Pages

ஞாயிறு, ஜனவரி 25, 2015

பெருமாள் முருகனை எதிர்த்தால் சாதிவெறி: மற்றதெல்லாம் என்ன வெறி?

தமிழ்நாட்டில் பெரும்பான்மை சாதிகளுக்கு எதிரான வன்மம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வன்னியர்கள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்களுக்கு எதிரான வன்மக் கருத்துகளை அப்பட்டமாக பேசி வருகின்றனர். 

இவ்வாறு பெரும்பான்மை சாதிகளுக்கு எதிராக பேசுவதுதான் முற்போக்கு என்றும், இதற்கு மாறாக பேசுவது சாதிவெறி என்றும் இட்டுக்கட்டிப் பேசுகிறது 'மீடியா + புரட்சியாளர்' கும்பல்.

பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் கட்டற்ற உரிமை என்று நாம் கருதவில்லை.  ஆனால், 'கருத்துரிமைக்கு கட்டுப்பாடு இல்லை' என்று பேசுவோர், இரட்டை வேடம் போடுகின்றனர். 

தமக்குத் தோதான நேரங்களில் கருத்துரிமைக்கு குரல் கொடுக்கும் இந்த 'மீடியா + புரட்சியாளர்' கும்பல் - மற்ற நேரங்களில் கண்டும் காணாமல் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்துபோகின்றனர். அதற்கான சில எடுத்துக்காட்டுகளை இங்கே காண்க:

1. புரட்சியும் கருத்துரிமையும்

லீனா மணிமேகலை என்பவர் ஒரு கருத்தாழமிக்க கருத்துரிமைக் கவிதையை எழுதினார்

""ஒரு புண@$லின் உச்சியில் விலகி
அந்தரத்தில் வி@$தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே த@$யை இழுத்தேன்
உபரி என யோ@$ மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
மு@$களைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
கு@$யை சப்ப குடுத்தாய்""

- என்று போகும் விரிவான ரசம் சொட்டும் கவிதை அது (குறிப்பு: லீனா மணிமேகலையின் கவிதையில் உள்ள சில வார்த்தைகளை மறைப்பதற்காக “@$” என்கிற குறியீடுகளை அளித்துள்ளேன்)
இப்படி ஒரு கருத்துரிமைக் கவிதை எழுதியதற்காக "கருத்துரிமைப் போராளிகளே" லீனா மணிமேகலையை விரட்டி விரட்டி அடித்தார்கள். அவரது கூட்டத்தில் பங்கேற்று, பாலியல் கவிதைக்கு செயல்முறை விளக்கம் கேட்டார்கள். கோஷம் போட்டார்கள். அடிதடி அளவுக்கு போராட்டம் நடந்தது. அதாவது, பெருமாள் முருகனுக்கு என்னவெல்லாம் நடந்தது என்று கூறுகிறார்களோ, அதைவிட அதிகமாகவே லீனா மணிமேகலைக்கு நடந்தது.

2. சாதியும் கருத்துரிமையும் - தலித் 

கடந்த ஆண்டில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் இளங்கலை தமிழ் பாடத்திட்டத்தில் புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பில் இருந்து இரண்டு கதைகளை சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடியாக நீக்கியது. பொன்னகரம் மற்றும் துண்பக்கேணி ஆகிய கதைகள் தலித் மக்களை மோசமாகச் சித்தரிப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவல் குழுவினர் கூறி அவற்றை நீக்கினர்.

இந்தக் கதைகளை நீக்கக் கோரி போராடியவர்கள் "சாதிய அடிப்படையில் வன்மத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் கதை பாத்திரங்களையும், சொல்லாடல்களையும் கொண்டுள்ளவை. தலித் மக்களை இழிவுபடுத்தும் விதத்தில் ஒழுக்கமற்றவர்களாக கதை பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சாதி அடிப்படையிலான பிரிவினையையும் வெறுப்பையும் வளர்க்கும் எழுத்துக்கள், இலக்கியங்கள் என்ற போர்வையில் மாணவர்களின் பாடத்திட்டத்திற்குள்ளேயே இணைக்கப்படுமானால், அது எதிர்கால சமூகத்தை பிளவுப்படுத்து வதிலும், மாணவர்கள் மனதில் சாதிய நஞ்சை ஆழ விதைப்பதிலுமே முடிவுறும்." என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

3. சாதியும் கருத்துரிமையும் - நாடார்

சி.பி.எஸ்.இ., 9ம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்தில், "காலனி ஆதிக்கத்தில் இந்தியாவின் பரிமாண மாற்றங்கள்' என்ற பகுதியின் கீழ், ‘நாடார் சமுதாய மக்கள் ஒருகாலத்தில் தாழ்ந்த சாதியினராக இருந்ததாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியேறியவர்கள்' என்றும் கூறப்பட்டிருந்தது. 
இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக முதலமைச்சரே தலையிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

4. சாதியும் கருத்துரிமையும் - அம்பேத்கர் கார்டூன்

என்.சி.இ.ஆர்.டியின் 11ம் வகுப்பு பாடபுத்தகத்தில், இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டதைச் சொல்லும் கட்டுரையில், 'அரசியல் சட்டம் எழுதும் பணி கால தாமதம் ஆவது குறித்து நேரு உள்ளிட்ட பலரும் கவலை கொண்டதாக' குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இடத்தில் நேரு 'நத்தை மேல் அமர்ந்திருக்கும் அம்பேத்கார் மீது சாட்டையை சுழற்றுவது போல' 1949-ஆண்டில் வெளியான ஒரு கார்டூன் இடம்பெற்றது.
இந்த கார்டூன் அம்பேத்காரை இழிவுபடுத்துவதாக தொல். திருமாவளவனால் பாராளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டு, பின் அந்த படம் நீக்கப்படுவதாக அறிவித்தனர். பாடத்திட்டக்குழுவில் இருந்த யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பல்சிகர் ராஜினாமா செய்தனர். அதில் சுகாஸ் பல்சிகரின் அலுவலகம் சிலரால் தாக்கப்பட்டது.

