள்தான். எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களையும் கொலை வழக்கில் கைது செய்து, ஒரு விரைவு நீதிமன்றம் அமைத்து - நாளை மறுநாளுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கி - அதற்கு அடுத்த நாள் எல்லோரையும் தூக்கில் போட வேண்டும்."

- இதுதான் அந்த வன்னியர் எதிர்ப்பு வெறிக்கூட்டத்தின் பேராசை. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக 'இளவரசன் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்' என்று நிரூபித்தாக வேண்டும். 

எனவே, உள்ளூர் மருத்துவர்கள் தற்கொலை என்று சொன்னால், சென்னை மருத்துவர்கள். அவர்களும் தற்கொலை என்றால், புது தில்லி மருத்துவர்கள், அவர்களும் தற்கொலைதான் என்று சொன்னால் அப்புறம் அமெரிக்க மருத்துவர்கள் வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் - ஆக, 'இது கொலைதான்' என்று சொல்கிறவரை பிரேத பரிசோதனை தொடர வேண்டும்.
அவ்வாறே, 'இளவரசன் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்' என்று உள்ளூர் பொலிஸ் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிபிசிஐடி. அவர்களும் ஒப்புக்கொள்ளாவிட்டால் சிபிஐ. அவர்களும் ஒப்புக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் சிஐஏ வந்து விசாரித்து 'இது தற்கொலை அல்ல, பாமக செய்த படுகொலைதான்' என்று சொல்ல வேண்டும்.

இந்த கூட்டத்தினருக்கு பிரச்சினை இல்லாத ஒரே இடம் நீதிமன்றம்தான். பிரேத பரிசோதனை மருத்துவர்களும் காவல்துறையும் 'பாமக செய்த படுகொலைதான்' என்று ஒத்துக்கொண்டால் - 'உண்மையை ஏற்றுக்கொள்ள' நீதிமன்றத்திற்கு தடையேதும் இருக்காது.

இளவரசன் தற்கொலை - இன்னும் என்னதான் ஆதாரம் வேண்டும்?

தர்மபுரி இளவரசன் பிரேத பரிசோதனை வழக்கில், பிரேத பரிசோதனை வீடியோ காட்சியை நீதிபதிகளும் மருத்துவர்கள் குழுவினர் 7 பேரும் பார்த்தனர். தனித்தனியாக அறிக்கை அளித்தனர். இதில் மனுதாரர் தரப்பு மருத்துவர் தவிர மற்ற 6 பேரும் மறுபரிசோதனை தேவையில்லை என்றனர்.

இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. "உடற்கூறு சோதனை தவறாக நடந்தது என்று நாங்கள் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. எனினும், இது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களில் ஒருவருடைய நீதிக்கான அழுகுரல் என்பதால், நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, இந்த மனு குறித்து, ஒரு வரையறை வரைக்கும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியுள்ளது' என்று நீதிமன்றம் கூறியது.

எனவே, மேலும் 2 தனியார் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடந்த விவரம் தொடர்பாக நேரில் பார்த்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மருத்துவர்கள் தர்மபுரி சென்று இளவரசன் உடலை பார்த்து, முரண்பட்ட கருத்தை தெரிவித்திருந்தனர்.(இதற்கு பதில் 3 மருத்துவர்கள் குழுவை நீதிமன்றம் அனுப்பியிருந்தால் அப்போதே பிரிச்சினை தீர்ந்திருக்கும்)

இரண்டு மருத்துவர்களின் முரண்பட்ட கருத்தால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை அனுப்பி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள இளவரசன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் தர்மபுரி சென்று இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தினர்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் 'இளவரசன் டார்ச்சர் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கணமான இரும்பு பொருள் மண்டையில் தாக்கியதால் இறந்துள்ளார் என்றும் உடலில் கைமுறிவு தவிர வேறு காயங்கள் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது. ஓடும் இரயில் தாக்கியதால் இவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."

(இங்கே காண்க:  Ilavarasan died of head injury, confirm AIIMS doctors)

“After thorough post-mortem examination of the body, the board is of the unanimous opinion that the cause of death in this case is extensive cranio-cerebral damage (head injury) caused by impact of heavy blunt object. The head injury as well as other injuries are antemortem in nature and will result in instantaneous death. The injuries mentioned inlcuding fatal injury could be caused by the impact of a running train,’’ Dr DN Bhardwaj, Dr Sudhir Kumar Gupta and Dr Millo Tabin have said.
- அதாவது, இரயில் மோதியே இளவரசன் மரணம் அடைந்திருக்க வேண்டும் என்று  டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்றுபேரும் ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையையும் மறுக்கிறது பித்தலாட்ட புரச்சிக் கும்பல்!

"இளவரசன் - பாட்டாளி மக்கள் கட்சியினரால் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்" என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தெளிவாக ஏன் கூறவில்லை? இது அநீதி இல்லையா? விளிம்புநிலை மக்களின் நீதிக்கான அழுகுரல் கேட்கவில்லையா? நீதி காப்பாற்றப்பட வேண்டாமா? என்று கொந்தளித்து மீண்டும் கிளப்பியுள்ளனர் முற்போக்கு வேடதாரிக் கூட்டத்தினர்!

எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த ஒரு செய்தியை பின்வருமாறு பகிர்ந்து கொண்டுள்ளார் கவின்மலர், அதனைக் கீழே காண்க:

"அறிக்கையில் எந்த இடத்திலும் இளவரசன் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படவில்லை. மொக்கையான அதே நேரத்தில் உறுதியாக கருவியால் உருவாக்கப்பட்ட தலைக் காயத்தினால் அவர் இறந்தார் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. மேலும் பின் இணைப்பாக அந்த மொக்கையான வலுவான பொருள் ஓடும் ரயிலாக இருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சட்டம் தெரிந்தவர்கள் இந்த அறிக்கையின் பின்புலத்தை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.ஏனெனில் எந்தக் கருவியால் ஒருவன் தாக்கப்பட்டு உயிரிழந்தான் என்று கண்டுபிடித்து சொல்லும் வேலை உடற்கூறு மருத்துவர்களின் பணியல்ல. அவர்களால் அப்படி சொல்லவும் முடியாது என்பது மிகச் சாதாரணமான நடைமுறை. ஆனால் அதையும் தாண்டி மருத்துவர்கள் ரயிலில் அடிபட்டிருக்கலாம் என்று சொல்லியிருப்பது வழக்கிற்கு கடைசியாக மருத்துவர்களே தீர்ப்பு எழுதியதற்கு சமம் என்பதை அவர்கள் உணரவில்லை.. போலிசுகாரர்களின் வலையில் அவர்களும் விழுந்துவிட்டார்கள்..." என்கிற கருத்தை பகிர்ந்துள்ளார் கவின் மலர்.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 'இளவரசன் இரயில் மோதி இறந்திருக்கலாம்' என்று மனம்போன போக்கில் சொல்லவில்லை. அதிக அளவு மது அருந்தி போதையில் இருந்தமைக்கான இரசாயன ஆய்வு ஆதாரங்கள், இறந்து கிடந்த தன்மை குறித்த 16 புகைப்படங்கள், மற்றும் சம்பவ இடமான இரயில்வே தண்டவாளப் பகுதியைப் பார்வையிட்டு - அதன் அடிப்படையிலேயே 'இரயில் மோதி இறந்தார்' என உறுதி செய்துள்ளனர்.

The report said toxicological analysis of viscera had established consumption of alcohol in sufficient quantity to place him under its influence. The team perused 16 photographs and visited the scene of crime to arrive at a logical conclusion.  (இங்கே காண்க: Friends reveal details of Ilavarasan’s last calls)

ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்க மாட்டோம். இது பாமகவினர் நேரடியாக தாக்கி செய்த கொலைதான் என அடம்பிடிக்கின்றனர் போலிப் புரச்சிக் கூட்டத்தினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டு பொலிஸ் செயல்படுகிறது என்று பித்தலாட்ட புரச்சிக் கும்பல் சொல்வதுதான். உலகத்தில் எங்குமில்லா அதிசயமாக பாமக'வினர் 123 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ள தமிழ்நாடு பொலிஸ் பாமகவுக்கு ஆதரவாம்! கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு அறிவில்லாமல் போகுமா?

தற்கொலைதான் என்று தெளிவாக நிரூபிக்கும் ஆதாரங்கள்

1. தற்கொலை முயற்சி

இளவரசன் தற்கொலை மனநிலையில் இருந்தார் என்பதை பலப்பல ஆதாரங்கள் மூலம் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

ஜூன் முதல் வாரத்தில், சென்னை தி.நகரில் ஒரு தங்கும் விடுதியில் கையை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அந்த லாட்ஜின் ரூம்பாய் சிகிச்சைக்கு உதவியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அந்த ரூம்பாய் சந்தோஷ் என்பவரை அரூருக்கு அழைத்து வந்து நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை முயற்சி விவரத்தை இந்தியா டுடே பத்திரிகையாளர் கவின் மலர் நன்கு அறிந்திருந்தார். இளவரசன் கையில் கட்டுடன் உள்ள புகைப்படம் இந்தியா டுடே இதழ் அட்டையில் வெளியாகியுள்ளது (ஜூலை 17 இதழ்) : (இங்கே காண்க: அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்)

2. தற்கொலை மனநிலை

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இளவரசன் சென்னையில் இருக்கும் ஒரு நண்பரிடமும் சித்தூரில் இருக்கும் ஒரு நண்பரிடம் செல்பேசியில் பேசி உள்ளார். இவர்கள் இருவரிடமும் 'தனியாக விடப்பட்டது குறித்து ஆற்றாமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருந்திய அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இருவரிடமும் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சித்தூர் நண்பர் கார்த்திக் மற்றும் சென்னை நண்பர் மனோஜ் குமார் இருவரும் இது குறித்து நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் 'திவ்யாவை தாலி இல்லாமல் கோர்ட்டில் பார்த்ததும் திவ்யா தனது சகோதரருடன் சிரித்து பேசிக்கொண்டு கோர்ட்டிலிருந்து சென்றதும் தன்னை மிகவும் பாதித்ததாக' இளவரசன் கூறியதாக மனோஜ்குமார் கூறியுள்ளார்.