5. தமிழரும் கருத்துரிமையும்  - டேம் 999

டேம் 999 என்பது 2011 இல் வெளிவந்த ஒரு ஆங்கிலத் திரைப்படம். ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
கற்பனைக் கதை எனக்கூறப்பட்ட இந்த படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வெளியானது. தமிழ்நாட்டில் படம் தடை செய்யப்பட்டது.

6. தமிழரும் கருத்துரிமையும் - கத்தி

விஜய் நடித்த படம் கத்தி. இந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு வேண்டிய நிறுவனம் என்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் 65 அமைப்புகள் ஒன்று கூடியதாகக் கூறப்பட்டது.
(இதுபோன்று பல படங்களுக்கு ஈழத்தமிழர் ஆதரவு நிலைபாட்டில் இருப்போரின் எதிர்ப்பும்; ஈழத்தமிழர் ஆதரவு படங்களுக்கு தணிக்கைத் துறையின் தடையும் வழக்கமாக இருந்து வருகிறது)

7. தமிழரும் கருத்துரிமையும் - கற்பு

“பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் பேகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்”  எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொன்னார்.
இந்தக் கருத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது “திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண் பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று குஷ்பு கேட்டது இன்னும் பெரிய போராட்டத்தை தூண்டியது.

8. தமிழரும் கருத்துரிமையும் - இந்தி எதிர்ப்பு 

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) அச்சிடப்பட்டிருந்தது.
அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது என்று, இங்குள்ள கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

9. மதமும் கருத்துரிமையும் - விஸ்வரூபம்

கமல் ஹாசன் எழுதி-இயக்கி நடித்த படம் விசுவரூபம். முசுலிம் அமைப்புகள் சில இப்படத்தில் முசுலிம்கள் தீவிரவாதியாக காட்டப்பட்டிருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர், இது சமூக அமைதியை குலைக்கும் என அவர்கள் கூறினர்.
பின்னர் இசுலாமிய சமூகத்தின் மனம் இப்படத்தால் புண்படும் என்றும் எனவே இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கோரினர். சட்டம் ஒழுங்கு இப்படத்தால் பாதிக்கப்படும் என கூறி தமிழக அரசு 15 நாட்களுக்கு இப்படத்திற்கு தடை விதித்தது

'மீடியா + புரட்சியாளர்' கும்பலின் போலிவேடம்

பெருமாள் முருகனை சாக்காக வைத்து இப்போது கருத்துரிமைக்காக பேசும் 'மீடியா + புரட்சியாளர்' கும்பல் - மேற்கண்ட சம்பவங்களுக்காக இப்படி ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவில்லை. இவர்களில் பலரும் இந்த சம்பவங்களில் பலவற்றில் 'கட்டற்றக் கருத்துரிமைக்கு எதிராக' இருந்தனர். சிலவற்றில் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து பேசினர்.
இப்போது மட்டும் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் கருத்துரிமை பூச்சாண்டி வேடம் போடுவதற்கு ஒரே காரணம் -  தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக இவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதுதான். 

வன்னியர்கள், முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினருக்கு எதிராக பேசுவதுதான் தமிழ்நாட்டில் முற்போக்கு என இவர்கள் கற்பனையாக கட்டமைத்துள்ளனர். (இவர்களிடம் இருந்து தப்பித்த ஒரே பெரும்பான்மை சமூகம் நாடார்கள் மட்டும்தான். ஏனெனில், நாடார்கள் ஊடகத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள்)

சாதி வெறிபிடித்த 'மீடியா + புரட்சியாளர் கும்பல்' சாதி உரிமைக்காகப் பேசுவோர் மீது எப்போதும் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டே இருக்கும் என்பதற்கு - பெருமாள் முருகன் இன்னுமொரு எடுத்துக்காட்டு.
(குறிப்பு: மேற்கண்ட கருத்துரிமை எதிர்ப்பு போராட்டங்களின் நியாம், அநியாயம் குறித்து இங்கே எதுவும் குறிப்பிடவில்லை. மற்ற பிரச்சினைகளில் ஒன்றுபடாத 'மீடியா + புரட்சியாளர் கும்பல்' இப்போது மட்டும் ஒன்று கூடி ஒரேயடியாக கூச்சல் போடுவதையே குறிப்பிட்டுள்ளோம்.)

தொடர்புடைய சுட்டி:

3 கருத்துகள்:

vivek kayamozhi சொன்னது…

எனக்கும் இதே கருத்து தோன்றியது . உலகம் முழுதும் சேர்ந்து செய்யும் சதி இது.
சார்லி ஹெப்டோ செய்தது தவறு .
பெ.மு செய்வது சரி இதுவே . தி இண்டு வின் நியாயம்.
அனைவரும் சேர்ந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும் .

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

அதுஒரு கதை , அந்த கதைக்கு ஆதரவா இவனுங்க போராட்டாம் வேற பன்றானுங்க . இவனுங்க கருத்துரிமைங்ற பேர்ல அந்த புத்தகத்த ஆதரிக்கறது தேவையற்ற வேலை .

Unknown சொன்னது…

தமிழர்களிடம் sympathy எப்படி வேலை செய்யும் என்று உணர்ந்த எழுத்தாளர் அதைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார். (ஒரு எழுத்தாளன் மடிந்தான். இனி எழுதமாட்டான்)

கோபாலன்