அதே போன்று, ஜூன் 27 ஆம் நாளன்று திவ்யாவை செல்பேசி மூலம் தொடர்புகொண்டு - தற்கொலை செய்துகொள்ளப் போவதாக இளவரசன் கூறிய தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. மது போதை

இளவரசன் உடலுக்கு அருகே, சில மதுபாட்டில்கள் கிடந்தன. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. ஆனால், இளவரசனின் சித்தூர் நண்பர் கார்த்திக் இது குறித்து நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், "இளவர்சன் தர்மபுரி அரசுக் க்ல்லூரிக்கு பின்பு தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பதாக செல்பேசியில் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளர்.

மேலும் இளவரசனது உடல் உறுப்புக்களை ஆய்வு செய்த நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில் மரணமடைவதற்கு முன்பு இளவரசன் மிக அதிக அளவு மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டது.

4. இளவரசன் எழுதிய தற்கொலைக் கடிதம் உண்மை:

இளவரசன் பையிலிருந்து 4 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் இளவரசன், தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என கூறியிருந்தார். அந்த கடிதம் சென்னையில் தடயவியல் சோதனை செய்யப்பட்டது. இந்த கடிதம் இளவரசன் எழுதியது தான் என தடயவியல் மையம் கூறியது.

இன்னும் என்னதான் வேண்டும்?

இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பது பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முற்போக்கு வேடதாரிகள் கூறிய எல்லாமே பொய்ப்பிரச்சாரம் என்று தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

திவ்யா கடத்தப்பட்டார், மிரட்டப்பட்டார் என்று நீட்டி முழக்கினார்கள். 'அய்யோ, அந்த பெண்ணுக்கு என்ன ஆகுமோ' என்று நீலிக்கண்ணீர் வடித்தார்கள். ஆனால், திவ்யாவுக்கு கவுன்சிலிங் வழங்கிய மருத்துவர்கள் "திவ்யா ஏற்கெனவே படித்து வந்த தனது படிப்பை தொடர அவர் விருப்பம் தெரிவித்தார். தனது எதிர்காலம் குறித்து அவர் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். கவலைகளை மறந்து வாழ்க்கையை எதிர்கொள்வது குறித்த மன ரீதியான பயிற்சியினை அவருக்கு அளித்தோம்." என்று கூறினார்கள் (இங்கே காண்க: படிப்பைத் தொடர தருமபுரி திவ்யா விருப்பம்)
'எஸ்ம்ஸ் மருத்துவர்கள்தான் பிரேதபரிசோதனை செய்ய வேண்டும்', அவர்கள்தான் உண்மையை வெளிக்கொணருவார்கள் என்கிற புதிய வழிகாட்டுதலில் (இங்கே காண்க: விபரீதங்களுக்கு அச்சாரம்!) மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் "ஓடும் இரயில் தாக்கியதால் அவர் இறந்திருக்கலாம். யாரும் அவரை தாக்கியிருக்கவில்லை" என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

ஆனாலும், இந்த எஸ்ம்ஸ் அறிக்கையையும் ஏற்க முடியாது. எங்களுக்கு சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று மீண்டும் கிளம்பியுள்ளது புர்ச்சிக் கும்பல். "ஜாதிய மோதல்கள் ஏதாவது ஏற்பட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தமிழக அரசு இதனை தற்கொலை என்று கூறி வருகிறது" என்கிறார்கள். (இங்கே காண்க: இளவரசன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை)

ஆக,

"தற்கொலை" என்று காவல் துறை கூறுவது 'சாதிமோதல் கலை தடுத்து, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் முயற்சி' என்றால், 

முற்போக்கு வேடதாரிகள் 'தற்கொலையை, படுகொலை' என்று கூறுவதன் பின்னணி என்ன? இது சாதிமோதல்கள் ஏற்படுத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சி இல்லையா?

சதிகாரர்களின் உண்மை நோக்கம் என்ன?

தமிழ்நாட்டில், சாதிமோதல்கள் ஏற்படுத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் நோக்கிலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே சண்டையை மூட்டிவிடும் நோக்கிலும் ஒரு கூட்டம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இக்கூட்டத்தினருக்கு மாற்று மதம் சார்ந்த சில அமைப்புகள் பணமும் இடமும் அளிப்பதாகத் தெரிகிறது.

எனவே, இதற்கு பின்னால் உள்ள சதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உண்மையை வெளிக்கொணர்வதே தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மையாக இருக்கும்.

1 கருத்து:

kamal சொன்னது…

உண்மையான உண்மையை - முற்போக்கு - ஏற்ப்பான், பிற்போக்கு - மறுப்பான்,
புறம்போக்கு - ஏற்க்கவேமாட்டான்